search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230127"

    • ராஜாபாண்டியனிடம் ரூ.3 லட்சம் வட்டிக்கு கீதா பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
    • ராஜாபாண்டியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கந்துவட்டி கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்தவர் ராஜாபாண்டியன். இவர் இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல தலைவராக உள்ளார். மேலும் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழிலும் செய்து வந்தார்.

    பாளை கே.டி.சி.நகர் விஸ்வரத்னா நகரை சேர்ந்தவர் பாலகுமார். இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா(வயது 42). இவர் ராஜாபாண்டியனிடம் ரூ.3 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

    மாதந்தோறும் அந்த பணத்திற்கு அவர் வட்டி செலுத்தி வந்த நிலையில் கடந்த மாதம் அவர் வட்டி கொடுக்கவில்லை என்று கூறி கீதா வீட்டுக்கு ராஜா பாண்டியன் சென்றுள்ளார். பின்னர் கீதாவிடம் வட்டியை கேட்டுள்ளார்.

    அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் ஆத்திரம் அடைந்து கீதாவை அவதூறாக பேசி, கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கீதா பாளை போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராஜாபாண்டியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கந்துவட்டி கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • மதுரை கே.புதூரில் உள்ள எனக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புடைய ஓட்டலை எழுதிக் கொடுக்கும்படி மிரட்டி வருகின்றனர்.
    • கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மதுரை:

    மதுரை திருப்பாலையை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 46). இவர் கே.புதூரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அழகுராஜாவை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தற்கொலைக்கு முயன்ற ஓட்டல் அதிபர் அழகுராஜா போலீசாரிடம் கூறுகையில், "நான் கே.புதூரில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழில் அபிவிருத்திக்காக மதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார், கார்த்திகேயன் ஆகிய 2 பேரிடமும் ரூ.6 லட்சம் கடன் வாங்கினேன். இதற்கான வட்டியுடன் அசலையும் சேர்த்து கட்டி விட்டேன். இருந்தபோதிலும் அவர்கள் என்னிடம் மேலும் கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்கள் கந்து வட்டிக்கு ஈடாக, மதுரை கே.புதூரில் உள்ள எனக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புடைய ஓட்டலை எழுதிக் கொடுக்கும்படி மிரட்டி வருகின்றனர். அவர்களது மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த நான் தற்கொலை செய்ய முயற்சி செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

    அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் சூரக்குமார் மேற்பார்வையில் கே. புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுராஜாவிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததாக ஜெயக்குமார், கார்த்திகேயன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கந்துவட்டி கும்பலால் டீக்கடைக்காரர் கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இவருக்கு மலர் என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருவேக ம்புத்தூர் அருகே உள்ள ஆந்தகுடியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது45). இவர் அதேபகுதியில் உள்ள ஒத்தக்கடையில் டீக்கடை நடந்தி வந்தார். இவருக்கு மலர் என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.

    தொழில் நிமர்த்தம் காரணமாக திருநாவுக்கரசு வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை சரியாக செலுத்தா ததால் கந்து வட்டிக்காரர்கள் தொல்லை அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் திருநா வுக்கரசு விளங்காட்டூர் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளது.

    இது குறித்து திருநா வுக்கரசின் தந்தை அழகர் திருவேகம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், எனது வீட்டுக்கு 3 பேர் காரில் வந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு திருநாவுக்கரசை அழைத்துச் சென்றனர். அவர்கள் தான் எனது மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருப்பார்கள் என்று புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரவு கடன் வாங்கிய நபர்களிடம் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருமத்தம்பட்டி சாரதாம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்த மருந்து கடை உரிமையாளரான இளங்கோவன் பொள்ளாச்சியை சேர்ந்த பஷீர் என்பவருக்கு 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.
    • பணத்தை திருப்பி செலுத்திய பிறகும், அசலுக்கு மேல் வட்டி, அதிக தொகை கேட்டார்.

    கோவை:

    தமிழகம் முழுவதும் கந்துவட்டி வசூலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருந்தார்.

    இதைதொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி.முத்துசாமி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மேற்பார்வையில் 6 டி.எஸ்.பிக்கள், 17 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 17 தனிப்படையினர் ஆபரேஷன் கந்துவட்டி 2.0 திட்டத்தின் கீழ் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.

    கே.ஜி.சாவடி, மதுக்கரை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, சூலூர் உள்பட மாவட்டம் முழுவதும் 41 இடங்களில் சோதனை நடந்தது.

    காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது 11 மணி வரை நடைபெற்றது. இதில் கந்து வட்டிக்காக பலரிடம் எழுதி வாங்கி வைத்து இருந்த சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கே.ஜி.சாவடியில் தொழில் அதிபர் நடராஜன் வீட்டில் இருந்து ரூ.1கோடியே 10 லட்சம் மற்றும் சொத்து பத்திரங்கள், புரோ நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கவுண்டம்பாளையம் ராமசாமி நகர் தேமையன் வீதியை சேர்ந்த செல்வி(42) என்பவர் கந்து வட்டி வசூலித்ததாக வந்த தகவலின் பேரில் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், அங்கிருந்து சொத்து ஆவணங்கள், ஏ.டி.எம்.கார்டுகள், ரூ.2லட்சத்து 70 ஆயிரமும் பறிமுதல் செய்தனர்.

    கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணகுமார்(45) என்பவர் திருப்பூரை சேர்ந்த மோகன் குமார் என்பவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து விட்டு அதற்கு அசலுக்கு மேல் கூடுதல் வட்டி வசூலித்துள்ளார்.

    அதேபோல கருமத்தம்பட்டி சாரதாம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்த மருந்து கடை உரிமையாளரான இளங்கோவன் (52), பொள்ளாச்சியை சேர்ந்த பஷீர் என்பவருக்கு 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். பணத்தை திருப்பி செலுத்திய பிறகும், அசலுக்கு மேல் வட்டி, அதிக தொகை கேட்டார்.

    இதையடுத்து போலீசார் சரவணகுமார் மற்றும் மருந்து கடை உரிமையாளர் இளங்கோவன் மீது கந்துவட்டிக் கொடுமை மற்றும் பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் கந்துவட்டி வசூலித்தவர்களிடம் இருந்து மொத்தம் 379 சொத்து பத்திரங்கள், 3 பாஸ்போர்ட்டுகள், 127 காசோலை புத்தகங்கள், 48 ஏ.டி.எம். கார்டுகள், 18 வங்கி கணக்கு புத்தகங்கள், 54 கையெழுத்திட்ட வங்கி பத்திரங்கள், 211 வாகன ஆர்.சி.புத்தகங்கள், 35 பைனான்ஸ் புத்தகங்கள், 7 ஆதார் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் 1 கோடியே 26 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கந்து வட்டி வசூலித்ததாக மாவட்டம் முழுவதும் செல்வி, நடராஜன், வேலுச்சாமி, பட்டை சவுந்தரராஜன், உதயகுமார், இளங்கோ, சரவணன், சுபாஷ், பார் நாகராஜ் என்ற முத்துசாமி, மகேந்திரன், திருசிற்றம்பலம் குமார், சதீஷ்குமார், மாணிக்கம், ராமர், மாடசாமி, செல்வராஜ், ஜனார்த்தனன், ரமேஷ் மணியன் என்ற கிருஷ்ணசாமி ஆகிய 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதில் வேலுச்சாமி என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை தவிர மற்ற 18 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    • குடும்ப வறுமை மற்றும் விவசாயத்தின் வறட்சி காரணமாக 7 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கடனுக்கு வட்டியை சரியாக செலுத்த முடியவில்லை.
    • இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் மீது கல் எறிவது, கொலை மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த ஜோத்தம்பட்டி பால்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. விவசாயி. இவர் மனைவி ஜோதிமணி, மகன்கள் இளமுகில், கார்த்திகேயன், தாயார் கன்னியம்மாள் மற்றும் மருமகள், பேரன், பேத்தியுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் தங்கள் வீட்டில் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால் துணை சூப்பிரண்டு அலுவலகத்திலேயே தங்கியிருக்கப் போவதாகக் கூறி குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இரவு அங்கு வந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- குடும்ப வறுமை மற்றும் விவசாயத்தின் வறட்சி காரணமாக 7 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கடனுக்கு வட்டியை சரியாக செலுத்த முடியவில்லை. அதனால் கடன் கொடுத்தவர், நம்பிக்கைக்காக இருக்கட்டும் என்று சொல்லி தோட்டத்து பத்திரத்தை எங்களிடமிருந்து வாங்கி, பின்னர் ஏமாற்றி கிரயம் செய்துள்ளார். அதன் பிறகு வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்தநிலையில் தற்போது இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் மீது கல் எறிவது, கொலை மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே வீட்டில் தங்குவதற்கு அச்சமாக உள்ளதால் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடும்பத்துடன் தங்கியிருக்க முடிவு செய்துள்ளோம்'என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • பல்வேறு பகுதிகளில் கந்து வட்டி தொழில் நடைபெறுகிறது.
    • காங்கயம் போலீசார் சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கந்து வட்டி தொழில் நடைபெறுகிறது. இதனால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.கந்து வட்டி பிரச்னை தொடர்பான புகார்களை பெற்று விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வகையில், அது குறித்த புகார்களை தெரிவிக்க 94981 76731 மற்றும் 94981 01320 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இது குறித்த அறிவிப்பினை, பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. காங்கயம் பஸ் நிலையம் முன்பு 4 ரோடு சந்திப்பில் காங்கயம் போலீசார் சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

    • டாக்ஸி,வேன்,டெம்போ டிராவலர் என வாகனத்தை விலைக்கு வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் தொழில் செய்து வந்தார்.
    • முத்துகுமாரை தேடி வருகின்றனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் எஸ்.கே. எஸ் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார்(வயது 38) .இவர் தாராபுரம் பகுதியில் வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தும் தொழில் செய்து வருகிறார் .வாகனங்களை வாங்க தாராபுரத்தில் உள்ள தனியார் பைனான்சில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரூ. 21,50,000 கடனாக வாங்கினார்.அதனை கொண்டு டாக்ஸி,வேன்,டெம்போ டிராவலர் என வாகனத்தை விலைக்கு வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்தநிலையில் பைனான்ஸ் புரோக்கர் யாசர் அராபத்,உரிமையாளரான முத்துக்குமார் மற்றும் வீரன் ஆகியோர் கந்து வட்டி கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.இதனால் கடனை அடைக்க அருண்குமார் ஒரு வாகனத்தை விற்று கடந்த ஆண்டு ரூ.11,50,000 பணத்தை திருப்பி கொடுத்து விட்டார்.மீதமுள்ள பணம் ரூ.10,00,000க்கு ரூ.25,50,000ம் கேட்டு அவரிடமுள்ள இரு வாகனங்களை பறிமுதல் செய்துவாகனத்தை பறித்துவிட்டனர்.பிறகு இது பத்தாது என கேட்டு அவர் இல்லாத சமயம் வீட்டிற்குச் சென்று தந்தை ஜெயராமனை தாக்கியுள்ளனர்.

    இதனை அறிந்த அருண்குமார் தாராபுரம் போலீசில் யாசர் அராபத்( 32),மற்றும் வீரன்(48),முத்துகுமார் ஆகியோர் மீது கந்து வட்டி கொடுமைபடுத்துவதாக புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரணை நடத்தி முத்துக்குமார்,யாசர் அராபத் மற்றும் வீரன் ஆகியோர் மீது கந்து வட்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து யாசர் அராபத்,வீரன் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் முத்துகுமாரை தேடி வருகின்றனர். 

    • கடனுக்கு பால் விற்று கழித்து வந்த போதிலும் மேலும் மேலும் பணம் கேட்டு அடைக்கலம் தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் கடனுக்கு ஈடாக தோட்டத்து பத்திரத்தையும் பெற்றுக்கொண்டார்.
    • இதனால் மன உளைச்சலில் இருந்த ஆண்டிச்சியம்மாள் கடந்த மாதம் 26-ந் தேதி தனது மகளுக்கும் மகனுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு சாந்திபுரத்தைச் சேர்ந்த நல்லுமனைவி ஆண்டிச்சியம்மாள் (வயது 35). இவர்களுக்கு காவ்யா (17), கிருஷ்ணகுமார் (15) ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக ஆண்டிச்சியம்மாள் தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் பூசனூத்து கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். மாடுகள் வளர்த்தும் பால் பண்ணை நடத்தியும் வந்துள்ளார். இதற்காக அதே பகுதியைச் சேர்ந்த அழகுமலை மகன் அடைக்கலம் (29) என்பவரிடம் கடன் வாங்கி இருந்தார்.

    கடனுக்கு பால் விற்று கழித்து வந்த போதிலும் மேலும் மேலும் பணம் கேட்டு அடைக்கலம் தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் கடனுக்கு ஈடாக தோட்டத்து பத்திரத்தையும் பெற்றுக்கொண்டார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த ஆண்டிச்சியம்மாள் கடந்த மாதம் 26-ந் தேதி தனது மகளுக்கும் மகனுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றார். இதில் அதிர்ஷ்டவசமாக கிருஷ்ணகுமார் உயிர் பிழைத்தார்.

    தாய் மற்றும் மகள் இறந்த பிறகும் ஆண்டிச்சியம்மாளின் தந்தை மொக்கைச்சாமியிடம் சென்ற அடைக்கலம் உனது மகள் வாங்கிய கடனை நீதான் அடைக்க வேண்டும். இல்லையெனில் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மொக்கைச்சாமி மற்றும் பேரன் கிருஷ்ணகுமார் ஆகியோர் சேர்ந்து மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவின் பேரில் வருசநாடு போலீசார் அடைக்கலம் மீது கந்து வட்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதே போல கந்து வட்டி கொடுமை நடப்பதால் போலீசார் கிராமங்களில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிக வட்டி வசூலிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கோடிபதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவரது மனைவி அம்பிகா.
    • கைதான சித்ராவை சேலம் மகளிர் சிறையிலும், இளவரசனை கிருஷ்ணகிரி சிறையிலும் அடைத்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கோடிபதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவரது மனைவி அம்பிகா.

    இந்த நிலையில் இவர் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த இளவரசன், இவரது மனைவி சித்ரா ஆகியோரிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் வட்டிக்கு வாங்கியுள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் வாங்கிய பணத்திற்கு வட்டியும், முதலும் கட்டாமல் அம்பிகா காலம் தாழ்த்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சித்ரா தனது கணவருடன் அம்பிகா வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அங்கு நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை. வட்டியும் அடைக்கவில்லை. அதனால் நீங்கள் வாங்கிய 1 லட்சத்து 20 ஆயிரம் பணம் எல்லாம் சேர்த்து 5 லட்சத்து 20 ஆயிரமாக கொடுக்க வேண்டும் என்று கூறினர். அம்பிகாவும், அவரது கணவரும் அவ்வளவு பணம் கொடுக்கமுடியாது என்றனர்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அம்பிகாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அம்பிகா மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பெண்ணிடம் கந்துவட்டி பணம் கேட்டு மிரட்டியதாக சித்ரா, இளவரசன் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்தனர்.

    கைதான சித்ராவை சேலம் மகளிர் சிறையிலும், இளவரசனை கிருஷ்ணகிரி சிறையிலும் அடைத்தனர்.

    • கந்துவட்டி புகாரில் கணவன்-மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை டி.எஸ்.பி நகரைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் (வயது 36). இவர் அந்த பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஜெயமுருகன் எஸ்.எஸ். காலனி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை கே.கே.நகர், கார்ப்பரேஷன் காலனி சீனிவாசன் (50), அண்ணாநகர் சுகுமார் (40), சீனிவாசன் மனைவி நிர்மலா (45), அவரது மகன் கிரீஸ் என்ற கிரீஸ்வர் ஆகியோரிடம் நிலத்தை அடமானம் வைத்து 11 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். அதனை நான் திருப்பி செலுத்தி விட்டேன். இருந்தபோதிலும் அவர்கள் மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதன் அடிப்படையில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன், சுகுமார், நிர்மலா, கிரீஸ் என்ற கிரீஸ்வர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் தெற்கு பட்டியைச் சேர்ந்த சங்கர் என்பவர் மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், மதுரையைச் சேர்ந்த இன்பா குபேந்திரன், சூர்யா மற்றும் அருண் ஆகிய 3 பேரிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன்.

    இதற்கான பணத்தை வட்டியுடன் சேர்த்து 7.88 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்தினேன். இருந்தபோதிலும் அவர்கள் மேலும் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.

    இதற்காக என் காரையும் அவர்கள் அபகரித்துக் கொண்டனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னிமலை பகுதியிலும் கந்து வட்டி கொடுமை உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சென்றது.
    • அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.

    சென்னிமலை: –

    சென்னிமலை பகுதியில் நிதி நிறுவனம், பைனான்ஸ், அடகு கடை என்ற பெயரில் தினசரி வசூல் விட்டு அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

    சென்னிமலை அருகே மணிமலைகரடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றும் நபர் கடன் தொல்லையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை தொடர்ந்து சென்னிமலை பகுதியிலும் கந்து வட்டி கொடுமை உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சென்றது.

    அதை தொடர்ந்து சென்னிமலை ஒன்றிய பகுதியில் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் கடைக்காரர்களை குறிவைத்து நிதி நிறுவனம், பைனான்ஸ், அடகு கடை என்ற பெயரில் வெற்று பத்திரங்களில் கையெழுத்து பெற்று கடன் கொடுத்து தினசரி வசூல், மீட்டர் வட்டி, தின வட்டி என அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.

    இந்த ரகசிய தகவல் கசிய தொடங்கியதால் சென்னிமலை பகுதியில் கந்து வட்டி கும்பல் அலறிதுடித்து வருகின்றனர்.

    தற்போது பணம் பெற்ற நபர்களிடம் மிரட்டும் தோனியை விட்டு பம்பி பணிந்து கடன் தொகையினை வசூலித்து வருகின்றனர்.

    • கந்துவட்டி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், பூரணம் என்பவருடன் சேர்ந்து செல்வியின் வீட்டுக்கு வந்து அவரை அடிக்க பாய்ந்தார்.

    மதுரை

    மதுரை காமராஜர்புரம், கக்கன் தெருவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி செல்வி (45). இவர் அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் (58) என்பவரிடம் ரூ.1.85 லட்சம் கடன் வாங்கினார். இதற்காக அவர் மாதம்தோறும் ரூ.12 ஆயிரம் செலுத்தி வந்தார்.

    2 மாதங்களாக செல்வி வட்டி செலுத்தவில்லை. ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், பூரணம் என்பவருடன் சேர்ந்து செல்வியின் வீட்டுக்கு வந்து அவரை அடிக்க பாய்ந்தார்.

    இதுகுறித்து செல்வி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×