search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டக்டர்"

    • மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு திரும்பியபோது பரிதாபம்
    • இந்துராணி தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே மருவூர் கோணம் பகுதியைச் சேர்ந்த வர் அஜிஸ் (வயது 26), மினி பஸ் கண்டக்டர்.

    இவர் கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு இந்துராணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.அஜிஸ் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தனது வீட்டி லிருந்து புறப்பட்டார்.திக்கணங்கோடு பகுதியில் மோட்டார் சைக்கிள் நிறுத்தி விட்டு மினி பஸ்சில் வேலைக்கு சென்றார்.நேற்று இரவு வேலை முடிந்து அஜிஸ்வீட்டிற்கு செல்ல தயாரானார். தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு முளகு மூடு பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி அஜிஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. தூக்கி வீசப் பட்ட அஜிஸ் படுகாயம் அடைந்தார்.

    உடனே அவரை சிகிச்சைக் காக தக்கலை அரசு ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக அஜிஸ் ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலன்இன்றி இன்று காலை அஜிஸ் பரிதாபமாக இறந் தார்.

    இது குறித்து அவரது மனைவி இந்துராணி தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.

    லாரி டிரைவர் திருவ னந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (36) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பலியான அஜிசின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள் ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.

    • சேரன்மகாதேவி, காமராஜர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் . தனியார் பஸ் டிரைவர்.
    • முத்துவேல், முத்துமாரியப்பன் ஆகிய இருவரும் பிரபாகரனை தகாத வார்த்தையால் பேசி, பஸ்சின் முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    சேரன்மகாதேவி, காமராஜர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 29). தனியார் பஸ் டிரைவர்.

    தகராறு

    இவர் நேற்று இரவு பாளை சமாதானபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பயணி களை ஏற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மற்றொரு தனியார் பஸ் டிரைவரான சேரன்மகா தேவி பட்டன்காடு பகுதியை சேர்ந்த முத்துவேல்(34) மற்றும் அதே பஸ் கண்டக்டரான மேலசெவலை சேர்ந்த முத்துமாரியப்பன்(34) ஆகியோருக்கும் இடையே பயணிகளை ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முத்துவேல், முத்துமாரியப்பன் ஆகிய இருவரும் பிரபாகரனை தகாத வார்த்தையால் பேசி, பஸ்சின் முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தி யதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் முத்துவேல், முத்துமாரியப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த பாளை சப்-இன்ஸ்பெக்டர் சண்முக மூர்த்தி மற்றும் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    • வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை.
    • வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சீதா நகரை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 65). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தன் மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து தஞ்சைக்கு வந்த யுவராஜ் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன.

    அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 600 கிராம் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. ஆளில்லா ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்கவே கண்டக்டர்கள் தயங்குகிறார்கள்.
    • சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஒரு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது.

    சென்னை :

    சென்னையில் பஸ் பயணத்தின்போது, டிக்கெட் வாங்க வரும் பயணிகளிடம் 'சில்லரையா கொடுங்கப்பா..' என்று கூவி கூவி கண்டக்டர்கள் கேட்டு வாங்கிய காலம் போய், இன்றைக்கு சில்லரைகளை கொடுத்தாலே கண்டக்டர்கள் கடுப்பாகும் நிலையே நிலவுகிறது. குறிப்பாக ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்கவே கண்டக்டர்கள் தயங்குகிறார்கள். பலர் 'நோட்டே இல்லையா?' என்று கேட்கிறார்கள். சிலர் முணுமுணுத்தபடியும், திட்டிக்கொண்டும் வாங்குகிறார்கள். இன்னும் சிலர் 'இது செல்லாது' என்று கூறி அந்த நாணயங்களை திருப்பி கொடுத்து விடுகிறார்கள்.

    ஏற்கனவே கடைகளில் ஒதுக்கப்படும் இந்த ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்கள் தற்போது பஸ்களிலும் புறக்கணிக்கப்படுவதால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இதனால் தொடக்கத்தில் இந்த நாணயங்கள் அறிமுகமான போது ஆசையுடன் வாங்கிய மக்கள், இப்போது அதை கையில் வைத்திருக்கவே தயங்குகிறார்கள்.

    கண்டக்டர்கள் தரும் கெடுபிடியால் கொதித்து போன மக்கள் போக்குவரத்து துறையிடம் தொடர்ந்து இதுகுறித்த புகார்களை அளித்து வருகிறார்கள்.

    பொதுமக்களின் புகாரை தொடர்ந்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நேற்று ஒரு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கண்டக்டர்கள், மண்டல-கிளை-உதவி மற்றும் பொதுப்பிரிவு மேலாளர்களுக்கு, சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாநகர பஸ்களில் பயணிகள் டிக்கெட் வாங்க ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை கொடுக்கும்போது, அதனை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு கண்டக்டர்கள் உரிய டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் மூலம் மீண்டும் அது அறிவுறுத்தப்படுகிறது.

    எக்காரணம் கொண்டும் பயணிகள் அளிக்கும் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை பெற்றுக்கொள்ள கண்டக்டர்கள் மறுக்கக்கூடாது. இதனை மீறி ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்க மறுப்பதாக புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட கண்டக்டரின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனைத்து கிளை, உதவி கிளை மேலாளர்கள் மற்றும் அனைத்து நேர காப்பாளர்கள் ஆகியோர் இதுகுறித்து கண்டக்டர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி அவர்களிடம் கையெழுத்து பெற்று எதிர்காலத்தில் இத்தகைய புகார் எதுவும் வராமல் பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பெங்களூருவில் இருந்து இயக்கப்பட்ட அரசு பஸ் நள்ளிரவு வந்தவாசிக்கு வந்தது.
    • கண்டக்டர் பயணியை பிடித்து பஸ்சில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.

    விழுப்புரம் :

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டம் சார்பில் வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில் பெங்களூருவில் இருந்து இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த 17-ந் தேதி நள்ளிரவு வந்தவாசிக்கு வந்தது. வந்தவாசி பழைய பஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்ட பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கினர். ஆனால் மதுபோதையில் இருந்த ஒரு வாலிபர் மட்டும் இறங்காமல் இருந்தார். கண்டக்டர் பிரகாஷ் அவரை சிரமப்பட்டு இறக்க முயன்றார். ஆனால் அவர் இறங்காமல் பஸ் படிக்கட்டில் தள்ளாடியபடி நின்றார். அப்போது கண்டக்டர் பிரகாஷ் பயணியை பிடித்து பஸ்சில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் அவர் சாலையில் விழுந்தார். பின்னர் அந்த பஸ், வந்தவாசி போக்குவரத்து பணிமனைக்கு சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து டெப்போ உதவி பொறியாளர் துரை கூறுகையில், அவலூர்பேட்டையில் ஏறிய அந்த பயணி பஸ்சிலேயே மது அருந்தியும், பஸ்சிலேயே சிறுநீர் கழித்தும் பிற பயணிகளுக்கு தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அந்த பயணி கீழே தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதுபற்றி அறிந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட அதிகாரி விசாரணை மேற்கொண்டு, பஸ்சில் இருந்து பயணியை வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிட்டதாக கண்டக்டர் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • தங்கையை கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த அண்ணன் அரசு பஸ் கண்டக்டரை தாக்கினார்.
    • மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரையைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). இவர் அரசு போக்குவரத்து கழக பொன்மேனி டிப்போ பணிமனையில் கண்டக்ட ராக வேலை பார்த்து வரு கிறார்.

    இந்த நிலையில் பால முருகன் ஆரப்பாளையம்- மாட்டுத்தாவணி அரசு பஸ்சில் பணியில் இருந்தார். அப்போது அவர் பஸ்சில் இருந்த ஒரு இளம்பெண்ணை கேலி-கிண்டல் செய்ததாக தெரிகிறது. அந்த பெண் இதுதொடர்பாக தனது சகோதரர் மதன்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து அந்த பஸ் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு வந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கண்டக்டர் பாலமுருகனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் கண்டக்டரை 2 பேர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதில் சம்பந்தப்பட்ட 2 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வை யில், அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில், மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை தலைமை யில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கண்டக்டரை தாக்கிய 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் ஆரப்பாளையம் மோகன் மகன் மதன்குமார் (வயது 23), மேல பொன்னகரம் நாகராஜ் மகன் தினேஷ் (23) என்பது தெரிய வந்தது.

    பிடிபட்ட மதன்குமார், தனது தங்கையை அரசு பஸ் கண்டக்டர் பாலமுருகன் கிண்டல் செய்ததால் அவரை தனது உறவினர் நாகராஜூடன் வந்து தாக்கியதாக தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து பால முருகனை தாக்கிய 2 பேரையும் மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர். 

    • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம், காமலாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ரவுடி கும்பல் அடிக்கடி பொட்டியபுரம் பகுதியில் மோதிக்கொள்கின்றனர்.
    • பொட்டியபுரம் அருகே சென்றபோது மர்ம நபர்கள் அரசு பஸ்சை கல்லால் அடித்து பஸ் டிரைவர், கண்டக்டரை சரமாரியாக தாக்கினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம், காமலாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ரவுடி கும்பல் அடிக்கடி பொட்டியபுரம் பகுதியில் மோதிக்கொள்கின்றனர்.

    கடந்த 18-ந்தேதி இரவு பொட்டியபுரம் அருகே ரவுடி கும்பல் ஒன்று சாலையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது ஓமலூரில் இருந்து காமலாபுரம், பொட்டியபுரம் வழியாக தின்னப்பட்டிக்கு அரசு டவுன் பஸ் சென்றது. இந்த பஸ்சை தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் (வயது 40) என்பவர் ஓட்டினார். அரூர் பகுதியைச் சேர்ந்த வேடியப்பன் (35) கண்டக்டர் பணியில் இருந்தார்.

    பொட்டியபுரம் அருகே சென்றபோது மர்ம நபர்கள் அரசு பஸ்சை கல்லால் அடித்து பஸ் டிரைவர், கண்டக்டரை சரமாரியாக தாக்கினர். இதில் காயம் அடைந்த ரமேஷ் குமார், வேடியப்பன் ஆகியோர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் டிைரவர், கண்டக்டரை தாக்கியதாக பொட்டியபுரத்தை சேர்ந்த பச்சையப்பன் மகன் நவீன் (வயது 27), வேலு மகன் விஜய் (23), தங்கவேல் மகன் சின்னதுரை (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • அரசு பஸ் கண்டக்டர் மாரடைப்பால் இறந்தார்.
    • இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஆண்டார் கொட்டாராம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 48). இவர் மதுரை அரசு போக்குவரத்து கழக நிறுவனத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முருகேஸ்வரி.

    சம்பவத்தன்று இரவு ராஜகோபால் பெரியார்- சக்கிமங்கலம் அரசு பேருந்தில் பணியில் இருந்தார். அந்த பஸ் நள்ளிரவில் சக்கிமங்கலத்தில் நின்றிருந்தபோது தூங்கியிருந்த ராஜகோபாலுக்கு நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டது. இதில் வலியால் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அடுத்த நாள் காலையில் டிரைவர் எழுப்பிய போது, ராஜ கோபாலிடம் பேச்சு மூச்சு இல்லை. எனவே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்தி ரிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த வைத்து, இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் கோட்டத்தில் சேலம் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 2000 மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • இந்த நிலையில் சேலம் கோட்டத்தில் 8 பெண் கண்டக்டர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் கோட்டத்தில் சேலம் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 2000 மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 32 பணிமனைகள் உள்ளன .

    அரசு பஸ்களில் பொதுவாக டிரைவர், கண்டக்டர்கள் 100 சதவீதம் ஆண்களே பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் கோட்டத்தில் 8 பெண் கண்டக்டர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் சேலம், நாமக்கல், மாவட்டத்தில் 4 பேரும், தர்மபுரியில் 4 பேரும் பணியாற்றி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பணி மனையில் லதா என்பவர் கண்டக்டராக பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தாரமங்கலம், மேட்டூர் அரசு டவுன் பஸ்சிலும், ராசிபுரம் பணிமனையில் இளையராணி என்பவர் ராசிபுரம், சேலம் வழித்தடத்திலும் இயங்கும் அரசு பஸ்சிலும் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்கள்.

    இதே போல் அனுசியா என்பவர் பெங்களூரு, சேலம் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றுகிறார். தருமபுரியில் 2 பெண்கள் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகின்றனர். வாரிசு வேலையின் அடிப்படையில் இந்த பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

    • திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.
    • பஸ் மீது மோதுவது போல் ஒரு மோட்டார் சைக்கிள் சென்றது.

    பல்லடம் :

    திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள தெற்குபாளையம் பிரிவு அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்து பஸ் மீது மோதுவது போல் ஒரு மோட்டார் சைக்கிள் சென்றது.

    இதனைப் பார்த்த பஸ் கண்டக்டர் பரமசிவம், பார்த்து மெதுவாக போ, என சத்தம் போட்டதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர், பஸ்ஸின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி கண்டக்டரிடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாய்த்தகராறு முற்றி கண்டக்டர் பரமசிவத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பஸ்சில் இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் பல்லடம் அண்ணா நகரைச் சேர்ந்த சலிம் மகன் சாகுல் அமீது(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • விருத்தாசலம்அருகே ஓடும் பஸ்சில் தவற விட்ட பணத்தை பயணியிடம் கண்டக்டர் ஒப்படைத்தனர்.
    • இயற்கை உபாதை கழிக்க சென்ற போது முனுசாமி பஸ்சை தவற விட்டுள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வீரசிங்ககுப்பம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி (வயது70). இவர் அந்த பகுதியில் முந்திரி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 7-ந் தேதி இரவு 2:30 மணி அளவில் திருச்சியில் இருந்து கடலூர் செல்லும் விருத்தாசலம் பணிமனையைச் சேர்ந்த பஸ்சில் ஏறி உள்ளார். அந்த பஸ் பெரம்பலூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் நின்றது. அப்போது இயற்கை உபாதை கழிக்க சென்ற போது முனுசாமி பஸ்சை தவற விட்டுள்ளார். அந்த பஸ் கடலூர் பஸ் நிலையம் சென்று அனைத்து பயணிகளும் இறங்கியபின் கண்டக்டர் வேல்முருகன் பஸ்சுக்குள் ஒரு பை இருப்பதை பார்த்துள்ளார். பயணி யாரோ அதை தவற விட்டு சென்று விட்டார்கள் என அதனை பிரித்துப் பார்த்தபோது அந்த பைக்குள் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 700 ரூபாய் பணம் இருந்தது.

    இதனை பார்த்த கண்டக்டர் இந்த தகவலை விருத்தாசலம் அரசு பஸ் பணிமனை 2 மேலாளர் நவநீத கிருஷ்ணனிடம் தெரிவித்தார். பின்னர் பஸ் விருத்தாசலம் பணிமனை வந்த பின்பு அதனை பணத்தை மேலாளிடம் ஒப்படைத்தார். பணத்தை தவறவிட்ட முனுசாமியும் அரசு பஸ் பணிமனைக்கு தொடர்பு கொண்டு தாம் பணத்தை தவறவிட்ட தகவலை கூறியுள்ளார்.  அதனை கேட்ட மேலாளர் முனுசாமியை விருத்தாசலம் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகம் வர கூறினார். அதன்படி பயணி முனுசாமி அங்கு சென்றார். அப்போது போலீஸ் டி.எஸ்.பி. அங்கித் ஜெயின் முன்னிலையில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 700 ரூபாயை கண்டக்டர் வேல்முருகன், டிரைவர் மூர்த்தி மற்றும் கிளை மேலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முனுசாமியிடம் ஒப்படைத்தனர். பஸ் பயணி தவறவிட்ட பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரை போலீஸ் டி.எஸ்.பி. அங்கித் ஜெயின் மற்றும் போலீசார் வெகுவாக பாராட்டினர்.

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்து பணியாற்றி வருகின்றனர்.
    • பேருந்தில் வந்த பயணிகள் இரு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை சமாதானப்படுத்தி இருவரையும் கலைத்து விட்டனர்.

    திருப்பூர் :

    பின்னலாடை நகரான திருப்பூரில் அதிக அளவிலான வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் உள்ளவர்கள் பணியாற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்திலிருந்து ெரயில் மூலமாகவும், பேருந்துகள் மூலமாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று திருப்பூர் - ஊத்துக்குளி சாலை இரண்டாவது ெரயில்வே கேட் அருகில் ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு வந்து 2 தனியார் பேருந்துகள் வந்தது.

    நேரம் பிரச்சனை தொடர்பாக ஒரே சமயத்தில் வந்ததால் நடு ரோட்டில் பஸ்களை நிறுத்தி விட்டு டிரைவர்மற்றும் கண்டக்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது கடைசியில் மோதலாக மாறியது.

    இதையடுத்து பேருந்தில் வந்த பயணிகள் இரு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை சமாதானப்படுத்தி இருவரையும் கலைத்து விட்டனர். இதையடுத்து இருவரும் பேருந்தை எடுத்துச் சென்றனர். தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் சண்டையிட்டு கொண்டதால் ஊத்துக்குளி சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.  

    ×