search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயனாளிகள்"

    • இதில் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள 14 இலகுரக நவீனசெயற்கைக்கால்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
    • இவர்களுக்கு வழங்கிய செயற்கைகைகள் விரல்களை நீட்டி மடக்கும் படியும் பொருட்களை எடுத்து பயன்படுத்தும் படியும் இருக்கும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 14 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலகுரக நவீனசெயற்கைக் கால்களை தஞ்சை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் தலைமையில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் முடநீக்கியல் துறையில் வழங்கப்பட்டது. பேராசிரியர் டாக்டர் ஆறுமுகம்,உதவி நிலைய மருத்துவர்செல்வம்,தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்து வமனையின் நிலைய மருத்துவர் முஹமதுஇத்ரீஸ் ஆகியோர் வாழத்துரை வழங்கினர்.

    தலைவர் மருத்துவர் குமரவேல் , உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவத் துறை நிபுணர் பாலமுரளி, டாக்டர் ரமேஷ், ஆர்தோடிஸ்ட் செயற்கை அவயங்கள் உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வுத துறைதஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் மற்றும் இதர உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வுத் துறை, செயற்கை அவயங்கள் துறை பணியாளார்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். முதலமைச்சரின்விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்ட மாவட்ட அலுவலர் ராஜா மற்றும் அனைத்து மருத்துவமனை ஊழிய ர்கள்,செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    இதில்ரூ.13 லட்சம் மதிப்புள்ள 14 இலகுரக நவீனசெயற்கைக்கால்கள் பயனாளிகளுக்கு வழங்க ப்பட்டன . இவற்றையும் சேர்த்து மொத்தம் இதுவரை 135 செயற்கை கை மற்றும் கால்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 20 பேர் கைகளை இழந்தவர்கள். இவர்களுக்கு வழங்கிய செயற்கை கைகள் விரல்களை நீட்டி மடக்கும் படியும் பொருட்களை எடுத்து பயன்படுத்தும் படியும் இருக்கும். மேலும் 115 நபர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர், அரியலூர் ,புதுகோட்டை, திருவாரூர், நாகப்பட்டடினம், மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவ ட்டங்களில் உள்ள பய னாளி களு க்கு பயன ளிக்கும் வகை யில் இவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த செயற்கை கை கால்களில் ஏற்படும் ஏதா வதுசிக்கல்களை உடனடி யாகத்தீர்க்க வும் முடியும். இந்த செய ற்கை கை கால்கள் முதலமை ச்சரின் விரிவான மருத்து வக் காப்பீட்டுத்தி ட்டத்தின் கீழ் வழங்க ப்பட்டது. கை கால்களை இழந்த நோயாளிகள் உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவத் துறை வெளி நோயாளி பிரிவை அணுகலாம். ஊனமுற்றோர் அட்டை இல்லாதவர்களும் கால்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    • முகாமில் 22 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மான்ய விலையில் காய்கறி விதைகள், உரங்கள் மற்றும் பிளாஸ்டிக் டிரம், டிரே வழங்கப்பட்டது.
    • வேளாண்துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு மான்ய விலையில் பாறை, மண் வெட்டி, தென்னங்கன்று உள்ளிட்ட வேளாண்மை உபகரணங்களும் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சீதளா பாலாஜி தலைமை தாங்கினார்.

    திருமருகல் வட்டார தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன், வேளாண்மை உதவி அலுவலர் சிந்து ஆகியோர் முன்னிலை வகித்து துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மான்யங்கள் பற்றி பேசினர்.இதில் 22 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மான்ய விலையில் காய்கறி விதைகள், உரங்கள் மற்றும் பிளாஸ்டிக் டிரம், டிரே வழங்கப்பட்டது.வேளாண்துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு மான்ய விலையில் பாறை, மண் வெட்டி, தென்னங்கன்று உள்ளிட்ட வேளாண்மை உபகரணங்களும் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் நடராஜன், ஊராட்சி மன்றதுணை தலைவர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • இந்த நிகழ்ச்சியில் 10 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களை அமைச்ச பெரியகருப்பன் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள கண்டரமாணிக்கம் ஊராட்சி, கே.வலையப்பட்டி கிராமத்தில் "கலைஞரின் வருமுன் காப்போம்" திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டிதலைமை தாங்கினார். சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகித்தார்.

    அமைச்சர் பெரியகருப்பன் விழாவில் கலந்து கொண்டு மருத்துவமுகாமை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

    கிராமப்புறங்களில் வசிக்கின்ற பொதுமக்கள் மருத்துவச்சேவை பெறுவதற்காக நகர்ப்புறங்களுக்கு செல்ல வேண்டியதை தவிர்த்து, நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே அதனை அறிந்து கொள்வதற்கு ேபர் பயன் பெற்றனர்.

    நடப்பாண்டான 2022-2023-லும் 36 முகாம்கள் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு ஏப்ரல் 2022 முதல் தற்போது வரை மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் 15 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அதன்மூலம் 14 ஆயிரத்து 800 ேபர் பயன்பெற்றுள்ளனர்.

    இந்த முகாமில் பொது மருத்துவர்மற்றும் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு இதய நோய் மருத்துவம், சிறுநீரகம் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு மருத்துவம், மனநல மருத்துவம், மகளிர் மற்றும் குழந்தைகள்நல மருத்துவத்துறைகளை கொண்டு பரிசோதனை செய்து, நோயைக் கண்டறிந்து, தேவைப்படுவோருக்கு உயர்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இதுதவிர மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம், கொரோன தடுப்பூசி. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து ஊட்டச்சத்து வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் 10 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களை அமைச்ச பெரியகருப்பன் வழங்கினார்.

    காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, இணை இயக்குநர்(மரு த்துவப்பணிகள்) இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநர்(சுகாதாரத்துறை) ராம்கணேஷ், கல்லல் ஊராட்சி ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    • 68 கிராமங்களில் பயனாளிகளை தேர்வு செய்ய நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • துறை அலுவலர்கள் கலந்து கொண்டு மேலும் புதிய திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வை நடத்த உள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம பஞ்சாயத்துக் களிலும் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் 5 ஆண்டு காலத்திற்குள் சுழற்சி முறையில் அனைத்து பஞ்சாயத்துக்களிலும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நல திட்ட பணிகள் திட்டமிடப்பட்டு உள்ளன.

    இந்த ஆண்டு முதல் கட்டமாக இந்த திட்டத்தை செயல்படுத்த மொத்தம் 68 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துக்களில் ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கூட்டுறவுத்துறை, மகளிர்திட்டம், கால்நடை பராமரிப்புத் துறை, நீர்வள ஆதாரத் துறை, மீன்வளத்துறை, பட்டு வளர்ச்சித்துறை மற்றும் தொடர்புடைய துறைகள் இணைந்து ஒருங்கிணைந்த சிறப்பு நலத்திட்ட முகாம் நடத்துகின்றன. இந்தமுகாம் நாளை (வெள்ளிக்கிழமை) 68 கிராம பஞ்சாயத்துகளிலும் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் துறை அலுவலர்கள் கலந்துகொண்டு மேலும் புதிய திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வை நடத்த உள்ளனர். எனவே, இந்த முகாம்களில் தொடர்புடைய கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×