search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230466"

    • தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
    • நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்ஆகும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இங்கு வரும் பக்தர்ளுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது.

    நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் சுஜித் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இதில் காணிக்கையாக ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 334 வசூல் ஆகி இருந்தது. அதேசமயம் இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 17 நிரந்தர உண்டியல்கள் ஒரு மாதம் ஆன பிறகும் இதுவரை திறந்து எண்ணப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கடந்த ஆண்டை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்
    • மாத்தூர் தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் மிகவும் முக்கியமான சுற்றுலா தலங்களில் மாத்தூர் தொட்டிப் பாலமும் ஒன்று.

    இது ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிகாலத்தில் இது மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டது.

    1240 அடி நீளம், 103 அடி உயரம் கொண்ட இந்த பாலம் கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    மாத்தூர் தொட்டிப்பா லத்தைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

    தொட்டிப்பாலத்தின் முகப்பு பகுதி அருவிக்கரை ஊராட்சியில் உள்ளது. அருவிக்கரை ஊராட்சிக்கு வருமானம் தரும் ஒன்றாக மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளது. ஆண்டு தோறும் சுற்றுலாபயணிகள் தொட்டிப்பாலத்திற்கு வரும்போது கார்கள் மற்றும் நுழைவுக்கட்டணம் வசூலிப்பது ஏலம் விடப்படுகிறது.

    கடந்த ஆண்டுக்கான குத்தகை காலம் வரும் 31-ந் தேதியுடன் முடிவடைவதால் 2023-ம் ஆண்டுக்கான ஏலம் அருவிக்கரை ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஏலத்தில் 30 பேர் கலந்து கொண்டனர். இறுதியில் கார்பார்க்கிங் ரூ.23 லட்சத்து 65 ஆயிரத்து 900,-க்கும், நுழைவு கட்டணம், வீடியோ கேமரா கட்டணம் ரூ.17 லட்சத்து 85 ஆயிரத்திற்கும், என மொத்தம் ரூ.41 லட்சத்து 50 ஆயிரத்து 900-க்கும் ஏலம் போனது.

    கடந்த ஆண்டு இவை அனைத்தும் சேர்த்து மொத்தம் ரூ.17 லட்சத்துக்கு ஏலம் போனது.கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிக தொகைக்கு இந்த ஆண்டு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    மாத்தூர் தொட்டி பாலத்தின் மேல் சென்று தொட்டிப்பாலத்தை சுற்றிப்பார்த்து வர ரூ.5 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இதுபோல மாத்தூர் தொட்டிப்பாலத்தில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிளுக்கு ரூ.5, ஆட்டோவுக்கு ரூ.15, கார்களுக்கு ரூ.40, மினி வேன், வேன்களுக்கு ரூ.50, பஸ்களுக்கு ரூ.75, வீடியோ கேமராவுக்கு ரூ.25, புகைப்பட கேமராவுக்கு ரூ5 என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

    • பெருந்தொகையை கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
    • ஆபரேட்டர்கள் மீது சுமத்தியுள்ள நிலுவை தொகையை ரத்து செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் தஞ்சை மாவட்ட தலைவர் சைவ. குமணன், மாவட்ட செயலாளர் முருகு .இளஞ்செழியன், மாவட்ட பொருளாளர் குமரன் ஆகியோர் தலைமையில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை பொது மக்களுக்கு வழங்கிய பின்னர் தற்போது செயல்படாத பாக்ஸ்களுக்கு அவற்றின் கிரைய தொகை என்று கூறி பெருந்தொகையை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இடம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.

    கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நலவாரியம் அமைத்து தர வேண்டும் . நிலுவைத் தொகை என்ற பெயரில் ஆப்பரேட்டர்கள் மீது சுமத்தியுள்ள நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.

    வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதை உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்வில் தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், ஒரத்தநாடு, திருவையாறு , பூதலூர், பாபநாசம், பேராவூரணி, திருவிடைமருதூர் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்
    • இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ந் தேதி கொடிநாள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ந் தேதி கொடிநாள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    அன்றைய தினம் முன்னாள் படை வீரர்கள் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூறும் வகையில் கொடி நாள் நிதி திரட்டப்படு கிறது. இந்த நிதி உயிர் நீத்த படை வீரர்களின் மனைவிகள், ஊனமுற்ற படை வீரர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மறுவாழ்விற்காகவும், நலத்திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொடிநாள் வசூல், ரூ.1 கோடியே 14 லட்சத்து 52 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ.1 கோடியே 20 லட்சத்து 56 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டுக்கான படைவீரர் கொடிநாள் வசூலை மாவட்ட கலெக்ட ரும் மாவட்ட முப்படை வீரர் வாரியத் தலைவருமான அரவிந்த் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவருக்கு அடையாள கொடியை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் சீனிவாசன் அணிவித்தார்.

    தொடர்ந்து போர் மற்றும் போரையொத்த நடவடிக்கையின் போது உயிர் நீத்த படைவீரரின் மனைவிக்கு கார்கில் நிவாரண நிதியில் இருந்து கருணை தொகை ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. குமரி மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் தொடர்ச்சியாக 2 ஆண்டு கள் ரூ.1 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்து உள்ளதாகவும் இந்த ஆண்டும் கொடிநாள் நிதிக்கு அனைவரும் நிதியை வாரி வழங்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணங்களும் குவிந்தன
    • உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    இந்தக் கோவில் வளாகத்துக்குள் மொத்தம் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுஉள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    இது தவிர இந்த கோவிலின் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மட்டும் மாதந்தோறும் திறந்து எண்ணப்பட்டுவருகிறது. ஆனால் இதில் நிரந்தர உண்டியல்கள் மட்டும் கடந்த 3மாதங்களாக திறந்து எண்ணப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 3மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்களும்நேற்று திறந்து எண்ணப்பட்டன.

    குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் தங்கம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர்தர்மேந்திரா ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.

    இந்த உண்டியல் எண்ணும் பணி காலை 9 மணிக்கு தொடங்கியது.மாலை4மணி வரை நடந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் குமரி மாவட்டத்தில்உள்ள திருக்கோவில் பணியா ளர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடை பெண் பக்தர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்கள் ஈடுபட்டனர்.

    இதில் உண்டியல் மூலம் ரூ.28 லட்சத்து 39 ஆயித்து 163 ரொக்கபணம் வசூலாகி உள்ளது. இதுதவிர 11 கிராம் தங்கமும் 193 கிராம் 600 மில்லி கிராம் வெள்ளியும் மற்றும் வெளிநாட்டு பணமும் காணிக்கையாக வசூலாகிஉள்ளது. இது தவிர கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னதான திட்டத்துக்கான அன்னதான உண்டியலும் திறந்து என்னபட்டது.

    இந்த அன்னதான உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 866 வசூல் ஆகி உள்ளது. ஆக மொத்தம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.28 லட்சத்து 32 ஆயிரத்து 346 ரொக்க பணம் காணிக்கை யாக வசூல் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

    • உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
    • 17 நிரந்தர உண்டியல்கள் இந்த மாதம் திறந்து எண்ணப்படவில்லை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இங்கு வரும் பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல்நேற்று திறந்து எண்ணப்பட்டது.

    நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர்ஆனந்த், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளர் தர்மேந்தி ரா, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் செயல் அலுவலர் ராஜேந்திரன், பொருளாளர் ரமேஷ், கணக்காளர் ஸ்ரீ ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண் ணப்பட்டது. இந்த உண்டி யல் எண்ணும் பணி யில் திருக்கோவில் பணியா ளர்கள் ஈடுபட்டனர்.

    இதில் காணிக்கையாக ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 469 வசூல் ஆகி இருந்தது. அதேசமயம் இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் வைக்கப் பட்டுள்ள 17 நிரந்தர உண்டியல்கள் இந்த மாதம் திறந்து எண்ணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

    • கோவிலில் பக்தர்ளுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    • அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இங்கு வரும் பக்தர்ளுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த அன்னதான திட்டத்தை பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது. நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர்ஆனந்த், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளர் தர்மேந்திரா, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ரமேஷ், கணக்காளர் ஸ்ரீ ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இதில் காணிக்கையாக ரூ.96 ஆயித்து 531 வசூலாகி இருந்தது. அதேசமயம் இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் வைக்கப் பட்டுள்ள 17 நிரந்தர உண்டியல்கள் இந்த மாதம் திறந்து எண்ணப் படவில்லை என்பது குறிப் பிடத்தக்கதாகும்

    • சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் அன்னதான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
    • உண்டியல் மாதத்திற்கு ஒருமுைற அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் அன்னதான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் மாதத்திற்கு ஒருமுைற அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இதையொட்டி கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கண்காணிப்பாளர் ஆனந்த், ஆய்வாளர் ராமலெட்சுமி, கோவில் கணக்கர் கண்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.32 ஆயிரத்து 15 வசூலாகி உள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • 17 நிரந்தர உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன.
    • 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுஉள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    இது தவிர இந்த கோவிலின் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் உள்ளது. இந்த உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்பட்டு வருகிறது. நிரந்தர உண்டியல்கள் மட்டும் கடந்த 3 மாதங்களாக திறந்துஎண்ணப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 3மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன.

    இதில் உண்டியல் மூலம் ரூ.18 லட்சத்து 39 ஆயிரத்து 163 வசூலாகிஉள்ளது.இது தவிர 11 கிராம் தங்கமும், 193 கிராம் 600 மில்லி கிராம் வெள்ளியும் மற்றும் வெளிநாட்டு பணமும் காணிக்கையாக வசூலாகி உள்ளது.

    • பயணிகள்-பொதுமக்களிடம் நன்கொடை வசூலித்து ஏமாற்றுவதாக புகார் எழுந்துள்ளது.
    • 24 மணி நேரமும் பயணிகளிடம் வசூல் வேட்டை நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாநகரில் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு சிலர் பணமோசடி செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

    மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் வரும் பயணிகளிடம் "காப்பகம் நடத்துகிறோம். நன்கொடை வழங்குங்கள்" என்று 24 மணி நேரமும் பயணிகளிடம் வசூல் வேட்டை நடக்கிறது.

    மேலும் சிலர் மாற்றுத்திறனாளிகள் என்று தெரிவித்தும் பஸ்களில் ஏறி மக்கள் மத்தியில் பேசி வசூல் செய்கின்றனர். இதில் பலர் மோசடி நபர்கள் என்றும், அவர்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேபோல் ரெயில் நிலையம் மற்றும் மீனாட்சி கோவில் வரும் மக்களிடம் "நாங்கள் காப்பகத்தில் இருந்து வருகிறோம்" என்று தெரிவித்து சில பெண்கள் நன்கொடை வசூலித்து செல்கின்றனர்.

    இவர்கள் அடிக்கடி மதுரையில் முகாமிட்டு வசூல் செய்து வருகின்றனர். இவர்கள் பின்னணியில் மோசடி நபர்கள் இருப்பதுபோல் தெரிகிறது. இவர்கள் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவது போல் இருக்கிறது. இருந்த போதிலும் பலர் அவர்களிடம் பணம் கொடுத்து வருகின்றனர்.

    இவர்கள் உண்மையை தெரிவித்து வசூல் செய்தார் களா ? அல்லது போலி நபர்களா? என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள முன்வருவார்களா?

    • தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம்
    • தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.

    இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இங்கு வரும் பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப் பட்டு வருகிறது.

    இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த அன்னதான திட்டத்தை பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது.

    நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர்ஆனந்த், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் தர்மேந்திரா, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ரமேஷ், கணக்காளர் ஸ்ரீ ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

    இந்த உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ.60 ஆயித்து 95 வசூல் ஆகி இருந்தது.

    அதேசமயம் இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 17 நிரந்தர உண்டியல்கள் இந்த மாதம் திறந்து எண்ணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.
    • பொதுமக்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டு அவை கடிதங்களாக பெறப்பட்டன.

    பல்லடம் :25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.

    தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரி சீராய்வு செய்யப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதன்படி நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகள், கடைகள் உள்ளிட்டவற்றுக்கு 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.பல்வேறு தரப்பினரும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.

    இது குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டு அவை கடிதங்களாக பெறப்பட்டன. சொத்து வரி உயர்வு தொடர்பாக நகராட்சி கூட்டத்திலும் ஆலோசிக்கப்பட்டு, எதிர்ப்புகளுக்கு இடையே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சொத்து வரி உயர்த்துவதற்கான கட்டடங்களின் நீள, அகலம், உயரம் உள்ளிட்டவை அளவீடு செய்யும் பணி நடந்தது. இதையடுத்து, புதிய வார்டுக்கு மாற்றம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. சீராய்வு செய்யப்பட்ட சொத்து வரி வசூல் செய்யும் பணி, கடந்த 2 மாதங்களுக்கு நிறுத்தப்பட்டிருந்தது.தற்போது புதிய உயர்த்தப்பட்ட சொத்து வரி வசூல் செய்யும் பணி துவங்கியுள்ளது. புதிய சொத்து வரி, பெயர் மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளையும் இனி மேற்கொள்ளலாம் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ×