என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 230629"
- நடுக்கடை கடைத்தெருவில் சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றிய நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் மளிகை பொருட்களை திருடி சென்றார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த கட்டுமாவடி ஊராட்சி தண்டாளம் பள்ளிவாசல் தெருவில் பாஸ்கரன் (வயது 45) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து 2000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபரை பிடிக்கக் கோரி புகார் ஒன்று அளித்து இருந்தார்.
புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நடுக்கடை கடைதெருவில் சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றி நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஆலத்தூர் மேலத்தெருவை சேர்ந்த லட்சுமணன் (வயது 33) என்பதும் இவர் நேற்று முதல் நாள் இரவு மளிகை கடையில் பூட்டை உடைத்து 2000 ரூபாய் பணம் மற்றும் 2000 மதிப்பிலான மளிகை பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது.
உடனே திட்டச்சேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை தல்லாகுளம் போலீசார் சம்பவத்தன்று டாக்டர் தங்கராஜ் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது நீச்சல் குளம் அருகே சந்தேகத்திற்கிடமாக 6 பேர் நின்றிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். இதில் 5 பேர் சிக்கினர். ஒருவன் தப்பி ஓடி விட்டான்.
போலீசில் சிக்கிய வர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனையிட்டபோது 2 கத்திகள், ஒரு பட்டாக்கத்தி, கயிறுகள், மிளகாய் பொடி பாக்கெட்டுகள் ஆகியவை இருந்தது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கோரிப்பாளையம் வேலாயுதம் பிள்ளை தெருவை சேர்ந்த மதுரை வீரன் மகன் ரிஷிக்குமார் (வயது 19), சோமசுந்தரம் பிள்ளை தெருவை சேர்ந்த குமரவேல் மகன் விநாயகர் சந்துரு, சின்ன கண்மாய் தெருவை சேர்ந்த ராஜசேகர் மகன் சஞ்சய் (20) மற்றும் 17 வயதுடைய 2 நபர்கள் என தெரியவந்தது.
இவர்கள் அந்தப் பகுதியில் தனியாக வருபவர்களை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபட ஆயுதங்களை வைத்திருந்தார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாரியில் பேட்டரி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை
மதுரை அருகே உள்ள கருமாத்தூர் கேசவன்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் சம்பவத்தன்று கோச்சடை மாநகராட்சி வாகனம் நிறுத்தும் இடத்தில் தனது லாரியை நிறுத்தி இருந்தார். மர்ம நபர்கள் லாரியில் இருந்த 2 பேட்டரிகளை திருடி சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் எஸ் .எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆரப்பாளையம் பெத்தானியாபுரத்தை சேர்ந்த ஸ்டாலின் மரியராஜ், பாலமுருகன் ஆகிய 2 பேர் பேட்டரி திருடியது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
- மரக்காணம் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மரக்காணம் சுற்றுவட்டார பகுதியில் சாராயம், மது பானங்கள் விற்பவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் கிராமத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து மரக்காணம் சுற்றுவட்டார பகுதியில் சாராயம், மது பானங்கள் விற்பவர்களை கைது செய்ய தனப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மரக்காணம் அடுத்த கரிப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சாராயம் மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபட்ட அருண்குமார் (வயது 26), அய்யப்பன் (32), மீனாட்சி (42), கலையரசி (39) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த சாராயம், மது பானங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டிவனம் சிறையில் அடைத்தனர்.
- மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து 37 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை
விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் தேராவூர் மற்றும் அகரப்பட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேராவூர் மேட்டுப்பட்டி பகுதியில் மதுவிற்று கொண்டிருந்த கள்ளம்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கொடும்பாளூர் லஞ்சமேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மது விற்ற கிருஷ்ணன் (37) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 37 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க புதுவையில் இருந்து மதுபானங்கள் வாங்கி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- மதுபாட்டில்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 34). இவர் புதியதாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்ய உள்ளார். இதையடுத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பார்ட்டி வைக்க முடிவு செய்து, புதுவைக்கு சென்று மதுபாட்டில்கள் வாங்கினார். அதனை ஒரு கட்டைப்பையில் போட்டுக்கொண்டு மீண்டும் வீடு திரும்பினார். இவர் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் இறங்கி, கிராமத்திற்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். போலீசாரை கண்டவுடன் கோவிந்தசாமி பதட்டமாக அங்கிருந்து வேகமாக நடந்தார். இதனைக் கண்ட போலீசார் அவரை மடக்கிப் பிடித்து பையை சோதனையிட்டனர். அதில் இருந்து புதுவை மதுபானங்களை கைப்பற்றி வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல உளுந்தூ ர்பேட்டை கார்நேசன் வீதியைச் சேர்ந்த சாந்தா (60), மணலூர் சத்தியராஜ் (29) ஆகியோர் மதுபாட்டில்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அவர்களை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். உளுந்தூர்பேட்டை பகுதியில் கள்ளத்தனமாக சாராயம், மதுபானம், கஞ்சா விற்பனைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- போக்சோ குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
- எஸ்.பி. பரிந்துரையின்பேரில் கலெக்டர் கற்பகம் போக்சோ குற்றவாளியாக பார்த்திபனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தைச் சேர்ந்தtu; பாஸ்கர் மகன் பார்த்திபன் (27). இவர் 17 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து பார்த்திபனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் எஸ்.பி. பரிந்துரையின்பேரில் கலெக்டர் கற்பகம் போக்சோ குற்றவாளியாக பார்த்திபனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்பேரில் பார்த்திபன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளார்
- பைக் பறிமுதல் செய்யப்பட்டது
கரூர்,
கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பெரியசாமி நகரை சேர்ந்தவர் பாலாஜி ராமசாமி (வயது 27). இவர் தனது வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். அதனை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பாலாஜி ராமசாமி கொடுத்த புகாரின்பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்து, அந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
- கொள்ளையர்கள் அந்த மூதாட்டி அணிந்திருந்த செயின் மற்றும் கம்மல்களை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.
- தோட்டத்தில் தங்கியிருந்த வயதான தம்பதியினரை கொன்று நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர்:
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் சரவணகுமார். தொழிலதிபரான இவருக்கு சொந்தமான மாந்தோப்பு வாங்கல் ஓடையூரில் உள்ளது.
இந்த தோப்பினை திருச்சி மாவட்டம் காட்டுப் புத்தூர் பெருமாள் காட்டுப் புத்தூரைச் சேர்ந்த தங்கவேல் (வயது 64)என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் தனது மனைவி மயிலியுடன் தோட்டத்திலேயே தங்கி இருந்தார்.
இந்த வயதான தம்பதி தங்குவதற்கு தோட்டத்தில் ஒரு சிறிய குடிசை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல் நேற்று இரவு சமையல் செய்து சாப்பிட்டு விட்டு கணவன்-மனைவி இருவரும் படுத்து உறங்கினர்.
இதற்கிடையே நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் குடிசை வீட்டின் கதவை தட்டினர். உடனே தங்கவேல் திடுக்கிட்டு எழுந்து கதவை திறந்தார். அடுத்த நொடி கொள்ளையர்கள் தாங்கள் எடுத்து வந்த மிளகாய் பொடியை கணவன்-மனைவி இருவர் மீதும் தூவி சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த தங்கவேல், அவரது மனைவி மயிலி ஆகிய இருவரும் மயங்கி விழுந்து இறந்தனர்.
பின்னர் கொள்ளையர்கள் அந்த மூதாட்டி அணிந்திருந்த செயின் மற்றும் கம்மல்களை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த மாந்தோப்பு தோட்டத்தில் வயதான தம்பதியினரின் நடமாட்டம் இல்லாததால் கிராம மக்கள் குடிசை வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது கணவன் மனைவி இருவரும் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக வாங்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். கொள்ளையர்கள் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.
தோட்டத்தில் தங்கியிருந்த வயதான தம்பதியினரை கொன்று நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.
- போலீசார் டைல்ஸ் கடை உரிமையாளர் கோகுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் முன்பாக உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் 8 எண்ணிக்கையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை செலுத்தினார். இது குறித்து வங்கியின் நோடல் அலுவலர் கார்த்திக் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் வங்கிக்கு செலுத்தப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகள் குறித்து வங்கி நிர்வாகத்தினர் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்தனர். கள்ள நோட்டுகளில் சீரியல் எண்கள் மாற்றப்பட்டுள்ளதை வைத்து வங்கி அதிகாரிகளால் அவை கள்ள நோட்டுகள் என உறுதி செய்யப்பட்டது. இந்த நோட்டுகளை செலுத்தியவர் தேவாரம் மெயின் ரோட்டில் டைல்ஸ் கடை நடத்தி வரும் கோகுல் என தெரிய வந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் டைல்ஸ் கடை உரிமையாளர் கோகுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்ததும் கோகுல் தலைமறைவானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பத்தில் ஒரு வீட்டில் கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் சிக்கினர். தற்போது வங்கி ஏ.டி.எம்.மில் தொழிலதிபரே 500 ரூபாய் கள்ள நோட்டுகளை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 4 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
- போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள காட்டூர் ஊராட்சி, சின்ன காட்டுூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது80). இவரது மனைவி அருக்காணி (75). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று வெள்ளகோயில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்துள்ளனர். காட்டூர் பிரிவு அருகே பஸ்சிலிருந்து இறங்கி இரண்டு பேரும் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் ஆறுமுகத்தை கொண்டு சென்று விடுவதாக பைக்கில் ஏற்றி சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும் அவரை அங்கே இறக்கி விட்டு விட்டு மீண்டும் அருக்காணி நடந்து வந்த இடத்திற்கு அருகே வந்துள்ளார். வந்த உடன் மின்னல் வேகத்தில் அவர் அணிந்திருந்த 4 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து அருக்காணி கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சின்ன காட்டூரை சேர்ந்த அருக்காணி என்பவரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த பரமபட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரது மகன் சந்திரசேகர் ( 37) , பல்லடம் கணபதிபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகன் குமார் (38) என்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவர்களிடம் இருந்து 4 பவுன் தங்கநகை மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பிரபாகரன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
- புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் 33 வயது பெண். இவர் அரசு பணிக்காக போட்டி தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தார்.
அதேபகுதியைச் சேர்ந்த தனசீலன் மகன் பிரபாகரன் (35). இவர் சேலம் மாவட்டத்தில் லேபர் கோர்ட்டில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அந்த பெண், பிரபாகரனும் போட்டி தேர்வுகளுக்காக படித்து வந்தபோது, அதற்காக விண்ணப்பிப்பதற்காக தனது படிப்பு சான்றிதழ் மற்றும் சுயவிவரங்களை அவரிடம் கொடுத்தார். அப்போது அதில் இருந்த பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து கொண்டு தினமும் பிரபாகரன் அவரிடம் பேசிவந்தார்.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இருவரும் பலஇடங்களில் காதலர்களாக சுற்றி வந்ததாக தெரிகிறது. அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பிரபாகரன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். அதன்பின்னர் இந்த விவரம் குறித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக தனியார் மருத்துவமனையில் கர்ப்பத்தையும் கலைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து பிரபாகரனுக்கு அரசு வேலை கிடைத்தது. இதனால் அவர் அந்த பெண்ணிடம் பேசாமல் இருந்து வந்தார். அவர் பலமுறை பிரபாகரனை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது போனை எடுக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பிரபாகரன் கற்பழித்து விட்டதாக கூறி புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்