search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • கொத்தான்குளம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 25) என்பது தெரியவந்தது.
    • விஸ்வநாதனை போலீசார் கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் இயங்கி வரும் ஒரு வங்கியில் கடந்த 10ம் தேதி ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது.

    இதில் ஏடிஎம்மில் இருந்த 7 லட்ச ரூபாய் தப்பியது. இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

    மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பெயரில் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

    மேலும் குற்றவாளி பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை வைத்து குற்றவாளியை அடையாளம் கண்டுபிடித்தனர்.

    ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் நாகப்பட்டினம் கொத்தான்குளம் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் விஸ்வநாதன் என்பது தெரியவந்தது .

    இதனையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் விஸ்வநாதனை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் ஏடிஎம்மை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதை விஸ்வநாதன் கொண்டார்.

    இதனையடுத்து விஸ்வநா தனை நாகப்பட்டினம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் சோதனையில் சிக்கினார்
    • 33 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது

    பெரம்பலூர்.

    பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சட்ட விரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி மேற்பார்வையில் பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீஸ் குழுவினர் சோதனை மேற்கொண்டு, எம்.ஜி.ஆர். நகர் அருகே இருந்த முட்புதருக்கு அருகில் அரசு மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த காமராஜை(வயது 47) கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுபோன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரித்தாலோ அல்லது அரசு அனுமதியின்றி மதுபான பாட்டில்களை விற்பனை செய்தாலோ மாவட்ட போலீஸ் அலுவலகத்தை 94981 00690 என்ற செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி தெரிவித்தார்.

    • வீட்டிற்கு வந்த தோழியை இரவு திருப்பூருக்கு வழியனுப்பி வைக்க பஸ் நிலையத்திற்கு ரஞ்சினி சென்றார்.
    • புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் நெய்க்கடை வீதியை சேர்ந்தவர் ரஞ்சினி (வயது 34). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் தன்னுடன் வேலை பார்க்கும் தோழி ஒருவர் ரஞ்சினியை பார்ப்பதற்காக காங்கேயம் வந்தார்.

    பின்னர் வீட்டிற்கு வந்த தோழியை இரவு திருப்பூருக்கு வழியனுப்பி வைக்க பஸ் நிலையத்திற்கு அவர் சென்றார். தோழியை அனுப்பி வைத்து விட்டு ரஞ்சினி வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற காங்கயத்தை சேர்ந்த ஆட்டோ, ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என 4 பேர் ரஞ்சினியை கிண்டல் செய்து தகாத வார்த்தையில் பேசி அநாகரிகமாக நடந்து கொண்டனர்.

    இதுதொடர்பாக ரஞ்சினி காங்கேயம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் நந்தகுமார் (27), தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் கோகுல்கார்த்திக் (22), சுரேஷ் (27),கண்ணன் (24) ஆகியோரை கைது செய்தனர்.

    • சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடத்தல் கும்பல் தங்கியிருப்பது தெரிய வந்தது.
    • கைதான 3 பேரும் முருகனிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க அவரை கடத்திச் சென்றதாக தெரிவித்தனர்.

    மதுரை:

    சென்னையை சேர்ந்தவர் முருகன். இவர் மதுரை மாட்டுத்தாவணி எதிரே செயல்படும் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தார். இவரது உறவினர் நெல்லை மாவட்டம், முக்கூடலை சேர்ந்த முப்புடாதி மனைவி காளீஸ்வரி. இவர் தனது மாமா முருகனை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள லாட்ஜுக்கு சென்று சந்தித்தார். பின்னர் இருவரும் வெளியே வந்தனர்.

    அப்போது 4பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கியது. காளீஸ்வரியை கீழே பிடித்து தள்ளிவிட்டு முருகனை காரில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து காளீஸ்வரி கே.புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்தனர். இந்த தனிப்படை போலீசார் கடத்தல் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும், செல்போன் எண்களையும் ஆய்வு செய்தனர். இதில் சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடத்தல் கும்பல் தங்கியிருப்பது தெரிய வந்தது.

    தனிப்படை போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அது ஆனந்த் என்பவரது வீடு என்று தெரியவந்தது. அந்த வீட்டில் முருகனை மர்ம கும்பல் அடைத்து வைத்திருந்தது. அவரை போலீசார் மீட்டனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட மணி, ஆனந்த், சுரேஷ்குமார், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கடத்தலுக்கு பயன் படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான 3 பேரும் முருகனிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க அவரை கடத்திச் சென்றதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி 48 மணிநேரத்தில் கடத்தல் கும்பலை பிடித்ததற்காக அவர்களுக்கு, மதுரை போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் பாராட்டு தெரிவித்தார்.

    • பொன்னேரி அடுத்த தீபன் சத்திரம் தச்சூர் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
    • 3 வாலிபர்களும் பீர்பாட்டிலை உடைத்து விற்பனையாளர் மூர்த்தியை தாக்கினர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தீபன் சத்திரம் தச்சூர் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனையாளராக மூர்த்தி (40) என்பவர் உள்ளார்.

    இந்தநிலையில் மதுக்கடைக்கு வந்த 3 வாலிபர்கள் ஓசியில் மதுபாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனை விற்பனையாளர் மூர்த்தி கண்டித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் பீர்பாட்டிலை உடைத்து விற்பனையாளர் மூர்த்தியை தாக்கினர். இதில் அவரது கழுத்து மற்றும் முகத்தில் பலத்த பாட்டில் குத்து விழுந்தது. இதுகுறித்து மூர்த்தி பொன்னேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து விசாரித்தனர். இதில் ஓசியில் மதுபாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்டு தாக்கியது பொன்னேரி பழைய பஸ் நிலையம் வள்ளலார் தெருவை சேர்ந்த குணா, சூர்யா, லட்சுமிபதி என்பது தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • வீட்டு உரிமையாளர் ராணிக்கும் சந்திரசேகருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
    • வீட்டு வாடகை பணம் தகராறில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வண்டலூர்:

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள ராகவா நகர் பகுதியில் வசித்து வந்தவர் சந்திரசேகர் (வயது60). இவரது சொந்த ஊர் சிதம்பரம் ஆகும். இவரது 2-வது மகளுக்கு மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை கிடைத்ததால் மாதம் ரூ.5,500 வாடகை நிர்ணயம் செய்து சந்திரசேகர் தன் மகளுடன் கடந்த மாதம் முதல் வாடகைக்கு தங்கி இருந்தார்.

    ஆனால் வீட்டில் போதுமான குடிநீர் வசதியும், கழிவுநீர் செல்வதற்கான வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது. அதை சரிசெய்து கொடுக்க சந்திரசேகர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேலும் வீட்டு வாடகை தொடர்பாகவும் எதிர் கருத்து கூறி வந்தார்.

    ஆனால் இதனை வீட்டு உரிமையாளரான ராணி என்பவர் கண்டு கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து சந்திரசேகர் வாடகைக்கு வந்த 28-வது நாளில் முன்பணமாக கொடுத்த ரூ.10 ஆயிரத்தை வாங்காமலே வீட்டை காலி செய்து விட்டார்.

    இதையடுத்து சந்திரசேகர் வீட்டு உரிமையாளரிடம் முன்பணமாக கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு வந்தார். இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் ராணிக்கும் சந்திரசேகருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் வாடகை முன்பணத்தை வாங்குவதற்காக சந்திரசேகர் மீண்டும் ராணியின் வீட்டுக்கு வந்தார். அப்போது ராணிக்கும், சந்திரசேகருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி ராணி செல்போன் மூலம் வெளியில் இருந்த தனது மகன் நரேந்திரனிடம் தெரிவித்தார்.

    சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த நரேந்திரன், முதியவர் சந்திரசேகரிடம் மோதலில் ஈடுபட்டார். மேலும் அவரை கடுமையாக தாக்கி கீழே தள்ளிவிட்டார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சந்திரசேகர் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் முதியவர் சந்திரசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் மறைமலைநகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சந்திரசேகரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரகடம் பகுதியில் பதுங்கி இருந்த நரேந்திரனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    வீட்டு வாடகை பணம் தகராறில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
    • அவரிடம் இருந்து 3 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்சியம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பர் கோவில் தெற்கு தெருவை சேர்ந்த ராஜமோகனின் மனைவி சரிதாவை(வயது 40) பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 3 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆரோவில் நாவற்குளம் பகுதியில் ஒரு வாலிபர் அந்த வழியே சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தார்.
    • ஆரோவில் நாவற்குளம் பகுதியில் ஒரு வாலிபர் அந்த வழியே சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தார்.
    • கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட காதல் பிரச்சினையில் ஐ.டி.ஐ. மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணை நடத்தினர்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கணக்கபிள்ளையூரை சேர்ந்தவர் மனோகரன் மகன் குரு பிரகாஷ்(வயது 19). இவர் அய்யர்மலை பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி. கணிதம் படித்து வருகிறார். இவரது பெரியப்பா மகன் அதே ஊரைச் சேர்ந்த மோகன் மகன் விக்னேஷ் (16). இவர் வை.புதூரில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு எலக்ட்ரீசியன் படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று குருபிரகாஷ் கல்லூரி இறுதி நாள் வகுப்பை முடித்துவிட்டு ஊருக்கு செல்ல அய்யர்மலை பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். இதற்கிடையே குரு பிரகாசுக்கும், அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கும் கடந்த ஆறு மாத காலமாக காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக அவர்களுக்கிடையே எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்தது.

    இதற்கிடையே கல்லூரி மாணவி கீழ குட்டப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண்குமார் என்கிற அருண் (21) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த குருபிரகாஷ் ஆத்திரம் அடைந்தார். இதுபற்றி அவர் கல்லூரி மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதோடு, கடுமையாக திட்டியுள்ளார். இதனை அந்த மாணவி ஆட்டோ டிரைவர் அருணிடம் தெரிவித்துள்ளார்.

    இதைக்கேட்ட அருண் கடந்த 14-ந்தேதி குருபிரகாசிடம் எப்படி நீ போன் செய்யலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அருணின் தம்பி சங்கர், அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர் செல்லதுரை ஆகியோர் கல்லூரிக்கு வந்து, அருணிடம் மன்னிப்பு கேட்க வருமாறு குருபிரகாசை அழைத்துள்ளனர். ஆனால் குருபிரகாஷ் மறுத்துவிட்டார். பின்னர் கல்லூரி வகுப்பு முடிந்து ஊருக்கு செல்வதற்காக அய்யர்மலை பஸ் ஸ்டாப்பில் குரு பிரகாஷ், அவரது பெரியப்பா மகன் விக்னேஷ் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிலருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் அருண், கல்லூரி மாணவர் செல்லத்துரை இருவரும் சேர்ந்து குரு பிரகாசை கீழே தள்ளி கையாளும், கம்பாலும் சரமாரியாக தாக்கினர். அதனை தடுக்க வந்த ஐ.டி.ஐ. மாணவர் விக்னேசும் தாக்கப்பட்டார். இதில் காயம் அடைந்தவர்களை அப்பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் விக்னேசை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். காதல் தகராறில் ஐ.டி.ஐ. மாணவரை அடித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் அருண், கல்லூரி மாணவர்கள் செல்லத்துரை, விஜய், சரவணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் அருண், செல்லத்துரை, சரவணன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    தலைமறைவான கல்லூரி மாணவர் விஜயை தேடி வருகின்றனர். கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட காதல் பிரச்சினையில் ஐ.டி.ஐ. மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பெரிய தொழில் அதிபர்கள், வி.ஐ.பி.க்கள் சிலர் இந்த சங்குகளை வைத்து பூஜை செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்புவதாக கூறப்படுகிறது.
    • கைதானவர்களை, வனத்துறையினர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி வனசரகம் ஏர்வாடியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 63).

    இவரது வீட்டில் அரிய வகை வலம்புரி சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மதுரையில் உள்ள தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின கட்டுப்பாட்டு பிரிவு உதவி வன பாதுகாவலர் மனாசிர் ஹலிமாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அரிய வகை பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்கள் பட்டியலில் இவை இருப்பதால் இவற்றை பதுக்கி வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும்.

    இதையடுத்து உதவி வன பாதுகாவலர் உத்தரவின்படி வனசரக அலுவலர்கள் சசிகுமார், நவீன்குமார், யோகேஸ்வரன் (திருக்குறுங்குடி) மற்றும் வனத்துறை ஊழியர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் சண்முகம் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் வீட்டில் 2 வலம்புரி சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சண்முகம் மற்றும் அவருடன் இருந்த சூரியன் (75), தென்காசியை சேர்ந்த பிரவின் (38), ராஜன் (44), சரவணன் (38), நெல்லையை சேர்ந்த வீரபெருமாள் (47), ஏர்வாடியை சேர்ந்த ஆறுமுகம் ஆகியோரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

    பெரிய தொழில் அதிபர்கள், வி.ஐ.பி.க்கள் சிலர் இந்த சங்குகளை வைத்து பூஜை செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்புவதாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்து இந்த கும்பல் வலம்புரி சங்குகளை விற்பனை செய்வதற்காக சிலரிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசி விற்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

    பின்னர் கைதானவர்களை, வனத்துறையினர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.விடம் வேண்டுமானால் பேசுகிறேன் என்றும் அந்த பெண் சவால் விடுகிறார்.
    • உயர் போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க சூளைமேடு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

    சென்னை :

    நேற்று காலையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சி ஒன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் ஒருவர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடன் பெரிய அளவில் தகாத வார்த்தைகளால் பேசுவதும், பை ஒன்றை அந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது வீசி தாக்குவதும், போலீஸ் என்றாலே பிராடுதான், மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தால் போதை வழக்கு போடமுடியாது, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தால்தான் போதை வழக்கு போடமுடியும் என்று அந்த பெண் கடுமையாக பேசினார். சப்-இன்ஸ்பெக்டர் அதற்கு பொறுமையாக பதில் சொல்கிறார். எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.விடம் வேண்டுமானால் பேசுகிறேன் என்றும் அந்த பெண் சவால் விடுகிறார். பின்னர் அந்த பெண்ணை அவரது கணவர் மற்றும் கணவரின் நண்பர் ஆகியோர் சமாதானப்படுத்தி அழைத்துச்சென்று விடுகின்றனர்.

    இந்த காட்சிதான் வீடியோ காட்சியாக சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டது. யார் இந்த பெண், போலீசை இந்த அளவுக்கு தரக்குறைவாகவும், துணிச்சலாகவும் பேசுகிறாரே என்றுதான் வீடியோவை பார்த்தவர்களிடம் பெரிய கேள்வியாக நின்றது. இந்த வீடியோ பற்றி சென்னை போலீசாரிடம் விசாரித்தபோது, அந்த வீடியோ சம்பவம் பற்றி விவரித்தனர்.

    போலீசாரை கடுமையாக விமர்சித்து, சவால் விட்டு பேசிய அந்த பெண்ணின் பெயர் அக்ஷயா (வயது 30). அவரோடு இருந்த அவரது கணவர் பெயர் சத்யராஜ் (32). கணவரின் நண்பர் பெயர் வினோத்குமார் (32). சத்யராஜும், அவரது மனைவி அக்ஷயாவும் சூளைமேடு சக்தி நகரைச் சேர்ந்தவர்கள். வினோத்குமார் நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவைச் சேர்ந்தவர்.

    கடந்த 17-ந் தேதி அன்று இரவு சத்யராஜும், அவரது நண்பர் வினோத்குமாரும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர். ஒருவர் மோட்டார் சைக்கிளை மெதுவாக ஓட்ட, அதில் கால் வைத்தபடி இன்னொருவர் இன்னொரு மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்தவாறு வந்து கொண்டிருந்தார். அவர்கள் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பில் வரும்போது, அங்கு வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த சூளைமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அவர்களை மடக்கி விசாரித்தார்.

    அவர்கள் இருவரிடமும் சுவாசக்கருவி மூலம் போதையில் இருக்கிறார்களா என்று சப்-இன்ஸ்பெக்டர் சோதிக்க முயற்சித்தார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து தகராறு செய்தனர். உடனே சத்யராஜ் செல்போனில் பேசி தனது மனைவி அக்ஷயாவை அங்கு வரவழைத்தார். அங்கு உடனே வந்த அக்ஷயா சப்-இன்ஸ்பெக்டரை கைப்பையை வீசி தாக்கி, தரக்குறைவாகவும் பேசி தகராறில் ஈடுபட்டார். அந்த காட்சிதான் வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

    இந்த வீடியா காட்சியைப் பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க சூளைமேடு போலீசாருக்கு உத்தரவிட்டனர். சூளைமேடு போலீசார் உரிய விசாரணை நடத்தினார்கள். போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் சத்யராஜ், அவரது மனைவி அக்ஷயா மற்றும் வினோத்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    சத்யராஜ், அவரது மனைவி அக்ஷயா மற்றும் வினோத்குமார் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டதாக நேற்று போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • மது குடிக்க வற்புறுத்திய கும்பல் கத்திமுனையில் அஜித்தை அங்கிருந்து கடத்தி செல்ல முயன்றனர்.
    • ஆத்திரமடைந்த மகேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அஜித்தை கடத்தி செல்ல முயன்றது தெரியவந்துள்ளது.

    போரூர்:

    சென்னை ராமாபுரம், திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (23) சினிமா துணை நடிகர். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென 4 பேர் வந்தனர். அவர்கள் அஜித்தை சரமாரியாக தாக்கினர். மேலும் மது குடிக்க வற்புறுத்திய கும்பல் கத்திமுனையில் அஜித்தை அங்கிருந்து கடத்தி செல்ல முயன்றனர்.

    அதிர்ச்சி அடைந்த அஜித் கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் கத்தியால் அஜித்தை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் லேசான காயத்துடன் அஜித் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதுகுறித்து அவர் ராமாபுரம் போலீசில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் கவுதமன், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அஜித்தை தாக்கி கடத்த முயன்றது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி, கார்த்திக், தினேஷ் மற்றும் வேலூரை சேர்ந்த மகேஷ் என்பது தெரிந்தது. அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் முகநூல் மூலம் நண்பராக அறிமுகமான மகேசிடம் ரூ.50 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார். அஜித் பின்னர் அதை திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த மகேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அஜித்தை கடத்தி செல்ல முயன்றது தெரியவந்துள்ளது.

    ×