search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230640"

    • அவளால் மறக்க முடியாத ஒரு வலியை கொடுத்திருக்கிறேன் என பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
    • சுபாஷ் கராதி தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் ஷாஜபூர் மாவட்டத்தில் போலீஸ்காரர் ஒருவர், தான் காதலித்த பெண்ணின் குடும்பத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதுடன், தானும் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உளள்து.

    தேவாஸ் நகரில் போலீஸ் டிரைவராக பணியாற்றி வந்த சுபாஷ் கராதி (வயது 26), நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது காதலியின் வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பெண், அவரது தந்தை, சகோதரர் என அனைவரையும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இறந்துவிட்டதாக நினைத்து புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், எனக்கு துரோகம் செய்ததால் அவளை கொன்றுவிட்டேன். அவளால் மறக்க முடியாத ஒரு வலியை அவளுக்கு கொடுத்திருக்கிறேன், என பதிவிட்டுள்ளார்.

    ஆனால் அந்த பெண் உயிரிழக்கவில்லை. அவரது தந்தை உயிரிழந்துவிட்டார். அந்த பெண்ணும், சகோதரரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் சுபாஷ் கராதி தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்துள்ளார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • ஹசீனா பேகத்துடன் தர்காவுக்கு சென்ற இம்ரான்கான் அவரை சரமாரியாக குத்திக் கொன்றார்.
    • பேட்டை போலீசார் இம்ரான் கானிடம் விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் இம்ரான் கான் (வயது 32). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் டவுன் முகம்மது அலி தெருவை சேர்ந்த மகபூப்ஜான் என்பவரது மகள் ஹசீனா பேகம் (28) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இளம்பெண் கொலை

    இந்நிலையில் நேற்று மனைவியுடன் பேட்டை தர்காவுக்கு சென்ற இம்ரான்கான் அவரை சரமாரியாக குத்திக் கொன்றார். தொடர்ந்து இம்ரான்கான் டவுன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

    பின்னர் அவர் பேட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டார். அவரை கைது செய்த பேட்டை போலீசார் இம்ரான் கானிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

    குடும்பம் நடத்த வர மறுப்பு

    எங்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். எனக்கும், எனது மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதனால் என்னிடம் கோபித்து கொண்டு டவுனில் உள்ள தாய் வீட்டிற்கு ஹசீனா பேகம் சென்று விட்டார். அவரை என்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்த வருமாறு அழைக்க நேற்று அவரது வீட்டிற்கு சென்றேன்.

    அப்போதும் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஹசீனா பேகத்தை தர்காவுக்கு வருமாறு அழைத்து சென்றேன். அப்போது என்னுடன் குடும்பம் நடத்த என்னுடன் வருமாறு அவரிடம் கூறினேன். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்ததுடன் என்னுடன் வாக்குவாதம் செய்தார்.

    இதில் ஆத்திரடைந்த நான் எனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தினேன். இதில் பலத்த காயம் அடைந்து அங்கேயே உயிரிழந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    • சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக கார் முழுவதும் சோதனை செய்தபோது கத்தி இருந்தது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாகர், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மேற்பார்வையில் சப்- இன்ஸ்பெக்டர் மகிபால் மற்றும் போலீசார் கடலூர் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அவ்வழியாக வந்த காரினை நிறுத்தி சோதனை செய்த போது காரில் 4 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, திடீரென்று 2 வாலிபர்கள் காரில் இருந்து இறங்கி தப்பி ஓட்டினார்கள்.

    சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக கார் முழுவதும் சோதனை செய்தபோது கத்தி இருந்தது தெரிய வந்தது. உடனடியாக 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் காரை பறிமுதல் செய்தனர். அவர்களை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கம் சுதாகர் (வயது 21), புதுக்கடை சிங்கிரிகுடி ஹரி கிருஷ்ணன் (20) என்பது தெரிய வந்தது. காரின் பின்பக்கம் மற்றொரு கத்தி மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காரில் இருந்து தப்பிஓடியவர்கள் ஜோசப் (28), அருண்பாண்டியன் (26) என்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது.

    புதுவை மாநிலத்தில் தாடி அய்யனார் மற்றும் ஜோசப் என்ற 2 ரவுடி கும்பல் இருந்து வருகின்றன. இதில் ஜோசப் அணியை சேர்ந்த அன்பரசனை கடலூர் அடுத்த சிங்கிரிகுடி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாடி அய்யனார் தரப்பினர் கொலை செய்து புதைத்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அன்பரசனை கொலை செய்த தாடி அய்யனாரை கொலை செய்வதற்காக பழிவாங்கும் நோக்கத்துடன் காரில் கத்தியுடன் சுற்றி வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தப்பி சென்ற ஜோசப் மற்றும் அருண்பாண்டியன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாகர், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

    • பா.ம.க.பிரமுகர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மறைமலை நகர் பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • பெண் தகராறில் இந்த கொலை நடந்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    வண்டலூர்:

    மறைமலைநகர் அடுத்த அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வரதன். இவரது மகன் மனோகரன்(வயது32). பா.ம.க. பிரமுகர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனது சகோதரர்களோடு சேர்ந்து சொந்தமாக ஜே.சி.பி. எந்திரங்களை வைத்து தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு, மனோகரன் மறைமலைநகர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். கொண்டமங்களம் ஊராட்சி அலுவலகத்தை கடந்தபோது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மனோகரனை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மனோகரன் அவர்களிடம் இருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளைபோட்டு விட்டு தப்பி ஓடி அருகில் உள்ள ஒரு மாட்டு கொட்டகைக்குள் பதுங்கினார்.

    ஆனாலும் மர்ம கும்பல் அவரை தப்ப விடாமல் விரட்டி சென்றனர். பின்னர் மனோகரனை ஓட, ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தனர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதைத்தொடர்ந்து கொலை கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிசென்று விட்டனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையுண்ட மனோகரனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பெண் தகராறில் இந்த கொலை நடந்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? அவருக்கு வேறு யாருடனும் மோதல் உள்ளதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

    பா.ம.க.பிரமுகர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மறைமலை நகர் பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குழந்தை சுவற்றில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • கடந்த 2 நாட்களாக அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகள் மற்றும் அதன் தாய்மார்கள் விவரம் சேகரிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையில் ஒரு ஆண் சிசு இறந்த நிலையில் கிடந்தது. இது குறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை சுவற்றில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் குழந்தை ஏதேனும் காணாமல் போய் உள்ளதா? என விசாரணை நடத்தப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகள் மற்றும் அதன் தாய்மார்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. இதில் எந்த குழந்தையும் மாயமாகவில்லை என உறுதி செய்யப்பட்டது.

    இந்தநிலையில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் ஆராயப்பட்டது. அதில் நைட்டி அணிந்த ஒரு பெண் துண்டில் குழந்தையை சுற்றி உட்கார்ந்து இருந்தார். இரவு 11 மணி அளவில் அவர் கழிவறைக்கு சென்று 20 நிமிடங்கள் கழித்து வெளியே வந்த காட்சி பதிவாகி இருந்தது.

    ஆனால் அவருக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் நடக்க வில்லை. வெளியில் குழந்தை பெற்று அதனை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறையில் வீசி சென்றது உறுதியானது.

    அந்த புகைப்படத்தின் அடிப்படையில் குழந்தையை வீசி சென்றது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெருமாள் தனது மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் இன்று காலை அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது.
    • போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மகனை கொலை செய்த பெருமாளை கைது செய்தனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டக்குடியை சேர்ந்தவர் பெருமாள், விவசாயி. இவரது மகன் ராஜபிரபு (வயது 30). இவர் மது போதைக்கு அடிமையாகி தினமும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    மகன் ஏற்படுத்தி வந்த பிரச்சினைகளால் பெருமாள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். "இப்படி ஒரு மகனை உயிரோடு வைத்திருப்பதைவிட கொன்று விடுவது நல்லது" என்று முடிவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று வழக்கம்போல் மது குடித்து விட்டு வந்த மகனை தனக்கு சொந்தமான தோட்டத்துக்கு அழைத்து சென்று அவரது கை, கால்களை கயிறால் கட்டி பெற்ற மகன் என்றும் பாராமல் கிணற்றுக்குள் தள்ளி விட்டு விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கி ராஜபிரபு பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் பெருமாள் தனது மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் இன்று காலை அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் இதுபற்றி மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் பிணமாக கிடந்த ராஜபிரபு உடலை மீட்டனர்.

    மேலும் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மகனை கொலை செய்த பெருமாளை கைது செய்தனர்.

    மேலும் பலியான ராஜபிரபு உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கொட்டக்குடி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈரோடு மாவட்டம் தாசில்தார் தோட்டத்தில் முரளிதரன் என்பவருக்கு சொந்தமான சலவை பட்டறை செயல்பட்டு வருகிறது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிக்கில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாசில்தார் தோட்டத்தில் முரளிதரன் என்பவருக்கு சொந்தமான சலவை பட்டறை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளிகள் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் இதே வளாகத்தில் உள்ள வீடுகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.இந்நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த நிக்கில் (23) என்ற வாலிபர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு முரளிதரனின் சலவை பட்டறையில் தங்கிருந்து வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் இன்று நிக்கில் வேலைக்கு செல்லாததால் உடன் வேலை பார்க்கும் தொழிலாளிகள் அவரது அறைக்கு வந்தனர். அப்போது அவரது அறையில் நிக்கில் உடல் தீ பிடித்து எரிந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிக்கில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நிக்கில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை விபத்தில் உயிரிழந்தாரா? எவ்வாறு இறந்தார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. உடன் வேலை பார்க்கும் சக தொழிலாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காகவும் காத்துக் கிடக்கின்றனர். வடமாநிலத் தொழிலாளி இறந்து கடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் குப்புசாமி இறந்தார்.
    • பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் சயனைடு கலந்த மதுவை வாங்கி குடித்ததால் இறந்தது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 68) மீன் வியாபாரி. கீழவாசல் பூமால்ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவேக் (36) கார் டிரைவர்.

    இவர்கள் நேற்று மதியம் கீழவாசல் தற்காலிக மீன் மார்க்கெட் எதிரே உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் குப்புசாமி இறந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி விவேக் இறந்தார்.

    இவர்கள் இருவரது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் சயனைடு கலந்த மதுவை வாங்கி குடித்ததால் இறந்தது தெரியவந்தது. இவர்கள் ஒருவர் குடித்த மதுவை மற்றொருவர் குடித்ததால் இரண்டு பேரும் பலியாகினர்.

    தற்கொலையா ? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே டாஸ்மாக் பார் உரிமையாளர் செந்தில் நா.பழனிவேல், ஊழியர் காமராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் வேலை பார்த்த மேற்பார்வையாளர் முருகன், விற்பனையாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் உத்தரவிட்டார்.

    • துக்க நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறில் ரவுடி யோனா தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • கீழ்ப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் கருணாகரன். 26 வயதான இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    அ.தி.மு.க. பிரமுகரான இவரது தந்தை ரவி கடந்த 2015-ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தாயும் இறந்துவிட்டார். இதனால் தனது சகோதரி மற்றும் சகோதரனின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த கருணாகரன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த ரவுடி யோனாவின் மீது கல்லை தூக்கி போட்டு தாக்கி தாக்குதல் நடத்தி உள்ளார். அவரது நண்பர்கள் 5 பேரும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். துக்க நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறில் ரவுடி யோனா தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கில் கருணாகரன் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கருணாகரன் சிறையில் இருந்து கடந்த மார்ச் மாதம் வெளியில் வந்தார். இந்த நிலையில் நேற்று மர்ம கும்பல் அவரை வழிமறித்து குட்டியப்பன் தெரு பகுதியில் வைத்து தாக்கி தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தனர்.

    இது தொடர்பாக தலைமை செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது பழிக்கு பழியாக ரவுடி யோனா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கருணாகரனை திட்டம் போட்டு தீர்த்துக் கட்டியிருப்பது தெரியவந்தது. யோனா சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும், தன் மீது கல்லை தூக்கி போட்டு காலில் முறிவு ஏற்படுத்தியதை தாங்கிக் கொள்ள முடியாமல் 7 மாதங்கள் காத்திருந்து கருணாகரனை அவர் கொலை செய்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த கொலையில் 7 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அனைவரையும் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கருணாகரன் கொலை செய்த குற்றவாளிகள் அனைவருக்கும் 18 வயதில் இருந்து 20 வயதுக்குள்ளேயே இருக்கும் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் மட்டும் போலீஸ் பிடியில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த வேளையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழிக்குப் பழியாக கொலை சம்பவம் அரங்கேற வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் வழக்குகளில் கைது செய்யப்படுவார்கள்.

    சிறையில் இருந்து வெளியில் வந்ததும் எதிர் தரப்பை சேர்ந்தவர்களின் நடமாட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணிப்பார்கள். இந்த வழக்கில் அதுபோன்று கொலை நடக்க வாய்ப்பு இருப்பதாக முன்கூட்டியே கண்டறிந்து இருந்திருந்தால் கருணாகரன் கொலையை தடுத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். எனவே இனி வரும் காலங்களில் அதுபோன்ற கண்காணிப்பை கண்டிப்பாக தீவிரப்படுத்த வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • ராமன் வீட்டில் இருந்த போது அரிவாளுடன் புகுந்த 3 பேரும் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • தலைமறைவாக இருந்த கிருஷ்ணன் மற்றும் சுப்பையாவை போலீசார் கைது செய்தனர். கண்ணனை தேடி வருகின்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டியை சேர்ந்தவர் ராமன் (வயது62). இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவ மனையில் கம்பவுண்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர் பணியின் போது தர்மஸ்தான பட்டியில் ராமன் வாடகைக்கு வீடு எடுத்தி தங்கியிருந்தார். அப்போது இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி ஜெயா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த ஜெயாவின் கணவர் கிருஷ்ணன் பழக்கத்தை கைவிடுமாறு ராமனை எச்சரித்துள்ளார். ஆனால் அவர்களது பழக்கம் நீடித்தது.

    இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் சுப்பையா, கண்ணன் ஆகியோர் ராமனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி நேற்று இரவு ராமன் வீட்டில் இருந்த போது அரிவாளுடன் புகுந்த 3 பேரும் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவலறிந்த மேலூர் டி.எஸ்.பி. சீதாராமன் (பொறுப்பு), இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வேங்கையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அந்த பகுதியில் தலைமறைவாக இருந்த கிருஷ்ணன் மற்றும் சுப்பையாவை போலீசார் கைது செய்தனர். கண்ணனை தேடி வருகின்றனர்.

    • தலைமறைவாக உள்ள ராமர் பாண்டியன் உள்பட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் பாபி கார்த்திக் (வயது 35). இவர் மீது வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடி ராமர் பாண்டியனுக்கும், பாபி கார்த்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இருதரப்பினரும் தகராறில் ஈடுபட்டனர்.

    சம்பவத்தன்று ராமர் பாண்டியன் ஆதரவாளர் காளி என்பவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த பாபி கார்த்திக் மற்றும் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் ஆத்திரமடைந்த ராமர் பாண்டியன் மற்றும் சிலர் பாபி கார்த்திகை கொலை செய்ய திட்டமிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் பாபி கார்த்திக் தனது வீட்டின் அருகே மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமர் பாண்டியன் உள்பட 14 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 2 பேருக்கும் பிரச்சினை முற்றவே ராமர் பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் பாபி கார்த்திக்கை சரமாரியாக வெட்டினர். உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர் ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விரட்டி சென்று வெட்டி கொலை செய்தது.

    பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த கொலை குறித்து தகவலறிந்த தெப்பக்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான பாபி கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி கொலையில் தொடர்புடைய தனசேகரன், வேல்பிரதாப், சுந்தர பாண்டி, பாலமுரளி மற்றும் 17 வயதுடைய சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராமர் பாண்டியன் உள்பட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சின்னத்துரை, நடராஜனை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த குலசேகரப்பட்டினம் போலீசார் அதனை பார்த்தனர்.
    • சின்னத்துரையை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது70). இவர் தனது மனைவி ஊரான குலசேகரப்பட்டினம் சவேரியார்கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.இவருக்கு மனைவி மற்றும் 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.

    அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் நடராஜனும், அவரது மனைவியும் மட்டும் குலசேகரன்பட்டினத்தில் வசித்து வந்தனர். அவர் வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு சுற்றித்திரிந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு நடராஜனும், அவரது மனைவியின் உறவினரான முத்தையா என்பவரது மகன் சின்னத்துரையும் (27) குலசேகரப்பட்டினம் புறவழிச்சாலையில் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்துரை, நடராஜனை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த குலசேகரப்பட்டினம் போலீசார் அதனை பார்த்தனர்.

    உடனே அவர்கள் நடராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சின்னத்துரையை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×