என் மலர்
நீங்கள் தேடியது "#பொதுமக்கள்"
- பகுதி சபா கூட்டம் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 37-வது வார்டு பகுதியான குமரப்பபுரத்தில் நடந்தது.
- தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.
திருப்பூர் :
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 37-வது வார்டு பகுதியான குமரப்பபுரத்தில் நடந்தது. இதற்கு வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி துணை மேயருமான எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார். இதில் 37-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து முடிந்த பணிகள் மற்றும் நடைபெற இருக்கிற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட துணை மேயர் கே.எம். பாலசுப்பிரமணியம் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
37-வது வார்டில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட ரோடுகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும். அதேபோல் சாக்கடை கால்வாய், சுகாதாரம்என அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் மாநகராட்சி இளம் பொறியாளர் சுரேஷ்குமார், 54-வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம், சி.பி.ஐ. மாநில செயற்குழு உறுப்பினர் ரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- 2 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் எடுத்துக் கொள்வது நல்லது.
- குழந்தைகளுக்கு 30 மில்லியும், பெரியவர்களுக்கு 50 மில்லியும் பருக வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக மழைக்காலத்தில் காய்ச்சல் வருவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் தொடங்கி வைத்து, அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
இதில் நீதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கூடுதல் சார்பு நீதிபதி முருகன், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சசிகுமார், மனித உரிமைகள் ஆணையம் அரசு குற்றவியல் சிறப்பு வழக்கறிஞர் விவியன் அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கூறும்போது, மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு காய்ச்சல் வருவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் எடுத்துக் கொள்வது நல்லது.
குழந்தைகளுக்கு 30 மில்லியும், பெரியவர்களுக்கு 50 மில்லியும் பருக வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் தொடர்ந்து 5 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
- மகளுக்கு காதலனே விஷம் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு
- நித்திரவிளை மாணவி சாவில் தாயார் பரபரப்பு புகார்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள வாவறை பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பர். இவரது 3-வது மகள் அபிதா (வயது 19). களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், கடந்த 1-ந் தேதி வயிற்று வலியால் அவதிப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவரை பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பதில் மர்மம் நிலவியது.
இதற்கிடையில் அபிதா காதல் விவகாரம் காரணமாக விஷம் அருந்தி இருக்கலாமா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் அபிதாவுக்கு பழக்கம் இருந்ததும், அந்த வாலிபருடன் பல இடங்களுக்கு அவர் சென்று வந்திருப்பதும் தெரிய வந்தது. தற்போது பெங்களூருவில் படித்து வரும் அந்த வாலிபர், அபிதாவுடன் பேசுவதை கடந்த சில மாதங்களாக தவிர்த்துள்ளார்.
இதுபற்றி அபிதா போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னுடன் பழகி விட்டு திருமணத்திற்கு மறுப்பதாக வாலிபர் மீது அவர் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில் இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேசி உள்ளனர். அப்போது அபிதாவை திருமணம் செய்வதாக வாலிபர் உறுதி அளித்துள்ளார். அதன்படி வருகிற 13-ந் தேதி அவர்களுக்கு திருமணம் நடப்பதாக இருந்துள்ளது. இந்த நிலையில் தான் அபிதா மர்மமாக இறந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அபிதாவின் தாயார் தங்கபாய், போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தனது மகள் சாவுக்கு அவளது காதலன் தான் காரணம் என தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மகளை அவர் அழைத்துச் சென்றார். அவரை சந்தித்து விட்டு திரும்பியதில் இருந்து தான் அபிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
எனவே அவர் தான், அபிதாவுக்கு விஷம் கலந்த எதையோ கொடுத்துள்ளார் என்றும் புகாரில் அவர் கூறி உள்ளார். இதனால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். அபிதாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? அல்லது உடல் நலக் குறைவால் இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தக்கலை பள்ளி மாணவன் அஸ்வின் பள்ளி வளாகத்தில் சீருடை அணிந்து வந்தவர் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்தான்.
இதில் இன்னும் குளிர்பானம் கொடுத்தது யார்? என்பது தெரிய வில்லை. இதேபாணியில் குமரி மாவட்டம் கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவர் ஷாரோன்ராஜ், குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படு கிறது. இது தொடர்பாக அவரது காதலி கிரீஷ்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் நித்திரவிளை மாணவி அபிதாவும், காதலனால் விஷம் கொடுத்ததில் இறந்துள்ளார் என அவரது தாயார் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஒவ்வொரு வீடுகளிலும் கழிவுநீர் உறிஞ்சுக்குழி அமைத்திட அனைவரும் முன்வர வேண்டும்.
- கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில், திருவட்டார் வருவாய் வட்டம், குமரன்குடி ஊராட்சிக் குட்பட்ட முதலாறு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர்அரவிந்த் கலந்து கொண்டு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதி யான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசிய தாவது:-
நாம் குடியிருக்கும் வீடு கள் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி காத்திடும் வகையில், ஒவ்வொரு வீடுகளிலும் கழிவுநீர் உறிஞ்சுக்குழி அமைத்திட அனைவரும் முன்வர வேண்டும். இந்த உறிஞ்சுக்குழாய் அமைப்ப தற்கு ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான செலவினம் ஆகும்.
இந்த உறிஞ்சுக்குழாய் கிணறினை அமைப்பதனால் நம் வீட்டில் பயன்படுத்தும் கழிவுநீரானது குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைப் பகுதிகளிலும் செல்வதை முற்றிலுமாக தவிர்க்க முடிவதோடு, அனைத்து நீர்நிலைகளிலும் ஆகாயத்தாமரை உட்பட தேவையற்ற கழிவு பொருட்கள் பெருகுவதை முற்றிலுமாக தவிர்க்க முடியும்.
கன்னியாகுமரி மாவட் டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் முயற்சியிலும், குப்பையில்லா மாவட்டமாக மாற்றுவதற்கான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் இல்லாத காலக்கட்டங்களில் பனை ஓலைகளால் உரு வாக்கப்பட்ட கூடை கள், தாமரை இலை உள்ளிட்ட இயற்கையான பொருட்களை பயன்படுத்தினோம் அப்பொருட்களை தற்போதும் பயன்படுத்திட பொதுமக்களாகிய நீங்கள் முன்வர வேண்டும். அவ்வாறு பொதுமக்கள் அனைவரும் முன்வரும்போது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை முற்றிலு மாக அகற்றிட முடியும்.
இன்றைய சூழலில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி யர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகுவதாக புள்ளி விவரங்கள் தெரி விக்கப்படுகிறது. போதைப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக காவல்துறை, சமூக நலத்துறை, தன்னார்வ லர்கள் வாயிலாக போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
6-ஆம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் உங்களுடைய குழந்தைகளின் நடவடிக்கை களை முற்றிலுமாக கண்காணிப்பதோடு, அவர்க ளிடையே அதிகளவில் கலந்துரையாட முன்வர வேண்டும். அவ்வாறு உங்கள் குழந்தைகளிடையே பேசும்போது அவர்களின் பிரச்சனைகளை தெரிந்து கொண்டு, வாழ்வில் உயர் நிலையை எட்ட முடியும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பத்ம நாபபுரம் சப்-கலெக்டர் கௌசிக், மாவட்ட ஊராட்சித்தலைவர் மெர்லியன்ட் தாஸ், தனித்துணை ஆட்சியர் திருப்பதி, இணை இயக்குநர் (வேளாண்மை) ஹனிஜாய் சுஜாதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷூலா ஜாண், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாகராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா இம்மானுவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமாரி, வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜித் ஜெபசிங்குமார், ஆதிதிராவிடர்துறை தனி வட்டாட்சியர் கோலப்பன் உட்பட துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
- அறிவொளி நகர், நேரு நகர், சபரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
- அரசு பஸ் 30, 30 ஏ, ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி தொட்டி அப்புச்சி கோவில் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள அறிவொளி நகர், நேரு நகர், சபரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
அவர்கள் தொழில், கல்வி, போன்றவற்றிற்காக பல்லடம் மற்றும் திருப்பூர் செல்வதற்கு இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வழியே அரசு பஸ் 30, 30 ஏ, ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, அந்த பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை என்றும், அறிவிப்பில்லாமல் திடீரென நிறுத்தப்படுவ தாகவும் கூறி, அங்குள்ள பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடம் வந்த ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் முத்துக்குமார், மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக பஸ் வருவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
- அரச மர கிளைகள் மின்வயரில் உரசுவதாக கூறி சிலர்அந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றுவதாக பொதுமக்களிடம் தெரிவித்து உள்ளனர்.
- பொதுமக்கள் அரசமரத்தின் கிளைகள் அனைத்தையும் வெட்டி மொட்டையாக்கி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலை குருவரெட்டியூர் பஸ் நிலையம் முன்பு கொட்டும் மழையிலும் சாலைமறியல் செய்தனர்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருேக உள்ள குருவரெட்டியூரில் அரசமரத்து வீதி என்ற பகுதி உள்ளது. இங்கு 150 ஆண்டுகள் பழமையான ஒரு அரச மரம் உள்ளது.
இந்த நிலையில் அரச மர கிளைகள் மின்வயரில் உரசுவதாக கூறி சிலர்அந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றுவதாக பொதுமக்களிடம் தெரிவித்து உள்ளனர்.
ஆனால் அவர் மின் வயரில் உரசும் கிளைகளை மட்டும் வெட்டாமல் மரக்கிளைகள் அனைத்தையும் வெட்டி மரத்தை மொட்டையாக்கினர்.
இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர், மற்றும் வருவாய் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் அவர்கள் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ.வுக்கும் தகவல் கொடுத்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசமரத்தின் கிளைகள் அனைத்தையும் வெட்டி மொட்டையாக்கி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலை குருவரெட்டியூர் பஸ் நிலையம் முன்பு கொட்டும் மழையிலும் சாலைமறியல் செய்தனர்.
இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள்விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
- வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்
- கலெக்டர் அரவிந்த் பேச்சு
நாகர்கோவில்:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள உதவி மேலாளர்களுக்கு குமரி மாவட்டத்தில் வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மூலமாக 5 நாள் பயிற்சி நடந்தது.
இதில் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்குவது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயல்பாடுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வங்கிகளுக்கு இடையேயான தொடர்பு, சிறு, குறு தொழில்நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் வழங் கப்படும் கடன் உதவிகள், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் உதவிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் அவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் செயல்பாடுகள், மீன்வர் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையினர் செயல்பாடுகள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து றையின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.
பயிற்சி நிறைவை யொட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் கலந்துரையாடல் நடந்தது. இதில் கலந்து கொண்ட கலெக்டர் அரவிந்த் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அவர் பேசும் போது, 'அனைவரும் கிராமப்புறங்களில் பெற்ற பயிற்சிகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் விரைவாக பொதுமக்களை சென்றடையும் வகையில் பணியாற்ற வேண்டும்' என்று அறிவுறுத்தினார்.
இதில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் குமரி மாவட்ட முதன்மை மண்டல் மேலாளர் பா.சத்திய நாராயணன் கலந்து கொண்டு அதிகாரி களுக்கு வாடிக்கையாளர் சேவையின் முக்கியத்துவம் குறித்தும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களை கிராமப்புறங் களில் பணிபுரியும்போது விவசாயிகளுக்கு எடுத்து ரைப்பதற்கும் அறிவுரை கூறினார்.
இதில் குமரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.எல். பிரவீன்குமார், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் ஆன்றோ ஜவஹர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் வங்கி அதிகாரி ஹட்சின் இம்மானுவேல் நன்றி கூறினார்.
- அவனியாபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- ஜெ.பி.நகரில் மழைக்காலங்களில் வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து கொள்வது வழக்கமாக உள்ளது.
அவனியாபுரம்
அவனியாபுரம் பகுதியில் உள்ள ஜெ.பி.நகரில் மழைக்காலங்களில் வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து கொள்வது வழக்க மாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதினால் இப்பகுதியில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீட்டுக்குள் புகுந்ததால் இப்பகுதி மக்கள் உதவி பொறியாளரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் 3 நாட்க ளாக மழைநீருடன் கலந்த சாக்கடை நீர் வெளியேறா மல் துர்நாற்றம் வீசுகிறது. இதனை கண்டித்தும், மழை, கழிவுநீரை அகற்றக் கோரியும் இப்பகுதி மக்கள் இன்று அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் சம்பவ இடத்திற்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் உதவி பொறியாளர் செல்வ விநாயகம் நேரில் வந்து மக்களின் கோரிக்கை களை உடனே நிறைவேற்று வதாகவும், தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதினால் மழை நீரை வடிகால் வாய்க்காலில் எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து மழை நீரை தேக்கத்தை அகற்றுகிறோம் என உறுதி கூறினார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
- ஏரி தற்போது சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக முழுவதும் நிரம்பி உள்ளது.
- ஏரிக்கரை தொடர்ந்து சேதமடைந்து உடையும் நிலையில் உள்ளது.
ஓசூர்,
ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் அப்பகுதியில் விவசாயிகள் தென்னை, வாழை, நெல் வயல் மற்றும் மலர் தோட்டங்கள் ஆகியவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த 8 ஆண்டுகளாக நிரம்பாத இந்த ஏரி தற்போது சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக முழுவதும் நிரம்பி உள்ளது.
ஏரி நிரம்பியதையடுத்து ஏரி கரையின் மையப்பகுதியில் தாழ்வான இடத்தில் தண்ணீர் வெளியேறி கரையில் அரிப்பு ஏற்பட்டு பெரிய அளவில் கரை சேதமடைந்தது. தொடர்ந்து அப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால் ஏரிக்கரை தொடர்ந்து சேதமடைந்து உடையும் நிலையில் உள்ளது. இதுகுறித்து அறிந்த ஓசூர் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரி பகுதிக்கு சென்று சேதமடைந்த கரையை பார்வையிட்டனர்.
ஆனால் கரை உடைப்பை சீர் செய்யும் எந்த பணிகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை, மாறாக ஏரியின் கடைக்கோடியில் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு ஒரு பாதையை ஏற்படுத்தி ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
இதனால் கனமழைக்கு நிரம்பிய ஏரியின் தண்ணீர் அனைத்தும் அவ்வழியாக வெளியேறி வீணாக தென்பெண்ணை ஆற்றுக்கு செல்கிறது. மழை நேரத்தில் ஏரியில் சேமிக்கப்பட்ட தண்ணீர் வீணாகி செல்வதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தொடர்ந்து தண்ணீர் அனைத்தும் சென்றால் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும், அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் சேதமான ஏரிக்கரை உடைந்து விவசாய நிலங்கள் மற்றும் கிராமத்திற்குள் தண்ணீர் புகும் அபாய நிலை உருவாகும்,
எனவே ஏரிக்கரை உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏரியிலிருந்து வீணாக வெளியேற்றப்பட்டு வரும் தண்ணீரை நிறுத்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வடிகால் வசதி ஏற்படுத்தக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் காலனி தெருவில் மழைநீர் வடிவதில் தொடர்ந்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் வடிகால் வசதி செய்து தரக்கோரி நேற்று கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தா.பழூர் - ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து தடைபட்டது.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து அங்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யராஜ் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, ஏற்கனவே அந்த இடத்தில் வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டு நிர்வாக அனுமதி கிடைக்கப்பட்டுள்ளதாகவும், வடிகால் ஏற்படுத்தும் இடங்களில் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தி வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டிய நிலை உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தார்.
இதனை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது."
- பனியன் கம்பெனி தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
- அரசு பஸ், கார், லாரி ஆகிய வாகனங்கள் செல்கின்றன.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி தேவம்பாளையம் முதல் குளத்துப்பாளையம் வழியாக அணைப்புதூர் வரை செல்லும் பாதை உள்ளது. இந்தப் பாதையில் தினசரி பனியன் கம்பெனி தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் அரசு பஸ், கார், லாரி ஆகிய வாகனங்கள் செல்கின்றன. இதனால் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக குளத்துப் பாளையம் பெரிய தோட்டம் பகுதி அருகில் ரோட்டில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களும் சிரமத்திற்குள்ளாகினர்.
எனவே அப்பகுதி மக்கள் பள்ளமான அந்த ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் மேம்படுத்த வேண்டும் என்று கூறி ரோட்டில் திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ஊராட்சி தலைவர் கோமதி, துணைத்தலைவர் மிலிட்டிரி நடராசன், முன்னாள் தலைவர் எம்.செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள் சண்முகம், கவுரீஸ்வரி, தங்கபாண்டி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கணேசன், வருவாய்துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் அந்த ரோட்டில் மீண்டும் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- மன்னார்குடி சாலை ரெயில்வே கேட் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
- பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளியில் மாற்றுத்தி றனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் தலைமையாசிரியர் அமுதரசு தலைமை தாங்கி னார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மங்கள் அன்பழகன் பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணி பள்ளியிலிருந்து புறப்பட்டு மன்னார்குடி சாலை ரெயில்வே கேட்டு சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
பேரணியில் மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பது, தொடர்ந்து கற்றலில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் ஆசிரியர் பயிற்றுநர் ஸ்ரீதரன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல்,ஆலங்காடு அரசு உயர்நிலைப்ப ள்ளியிலும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா, ஆசிரியர் பயிற்றுநர் ஸ்ரீதரன் மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.