search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடுகள்"

    • மரங்கள் அனைத்தும் ஒரே அளவில் இருக்கும் வகையில் அமைத்து கொள்கின்றனர்.
    • வீடுகள் கட்டி ஒன்று சமையலுக்காகவும் இன்னொரு அறை படுக்கை அறையாகவும் பயன்படுத்துகின்றனர்.

    உடுமலை:

    மலைவாழ் மக்கள்தான் மரங்களில் வீடு போல் அமைத்து வசிப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த 22ம் நூற்றாண்டிலும், இயற்கையோடு இயற்கையாக மரங்களில் மரங்களால் விவசாயிகள் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கொழுமத்திற்கு அருகில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அப்போது இந்த பகுதியில் மரத்தில் அமைக்கப்பட்ட வீடானது கொழுமம் வனப்பகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டிக்கும் கொழுமத்திற்கும் இடையிலும், கொழுமத்திற்கும் இரட்டையம்பாடிக்கும் இடையிலுமாக உள்ள ராயர் குளம் பகுதியில் உள்ளது.

    இங்கிருக்கும் விவசாயிகள் பூர்வகுடிகளாக இருந்து வருவதால் காட்டு விலங்குகளைக் கண்டு அச்சம் கொள்வதில்லை. மேலும், எந்தெந்த நேரங்களில் எந்தெந்த விலங்குகள் வரும் என்பதனையும் தெளிவாக அறிந்துணர்ந்து வைத்துள்ளனர்.

    மலையில் இருந்து தண்ணீர் குடிக்க வரும் யானைகள் தென்னை மரங்களை மட்டுமே சாய்ப்பதையும் மற்ற மரங்களை எதுவும் செய்யாமல் செல்வதையும் குறிப்பிட்டுச் சொல்கின்றனர். மேலும், இங்கு வேப்பமரத்தில் தாங்கள் கட்டியிருக்கும் மரக்குச்சிகளால் ஆன வீடு மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும், மழைக்காலங்களிலும், வெயில்காலங்களிலும் தாங்கள் வசிப்பதற்கு மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

    மரத்தின் மேல் உள்ள கிளைகளை ஒதுக்கி மரக்கிளைகளைக் கொண்டே இடைவெளியை ஏற்படுத்தி, மரக்குச்சிகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து இறுக்கிக் கட்டி விடுகின்றனர். இந்த மரங்கள் அனைத்தும் ஒரே அளவில் இருக்கும் வகையில் அமைத்து கொள்கின்றனர். குச்சிகளின் உயரமும், தடிமனும் ஒரே போன்று இருக்கிறது.

    வீடுகளின் மேல் பனை ஓலைகளை மேய்ந்து அதன் மேல் பிளாஸ்டிக் காகிதங்களை போட்டுக்கொள்கின்றனர். எந்த மழை வந்தாலும் இவர்களுக்கு எதுவும் ஆவதில்லை. மரம் ஒடிந்து விழாத வரை அவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்கின்றனர். மேலும் இதனை நிரந்தரமாகப் பயன்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயல்பாக மேலே ஏறி இறங்கி வருகின்றனர். இவர்கள் நிலத்தில் கல்,மண் கொண்டு கட்டுவதைக் காட்டிலும் இது மிகவும் எளிமையாகவும், சிக்கனமாகவும் இந்த மர வீடுகள் இருப்பதாகக் கூறுகின்றனர்.

    ஒரு குடும்பத்தில் உள்ள நபர்கள் குறைந்தது 3 முதல் 6 பேர் வரை இதனுள் ஒரே சமயத்தில் படுத்து தூங்கலாம். அந்த அளவிற்கு உறுதியாகவும், வசதியாகவும் இந்த மரக்குச்சி வீட்டினை அமைத்துள்ளனர்.

    மேலும் இரண்டு மரக்குச்சி வீடுகள் கட்டி ஒன்று சமையலுக்காகவும் இன்னொரு அறை படுக்கை அறையாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த இரண்டு மரக்குச்சி வீடும் ஒரே மரத்தில் இருப்பதுதான் வியப்பு. இந்த மரக்குச்சி வீடுகளை மரக்குச்சிகளின் நீள அகலங்களை பொறுத்து 10-க்கு எட்டடியாகவும், 8-க்கு ஆறடியாகவும் அமைந்திருக்கின்றனர். இந்த வீட்டினை அமைத்த பெருமாள் என்பவரிடம் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் அருட்செல்வன். சிவகுமார் நேரில் ஆய்வு செய்து ஆவணப்படுத்தி உள்ளனர்.

    • மர்மநபர்களின் செயலாக இருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் எண்ணினர்.
    • வீடுகளின் மீது வந்து விழுந்த கற்களை சேகரித்து போலீசாரிடம் காண்பித்தனர்.

    ஒட்டப்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 12 நாட்களாக இங்குள்ள வீடுகளின் மீது மர்மமான முறையில் சிறிய மற்றும் பெரிய கற்கள் விழுந்தன. இதனால் பயந்து போன அப்பகுதி பொது மக்கள் இரவு முழுவதும் அங்குள்ள கருப்பராயன் கோவிலில் தஞ்ச மடைந்தனர்.

    கற்கள் விழுந்ததில் பல வீடுகளில் ஓடுகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சீட்கள் சேதமடைந்தன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்க்கும் போது கற்கள் விழவில்லை. உள்ளே சென்றதும் ஓடுகள் மீது கற்கள் விழுந்தன. இதனால் மர்மநபர்களின் செயலாக இருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் எண்ணினர்.

    இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் ஓட்டப்பாளையம் கிராமம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். புதர் பகுதிகள், மறைவான இடங்களில் யாரும் பதுங்கியிருந்து கற்களை வீசுகின்றனரா? என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அப்படி யாரும் சிக்கவில்லை. இதனால் வீடுகளின் மீது கற்கள் எப்படி விழுகிறது. எங்கிருந்து வந்து விழுகிறது என தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

    மேலும் மர்மமான முறையில் கற்கள் விழுவது குட்டிச்சாத்தானின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகமும் பொது மக்களுக்கு ஏற்பட்டது. இதனால் பெண்கள், குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்தனர். கற்கள் விழுவதின் உண்மையான பின்னணி என்னவென்று தெரியாமல் தவிப்புக்கு ஆளானதுடன் கடந்த 12 நாட்களாக இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்தனர். இதன் காரணமாக காலையில் வேலைக்கு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து படியூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். வீடுகளின் மீது வந்து விழுந்த கற்களை சேகரித்து போலீசாரிடம் காண்பித்தனர்.

    இதையடுத்து வீடுகளின் மேல் எங்கிருந்து கற்கள் வந்து விழுகிறது என்பதை கண்காணிக்க போலீசார், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி ஓட்டப்பாளையம் கிராமம் முழுவதும் 6 இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் , 20 போகஸ் லைட்டுகள் பொருத்தப்பட்டன. ராட்சத கிரேன் ஒன்றும் வரவழைக்கப்பட்டது. இதன் மூலம் போலீசார் , அதிகாரிகள், பொதுமக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கிரேன் மூலமும் , டிரோன்களை பறக்க விட்டும் கண்காணிக்கப்பட்டது.

    நேற்றிரவு 7 மணி முதல் இன்று காலை வரை விடிய விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது எந்தவித கற்களும் வீடுகளின் மீது வந்து விழவில்லை. எனவே மர்மநபர்கள்தான் மறைவான இடங்களில் பதுங்கியிருந்து கற்களை வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அவர்களை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக ஒட்டப்பாளையம் கிராமம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில் குட்டிச்சாத்தான் பீதியால் அங்குள்ள கருப்பராயன் கோவிலில் நேற்றிரவு பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இது போன்று வீடுகளின் மீது கற்கள் வந்து விழுந்தன.

    அதேப்போல் இப்போதும் நிகழ்ந்துள்ளதால் கிராமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க சிறப்பு வழிபாடுகள் நடத்தினோம் என்றனர். காங்கயம் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒட்டப்பாளையம் கிராமத்தில் முகாமிட்டு நேற்றிரவு முதல் கண்காணிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கடந்த 12 நாட்களாக வீடுகளின் மீது கற்கள் விழுந்ததில் தூக்கத்தை தொலைத்து தவித்து வந்த ஒட்டப்பாளையம் கிராமமக்கள் நேற்றிரவு கண்காணிப்பில் ஈடுபட்டதன் காரணமாக கற்கள் வந்து விழாததால் நிம்மதி அடைந்துள்ளனர்.

    • கிராமத்தில் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
    • இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

    முண்டாசுப்பட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனும், அவரது நண்பரும், புகைப்படம்எடுப்பதற்காக ஒரு கிராமத்திற்கு செல்வார்கள். அப்போது அந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளின் கதவுகளிலும் திரும்பி போ என்ற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும்.

    இதனை பார்க்கும் கதாநாயகனின் நண்பர், அங்குள்ள ஊர் பெரியவரிடம், பெரியவரே ஏன் வீட்டின் கதவுகளில் திரும்பி போ என்று எழுதி வைத்துள்ளீர்கள் என கேட்பார்.

    அதற்கு, எங்கள் ஊரில் இரவு நேரங்களில் ரத்தக்காட்டேரி ஒன்று சுற்றி வருவதாகவும், அது வீட்டின் கதவை வந்து தட்டுவதாகவும், அப்படி அது தட்டாமல் இருப்பதற்காக இதனை எழுதி இருப்பதாகவும், அதனை பார்க்கும் அவை திரும்பி போய்விடும் எனவும் ஊர் பெரியவர் தெரிவிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

    இந்த காட்சியை நாம் அனைவரும் பார்த்து ரசித்து வாய் விட்டு சிரித்து மகிழ்ந்திருப்போம். ஆனால் இதுபோன்று ஒரு சம்பவம் உண்மையிலேயே ஒரு கிராமத்தில் நடக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் தங்கள் கிராமத்தில் இரவு நேரங்களில் குட்டிச்சாத்தான்கள் சுற்றி திரிவதாக தெரிவிக்கின்றனர் அங்கு வசித்து வரக்கூடிய மக்கள்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பாளையம் காலனி தான் குட்டிச்சாத்தான்கள் நடமாடுவதாகவும், கற்கள் வீசப்படுவதாகவும் கூறப்படும் மர்ம கிராமம். இந்த கிராமத்தில் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் கூலித்தொழில், விவசாயம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் தானாகவே வீடுகளின் மீது மழை பெய்வது போன்று கற்கள் பொழிந்து கொண்டே இருக்கின்றனவாம்.

    இரவு 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை தொடர்ந்து கற்கள் விழுந்து கொண்டே இருப்பதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். அத்துடன் இது குட்டிச்சாத்தான்களின் வேலை தான் என்றும் அடித்து கூறுகிறார்கள்.

    தங்கள் கிராமத்தில் குட்டிசாத்தான்கள் நடமாட்டம் இருப்பதாகவும், இரவு நேரங்களில் ஊருக்குள் சுற்றி திரியும் அவை தான், வீடுகளின் மீது கற்களை எறிவதாகவும் நம்பும் மக்கள், அதற்கான ஆதாரமாக கற்களையும் சேமித்து வைத்துள்ளனர்.

    வீட்டின் கூரை மீது, மக்கள் இளைப்பாற அமரக்கூடிய மரத்தின் மீது இருந்தும், தெருவில் நடந்து செல்லும் போதும் தானாகவே கற்கள் வந்து விழுகின்றனவாம்.


    இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

    வீடுகளில் இருந்தால் தொடர்ந்து கற்கள் விழுந்து கொண்டே இருக்கிறது. இதனால் குழந்தைகள் மிகவும் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். பகல் நேரங்களிலேயே வெளியில் தனியாக செல்வதற்கு குழந்தைகள் அச்சப்படுகிறார்கள்.

    இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும், பகலில் தங்கள் வீடுகளிலும், இரவு நேரத்தில் தங்கள் ஊரில் உள்ள கருப்பராயன் கோவிலிலும் தங்குகின்றனர். மாலை 6 மணியானதும் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, கருப்பராயன் கோவிலுக்கு வந்து விடுகின்றனர்.

    அங்கு வைத்து அனைவரும் சேர்ந்து உணவு சமைத்து சாப்பிட்டு, அங்கேயே தங்கள் நேரத்தை கழிக்கின்றனர். அப்போதும், இன்று என்ன நடக்க இருக்கிறதோ, குட்டி சாத்தான் நம் வீட்டை என்ன பாடு படுத்துகிறதோ என ஒவ்வொரு நாளும் அச்சத்தில் அதனை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

    கிராமத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் மிகுந்த பயத்தில் உள்ளனர். அவர்களும் இரவில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை தூங்க வைப்பதற்காக பெற்றோர்கள் இரவு முழுவதும் கண்விழித்து காத்திருந்து தங்கள் பிள்ளைகளை பாதுகாத்து வருகின்றனர். இப்படி இரவு முழுவதும் கண்விழித்து விட்டு, மறுநாள் காலையில் வேலைக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் அந்த கிராம மக்கள்.

    உண்மையிலேயே இது குட்டிச்சாத்தான் தானா? அல்லது குட்டிச்சாத்தான் வேடத்தில் சுற்றும் குள்ளநரிகளா? என்பதிலும் கிராமத்தினரிடையே ஒருவித குழப்பமாகவே இருக்கிறது. கற்கள் வீசப்படுவதற்கு யார் காரணம் என்பதை அறிய அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இரவு நேரங்களில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். ஆனால் அவர்களிடம் பிடிபட்டது என்னவோ கற்கள் தானே தவிர. வேறு எதுவும் இல்லை. இதன் பின்னரே குட்டிச்சாத்தான் தான் நடமாடுவதாக மக்கள் நம்ப தொடங்கி, குடும்பத்துடன் கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர். தங்கள் நாள் பொழுது முழுவதையும் கோவிலிலேயே கழித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறும் போது, எங்கள் கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கும் வீடுகளின் மீது கற்கள் விழுந்து வருகின்றன. இது குட்டிச்சாத்தான்களின் வேலை தான். இரவு நேரங்களில் அவை கற்களை தூக்கி வீடுகளின் மீது போட்டு வருகின்றன.கடந்த 4 வருடங்களுக்கு முன்பும் இதுபோன்று ஒரு சம்பவம் நடந்தது. ஒரு வீட்டின் மீது தினமும் கற்கள் விழவே, அவர்கள், தங்கள் நிலம், தோட்டம் உள்ளிட்டவற்றை விட்டு விட்டு இங்கிருந்து காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு குடியேறிவிட்டனர்.

    தற்போது மீண்டும் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகள் மீது கற்கள் மழை போல பொழிந்து வருகிறது. இதனால் நாங்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், நான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தேன். அப்போது திடீரென மேலே இருந்து ஒரு கல் என் காலில் விழுந்தது. சுற்றி பார்த்தால் யாரும் இல்லை. இதனால் எங்களுக்கு பயம் ஏற்பட்டு, அங்கிருந்து ஓடினோம்.

    நாங்கள் சென்ற பின்பும், கற்கள் விழுந்து கொண்டே இருந்தன. அதில் சில கற்கள் வீட்டின் கூரைகள் மீது விழுந்து சிக்கி கொண்டன. அப்படி இருக்கும் போது இதனை நம்பாமல் இருக்க முடியுமா என ஒருவித பயத்துடனேயே தெரிவித்தார்.

    ஆனால் கிராமத்தில் உள்ள ஒரு சிலர் இது குட்டிச்சாத்தான் இல்லை. குட்டிச்சாத்தான் வேடத்தில் மர்மநபர்கள் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் இது தொடர்பாக அந்த கிராமத்திற்கு சென்று தங்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    குட்டிச்சாத்தான்கள் நடமாடுவதாக ஒரு கிராமமே அச்சத்தில் உறைந்து போய், வீட்டை விட்டு வெளியேறி இரவு நேரங்களில் கோவிலில் தஞ்சம் அடைந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மக்களை அச்சுறுத்தி திசை திருப்பி திருட்டு நடைபெறவும் வாய்ப்புள்ளது எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
    • வெளியில் வந்து பார்த்தால் கற்கள் விழவில்லை. வீட்டிற்குள் சென்றதும் கற்கள் விழுகிறது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒட்டப்பாளையம் பகுதி மதுரை வீரன் கோவில் அருகே உள்ள காலனியில் இரவு 7 மணி முதல் இரவு 2 மணி வரை தொடர்ச்சியாக வீடுகளின் மீது மர்மமான முறையில் கற்கள் விழுந்து வருகிறது. இதனால் வீடுகளின் ஓடுகள் உடைந்து சேதமடைவதுடன், குழந்தைகள் முதல் பெண்கள், முதியோர் வரை இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

    மேலும் இரவு நேரங்களில் வெளியில் வர முடியாத நிலையும் உள்ளது. மக்களை அச்சுறுத்தி திசை திருப்பி திருட்டு நடைபெறவும் வாய்ப்புள்ளது எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இரவு 7மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை வீடுகளின் மேல் கற்கள் விழுகிறது. வெளியில் வந்து பார்த்தால் கற்கள் விழவில்லை. வீட்டிற்குள் சென்றதும் கற்கள் விழுகிறது. மர்மநபர்கள் யாராவது இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனரா என ஊர் முழுவதும் பல்வேறு இடங்களில் எங்கள் பகுதி இளைஞர்கள் பார்வையிட்டனர். ஆனால் மர்மநபர்கள் யாரும் சிக்கவில்லை.

    போலீசார், அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். அவர்கள் வந்து நிற்கும் போதே வீடுகளின் மேல் கற்கள் வந்து விழுந்தது. இது யாருடைய செயல் என்று தெரியவில்லை. எப்படி கற்கள் வந்து விழுகிறது என்று கண்டு பிடிக்க முடியாமல் உள்ளோம். இது குறித்து போலீசார், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    • வாகனங்கள் வரமுடியாத அளவுக்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
    • வருவாய்த் துறையினர் குடியிருப்பு வாசிகளுடன் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் உள்ள பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் வரும் பாதையான அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனையடுத்து பல்வேறு புகார்கள் வந்ததன் பேரில் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் முக்கிய சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் வாகனங்கள் வரமுடியாத அளவுக்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இருந்தபோதும் ஒருசில இடங்களில் ஆக்கிரமிப்புகள் நீடித்து வந்தது.

    பழனி மலை அடிவாரத்தில் மேற்கு கிரிவீதியில் அண்ணா செட்டிமடம் என்ற இடம் உள்ளது. பாதவிநாயகர் கோவிலில் இருந்து மின்இழுவை ரெயில்நிலையம் செல்லும் முக்கிய சந்திப்பான இங்கு 100ஆண்டுகளுக்கும் மேலாக பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிரி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் அண்ணா செட்டிமடம் பகுதியில் குடியிருக்கும் 140 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதற்கு அவகாசம் கேட்ட வருவாய்த்துறையினருக்கும் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

    இதையடுத்து வருவாய்த் துறையினர் குடியிருப்பு வாசிகளுடன் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து 139குடும்பங்களுக்கு பழனியில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள தாதநாயக்கன்பட்டியில் தலா 1½ சென்ட் இடம் வழங்கி கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் நேற்று அனைவரும் தங்களது வீடுகளை காலி செய்தனர். தொடர்ந்து கோார்ட்டு உத்தரவின் பேரில் இன்று அதிகாலை முதலே வருவாய்த்துறை, தேவஸ்தான நிர்வாகமும் இணைந்து டி.எஸ்.பி தனஞ்செயன் தலைமையில் ஏராளமான போலீசார் உதவியுடன் 10க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. வாகனங்களை கொண்டு ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் பழனி மலை அடிவாரத்தில் படிப்பாதை அருகில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த பிரபல தனியார் பஞ்சாமிர்த கடையான சித்தநாதன் பஞ்சாமிர்த கடையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்து அகற்றப்பட்டது. குடியிருப்புகளை அகற்றும்போது அங்கு ஏற்கனவே வசித்த குடியிருப்பு வாசிகள் தடுத்து இடையூறு செய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பழனி மலை அடிவாரத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இடித்து அகற்றும்பணி நடைபெற்ற போது பல ஆண்டுகளாக குடியிருந்தவர்கள் சாலை ஓரத்தில் நின்று தாங்கள் வசித்த வீடு இடிபடுவதை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    • பசுவின் கொழுப்பு , தோல் மற்றும் எலும்புகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.
    • பைன்வாகி பகுதியில் சமீப காலமாக பசு கடத்தல் அதிக அளவில் நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுக்களை சட்ட விரோதமாக இறைச்சிக்காக வளர்த்ததாக கூறி 11 இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மண்டலாவில் உள்ள பழங்குடியினப் பகுதியான பைன்வாகியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளில் சட்டவிரோதமாக சுமார் 150 பசுக்கள் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டுள்ளது.

     

    இதை அறிந்த போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியதில் அந்த வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் மாட்டிறைச்சி கண்டெடுக்கபட்டது. மேலும் பசுவின் கொழுப்பு, தோல் மற்றும் எலும்புகள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்டது மாட்டிறைச்சிதான் என்று உறுதி செய்யப்பட்டதாலும் 11 பேரின் வீடுகளும் சட்டவிரோதமாக அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்ததாலும் அவை இடித்து அகற்றப்பட்டன.

     

     

     

    மேலும் அங்கிருந்த பசுக்களை மீட்ட போலீசார் எப்.ஐ.ஆர் பதிந்து ஒருவரை கைது செய்த நிலையில் மற்ற 10 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் இஸ்லாமியர்கள் என்றும் பைன்வாகி பகுதியில் சமீப காலமாக பசு கடத்தல் அதிக அளவில் நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  மத்தியப் பிரதேசத்தில் பசுக்களை கடத்தி இறைச்சிக்காக வதைக்கும் குற்றத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • வீடுகளை இழந்த பொது மக்கள் அந்தந்த ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • வீடுகள் இடிந்து விழுந்ததால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    களக்காடு:

    களக்காட்டில் 2 நாட்களாக கொட்டி தீர்த்த வரலாறு காணாத மழையினால் ஆறு கால்வாய்களில் ஏற்பட்ட வெள்ளம் ஊருக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்தது.

    தொடர்மழை மற்றும் வெள்ளத்தால் களக்காடு ஆற்றாங்கரை தெரு, மூங்கிலடி, கீழப்பத்தை, மேலப்பத்தை, கலுங்கடி, பத்மநேரி, புலியூர்கு றிச்சி, மாவடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

    முன் எச்சரிக்கையாக பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்களும் நாசமானது.

    வீடுகளை இழந்த பொது மக்கள் அந்தந்த ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகள் இடிந்து விழுந்ததால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வீடு களை இழந்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
    • அனைத்து கோவில்களிலும் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பூரில் நேற்று மாலை பெரும்பாலான வீடுகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தினர். வீட்டின் முற்றம், வாசல், மாடி என எங்கு திரும்பினாலும் தீபமாகவே காட்சியளித்தது. பெண்களும், குழந்தைகளும் ஆர்வமுடன் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். சில வீடுகளில் ஓலை கொலுக்கட்டை செய்து சாமிக்கு படைத்து வழிபட்டனர். இதனால் திருப்பூரில் கார்த்திகை தீபத் திருவிழா களை கட்டியது.

    சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு விநாயகர் பூஜை உள்ளிட்ட சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பிகா சமேத வாலீஸ்வரர் சாமிக்கு, பால், தயிர், இளநீர் உள்பட 32 வகை திரவிய அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேவூரில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில், அஞ்சநேயர் கோவில், பத்ரகாளியம்மன் கோவில்களில் கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றப்பட்டது.

    இதுபோல் ஊத்துக்குளி பகுதியில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், ஊத்துக்குளி கைலாசநாதர் கோவில், அம்மன் கோவில்களில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை பெண்கள் புத்தாடை அணிந்து கோவில்களில் தீபம் ஏற்றினர். அதனைத் தொடர்ந்து அவரவர் வீடுகளில் வண்ண கோலமிட்டு மண் விளக்குகளில் தீபமேற்றி வழிபட்டனர்.

    • கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.
    • 16 வீடுகள் பகுதி அளவில் இடிந்து சேதம் அடைந்துள்ள.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.

    நேற்று தஞ்சை, குருங்குளம், திருவையாறு, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.

    இருப்பினும் இன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பகல் நேரத்தில் மழை இல்லை.

    இருந்தாலும் இரவில் மீண்டும் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் 11 கூரை வீடுகள், 5 ஓட்டு வீடுகள் என மொத்தம் 16 வீடுகள் பகுதி அளவில் இடிந்து சேதம் அடைந்துள்ள.

    மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு:-

    தஞ்சாவூர்-9.50, அதிராம்பட்டினம் -9.20, ஒரத்தநாடு -9, திருவையாறு-7.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு 165 வீடுகளுக்கு வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதல்-அமைச்சர் மீனவ வீட்டு வசதி திட்டத்தில் மீனவர்க ளுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்தார். அதை தொடர்ந்து ராமநாத புரம் மாவட்டத்திற்கு 165 வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது.

    கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு உறுப்பி னர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இத் திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் அல்லது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலு வலக வேலை நாட்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட ராமநாத புரம் மாவட்டத்திலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்கு நர்கள் அல்லது துணை இயக்குநர் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ள லாம்.

    விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தினை அரசு வழிகாட்டு நெறி முறைகளின்படி பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட உதவி இயக்குநர் அலுவ லகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவே அல்லது நேரடியாகவே 30.11.2023 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு சம்மந்தப் பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி அல்லது துணை இயக்குநர் அலுவலங்களை தொடர்புகொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரவித்துள்ளார்.

    • சிற்றாறு 1 அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தங்கு தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானம் மற்றும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப் போது மழை பெய்தது.

    மழையில் இருந்து தப்பிக்க பள்ளி சென்ற மாணவ மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர். மழை விட்டு விட்டு பெய்து வந்ததையடுத்து தீபாவளி விற்பனையும் மந்தமாக இருந்தது. கடை வீதிகளில் இன்று கூட்டம் குறைவா கவே காணப்பட்டது. களி யக்காவிளை, குழித்துறை, தக்கலை, இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. சிற்றாறு 1 அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் கோதையாறு, வள்ளியாறு, பரளியாறு களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தொடர் மழைக்கு மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி வழிகின்றன. பேச்சி பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகி றார்கள். அணையில் இருந்து எப்பொழுது வேண்டு மானாலும் உபரி நீர் வெளி யேற்றப்படலாம் என்பதால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு அறி வுறுத்தப்பட்டு உள்ளது.

    திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.60 அடியாக உள்ளது. அணைக்கு 465 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 72.17 அடியாக உள்ளது. அணைக்கு 512 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 18.71 அடியாக உள்ளது. அணைக்கு 155 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 234 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ள நிலையில் நேற்று மேலும் 4 வீடுகள் இடிந்துள்ளது.

    அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலுகாவில் தலா ஒரு வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 2 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. தொடர் மழையின் காரணமாக குலசேகரம், கீரிப்பாறை, தடிகாரன்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டை களில் மழை நீர் தேங்கி யுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

    அணைகளும், பாசன குளங்களும் நிரம்பி வருவ தையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியை தீவிர படுத்தியுள்ளனர். ஏற்க னவே மாவட்டம் முழுவதும் கும்பபூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். 6500 ஹெக்டே ரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் நடவு பணிகள் நடந்து வருகிறது.

    தற்போது நடவு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தங்கு தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வரு கிறார்கள்.

    • ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
    • கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம் ஊராட்சி உள்ளது. இங்கு ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.

    இந்த நிலங்களில் பலர் உரிய அனுமதி பெற்று வீடு கட்டி கோவிலுக்கு வரி செலுத்தி வசித்து வருகின்ற னர். 25-க்கும் மேற்பட்ட வீடுகள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ளன. இந்த நிலையில் சிலர் கோவிலுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை முறையாக செலுத்தாமலும், கோவில் நிலத்தில் உரிய அனுமதி யின்றியும் கட்டிடம் கட்டி வசித்து வந்ததாக கூறப்படு கிறது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்துக்கு தெரியவந்த நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதியின்றி வசித்து வருபவர்கள் தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் படியும், வரி செலுத்தாத வர்கள் வரி பாக்கியை செலுத்துமாறும் பலமுறை நோட்டீஸ் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதில் தீர்வு ஏற்படாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் இது குறித்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் அனுமதியின்றி கட்டிடம் கட்டி வசித்து வந்த வீடுகளை, இடித்து அப்புப்புறப்படுத்தும்படி நிலம் மீட்பு தீர்ப்பாணையம் உத்தரவிட்டது.

    இதையடுத்து கோவில் அதிகாரிகள் அனுமதியின்றி கட்டப்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் வீட்டை காலி செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து நேற்று மாலை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனுமதியின்றி கட்டப்பட்ட2 வீடுகளை இடித்து அகற்றுவ தற்காக போலீசாருடன் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த வர்களை வெளியே செல்லும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு வீட்டை காலி செய்வதற்கு மேலும் சில நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டு மென கோரிக்கை வைத்த னர். அதற்கு அதிகாரிகள் கடந்த 2010-ம் ஆண்டே இது குறித்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்ப்பு வழங்கப்பட்ட தாகவும் இனி அவகாசம் தர முடியாது எனவும் தெரி வித்தனர். மேலும் அந்த வீடுகளில் வசித்தவர்கள் கோவில் நிர்வாகத்தை அணுகி உரிய அனுமதி பெற்று மீண்டும் அதே இடத்தில் வீடு கட்டி வசிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

    இதையடுத்து 2 வீடுகளில் வசித்தவர்கள் போலீசார் பாதுகாப்புடன் வெளி யேற்றப்பட்டு அந்த வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப் பட்டன.

    ×