என் மலர்
நீங்கள் தேடியது "மைதானம்"
- ஒவ்வொரு விளையாட்டுக்கு என்று தனித்தனி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
- கடந்த 3 நாட்களாக கடலூர் நகர் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது.
கடலூர்:
கடலூர் நகரின் மையப்ப குதியான மஞ்சக்குப்பத்தில் அண்ணாவிளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சுதந்திரதின விழா நடை பெறும்போது பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் தேசியகொடி ஏற்றும் விழா நடந்து வருகிறது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் ஒவ்வொரு விளையாட்டுக்கு என்று தனித்தனி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடலூர் நகர் பகுதி மட்டுமல்லாமல் பல்வேறு பகுதியில் இருந்து விளையாட்டு வீரர்கள் வந்து பயிற்சிபெற்று செல்கி றார்கள். இதுதவிர விளை யாட்டு மைதானத்தை சுற்றி நடைபயிற்சிக்கென்று தனியாக இடம் ஒதுக்க ப்பட்டுள்ளது. இங்கு அதிகாலை முதல் குறிப்பிட்ட நேரம்வரை கடலூரை சேர்ந்தவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கராத்தே, நீச்சல்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளுக்கும் தனித்தனியாக இடம் உள்ளது. இவ்வாறு பல்வேறு வசதி கொண்ட இந்த மைதானம் மழைகாலம் வந்து விட்டால்போதும் குளம்போல் ஆகிவிடுகிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் பயிற்சிபெற முடியாமல் அவலநிலைக்கு தள்ளப்படும் சூழல் உருவாகி உள்ளது.
கடந்த 3 நாட்களாக கடலூர் நகர் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை அகற்ற மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடி க்கை எடுத்துவருகிறது. ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 8 செ.மீ. மழை கொட்டி தீர்த்ததால் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் தற்போது குளம்போல் காட்சியளிக்கிறது. இந்த மைதானத்துக்குள் யாரும் செல்லமுடியாத அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இதுபோன்ற நிலை ஒவ்வொரு மழை க்கும் ஏற்படுகறிது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட உயர் அதி காரிகள் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி தண்ணீர் தேங்க விடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நடைபயிற்சி யாளர்கள் கூறுகையில், கடலூர் நகரில் மழை பெய்யும் போதெல்லாம் இதுபோன்ற அவலநிலை நீடிக்கிறது. மைதானத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்த லாம். மைதானத்தில் தண்ணீர் தேங்காத வகை யில் வடிகால் வசதி அமை த்தால் இதுபோன்று தண்ணீர் தேங்காது. எனவே அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்ற னர்.
- 68 மாணவர்கள் வருவாய் மாவட்ட போட்டியில் கலந்து கொண்டனர்.
- சீர்காழி ரெயில் நிலையத்திலிருந்து வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
சீர்காழி:
தரங்கம்பாடி தாலுகா, பொறையார் காட்டுசேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு திடலில் நடைபெற்று முடிந்த மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் 100 மீ ஓட்டப்போட்டி, 200 மீ ஓட்டப்போட்டி, 400 மீ ஓட்டப்போட்டி, 100 மீ தட ஓட்டம், 400 மீ தடை ஓட்டம், நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் குண்டு எரிதல், வட்டு எறிதல் , ஈட்டி எறிதல், கோலூன்றி தாண்டுதல், 100 மீ அஞ்சல் ஓட்ட போட்டி, 400 மீ ஓட்ட போட்டி, ஆகிய அனைத்துப் போட்டிகளிலும் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 14 வயது உட்பட்ட பிரிவு, 17 வயது உட்பட்ட பிரிவு, 19 வயது உட்பட்ட பிரிவு மாணவர்கள் இப்பள்ளியிலிருந்து குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 68 மாணவர்கள் வருவாய் மாவட்ட போட்டியில் கலந்து கொண்டனர்.
இவ்வீரர்களிலிருந்து 24 மாணவ மாணவிகள் திருவண்ணாமலையில் நடைபெறக்கூடிய தமிழக அரசின் பள்ளிக்க ல்வித்துறை சார்பில் 63வது குடியரசு தின மாநில தடகள போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள செயற்கை இழையிலான நவீன விளையாட்டு மைதானத்தில் நடைபெறக்கூடிய போட்டியில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
குறிப்பாக இப்பள்ளியைச் சார்ந்த கிருத்திகா, பவித்ரா, ஜெனிஷா, நிஷாந்தி, கிருத்திகா, அஜய் குமார், சக்திவேல், பென்னி ஆகிய மாணவர்கள் மூன்று போட்டிக்கு மேலாக வெற்றி பெற்று, பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.
இந்த மாணவர்களை பயிற்றுவித்த உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன், சக்திவேல், ஹரிஹரன், ராகேஷ் ஆகியோர்களை பள்ளியின் முன்னாள் செயலர் பாலசுப்பிரமணிய முதலியார், பள்ளியின் செயலர் இராமகிருஷ்ண முதலியார், பள்ளியின் குழு தலைவர் சொக்கலிங்கம், பள்ளி தலைமையா சிரியர் அறிவுடை நம்பி சீர்காழி புகைவண்டி நிலையத்திலிருந்து வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
மாணவர்களை உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரங்கன், வரதராஜன் மற்றும் பள்ளியைச் சார்ந்த இருபால் ஆசிரியர்கள் பாராட்டினர்.
- ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம்.
- ஏனங்குடி அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, சென்னை தலைமைச் செயலகத்தில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், நாகப்பட்டினம் தொகுதி சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.
அதில் நாகப்பட்டினத்தில் பீச் வாலிபால் அகாடமி அமைப்பதுடன், அதற்கு ஏற்ற வகையில் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம் என்ற அரசின் அறிவிப்பின் படி, நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் அதை அமைக்க வேண்டும்.
ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பட்டியலிட்டு வழங்கினார்.
இதைத் தொடர்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
- மைதானத்தில் தரம் வாய்ந்த ஓடுதளங்கள், ஆடுகளங்கள் அமைக்கப்பட வேண்டும்.
- மைதானத்தில் பயிற்சி பெற்ற பலர் ராணுவ பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டாரத்தில், பழமை வாய்ந்த கல்வி நிறுவனம் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகும்.
இந்த பள்ளி நூற்றாண்டு விழாவை கண்ட பள்ளி ஆகும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருக்கும் பொழுது, விளையாட்டு துறையில் மாவட்ட அளவில் பல்வேறு வெற்றிகளையும் சாதனைகளையும் செய்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலேயே அரசு பள்ளிகளில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் கொண்ட பள்ளி நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாகும். இப்பள்ளியில் தேசிய அளவிலான போட்டிகளில் நடத்தக்கூடிய வகையில், தரம் வாய்ந்த ஓடுதளங்கள், ஆடுகளங்கள் அமைக்கப்பட வேண்டும்.
இரவு பகல் நேரங்களில் விளையாட்டுப் போட்டியில் நடத்தப்படக் கூடிய வகையில் மின்னொளி வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.
மேலும் விளையாட்டு மைதானம் அனைத்து வகையான வசதிகளும் கொண்ட, விளையாட்டு வீரர்கள் சிறப்பான பயிற்சியை பெறக் கூடிய வகையில், விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தி தரப்பட வேண்டும்.
நன்னிலம் பகுதியில் இருந்து பல விளையாட்டு வீரர்கள் இவ் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்று காவல்துறையிலும் ராணுவத்திலும் பணியில் சேர்ந்துபணியாற்றி வருகிறார்கள்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த விளையாட்டு மைதானத்தை தமிழக அரசு தரம் வாய்ந்த அனைத்து வசதிகளும் கொண்ட விளையாட்டு மைதானமாக மாற்றி தர வேண்டும் என்ற கோரிக்கையை விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.3 கோடி மதிப்பீட்டில் மைதானம் மற்றும் அரங்கம் அமைய உள்ளது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி உசிலம்பட்டியை அடுத்த சீமானூத்து கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டி, சென்னை இ.பி.எம்.சி.ஆர். நிர்வாக இயக்குநர் கவின்குமார், பொறி யாளர்கள் வினோத்குமார், சவுமியா சிரபன் மற்றும் குழுவினர்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கண்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.3 கோடி மதிப்பீட்டில் மைதானம் மற்றும் அரங்கம் அமைய உள்ளது.
இந்த ஆய்வின்போது கீரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சின்னச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா, அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி நகரச் செயலாளர் சசிகுமார், ஒன்றிய செயலாளர் ஜான்சன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு அணி சிவன் ஆகியோர் உடனிருந் தனர்.
- பெரிய வாளவாடியில் நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
- நடப்பாண்டில் நடைபெற்ற 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
உடுமலை :
உடுமலைஅடுத்த பெரிய வாளவாடியில் நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சின்ன வாளவாடி, பெரியவாளவாடி, பழையூர் அம்மாபட்டி, வடபூதிநத்தம் ,மொடக்குப்பட்டி, தீபாலபட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மாண வர்கள் படித்து வருகிறார்கள்.
நடப்பாண்டில் நடைபெற்ற 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. ஆனால் விளையாட்டில் பின்தங்கி உள்ளது. மைதானம் போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி உள்ளது இதற்கு காரணமாகும். இது குறித்து சமூக ஆர்வ லர்கள் கூறுகையில்:- இந்தப் பள்ளி மைதானம் உடுமலை அளவில் பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக கோடை காலத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக நடைபெறும். ஆனால் சமீப காலமாக பள்ளி மைதானத்தை பராமரிப்பு செய்வதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக மைதானத்தைச் சுற்றிலும் புதர் மண்டி உள்ளது. இதனால் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் விளையாட்டில் சாதிக்க முடியாத சூழல் உள்ளது. செல்போன் விளையாட்டில் குழந்தைகள் மூழ்கி வரும் சூழலில் தரமான மைதானம் இருந்தும் அதை முறையாக பராமரிக்காததால் குழந்தைகள்ஓடியாடி வியர்க்கவிறுவிறுக்க விளையாட முடியாத சூழல் உள்ளது. மைதானம் சிறப்பாக இருந்து முறையான பயிற்சி கிடைத்தால் கிராமத்து மாணவர்கள் விளையா ட்டில் மாவட்ட மாநில அளவில் சாதிக்கலாம்.
ஆனால்மைதானத்தை சீரமைக்கநிர்வாகம் அக்கறைகாட்டாதது வேதனை அளிக்கிறது. எனவே நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தை சீரமை ப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால் படிப்பில்சாதித்த மாநிலமாணவர்கள் விளையாட்டிலும் சாதிக்க ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை.
- சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையில் விழுந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இடைவிடாது பெய்த கன மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின.
தொடர்ந்து பலத்த காற்று வீசிக்கொண்டிருந்ததால் தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரி பின்புறம் உள்ள மகளிர் விடுதியில் இருந்த மரம் ஒன்று முறிந்து சுற்று சுவர் மீது விழுந்து சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையில் விழுந்தன. இதில் விடுதி சுற்று சுவரின் ஒரு பகுதி சேதமடைந்தது .
அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை . இதனை தொடர்ந்து விழுந்த மரத்தின் கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது
- தேசிய கைப்பந்து போட்டி நடந்தது.
- மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள போட்டிகளில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
நாகப்பட்டினம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு மைதானத்தில் பள்ளி கல்வித்துறை, இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து போட்டி நடந்தது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முத்து நடேஷ், நிதீஷ் குமார், மணிகண்டன் ஆகியோர் தேசிய கைப்பந்து போட்டிக்கு தேர்வாகினர். மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள போட்டிகளில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளி செயலர் கிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீதரன், தலைமையாசிரியர் கண்ணன், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பொன்னியின் செல்வன், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.
- தமிழர்களின் வீர விளையாட்டை பறை சாற்றும் வகையிலே இந்த மைதானத்தை தமிழக முதலமைச்சர் திறந்து வைப்பார்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங் காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதான பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்விக்கு பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழர்களின் வீர விளையாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு மைதானம் அமைய வேண்டும் என முதலமைச்சர் சட்ட சபையில் அறிவித்தபடி 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.
இந்த மாத இறுதியில் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழா அன்று மிக பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக் கட்டுக்கு அடுத்த படியாக 4-வது ஜல்லிக்கட்டு போட் டியாக நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு உலக தரத்தில் இங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலேயே ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம் கட்டப்பட்டுள்ளது. நமது தமிழ் நாட்டில்தான் கால்நடை மருந்தகம், காத்திருப்பு கூடம், சுகாதார நிலையம், வாடிவாசல், அலுவலகம், தற்காலிக விற்பனை கூடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, மழைநீர் வடிகால் வசதி, குடிநீர் வசதி, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி, மருத்துவ வசதி, கால்நடை மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகள் உள்ளது. தென்னக மக்கள் பாராட்டும் வகையில் இந்த மைதானம் திறப்பு விழா நடைபெறும். தமிழர்களின் வீர விளையாட்டை பறை சாற்றும் வகையிலே இந்த மைதானத்தை தமிழக முதலமைச்சர் திறந்து வைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், தளபதி, மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.
- விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் கோவையில் அதி நவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
- தமிழ்நாட்டின் 2வது சர்வதேச மைதானமாக கோவை மைதானம் அமைய வேண்டும்
சென்னை:
சென்னை சேப்பாக்கம் மைதானம் போல் கோவையிலும் சர்வதேச மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முக ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் 2024 திமுக தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியை சேர்க்கிறேன்.
விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் கோவையில் அதி நவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த உறுதியாக உள்ளனர்.
தமிழ்நாட்டின் 2வது சர்வதேச மைதானமாக கோவை மைதானம் அமைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இத்துட் ஹோடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில்,
"தமிழ்நாட்டின் 2 ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையில் அமையும் என தேர்தல் வாக்குறுதி தந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எண்ணற்ற விளையாட்டு வீரர்- வீராங்கனையரைக் கொண்ட கோவையில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க, முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அனைத்து வகையிலும் முன்னுரிமை கொடுத்து உறுதியுடன் செயல்படும்.
சர்வதேச கிரிக்கெட் மைதானம் வேண்டும் என்னும் கோவை மக்களின் கனவை நனவாக்குவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
- பெங்களூருவைச் சேர்ந்த நேஹா திவேதி ஆர்சிபி அணியின் தீவிர ரசிகை.
- இவர் ஆர்சிபி, லக்னோ அணிகளுக்கு இடையிலான மேட்ச் பார்க்க விரும்பினார்.
பெங்களூரு:
பெங்களூருவைச் சேர்ந்த நேஹா திவேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தீவிர ரசிகை ஆவார்.
கடந்த 2ம் தேதி பெங்களூருவில் நடந்த ஆர்சிபி, லக்னோ அணிகளுக்கு இடையிலான மேட்ச் பார்க்க விரும்பினார். அலுவலகத்தில் இருந்த அவர் அவசர அவசரமாக பேமிலி எமர்ஜென்சி என மேனேஜருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு புறப்பட்டார். அவர் கேட்ட பர்மிஷனை உண்மை என நம்பிய மேனேஜர் அவரை வீட்டுக்கு அனுப்பினார்.
சில மணி நேரத்தில் தற்செயலாக டிவியைப் பார்த்த மேனேஜர் அதிர்ச்சி அடைந்தார். நேஹா திவேதி ஐபிஎல் போட்டியைப் பார்க்க தான் இப்படி அவசரமாக சென்றார் என்பது தெரியவந்தது.
டி.வி.யில் நேஹாவைக் கண்ட மேனேஜர், நேஹா நீங்கள் ஆர்சிபி விசிறியா என கேட்க, அவர் ஆமாம் என கூறியிருக்கிறார். அப்போது உங்களை டி.வி.யில் சோகமான முகத்துடன் பார்த்தேன் என்றதும்தான் நேஹாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.
இதுதொடர்பான கலந்துரையாடல் ஸ்க்ரீன்ஷாட்டை நேஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த ரீல்ஸ் பதிவு 2 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. 4 ஆயிரம் பேர் இதை லைக் செய்திருக்கின்றனர்.
தில்லுமுல்லு படத்தில் ரஜினிகாந்த் லீவு போட்டு மேட்ச் பார்க்கச் சென்ற சம்பவம் போல் இருப்பதாக வலைதளத்தில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
- மும்பையின் தானே பகுதியில் நடந்த கிரிக்கெட் போட்டி சோகத்தில் முடிந்தது அனைவரையம் கலங்கடித்துள்ளது.
- சிக்ஸர் அடித்த பின் அவர் நிலைகுலைந்து விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரை பதற வைக்கிறது.
இந்தியாவில் அனைவராலும் விரும்பப்படும் விளையாட்டாக கிரிக்கெட் விளங்குகிறது. கிரிக்கெட்டைப் பார்ப்பது என்பதைத் தாண்டி இந்தியாவின் பட்டிதொட்டி எங்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிடைக்கும் நேரங்களில் எல்லாம் விளையாடும் ஆட்டமாக கிரிக்கெட் உள்ளது.
அந்த வகையில் மும்பையின் தானே பகுதியில் நடந்த கிரிக்கெட் போட்டி சோகத்தில் முடிந்தது அனைவரையம் கலங்கடித்துள்ளது. மும்பை மாநகரின் தானே பகுதியில் மீரா சாலையின் அருகே உள்ள சிறிய மைதானத்தில் கிரிக்கெட் போட்டி ஒன்று நடந்துள்ளது. இதில் பிங்க் நிற ஜெர்ஸி அணிந்த இளைஞர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பவ்லரின் தலைக்கு மேல் சிக்சர் ஒன்றை அடித்துப் பறக்கவிட்ட அவர், அடுத்த பந்துக்கு தாயாராக நின்றுகொண்டிருந்த போது திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
சக ஆட்டக்காரர்கள் உடனே அவருக்கு முதலுதவி அளிக்க முயற்சி செய்தும் எதுவும் பயனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்ததார். சிக்ஸர் அடித்த பின் அவர் நிலைகுலைந்து விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரின் மனதை பதற வைப்பதாக உள்ளது.
அந்த நபர் யார் என்ற விபரம் இன்னும் தெரியவராத நிலையில் அவரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சமீப காலமாக மாரடைப்பு மரணங்களும், ஹீட் ஸ்டிரோக் மரணங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தத்க்கது.
