search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியாணி"

    • பல்வேறு வகையான பிரியாணிகள் உள்ளது.
    • இன்று ஈசியான முறையில் சிக்கன் பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 1/2 கிலோ

    பிரியாணி அரிசி - 3 கால் படி

    பெரிய வெங்காயம் - 1 / 2

    தக்காளி - 1 / 2

    பூண்டு - 8 பல்

    இஞ்சி - 2 அங்குலம்

    புதினா - ஒரு கை நிறைய

    கொத்தமல்லித்தழை - ஒரு கை நிறைய

    சோம்பு - 1 / 2 டீஸ்பூன்

    பட்டை - 1

    கிராம்பு - 2

    பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

    உப்பு, நெய், எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.

    பெரிய வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

    பூண்டு, இஞ்சி, புதினா, கொத்தமல்லித்தழை, சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை 1 போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம், நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் 2, சேர்த்து வதக்கவும்.

    பின்னர் கழுவிய சிக்கன் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

    இதில் அரைத்த விழுதை சேர்த்து 8 நிமிடங்கள் வதக்கவும்.

    அடுத்து இதில் மூன்று சொம்பு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

    தண்ணீர் கொதிக்கும் பொழுது அரிசியைப் போட்டு குக்கரை மூடி வைக்கவும்.

    வழக்கம் போல் மூன்று விசில் வந்ததும் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கி விடவும்.

    ஸ்டீம் போனவுடன் குக்கரைத் திறந்து சிறிது நெய் சேர்த்து கிளறி விடவும்.

    இப்போது சூப்பரான சிக்கன் பிரியாணி ரெடி.

    • தீபாவளி என்றாலே பிரியாணி தான் ஸ்பெஷல்.
    • இந்த தீபாவளிக்கு ஹைதராபாத் மீன் தம் பிரியாணி செய்து அசத்தலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்

    வஞ்சிரம் மீன் - 1 கிலோ

    பாசுமதி அரிசி - 4 கப்

    வெங்காயம் - 5

    தேங்காய்பால் - 1 கப்

    தயிர் - 400 கிராம்

    எண்ணெய் - 4 ஸ்பூன்

    நெய் - கால் கப்

    மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்

    பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்

    பச்சைமிளகாய் விழுது - 2 ஸ்பூன்

    இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்

    எலுமிச்சை - 1

    குங்குமப்பூ - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    புதினா - சிறிது

    பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு - தலா 3

    செய்முறை

    * குங்குமப்பூவை சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

    * வெங்காயம், புதினா, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மீன் துண்டுகளைக் கழுவி 1 ஸ்பூன் மிளகாய்தூள், உப்பு சேர்த்து பிரட்டி லேசாக எண்ணெயில் ஷால்லோ ஃபிரை செய்து எடுக்கவும்.

    * மெலிதாக நறுக்கிய வெங்காயத்தைப் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக முறுவலாக பொரித்து எடுக்கவும்.

    * மற்றொரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், உப்பு, பிரியாணி மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, பொரித்த வெங்காயம், எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.

    * அத்துடன் தயிரையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

    * அதில் மீன் துண்டுகளைச் சேர்த்து கலந்து நெய் 2 ஸ்பூன், புதினா சிறிது கலந்து 1 மணிநேரம் ஊற விடவும்.

    * பாத்திரத்தில் நீர் வைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, பிரிஞ்சு இலை, புதினா சிறிது, உப்பு சிறிது, எண்ணெய் சிறிது விட்டு கொதித்ததும் அரிசியை சேர்த்து கொதி வந்த பின்னர் 3 நிமிடத்தில் (அரை பாகம் வெந்தால் போதும்) வடிக்கவும்.

    * பிரியாணி பாத்திரத்தில் நெய் விட்டு ஊற வைத்த மீன் கலவையை வைக்கவும். தேங்காய்பால் சேர்க்கவும்.

    * அதன் மேல் சாதத்தை பரப்பி விடவும். மீதி பொரித்த வெங்காயம், புதினா, கரைத்த குங்குமப்பூ கலவையை லேசாக தெளித்து விட்டு நன்றாக மூடி விடவும். ஓரங்களில் காற்று புகாமல் நன்றாக மூட வேண்டும்.

    * அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைக்கவும். 10 நிமிடம் முழுத் தீயிலும் அடுத்த 10 நிமிடம் சிம்மிலும் வைத்து இறக்கவும்.

    * தம் அடங்கியதும் திறக்கவும்.

    * சுவையான ஹைதராபாத் மீன் தம் பிரியாணி ரெடி.

    • சேமியாவில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று சேமியா முட்டை பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 1 கப்

    நெய் - 3 டீஸ்பூன்

    பட்டை - 2

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    முட்டை - 1

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சேமியாவை நெய் விட்டு வறுத்து கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி போட்டு குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி பின்பு முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும்.

    இதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவேண்டும்.

    கொதித்த பிறகு, வறுத்த சேமியாவை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.

    சேமியா நன்கு வெந்தபிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சுவையான சேமியா முட்டை பிரியாணி தயார்.

    • சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • சிறுதானியங்களில் பல்வேறு ருசியான உணவுகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    சாமை அரிசி - 500 கிராம்,

    வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், சௌசௌ - தலா 100 கிராம்,

    பச்சைப்பட்டாணி - 50 கிராம்,

    தயிர் -அரை கோப்பை,

    இஞ்சி, பூண்டு விழுது, புதினா -தேவையான அளவு,

    சோம்பு, பட்டைப்பொடி - 2 மேசைக்கரண்டி,

    மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:

    நெய் -100 மி.கி,

    ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு - தலா 2,

    பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.

    செய்முறை

    சாமை அரிசி நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதில் நெய்யைச் சூடானதும், தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் புதினாவை சேர்க்கவும்.

    புதினா நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் காய்கறிகள், பச்சைப்பட்டாணி சேர்த்து மிளகாய்த்தூள், உப்புடன் ஒரு லிட்டர் (5 டம்ளர்) தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்கு கொதி வந்ததும் தயிர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    பின் சாமை அரிசியைச் சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்பு 5 நிமிடம் தீயை மிதமாக வைத்து மூடி போட்டு வேகவிடவும்.

    பிரியாணி பதம் வந்ததும் இறக்கி புதினா தூவி பரிமாறவும்.

    சூப்பரான சாமை வெஜிடபிள் பிரியாணி ரெடி.

    • கடந்த 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது.
    • நேற்று பக்ரீத் பண்டிகை யையொட்டி ஆயிஷாவின் வீட்டிற்கு அவரது 2 மகள்களும் வந்து இருந்தனர்.

    கோவை:

    கோவை போத்தனூர் அருகே உள்ள சர்தார் சாகிப் வீதியை சேர்ந்தவர் அப்துல் கரீம். இவரது மனைவி ஆயிஷா (வயது 45). இவர்களுக்கு கடந்த 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது.

    நேற்று பக்ரீத் பண்டிகை யையொட்டி ஆயிஷாவின் வீட்டிற்கு அவரது 2 மகள்களும் வந்து இருந்தனர். இதனையொட்டி அவர் தனது மகள்களுக்கு கொடுப்பதற்காக கியாஸ் அடுப்பில் பிரியாணி சமைத்துக்கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் ஆயிஷாவின் ஆடையில் தீ பிடித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டனர். பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆயிஷாவை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • விருந்துகளில் நிச்சயம் தவிர்க்க முடியாத உணவாக பிரியாணி இருக்கிறது.
    • பிரியாணியோடு தயிர்ப்பச்சடி சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது.

    சைவம், அசைவம் என எந்த வகை உணவாக இருந்தாலும், 'பிரியாணி' என்றால் கூடுதல் ஸ்பெஷல்தான். இந்தியர்களின் விருந்துகளில் நிச்சயம் தவிர்க்க முடியாத உணவாக பிரியாணி இருக்கிறது. அந்த அளவிற்கு மக்களின் நாடி நரம்புகளில் பிரியாணியின் சுவை ஊறிப்போயிருக்கிறது.

    கோடைகாலத்தில் நிச்சயம் பிரியாணி எடுத்துக்கொள்ளும் அளவையும், காரத்தின் அளவையும் குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், ஏற்கெனவே வியர்வை மூலமாக உடலில் இருக்கும் மினரல்ஸ் வெளியேறிவிடும். இந்நிலையில் அதிகம் காரம் சாப்பிட்டால், உடலில் அதிக எரிச்சல் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. குளிர்காலங்களில் காரம், மசாலாவும் நிறைந்த பொருள்களைச் சாப்பிடலாம். அதிலும் கட்டுப்பாடு அவசியம்.

    நாடெங்கிலும் நூற்றுக்கணக்கான பிரியாணிகள் இருக்கின்றன. சிலர் தக்காளி சேர்த்துச் செய்வார்கள். சிலர் தக்காளி இல்லாமல் செய்வார்கள். இடத்திற்கு இடம் அவர்கள் உபயோகிக்கும் மசாலாப் பொருள்கள், அரிசி போன்றவை மாறுபடும். செட்டிநாடு உணவு வகைகளில் சோம்பு இருக்கும்.

    ஆனால், வேறு சில பிரியாணி வகைகளில் சோம்பு இருக்காது. இப்படி நிறைய மாற்றங்கள் கொண்டுவந்து, ஒரிஜினல் பிரியாணியின் சுவை என்ன என்பதே மறந்துவிட்டது. எதுவாக இருந்தாலும், நம் உடல் நலத்திற்கு எது சிறந்ததோ அதைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது சிறந்தது.

    ஒவ்வொரு அரிசியிலும் வெவ்வேறு நற்குணங்கள் இருக்கின்றன. பாசுமதி அரிசி வகைகளிலேயே அன்பிளீச்சுடு ஹை-ஃபைபர் (Unbleached High-Fibre) பாசுமதி அரிசி தற்போது சந்தையில் அதிகம் கிடைக்கிறது. அதிலும், பிரவுன் நிற அரிசியில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. மெதுவாக குளுகோஸின் அளவை ரத்தத்தில் உயர்த்துவதில் பச்சரிசியைவிட பாசுமதி அரிசிக்கு சக்தி உண்டு.


    இதன் காரணமாகவே, பாசுமதி அரிசியை தினமும் சாப்பிடுபவர்களும் உண்டு. அரிசியைத் தேர்ந்தெடுக்கும்போதும் நார்ச்சத்து இருப்பதாகத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது நாம் சேர்க்கும் காய்கறிகளில் நார்ச்சத்து இருக்கும்படி பார்த்துச் சேர்க்கலாம். இப்படி சமச்சீர் செய்வதன்மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

    பிரியாணி என்றதும் சிலர் சிறிதும் இடைவெளியில்லாமல் அவசர அவசரமாகச் சாப்பிடுவார்கள். இன்னும் சிலரோ, மூன்று வேளையும் பிரியாணி கொடுத்தாலும் சளைக்காமல் சாப்பிடுவார்கள். ஆனால், அப்படிச் செய்வது உடலுக்குப் பல தீங்குகளை விளைவிக்கும். எந்த உணவையும் மெதுவாக ரசித்து உண்ண வேண்டும்.

    இப்படிச் செய்வதால், குறைவான அளவு சாப்பிட்டாலே நிறைவாக இருக்கும். சிலர், காரமாக இருக்கிறது என்று சாப்பிடுவதற்கு இடையே தண்ணீர் குடிப்பார்கள். இது, ஜீரண சக்தியைக் குறைக்கும். சாப்பிட்டு முடிக்கும்வரை தண்ணீர் குடிக்கத் தேவையில்லாத அளவுக்கு பிரியாணியில் காரம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    பிரியாணியோடு தயிர்ப்பச்சடி சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால், தயிரில் புரோ-பயாட்டிக் உள்ளது. இது, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். ஆனால், கடைகளில் வாங்கும் தயிரில் எந்த அளவிற்கு புரோ-பயாட்டிக் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. சுத்தமான வீட்டுத் தயிரில் பச்சடி செய்து பிரியாணியோடு சாப்பிடுவது சிறந்தது. இதில்தான் ஜீரண சக்தியை மேம்படுத்தும் நன்மை தரும் நுண்ணுயிர்கள் உள்ளன.

    • காடையில் மிகக் குறைவான கொலஸ்ட்ராலும், கோழியை விடக் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
    • கோழி முட்டையில் 11% புரோட்டீன் என்றால் காடை முட்டையில் 13% புரோட்டீன்கள் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    காடை - 4

    சீரகச் சம்பா அரிசி - 750 கிராம்

    வெங்காயம் - 150 கிராம்

    தக்காளி - 100 கிராம்

    பச்சை மிளகாய் - 5

    புதினா இலை - 50 கிராம்

    கொத்தமல்லித்தழை - 50 கிராம்

    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    தயிர் - 50 மில்லி

    தேங்காய்ப்பால் - 100 மில்லி

    பட்டை - 2

    ஏலக்காய் - 2

    கிராம்பு - 4

    பிரிஞ்சி இலை - ஒன்று

    இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 100 மில்லி

    நெய் - 50 மில்லி

    பிரியாணி மசாலா செய்ய :

    பட்டை - 2

    ஏலக்காய் - 4

    கிராம்பு - 6

    பூண்டு - 50 கிராம்

    இஞ்சி-1 துண்டு

    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்க வேண்டும்.

    சீரகச் சம்பா அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    பிரியாணி மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறியதும், தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக சிவக்க வறுக்க வேண்டும்.

    அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளி சேர்த்து அது குழையும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் கழுவி சுத்தம் செய்த காடையை சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    இத்துடன் தயிர், தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீர், கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிட்டு, பின்னர் தீயை மிதமாக்கி நெய் ஊற்றி கிளறி, புதினா இலை, கொத்தமல்லித்தழை தூவி மூடி போட்டு 20 நிமிடம் தம் போட்டு இறக்க காடை பிரியாணி தயார்.

    ×