search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231346"

    • மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், கனிம வளங்களை கடத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
    • அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை மடக்கினர்.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

    இதில் பல டாரஸ் லாரிகள் அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு செல்கின்றன. இதனால் குமரி மாவட்ட எல்லைப் பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

    குறிப்பாக அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்களால், சாலைகள் சேதமடைந்து மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. இதனால் விபத்துக்களும் ஏற்பட்டு, உயிர் சேதம் ஏற்படுவதாக களியக்காவிளை, கொல்லங்கோடு பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    அதிக பாரத்துடன் கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், கனிம வளங்களை கடத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    இருப்பினும் அவரது எச்சரிக்கையை மீறி, டாரஸ் லாரிகள் அதிக பாரத்துடன் கேரளாவுக்கு செல்வதாகவும் போலீசார் இதனை கண்டு கொள்ளவில்லை என்றும் பொது மக்கள் மீண்டும் புகார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், நேற்று இரவு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் குமரி மாவட்டம் வந்தார். அப்போது எதிரே, அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரிகள் சென்றதை பார்த்துள்ளார்.

    இதனை தொடர்ந்து கோழிவிளை சோதனை சாவடியில் காரை நிறுத்திய அவர், அதிரடி ஆய்வில் ஈடுபட்டார். அங்கு பணியில் இருந்த போலீசாரிடம், அதிக பாரத்துடன் லாரிகள் செல்கின்றன. நீங்கள் என்ன செய்தீர்கள்? எத்தனை லாரிகள் சென்றன என்பதை பதிவு செய்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டு உள்ள பதிவேட்டையும் அவர் பார்வையிட்டார். சோதனை சாவடியில் இருந்த போலீசார் விழிப்புடன் பணி செய்யுமாறு எச்சரிக்கை விடுத்த அவர், இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பிரசாத்தை, போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அதிக பாரத்துடன் சென்ற லாரிகளை உடனே பறிமுதல் செய்யுமாறு அப்போது கூறினார். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடனடியாக தனிப்படை அமைத்து கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்திய லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன்பேரில் தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு, அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை மடக்கினர். 10 டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. அமைச்சர் மனோ தங்கராஜின் அதிரடி நடவடிக்கையால் நள்ளிரவிலும் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கார்கள், மீன் வண்டிகள் மற்றும் பஸ்களில் தீவிர சோதனை நடை பெற்றது.

    காரைக்கால், மே.20-

    தமிழக பகுதிகளில் அண்மையில் கள்ள ச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்ததையடுத்து, காரைக்கால்-தமிழக எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடு பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் தமிழக எல்லைகளில் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. சோதனையின் போது, திரு.பட்டினம் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    சோதனையில், கனரக வாகனங்கள், கார்கள், மீன் வண்டிகள் மற்றும் பஸ்களில் தீவிர சோதனை நடை பெற்றது. குறிப்பாக, கனரக வாகனங்கள், 4 மற்றும் 2 சக்ர வாகனங்களில் மது மற்றும் சாராயம் கடத்தப்படுகிறதா என சோதனை நடைபெற்றது. தொடர்ந்து, எல்லையோர பகுதிகளில் உள்ள மதுபான கடைகள், சாராயக் கடை களிலும் சோதனை நடைபெற்றது. அப்போது, போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தனி நபருக்கு அரசு விதித்துள்ள அளவுக்கு மீறி மது பானம் விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்க ப்பட்டால் அபராதத்துடன் கூடிய கடுமையான நடவ டிக்கைகள் எடுக்கப்படும். மேலும், கடையில் பணிபுரியும் சில ஊழி யர்கள், மொத்தமாக தமிழக பகுதிக்கு மது கடத்த உடந்தையாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    • பண்ருட்டியில் சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • தனிப்படைபோலீசார் பண்ருட்டி புலவனூர்காலனி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் வம்பாமேடு பகுதியில் விஷச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்தனர். பலர் பார்வை இழந்தனர்.இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையில் தனிப் படைபோலீசார் பண்ருட்டி புலவனூர்காலனி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்தஅன்பழகன் (60 மதகடிப்பட்டு சென்று 12 சாராய பாக்கெட் வாங்கி கொண்டு வந்து புலவனூர் கர்ம காரிய கொட்டகை அருகில்விற்பனை செய்தது தெரியவந்தது.இதனை த்தொடர்ந்து அவரைகைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் கல்வராயன்மலை பகுதியில் அதிரடியாக கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர்.
    • கோவிந்தராஜ் (வயது 48) மற்றும் சந்திரன்(39) ஆகிய இருவரும் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சாவேட்டை 4.0 நடைபெற்று வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கஞ்சா வேட்டை நடத்த உத்தரவிட்டார். அதன்படி கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் அதிரடியாக கஞ்சா வேட்டை யில் ஈடுபட்டனர். அப்போது எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 48) மற்றும் வேங்காடு கிராமத்தைச் சேர்ந்த சந்திரன்(39) ஆகிய இருவரும் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ கஞ்சாவை பறி முதல் செய்து போலீசார் கோவிந்தராஜ் மற்றும் சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • 2 மாம்பழ குடோன்களில் வேதிப்பொருட்கள் வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்ப ட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
    • மாநகராட்சி மூலம் உரக்கிடங்கிற்கு உரம் தயாரிப்பிற்க்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூரில் பல்வேறு இடங்களில் வேதிப்பொருட்கள் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி, பாலமுருகன், தங்கவேல், கேசவராஜ், கோடீஸ்வரன், சிரஞ்சீவி, ரகுநாதன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நான்கு குழுக்களாக பிரிந்து திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே. எஸ் .சி. ஸ்கூல் ரோடு, தினசரி மார்க்கெட், அதியமான் வீதி, நொய்யல் வீதி மற்றும் வெள்ளியங்காடு ஆகிய இடங்களில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் வாழைப்பழ குடோன்களில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது 2 மாம்பழ குடோன்களில் வேதிப்பொருட்கள் வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்ப ட்டிருப்பதை கண்டு பிடித்தனர். அங்கு இருந்து சுமார் 3.50 டன் அளவிலான வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் மாநகராட்சி மூலம் உரக்கிடங்கிற்கு உரம் தயாரிப்பிற்க்காக அனுப்பி வைக்கப்பட்டது. மாம்பழங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2.50லட்சம் ஆகும். இது தொடர்பாக 5 மொத்த விற்பனை நிலையங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பாலித்தீன் பைகள் வைத்தி ருந்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இது தொடர்பாக நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை கூறிய தாவது:-

    பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும் .எத்திலின் ரசாயனத்தை பழங்களின் மேல் நேரடியாக படும்படி யாக பழுக்க வைப்பதற்கு அனுமதி கிடையாது. சரியான முறைகளை பயன்படுத்தி மட்டுமே பழங்களை பழுக்க வைக்க வேண்டும். கால்சியம் கார்பைடு ,அசிட்டலின் போன்ற ரசா யனங்களை வைத்து பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைக்க கூடாது. இவ்வாறு செய ற்கையான முறையில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடும் போது உடல் உபாதைகள் ஏற்படும்.

    குறிப்பாக செயற்கையான முறையில் பழுக்க வைக்க ப்பட்ட மாம்பழம் சாப்பி ட்டால் தோல் அலர்ஜி ,வயிற்று வலி ,வயிற்று ப்போக்கு, வாந்தி ஏற்படும். ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்ப ழங்களின் தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் .உட்பகுதி காயாக இருக்கும் .பழச்சாறு அளவு குறைவாக இருக்கும். பழத்தின் இயற்கையான மனம் குறைவாக இருக்கும். சுவை குறைவாக இருக்கும். மாம்பழ விற்பனை உரிமை யாளர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்றார்.

    • மருத்துவமனைக்குள் நுழைந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • இந்த சோதனை இரவு வரை நீடித்தது.

    ஈரோடு, மே. 10-

    ஈரோடு பெருந்துறை ரோட்டில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நேற்று மதியம் 4 கார்களில் 20-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்காக வந்தனர்.

    மருத்துவமனைக்குள் நுழைந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரம் மருத்துவ சிகிச்சைக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அதிகாரிகள் தங்களது சோதனைகளை நடத்தினர்.

    மருத்துவமனையில் தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் அறையிலும் நிர்வாக அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அங்குள்ள கோப்புகளை பார்வையிட்ட அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    இந்த சோதனை இரவு வரை நீடித்தது. அதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தனியார் மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கருமுட்டை விற்பனை வழக்கில் இந்த தனியார் மருத்துவமனையின் கருத்தரித்தல் மைய ஆய்வகத்துக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டது.

    பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த சீல் அகற்றப்பட்டு ஆய்வகம் தற்போது மீண்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வருமான வரித்துறையினர் இந்த தனியார் மருத்துவமனையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி வசூல் செய்து பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • சோதனையின் போது ஸ்ரீநகர் சோசேத் என்ற பகுதியை சேர்ந்த இசாக் அகமது பட் என்பவரை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுதல், இயக்கங்களுக்கு ஆள் சேர்ப்பது, ஆயுத உதவி செய்வது, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது உள்பட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் சிலர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி வசூல் செய்து பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

    இதையடுத்து இன்று காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர், அவந்திபுரா, புல்வாமா, குல்காம் மற்றும் ஆனந்ததக் ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    சந்தேகப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று காலை 5.30 மணி முதல் 6 மணி வரை இந்த சோதனை நடந்தது.

    இந்த சோதனையின் போது ஸ்ரீநகர் சோசேத் என்ற பகுதியை சேர்ந்த இசாக் அகமது பட் என்பவரை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் ஜன்னல் கண்ணாடி பொருத்தும் தொழிலாளி என்பது தெரியவந்தது. அவருக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் இடையே தொடர்வு எதுவும் உள்ளதா? என்பது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் ராஜாராம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், திட்டக்குடி ஆகிய உட் கோட்டத்திற்கு உட்பட்ட போலீசார் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் அண்ணாமலை நகர், கடலூர் திருப்பாதிரிப்புலியூர், புதுப்பேட்டை, மங்கலம்பேட்டை, சோழதரம், புவனகிரி, ராமநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடியாக கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்த சிதம்பரம் புலவேந்திரன், திருப்பாதிரிப்புலியூர் சிவப்பிரகாசம், பண்ருட்டி ஜெயராமன், விருத்தாச்சலம் பெரியசாமி, சோழதரம் ரகுபதி, புவனகிரி சாவித்திரி, ராஜி, ராமநத்தம் சாந்தி உட்பட 9 ேபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா ஆகியவற்றை அதிரடியாக பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
    • தமிழக-கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

    தாளவாடி:

    கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 10-ந் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கிறது. இதையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

    இதையடுத்த பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாநில எல்லைகளில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுகிறது.

    இந்நிலையில் தமிழக-கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்குள் செல்லும் பஸ், கார், வேன் போன்ற அனைத்து வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வரு கிறார்கள். மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதோடு வாகன எண், பெயர், முகவரி, என்ன காரணத்துக்காக வருகிறீர்கள் என்று கேட்டு குறித்து கொள்கிறார்கள். கர்நாடக மாநில தேர்தலையொட்டி விடிய, விடிய பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல் பர்கூர்-கர்நாடக எல்லை யிலும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    • புகாரின் பேரில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டினர்.
    • சோதனையில் முடிவில் என்னென்ன ஆவணங்கள் சிக்கியது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிய வரும்.

    திருவாரூர்:

    திருவாரூர் ஜி.ஆர்.டி கார்டனை சேர்ந்தவர் முத்துமீனாட்சி. இவர் தற்போது விழுப்புரம் சர்க்கரை ஆலையின் நிர்வாக மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அங்கேயே தங்கி உள்ளார்.

    இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை திருவாரூர் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த போது நத்தம் புறம்போக்கு இடத்தில் வீட்டு மனைபட்டா வழங்கியதும், அந்த இடத்தை நெடுஞ்சாலைதுறை விரிவாக்க பணிக்காக மீண்டும் அரசிடமே நல்ல விலைக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

    புகாரின் பேரில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டினர். அதில் முத்து மீனாட்சி, நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கிராம நிர்வாக அலுவலர் துர்காராணி, உதவியாளர் கார்த்தி, அடியக்கமங்கலத்தை சேர்ந்த முருகன், முல்லையம்மாள், குமார், சுகுமார், சிவகுமார், சதீஷ்குமார், வினோத்குமார், திருப்பாலியூர் சுகுமாரி ஆகிய 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில் இன்று திருவாரூரில் உள்ள முத்து மீனாட்சி வீட்டிற்கு 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். அப்போது வீட்டின் வெளி கதவை பூட்டிவிட்டு வீட்டில் இருந்தவர்களை வெளிளே செல்ல அனுமதிக்கவில்லை. தொடர்ந்து பல்வேறு அறைகளில் சோதனை நடத்தினர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. சோதனையில் முடிவில் என்னென்ன ஆவணங்கள் சிக்கியது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிய வரும்.

    இதேப்போல் வீட்டு மனை பட்டா முறைகேட்டுக்கு உதவியாக இருந்ததாக கூறி அப்போதைய அடியக்கமங்கலம் வி.ஏ.ஓ.வும், தற்போதைய விளமல் வி.ஏ.ஓ.வுமான துர்காராணி என்பவரின் விளமல் சிவன் கோவில் நகரில் உள்ள வீடு மற்றும் அடியக்கமங்கலம் வி.ஏ.ஓ. உதவியாளர் கார்த்தி என்பவரது அடியக்கமங்கலத்தில் உள்ள வீடு ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனி தனி குழுவாக சென்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேப்போல் தஞ்சாவூரில் உள்ள நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை என்பவரது வீட்டில் சோதனை நடந்து வருகிறது.

    மேலும் சோதனை நடைபெறும் திருவாரூர் மாவட்டம் 3 அரசு அலுவலர்கள் மற்றும் தஞ்சையில் உள்ள ஒரு அரசு அலுவலர் ஆகிய 4 பேரின் வீடுகள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருவாரூர், தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 4அரசு அலுவலர்களின் வீடுகளில் நடந்து வரும் சோதனை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • போலீஸ் வாகன சோதனையில் 2 துப்பாக்கிகள்-பால்ரஸ் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • பறவைகளை வேட்டையாடுவதற்காக கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை-கால்பிரவு 4 வழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கி டமான மினி சரக்கு வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த வாக னத்தில் இருந்து 5 பேர் இறங்கினர். போலீசார் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் உரிமம் இல்லாத 2 ஒற்றைக் குழல் துப்பாக்கி கள், 50 கிராம் பால்ரஸ் குண்டுகள், 50 கிராம் ரவை தூள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அந்த வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர் .

    வாகனத்தில் வந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன், மோகன்ராஜ், ரவிக்குமார், நடராஜன், அஜித் குமார், ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசா ரணை நடத்தினர் .

    விவசாய நிலங்களை அழிக்கும் விலங்கு கள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவதற்காக இந்த துப்பாக்கிகள் கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.
    • கண் பார்வை குறைவு உள்ளிட்டவைகள் குறித்து சோதனை செய்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ரோட்டரி சங்கம் மற்றும் எல்.பி.எப். தொழிற்சங்கம் சார்பில் நகராட்சி துப்புரவு பணி, தூய்மை பணி ஊழியர்களுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார்.

    செயலாளர் நவநீதகண்ணன், பொருளாளர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எல்.பி. எப். தொழிற்சங்க நகராட்சி பிரிவு தலைவர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

    முகாமை நகர மன்ற தலைவர் செல்வராஜ் துவைக்கி வைத்தார்.

    முகாமில் புதிய நவீன கருவிகள் கொண்டு நகராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.

    இதில் புரை கண், கண் மறைவு, கண் பார்வை குறைவு உள்ளிட்டவைகள் சோதனை செய்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுகிறது. அந்த முகாமிலேயே மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.

    இதில் ஏரானவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    நிகழ்ச்சியில் உதவி ஆளுநர் தேர்வு முருகேசன் சாசன தலைவர் ராமன் மற்றும் ஆர்.கே.சேகர், தனபால், குஷிமாதவன், தங்கதுரை ராஜ், இளங்கோ, உள்ளிட்ட உறுப்பினர்கள், திமுக தொழிற்சங்க பிரதிநிதிகள் பொறுப்பாளர்கள் நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×