search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231346"

    • ஜேடர்பாளையம் ஆகிய 5 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் இரு சக்கர வாகனங்களை திருடிக் கொண்டு வானங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
    • இது போன்று வாகன சோதனை நடத்தி னால் திருட்டு குற்றத்தை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பரமத்தி, நல்லூர்,வேல கவுண்டன்பட்டி,

    ஜேடர்பாளையம் ஆகிய 5 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் இரு சக்கர வாக னங்களை திருடிக் கொண்டு வானங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

    அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரம் செய்வது போல் வரும் மர்ம நபர்கள் அப்பகுதியில் பூட்டி இருக்கும் வீடுகள், தனியாக பெண்கள் இருக்கும் வீடுகள், தனியாக வாகனம் நிறுத்தப்படும் இடங்கள், வீடுகளில் தனி நபர்கள் இருப்பது ,வெளியூர்களுக்கு சென்றவர்களின் வீடுகள் போன்றவற்றை கண்கா ணித்து அப்பகுதியில் யாரும் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து திருடி செல்கின்றனர்.

    அதேபோல் தனியாக நின்று கொண்டிருக்கும் பெண்களிடமும், நடந்து செல்லும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளையும் பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாக னத்தில் சென்று விடுகின்ற னர். இதனால் நகை மற்றும் பணத்தை பறிகொடுத்த வர்கள் பரிதவித்து இருக்கின்றனர்.

    இதன் காரணமாக போலீ சார் தனித்தனி குழுக்களாக பிரிந்து முக்கிய பகுதிகளில் நின்று அந்த வழியாக வெளி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனத்தில் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை நடத்த வேண்டும். தொடர்ந்து இது போன்று வாகன சோதனை நடத்தி னால் திருட்டு குற்றத்தை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கீரம்பூர் அருகே ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவற்றை கடத்தப்படுகிறதா‌ என‌‌ வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • கீரம்பூர், டோல்கேட் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் லாரி மற்றும் கனரக வாக–னங்களை ஆய்வு செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் கீரம்பூர் அருகே ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவற்றை கடத்தப்படுகிறதா என வாகன சோதனை மேற்கொண்டனர்.

    கீரம்பூர், டோல்கேட் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் லாரி மற்றும் கனரக வாக–னங்களை ஆய்வு செய்தனர்.

    தமிழக அரசு சார்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்–படும் ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவை கடத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தின் அடிப்ப–டையில் அவ்வழியாக வந்த லாரி, சரக்கு ஆட்டோ மற்றும் கனரக வாகனங்–களை நிறுத்தி ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் ரேஷன் அரிசி மற்றும் மண் எண்ணை எதுவும் பிடிபட–வில்லை எனவும் தொடர்ந்து வாகன சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறையினர் தெரிவித்தனர்.

    வழியாக வந்தால் அனைத்து வாகனங்க–ளையும் நிறுத்தி சோதனை செய்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ஏ.டிஎம் எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • போலீசார் கைது செய்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் ஏ.டிஎம் எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதனை தொடர்ந்து வட மாநிலத்தை சேர்ந்த ஒரு சிலரை போலீசார் கைது செய்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் தமிழக முழுவதும் ஏ.டி.எம். மையங்களில் குற்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.  இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம் நெய்வேலி ,சேத்தியாதோப்பு ,பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய 7உட்கோட்டங்களில் உள்ள 533 ஏ.டி.எம். மையங்களில் போலீசார் சோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.


    அதன்படி அந்தந்த உட்கோட்டத்திற்குட்பட்ட போலீசார் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பு தன்மையை நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பு காவலர்கள் உள்ளாரா? எச்சரிக்கை அலாரம் சரியாக இயங்குகிறதா? கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா? மின்விளக்கு வெளிச்சம்ஏ.டி.எம். மையங்களில் உள்ளே மற்றும் வெளியில் இருக்கிறதா? என்பதனை அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மேலும் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஏ.டி.எம். மையம் பாதுகாப்பு குறித்து தற்போது உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதையும் வங்கி மேலாளர்களுக்கு காவல்துறை சார்பில் அறிவுறுத்தி கடிதம் வழங்கப்பட்டது,,இதன் மூலம் வருங்காலங்களில்ஏ.டி.எம். மையங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க இந்த நடவடிக்கை ஏதுவாக அமைந்துள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • 25 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    • பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக எச்சரிக்கை நோட்டீசும் கொடுக்க நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியத்தின் குமரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டிய ராஜன் தலைமையில் உதவி மேலாளர்நாகராஜன், உதவிசுற்றுச் சூழல் பொறி யாளர் கலைவாணி, உதவி பொறியாளர் ஜெனிஷா, கன்னியாகுமரி சிறப்பு நிலைபேரூராட்சி சுகாதார அதிகாரிமுருகன் சுகாதார மேற்பார்வையா ளர் பிரதீஷ் மற்றும் அதிகாரிகள் கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னார்கள்.

    கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரைபகுதி, சன்னதி தெரு, ரத வீதிகள், மெயின் ரோடு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, கடற்கரை சாலை உள்பட பல்வேறு இடங்களில் 150-க்கும் மேற்பட்ட ஓட்டல் மற்றும் கடைகளில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி யது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்தகடைகளில்இருந்து மொத்தம் 25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும ஒரு சில கடைகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக எச்சரிக்கை நோட்டீசும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • செல்போனை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்
    • கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கோவை, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை மேற் கொண்டனர். கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு டையவர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தூத்துக் குடியில் உள்ள காஜா முகைதீன் வீட்டிற்கு டெல்லி யில் இருந்து வந்த என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் கணேஷ் பாபு தலைமையிலான குழுவினர் சென்றனர். அப்போது காஜா முகைதீன் கடந்த சில ஆண்டுகளாக நாகர்கோவிலில் வசித்து வருவது தெரிய வந்தது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் கணேஷ் பாபு தலைமையில் 3 பேர் இன்று காலை நாகர்கோ விலுக்கு வந்தனர். அவர் கள் நாகர்கோவில் இசங்கன் விளையில் உள்ள காஜா முகைதீன் வீட்டிற்கு சென்ற னர். வீட்டில் இருந்த காஜா முகைதீனிடம் விசாரணை நடத்தப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய விசாரணை பகல் 12 மணி வரை நடந்தது. சுமார் 3 மணி நேரம் காஜா முகைதீனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    இதை தொடர்ந்து அவரது செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு சென்றனர்.

    • தொழில் அதிபர் வீடு-அலுவலகங்களில் பல கோடி ரூபாய் ஆவணங்கள் சிக்கின
    • ஆடிட்டரின் வீடு- அலுவலகம் சோதனை

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டத்திலும் 20 இடங்களில் இந்த சோதனை நடந்தது. குறிப்பாக திரு வட்டாறை அடுத்த சிதறால் பகுதியை சேர்ந்த ராஜே ந்திரன் என்பவரது வீடு, திருமண மண்டபம், செங்கல் சூளை போன்றவற்றில் ஓரே நேரத்தில் சோதனை நடத்த ப்பட்டது.

    தொழில்அதிபர் ராஜேந் திரனுக்கு, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கல் குவாரிகள் உள்ளன. மேலும் இவர் குமார கோவில் முருகன் என்ற பெயரில் தான் அழைக்கப்படுகிறார்.

    இவருக்குச் சொந்தமான லாரிகள் மூலம் தினமும் 50-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கல், ஜல்லி, எம்.சாண்ட், என்.சாண்ட்போன்றவை திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்ஞம் துறை முகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த சூழலில் தான் வருமான வரித்துறையினர் ராஜேந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட் டனர். மேலும் அவ ருக்கு நெருக்கமான உறவினர்களின் வீடுகள் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள அவரது விடுதி ஆகிய வற்றிலும் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவண ங்களை வருமான வரித்துறை யினர் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது. அவற்றை தங்கள் அலுவலகம் கொண்டு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    ராஜேந்திரனின் ஆடிட்ட ரின் வீடு மற்றும் அலுவலகம் கழுவன் திட்டை பகுதியில் உள்ளது. அங்கும் வருமான வரித் துறையினர் சோதனை செய்தனர். இதில் சொத்து மற்றும் பல கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    • மருந்து நிறுவனம் மற்றும் செங்கல் சூளை அதிபர் வீடு - மண்டபம் உள்பட 20 இடங்களில் நடந்தது
    • வருமான வரி கணக்குகளை சரியாக காட்டவில்லை என்று வருமான வரி துறைக்கு புகார்

    கன்னியாகுமரி:

    தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பல்வேறு நிறுவனங்கள் சொத்துக் களை வாங்கியதில் முறை கேடு செய்திருப்பதாகவும் வருமான வரி கணக்குகளை சரியாக காட்டவில்லை என்றும் வருமான வரி துறைக்கு புகார்கள் வந்துள் ளன.

    அதன் அடிப்படையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள ஓட்டல் அதிபர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், செங்கல் சூளைகள் போன்றவற்றில் வருமான வரித்துறையினர் இன்று ஒரே கட்டமாக சோதனை நடத்தினர்.குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சிதறால் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜேந்திரன். இவருக்கு ஏராளமான கல் குவாரிகள் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளன.

    மேலும் மார்த்தா ண்டத்தில் ஒரு திருமண மண்டபம், லாரி சர்வீஸ் போன்றவையும் உள்ளது. இது தவிர தேமானூர் பகுதியில் செங்கல் சூளையும் நடத்தி வருகிறார்.

    தொழில் அதிபர் ராே ஜந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் இன்று வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதுபோல களியக்கா விளை பகுதியில் உள்ள காண்டிராக்டர் ஒருவரின் வீடு மற்றும் அலுவல கத்திலும் இன்று வருமான வரித்துறை யினர் சோதனை மேற்கொண்டனர்.

    இதுபோல நாகர் கோவில் பகுதியில் உள்ள மருந்து நிறுவனத்திலும் இன்று சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஆலைகள், அலுவலகங்கள் என 5 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இது தவிர மாவட்டத்தில் சுமார் 20 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
    • அரியலூர் மாவட்டத்தில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, அதில் 14 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடியை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நெல் அறுவடை நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி அரியலூர் மாவட்டத்தில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, அதில் 14 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாத வண்ணம் தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை கூடுதல் இயக்குனர் அருண் உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரியலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.




    • குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • முக்கியமான சாலைகளில் ஆங்காங்கே போலீசார் இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை சரி பார்த்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போவதாகவும், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை வைத்து நகை பறிப்பு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவ தாகவும், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்குவதாகவும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபுவுக்கு புகார்கள் வந்தன.

    இந்த புகார்களின் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பெயரில் திருப்பூர் மாநகரில் அனைத்து போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் திடீர் வாகன சோதனை நடைபெற்றது. முக்கியமான சாலைகளில் ஆங்காங்கே போலீசார் இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை சரி பார்த்தனர்.

    திருப்பூர் மாநகர் முழுவதும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியவர்கள், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் உரிய ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிள்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாநகர போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையினால் ஒரே நாளில் 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். சோதனை தொடர்ந்து நடைபெறும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார் நாமக்கல், திருச்சி ரோட்டில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தது அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • அவர்கள் 2 பேரையும், போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அவர்கள் வந்த கார், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார் நாமக்கல், திருச்சி ரோட்டில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தது அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    இதில் காரில் இருந்தவர் திருச்சியை சேர்ந்த ராஜ்கமல் என்பதும், மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலகுமார் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், ராஜ்கமல் மீது தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பாலகுமார் மீது சில வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. 2 பேரையும், போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அவர்கள் வந்த கார், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • 5-வது அணு உலைக்காக தயாரிக்கப்பட்ட உள் உறுப்புகளுடன் கூடிய அணு உலை கலன் ரஷ்யாவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
    • ரஷ்ய உதவியுடன் இதே திறன் கொண்ட மேலும் நான்கு உலைகளை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் 2-வது அணு உலைகள் மூலமாக தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 5 மற்றும் 6-வது அணு உலைக்கான பணிகளும் நடந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த திட்டத்தின் 5-வது அணு உலைக்காக தயாரிக்கப்பட்ட உள் உறுப்புகளுடன் கூடிய அணு உலை கலன் ரஷ்யாவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்திய மற்றும் ரஷ்ய நிபுணர்கள் முன்னிலையில், ரஷ்யாவின் வோல்கோடோன்ஸ்கில் உள்ள ரோசாடோம் - அடோமெனெர்கோமாஷ் என்ற எந்திர கட்டுமான பிரிவின் ஒரு பகுதியான ஆட்டம்மாசில் கூடங்குளம் அணு உலைக்காக தயாரிக்கப்பட்ட அணுஉலை கலன் சோதனை செய்யப்பட்டது.

    இந்த சோதனையின்போது முதலில் வல்லுநர்கள் 600 டன் தூக்கும் திறன் கொண்ட கிரேனை பயன்படுத்தி, 11 மீட்டர் உயரம் உள்ள வி.வி.இ.ஆர்-1,000 என்ற உலையை அதன் வடிவமைப்பு நிலையில் நிறுவினர். பின்னர், 73 டன் எடையுள்ள 10 மீட்டர் நீளமுள்ள கோர் பீப்பாய், 38 டன் எடையுள்ள கோர் பேபில் மற்றும் 68 டன் எடை உள்ள பாதுகாப்பு குழாய் அலகு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கீழே இறக்கினர்.

    பின்னர் உலையானது நிலையான உலை மூடியுடன் மூடப்பட்டது. இதன்காரணமாக அந்த அணு உலையானது மொத்த எடை 603 டன்களை எட்டியது. ஏற்கனவே நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனமானது கடந்த 2013 மற்றும் 2016-ல் முறையே 2 வி.வி.இ.ஆர். உலைகளை தயாரித்து கூடங்குளத்தில் இயக்கி உள்ள நிலையில், தற்போது ரஷ்ய உதவியுடன் இதே திறன் கொண்ட மேலும் நான்கு உலைகளை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    • ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.
    • தப்பியோடிய சத்தியசீலனை போலீசார் போலீசார் தேடி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியசீலன்.

    இவர் அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கஞ்சாநகரம் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் விரைந்து வந்து சோதனை நடத்தியதில் அங்கு 310 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுகுறித்து குடிமை பொருள் வழங்கல் குற்றப் பிரிவு புலனாய்வு துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சத்தியசீலன் தப்பியோடி விட்டார் அவரை போலீசார் போலீசார் தேடி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட அரிசி மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் உள்ள நுகர்வோர் வாணிபக் கழக கிடங்குக்கு கொண்டு செல்லப்படும் என வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தெரிவித்தார்.

    ×