search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231346"

    • வீடுகளில் ஆயுத சோதனை
    • 18 ரவுடிகள் தலைமறைவு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின் பேரில் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி, ஏடிஎஸ்பி மதியழகன் தலைமையில் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் முன்னிலையில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர்கள் வினோத் கண்ணன், ராம்குமார், பயிற்சி சப் இன்ஸ்பெக்டர்கள் அசோகன், குமார் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர் பெரம்பலூர் சங்குப் பேட்டை, திருநகர், கோனேரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரவுடிகளின் வீடுகளில் திடிர் சோதனை செய்தனர்.அப்போது ரவுடிகள் வீட்டில் உள்ளனரா ? எங்கு உள்ளனர் ? குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனரா என ரவுடிகளிடமும், அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் வீடுகளில் ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடப்பட்ட 48 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 117 ரவுடிகளில் இதுவரை குண்டாஸ் சட்டத்தில் 25 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 ரவுடிகள் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளனர். 3 ரவுடிகள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். . 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 55 பேர் ஆர்டிஓ உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் தொடர் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 18 ரவுடிகள் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    • மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக தெரியவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விபசாரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக திருவிடைமருதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து நேற்று இரவு திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், நாகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் மற்றும் போலீசார் திருவிடைமருதூர் மெயின் ரோடு ஐந்து தலைப்பு வாய்க்கால் அருகில் உள்ள மசாஜ் சென்டர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மசாஜ் சென்டரில் இருந்த தரகர் தாமஸ் என்பவரை பிடித்து விசாரணை மேற் ெகாண்டனர்.

    விசாரணையில் அவர் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுப்பட்டதை ஒப்பு கொண்டார்.

    மேலும் அவர் கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் உள்ள மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக தெரிய வந்தது.

    இது தொடர்பாக கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விபசாரத்தில் ஈடுபட்ட மசாஜ் சென்டரின் தரகர் மணிகண்டன் மற்றும் 2 பெண் உட்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் மூன்று பேரை தேடி வருகின்றனர் .

    • திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் பறிமுதல்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் அருகே சேஷமூலை பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வேகமாக 1 மோட்டார் சைக்கிள் வந்தது.

    அந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.

    இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குடவாசல் பருத்தியூர் ரோட்டு தெருவை சேர்ந்த கலைச்செல்வன் (வயது 23), ரஞ்சித் (21) என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் குடவாசல் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் உத்தூர் பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் 110 லிட்டர் சாராயம் கடத்திய சிக்கல் பனைமேடு காலனி தெருவை சேர்ந்த அஜித் (வயது 24) தனுஷ் (21) ஆகிய இருவரையும் கைது செய்து 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • உலோக சிலைகள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்துள்ளதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சோதனையின் பேரில் சிவகாமி அம்மன் உலோக சிலையை போலீசார் மீட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் பல ஆண்டுகளாக பழமையான உலோக சிலைகள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்துள்ளதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை இயக்குனர் டாக்டர் ஜெயந்த் முரளி உத்தரவுப்படி காவல் துறைத் தலைவர் டாக்டர் தினகரன் வழிகாட்டுதலின் படி போலீஸ் சூப்பிரண்டு ரவி மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், தலைமை காவலர் கோபால், காவலர் பிரவீன் செல்வம் குமார் ஆகியோர்கள் அடங்கிய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் சுவாமிமலை யாதவ தெருவில் அமைந்துள்ள சரவணன் என்பவரின் வீட்டில் சோதனை செய்த போது சுமார் 165 சென்டிமீட்டர் உயரமும் 45 சென்டிமீட்டர் அகலமும் உடைய பிரமாண்டமான சிவகாமி அம்மன் உலோக சிலை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

    5 அடிக்கும் மேல் உயரம் கொண்ட சிலைகளை பொதுவாக வீட்டில் வைத்து வழிபாடும் வழக்கம் தமிழ்நாட்டில் இல்லை என்பதாலும் மேற்படி சிலையானது பார்ப்பதற்கு தொன்மையான தோற்றத்துடனும் இருந்ததாலும், ஏதேனும் ஒரு கோயிலில் இருந்து திருடப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சிலையை வீட்டில் வைத்திருப்பதற்கான உரிய ஆவணம் கேட்டனர்.

    ஆனால் சரவணன் உரிய ஆவணத்தை சமர்ப்பிக்கவில்லை.இதையடுத்து அந்த சிலையை போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    அதன் பின்னர் போலீசார் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.‌

    அதில் மீட்கப்பட்ட சிலை கோவிலில் இருந்து திருடப்பட்டதா ? அல்லது வேறு எங்கிருந்து சிலை வந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிய வரும். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
    • கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்து கடைக்கு சீல் வைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆண்டனி பிரபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டென்னிசன் ஆகியோர் திட்டச்சேரி, மரைக்கான்சாவடி பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மரைக்கான்சாவடி மெயின் ரோட்டில் ராஜசேகர் மனைவி கோமதி (வயது 31) என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.

    இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரி கடைக்கு 'சீல்' வைத்தார்.மேலும் கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    • போலீசார் மயிலாடுதுறையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
    • சுமார் 200 லிட்டர் சாராயம் காரைக்காலில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டு அன்பழகன், உள்ளிட்ட போலீசார் மயிலாடுதுறையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது அந்த வழியாக காரை மறித்து சோதனை செய்தனர். அதில் சுமார் 200 லிட்டர் சாராயம் காரைக்காலில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக மயிலாடுதுறை நீடூர் பகுதி பல்லவராயன் பேட்டை சேர்ந்த பசுபதி (வயது 23) என்பவரை கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின்படி, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • மேலும் தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் உட்பட 4 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் மற்றும் சேளூர் பகுதியில் தனியார் வாகனங்கள் வாடகை ஒப்பந்த வாகனமாக இயக்கப்பட்டு வருவதை தடுக்கும் நடவடிக்கையாக, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின்படி, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சரவணன், உமா மகேஸ்வரி ஆகியோர் நடத்திய சோதனையில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 3 கார்கள், வாடகைக்கு இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. மேலும் தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் உட்பட 4 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    மேலும் அவ்வழியாக தலைக்கவசம் அணியாமல் வந்த 2 இருசக்கர வாகன ஓட்டிகள், செல்போன் பேசிக்கொண்டும், சீட் பெல்ட் அணியாமலும் வந்த கார் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வாகன சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார். 

    • நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
    • தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்ததில் பயணிகள் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    அதன்படி தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் மேற்பார்வையில் தஞ்சை இருப்புப்பாதை இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், தனிபிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், ரயில்வே பாதுகாப்பு படை சப்- இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், மகாதேவன் மற்றும் போலீசார் ரெயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகள் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை நடத்தினர்.

    இருப்பு பாதை போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டனர்.

    ரெயில் நிலைய வளாகம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தண்டவாளத்தில் வெடி பொருட்கள் ஏதும் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு சோதனை செய்தனர்.

    மேலும் நடைமேடை முழுவதும் கண்காணித்து வருகின்றனர். பார்சல் அலுவலகத்தில் உள்ள பார்சல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், தஞ்சை மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் ஏறி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

    தொடர்ந்து ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது

    இதேபோல் நீடாமங்கலம், பூதலூர், மன்னார்குடி ஆகிய ரெயில் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான கொல்லிமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வார்கள்.
    • இதனையடுத்து கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளி சோதனை சாவடியில், வன காப்பா ளர்கள், ஊழியர்கள் அனைத்து வாகனங்களையும் சோதனை நடத்தினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான கொல்லிமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வார்கள். அவர்கள் அங்குள்ள இயற்கை அழகை பார்த்து ரசிப்பதுடன் அருவிகளிலும் குளித்து மகிழ்வார்கள்.

    சமீப காலமாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் செல்பவர்கள் மலை பாதையின் கொண்டை ஊசி வளைவுகளில் உள்ள தடுப்பு சுவரில் அமர்ந்து மது அருந்துவதாக புகார் எழுந்தது. மேலும் காலி மது பாட்டில்களை அவர்கள் வீசி எறியும்போது, அதனை எடுத்து செல்லும் குரங்குகள் மீதம் இருக்கும் மதுவையும் பருகி உடல் உபாதைக்கு ஆளாகி வந்தன.

    இதனையடுத்து கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள

    காரவள்ளி சோதனை சாவடியில், வன காப்பா ளர்கள், ஊழியர்கள் அனைத்து வாகனங்களையும் சோதனை நடத்தினர். அப்போது வாகனங்களில் பதுக்கி எடுத்துச் செல்ல முயன்ற மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன், மதுவை கீழே ஊற்றி அதனை அழித்தனர்.

    கொல்லிமலைக்கு செல்வோரும், இங்கிருந்து

    அடிவாரப் பகுதிக்கு வருவோரும் விலங்குக ளின் நலன் கருதி மது பாட்டில்களை கொண்டு செல்ல வேண்டாம். தடுப்பு சுவரில் அமர்ந்து மது அருந்த வேண்டாம். சாலையில் காலி பாட்டில்களை உடைத்து சேதப்படுத்த கூடாது. வனத்துறையின் சட்ட விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • விதிமுறைகள் மீறப்பட்டதா? பள்ளி கல்வித்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மதுரை மாவட்டத்தில் ஓடும் பள்ளி வாகனங்களை தினந்தோறும் சோதனை நடத்த வேண்டும்.

    மதுரை

    மதுரை திருப்பாலை தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி வாகனத்தில் சென்ற 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் மூச்சுத் திணறல் காரணமாக மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணையின் நடத்தியது. இதில் பல்வேறு தகவல்கள் வெளியானது. திருப்பாலை தனியார் பள்ளியில் மாணவிகளை அழைத்து வர பஸ் வசதி உள்ளது. இந்த நிலையில் பள்ளி பஸ்சில் நேற்று பழுதாகி நின்று விட்டது.

    பள்ளி நிர்வாகம் கிட்டத்தட்ட 150 மாணவிகளை ஒரே பஸ்சில் அடைத்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தது. அழகர்கோவில், மாங்குளம், பொய்கைகரைபட்டி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய மாணவிகளுக்கு பஸ்சில் இடம் கிடைக்கவில்லை.

    அவர்கள் நின்று கொண்டு பயணிக்க நேர்ந்தது. கள்ளந்திரி அருகே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பள்ளி பஸ்சின் வாகன ஓட்டுநர், அதே பகுதியில் உள்ள சந்துக்குள் பஸ்சை 30 நிமிடமாக நிறுத்தி வைத்தார்.

    பள்ளியில் இருந்து களைப்புடன் வீடு திரும்பிய மாணவிகளை, பஸ்சில் அடைத்து வைத்து காக்க வைத்ததால் ஜனனி, ரம்யா, பாவனா , பிரஜிதா உள்பட 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் காரணமாக மயக்கம் ஏற்பட்டது.

    அவர்களுக்கு கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஜனனி, ரம்யா, பாவனா, பிரஜிதா ஆகிய 4 மாணவிகள், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருத்திகா கூறுகையில், பள்ளி மாணவிகள் மயக்கமடைந்தது, ஒரே பஸ்சில் அதிக அளவில் மாணவிகளை அழைத்துசென்றது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

    மதுரை தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான பஸ், போக்குவரத்து அதிகாரிகளுக்கு பயந்து தெருவுக்குள் நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? அப்படி என்றால் அந்த வாகனம் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயங்கியதா? என்று தெரியவில்லை.

    இதுகுறித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் விசாரணை நடத்த வேண்டும். மதுரை மாவட்டத்தில் ஓடும் பள்ளி வாகனங்களை தினந்தோறும் சோதனை நடத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பள்ளி மாணவ, மாணவிகளின் உயிரை பாதுகாக்க முடியும்" என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • 18 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
    • 11 கடைகளுக்கு அபராதம்

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலாத்த லமான கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளது. இந்த சீசனையொட்டி ஆங்காங்கே நடைபாதைகளில் ஏராள மான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கன்னியாகு மரியில் நேற்று குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கசிவம் நாகர்கோவில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் குமாரபாண்டியன், தக்கலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவின்ரகு ஆகியோர் கொண்ட குழுவினர் ஒரு குழுவாகவும் மேல்புறம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வின்சென்ட்கிளாட்சன், குளச்சல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி, திருவட்டார்வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்னொரு குழுவாகவும் தனித்தனியாக சென்று 50-க்கும் மேற்பட்ட ஓட்டல் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    கன்னியாகுமரி கடற்கரை சாலை, மெயின்ரோடு, திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி உள்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் 11 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதுகண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அந்த கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த கடைகளில் இருந்து 18 கிலோ 750 கிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
    • எர்ணாகுளம் முதல் பாட்னா வரை செல்லும் ரெயிலில் 3பெட்டிகள் இணைக்கப்பட்டு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

    திருப்பூர் :

    உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக் கழக வளாகத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில், தமிழகத்தில் இருந்து ரெயில் மூலம் பலர் செல்கின்றனர். இந்த நிலையில் கோவையில் இருந்து காசி தமிழ் சங்கத்தினர் வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் கலைபண்பாட்டு, இலக்கிய விழாவில் கலந்து கொள்ள செல்வதற்கு எர்ணாகுளம் முதல் பாட்னா வரை செல்லும் ரெயிலில் 3பெட்டிகள் இணைக்கப்பட்டு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் திருப்பூர் ரெயில் நிலையத்தில்2 நிமிடம் நின்று செல்கிறது.

    இந்தநிலையில் மங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியையொட்டி திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மாநகர காவல் துணை ஆணையர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலம் ரெயிலில் சோதனை நடத்தப்பட்டது. பயணிகளின் உடைமைகளை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து உள்ளே அனுப்புகின்றனர்.

    ×