search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனிப்படை"

    • தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 95 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
    • கைவரிசை காட்டிய வடமாநில கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் குமார் நகரை சேர்ந்தவர் பிரபுசங்கர் (வயது 45). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

    மேலூரில் உள்ள அவரது வீட்டில் மாடிப்பகுதியை மட்டும் வாடகைக்கு விட்டுள்ளார். பிரபு சங்கரின் வீட்டை அவரது மாமனார் பாலகிருஷ்ணன் அடிக்கடி வந்து பார்த்து செல்வார். அதே போல் நேற்று வந்து பார்த்த போது, வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து அவர் மேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது அவரது வீட்டின் ஜன்னல் கம்பிகள் உடைந்திருந்தன. மேலும் பீரோவில் இருந்த 95 பவுன் தங்கநகைகள்,45 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளைய டிக்கப்பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் பிரபு சங்கரின் வீட்டிற்குள் ஜன்னலை உடைத்து அதன் வழியாக புகுந்து வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி, இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர். பிரபு சங்கரின் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை அடையாளம் காண அந்த பகுதியில் வைக்கப்பட்டி ருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் முகத்தை மறைத்தபடி துணியை சுற்றி கொண்டு 6 பேர் கும்பல் பிரபு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. அவர்கள் அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் போல் உள்ளனர். இதனால் பிரபு சங்கர் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில கும்பல் என்பதை உறுதி செய்துள்ளனர்.

    அவர்களை பிடிக்க துணை சூப்பிரண்டு தலைமையில் 2 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக, வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தோடு சென்றுவிட்டார்.
    • தொடர்ந்து நண்பர்களோடு கலந்து பேசி, நேற்று முன்தினம் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நிரவி பகுதியில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி-யில், குருப் பொது மேலாளராகா பணியாற்றும் ஷடானனன்(59) என்பவர், காரைக்கால் பாரதி நகரில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர், கடந்த 3ந் தேதி, தனது சொந்த ஊரான கேரளாவில் உள்ள திருச்சூர் பட்டேபாடம் எனும் ஊருக்கு, ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக, வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தோடு சென்றுவிட்டார். மீண்டும் கடந்த 15ந் தேதி பகல் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, வீட்டில் வைத்திருந்த சிசி கேமராவை காண சென்றபோது, கேமராக்கள் உடைக்கப்பட்டு, அதன் அனைத்து பாகங்களும் திருடு போய் இருந்தது.

    பின்னர், வீட்டில் சென்று பார்த்தபோது, வீட்டு அலமாரிகளில் வைத்திருந்த தங்க செயின், மோதிரம், வளையல், தோடு உள்ளிட்ட 18 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கம், மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போய் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நண்பர்களோடு கலந்து பேசி, நேற்று முன்தினம் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, கைரேகை நிபுணர்களை அழைத்து, வீட்டின் பல இடங்களில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்து, வீட்டு பூட்டை உடைத்து, 18 பவுன் தங்க நகைகள், பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை தனிப்படை அமத்து தேடிவருகின்றனர். இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ராஜபாளையத்தில் வடமாநில தொழிலாளியின் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர்.
    • பின்னர் உடலை மாடியின் மேல் மறைவான இடத்தில் மறைத்து வைத்து விட்டு 2 பேரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள ஸ்ரீரங்கபா ளையத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுசங்கர். இவர் சொக்கலிங்கபுரம் பகுதியில் பிளாஸ்டிக் குழாய் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார்.

    இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீத்மான்ஜி (வயது 45) என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் டி.எஸ்.பி. பிரீத்தி, தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சஞ்சீத்மான்ஜி யின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோ தனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவத்தன்று சஞ்சீத்மான்ஜியுடன் தங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த சகோதரர்கள் திரோபான்ஜி, வினோ த்பானியா ஆகியோர் மது குடித்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த சகோத ரர்கள் சஞ்சீத்மான்ஜியை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

    பின்னர் உடலை மாடியின் மேல் மறைவான இடத்தில் மறைத்து வைத்து விட்டு 2 பேரும் அங்கிருந்து தப்பி யுள்ளனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சஞ்சீத்மான்ஜியை கொலை செய்த 2 பேரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு சென்னைக்கு சென்றிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களை பிடிக்க ராஜபாளையம் போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர்.

    • அலங்காநல்லூர் அருகே ஆட்டோ டிரைவரை கொலை செய்த கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
    • அவரது நண்பர்கள் கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை பெத்தானியா புரத்தை சேர்ந்தவர் ரவி (வயது 29), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரியா(24). ரவி கடந்த ஒரு வருடமாக கோவில்பாப்பாக்குடியில் வசித்து வந்தார். அவர் அங்கு சிலருடன் நட்பாக பழகி வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று ரவி கோவில்பாப்பாக்குடி பகுதியில் இருந்தபோது ஒரு கும்பல் வந்தது.

    அவர்கள் ரவியிடம் தகராறு செய்து கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.இதில் படுகாயம் அடைந்த ரவியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியி லேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

    கொலை சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், மருதமுத்து ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி னர்.

    எதற்காக ரவி கொலை செய்யப்பட்டார்? என்பது மர்மமாக உள்ளது. இதுதொடர்பாக அலங்கா நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலையில் ஈடுபட்ட நபர்கள் யார்?யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்ேடா டிரைவர் ரவியை கொலை செய்த கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன் தலைமையில் 2 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ரவியை அவரது நண்பர்கள் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே மதுபாட்டில் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அர்ஜுனன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கீரிமேடு பகுதியில் புதுவை மாநில மதுபானங்கள் விற்பனை செய்வதாக எஸ்.பி. ஸ்ரீ நாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அவரது ஆணையின் படி டி.எஸ் பி. பார்த்திபன் தலைமையிலான தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் காவலர்கள் கிரிமேடு பகுதியில் சென்று சோதனை செய்தனர். அப்போது கிரிமேட்டை சேர்ந்த அர்ஜுனன் (வயது 42) என்பவர் வீட்டின் அருகே மது பாட்டில்கள் விற்பனை செய்தார். அவரிடம் இருந்து 41 புதுவை மது பாட்டில்கள், 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அர்ஜுனன் மீது வழக்குப் பதிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரபு செய்து கைது செய்தார்.

    • சமையலறையில் மர்ம கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து குடும்பத்துடன் எரித்து கொலை செய்ய முயற்சி செய்தனர்.
    • 3 தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மத்திய சிறைச்சாலையில் உதவி ஜெயிலராக மணிகண்டன் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களாக மத்திய சிறைச்சாலை தீவிர சோதனையில் செல்போன், சார்ஜர் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகளிடமிருந்து பறிமுதல் செய்தார். மேலும் கைதிகளை கடும் எச்சரிக்கை செய்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சாவூருக்கு சென்றிருந்தார். நேற்று அதிகாலை மணிகண்டன் வீட்டில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சமையலறையில் மர்ம கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து குடும்பத்துடன் எரித்து கொலை செய்ய முயற்சி செய்தனர். அப்போது அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர்.

    இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறைத்துறை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார், டெல்டா பிரிவு உள்ளிட்ட 3 தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் உதவி ஜெயிலர் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினரை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் யாரேனும் கூலிப்படை ஏவி இந்த சம்பவத்தில் ஈடுபட வைத்தார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் பகுதியில் கூலிப்படையினர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து விசாரணை செய்ய விரைந்துள்ளனர்.

    • மாதுளம் பேட்டை வினோத் என்பவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் படுகாயமடைந்தார்.
    • அவர்களிடமிருந்து 2 அரிவாள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று முன்விரோதம் காரணமாக மாதுளம் பேட்டை வினோத் என்பவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் படுகாயம் அடைந்தார்.

    இந்த வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா உத்தரவுப்படி, கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்காணி ப்பாளர் அசோகன் மற்றும் மேற்கு இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோரின் மேற்பா ர்வையில் தனிப்படை சப்இன்ஸ்பெக்டர்கீர்த்தி வாசன், ராஜா,செல்வகுமார், பாலசுப்பி ரமணியம், நாடிமுத்து, ஜனார்த்தனன்.

    மேற்கு காவல் நிலைய போலீசார் ஆகியோர்துரிதமாக செயல்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான, கும்பகோணம்பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஆறுமுகம், கார்த்தி, ஆல்பாகுமார் ஆகியோரை பிடித்து விசாரித்து அவர்களி டமிருந்து 2 அரிவாள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பின்னர்நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 நபர்களை தேடி வருகி ன்றனர்.

    • கடலூரில் ரவுடி கொலை கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    • இந்த சம்பவத்தில் கண்ணன்ரத்த வெள்ளத்தில் பிணமா னார். ரேவன், மூர்த்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    கடலூர்: 

    கடலூர் திருப்பாதிரி புலியூர் போலீஸ் சரகம் கம்மியம்பேட்டை பிடாரி–யம்–மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பு என்கிற கண்ணன் (வயது 26). பிரபல ரவுடி. இவர் நேற்று மாலை கம்மியம்பேட்டை பி.ஆர்.எஸ். வெங்கடேசன் நகரில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் மோட்டார் சை்ககிளில் அங்கு வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கண்ணனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதனை தடுக்க வந்த கண்ணனின் நண்பர்கள் வன்னியர்பாளையம் மேட்டுத் தெருவை சேர்ந்த ரேவன் (25), கம்மியம் பேட்டையை சேர்ந்த மூர்த்தி (22). ஜீவானந்தம் (22) ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. அதன் பின்பு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த சம்பவத்தில் கண்ணன்ரத்த வெள்ளத்தில் பிணமா னார். ரேவன், மூர்த்தி ஆகியோர் படு–காயம் அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ ேபால பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். 

    தகவல் அறிந்த கடலூர் போலீஸ் டி.எஸ்.பி. கரிக்கல் பாரிசங்கர், திருப்பாதிரி–புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இறந்த கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத–னைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி–வைத்தனர். படுகாயம் அடைந்த ரேவன், மூர்த்தி ஆகியோர் கடலூர் அரசு ஆஸ்பத்தி–ரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கள். இது தொடர்பாக போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பழிக்கு–பழியாக இந்த கொலை நடந்திருப்பது தெரிய–வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த 19.8.2020-ம் ஆண்டு திருப்பாதிரிபுலியூர் பகுதியை சேர்ந்த காம–ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கண்ணன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கண்ணன் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனை காமராஜ் சகோதரர் சிவாஜி, அவரது நண்பர்கள் சந்திரசேகர், விக்னேஷ், சூர்யபிரதாப் ஆகியோர் நோட்டமிட்டுள்ளனர். நேற்று கம்மியம்பேட்டை பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் நகரில் கண்ணன் இருப்பதை அறிந்த சிவாஜி மற்றும் அவரது நண்பர்கள் இந்த கொலையை செய்துள்ளனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் சென்னை, காஞ்சீபுரம், புதுவை ஆகிய பகுதிக்கு தனித்தனியாக விரைந்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல்களை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
    • அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையத்தில் முருகன், மாரியம்மன் கோவில்கள் அருகருகே உள்ளன. தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இந்த கோவில்களின் நடை தினமும் காலை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.

    இதே போல் நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரிகள் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை வழக்கம் போல் கோவில்களை திறக்க வந்த பூசாரிகள் 2 கோவில்களின்

    உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ 25,000 திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல்களை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கைரேகை நிபுணர்களும் வந்து பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்கும் வகையில் தாலுகா சப்- இன்ஸ்பெக்டர் மதிவாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் இதற்கு முன்பு கோவில்களில் கைவரிசை காட்டியவர்கள் பட்டியலை சேகரித்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தாய் மகள் கொலையில் திருப்பம்
    • 4 பேருக்கு தொடர்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள முட்டம் குழந்தை யேசு தெருவைச் சேர்ந்த பவுலின் மேரி (வயது 48), அவரது தாயார் திரேச ம்மாள் (91) ஆகியோர் கடந்த 5-ந்தேதி வீட்டில் மர்ம மான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ள த்தில் பிணமாக கிடந்தனர். அவர்களது நகைகளும் கொள்ளை  போயிருந்தது.


    பவுலின் மேரியின் கணவர் ஆன்றோ சகாய ராஜ், மூத்த மகன் ஆலன் துபாயில் பணியாற்றி வரும் நிைலயில் 2-வது மகன் ஆரோன் சென்னையில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இதனால் பவுலின் மேரியும் அவரது தாயார் திரேசம்மாளும் தனியாகத் தான் வசித்து வந்துள்ளனர்.

    இதனை அறிந்த யாரோ சிலர் தான் திட்ட மிட்டு வீட்டுக்குள் புகுந்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். கொலை நடந்த விதங்களை பார்க்கும் போது ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீ சார் கருதினர்.

    ஆனால் கொலையாளிகள் யார்? என்பதில் மர்மம் நீடித்தது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்ட போதிலும் சரியான துப்பு கிடைக்கவில்லை.


    கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு தங்க ராமன் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்க ப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். பவுலின் மேரியின் செல்போனும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

    இதற்கிடையில் இரட்டைக் கொலையில் கஞ்சா கும்பலுக்கு தொடர்பு இருக்கலாமா? அல்லது வட மாநில இளைஞர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாமா? என போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த பகுதியைச் சேர்ந்த யாராவது இந்த சம்வத்தில் ஈடுபட்டு இருப்பார்களா? என்ற கோணத்திலும் விசா ரணை நடந்தது.

    4 பேருக்கு தொடர்பு?

    இதில் அந்த பகுதி யைச் சேர்ந்த 4 பேர் திடீரென தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. அவர்க ளுக்கு கொலையில் தொடர்பு இருக்கலாமா? என தனிப்படை போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர்கள் எங்கு உள்ளனர்? என்பதை கண்டு பிடிக்க அவர்களது செல்போ ன்கள் எங்கிருக்கிறது ? என்பதை செல்போன் டவர் உதவியுடன் கண்டுபிடிக்க தனிப்படையினர் திட்ட மிட்டு உள்ளனர். 4 பேரும் வந்தால் தான் அவர்க ளுக்கு கொலையில் தொடர்பிருக்கிறதா என்பது தெரியவரும்.

    ×