என் மலர்
நீங்கள் தேடியது "சமூகவலைதளம்"
- பங்குத்தந்தை ஒரு பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
- தன்னை சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் மிரட்டியதாக குறிப்பிட்டு இருந்தார்.
நாகர்கோவில் :
குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பங்குத் தந்தையாக 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பணியாற்றி வருகிறார்.
இவர் சில நாட்களுக்கு முன்பு தேவாலயம் உள்ள பகுதியில் நின்ற போது, அங்கு ஓரு கார் வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது.
பின்னர் அவர் வைத்திருந்த லேப்-டாப் மற்றும் மொபைலை அந்தக் கும்பல் பறித்துச் சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த சிலர் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில் இது பற்றி புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது தாக்குதலுக்கு உள்ளான பங்குத்தந்தை ஒரு பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடி யோக்களில் பெண்ணுடன் அவர் டிக்-டாக் பாணியில் பாடல் பாடுவது, முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன.
இந்த வீடியோக்கள் வேகமாக பரவி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைப் பார்த்த பலரும் பங்குத் தந்தை மீது ஏற்கனவே பல புகார்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். தேவாலயம் வரும் பெண்களிடம் அவர் தகாத முறையில் பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.
சமூகவலைதளங்களில் வெளியான வீடியோக்கள், பங்குந்தந்தையின் லேப்டாப் மற்றும் மொபைலில் பதிவு செய்யப்பட்டவையாக இருக்கலாம் என்றும், அதனை பறித்துச் சென்றவர்கள் இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் சம்பந்த ப்பட்ட பாதிரியாரின் தந்தை சில நாட்களுக்கு முன்பு கொல்லங்கோடு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தன்னை சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் மிரட்டியதாக குறிப்பிட்டு இருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த மாணவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- போக்சோ வழக்கில் தொடர்புள்ள 16 வயது குற்றவாளியிடம், இன்ஸ்பெக்டர் விசாரணை செய்து கொண்டிருந்தார்.
- ஒருமையில் தாறுமாறாக பேசியதாக கூறப்படுகிறது.
தாராபுரம் :
தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த மே 6 ந்தேதி போக்சோ வழக்கில் தொடர்புள்ள 16 வயது குற்றவாளியிடம், இன்ஸ்பெக்டர் செல்லம் விசாரணை செய்து கொண்டிருந்தார். அப்போது, தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்த கொளத்துப்பாளையம் பேரூர் தி.மு.க. செயலாளர் மீசை துரை, குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என இன்ஸ்பெக்டர் செல்லத்திடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்த போது, ஒருமையில் தாறுமாறாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் செல்லத்துக்கும், துரைக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், துரை மட்டுமின்றி, அவரது ஆதரவாளர்களும், இன்ஸ்பெக்டர் செல்லத்தை தரக்குறைவாக திட்டியதாக தெரிகிறது.
இந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ வாட்ஸ் ஆப், உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- டாக்டர் ரவளி சிறுவனின் மார்பில் கையை வைத்து அழுத்தினார்.
- முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுவன் உடலில் அசைவு ஏற்பட்டது.
திருப்பதி, மே.18-
ஆந்திர மாநிலம் விஜயவாடா அய்யப்ப நகரை சேர்ந்தவர் சாய் (வயது 6) கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி சிறுவன் மயங்கி விழுந்தான்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை தோளில் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிக்கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மகப்பேறு பெண் டாக்டர் நன்னப்பனேனி ரவளி என்பவர் வந்தார்.
அவர் பெற்றோர் குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு பதறியடித்து ஓடுவதை கண்டு திடுக்கிட்டு என்ன நடந்தது என்று கேட்டார். பெற்றோர் நடந்த விஷயத்தை கூறினர்.
உடனடியாக டாக்டர் சிறுவனை பரிசோதித்தார். அப்போது இதயத் துடிப்பு நின்றிருந்தது.

சாலையிலேயே படுக்க வைத்து அதன் பிறகு சி.பி.ஆர். என அழைக்கப்படும் முதலுதவி செய்ய ஆரம்பித்தார். ஒருபுறம் டாக்டர் ரவளி சிறுவனின் மார்பில் கையை வைத்து அழுத்தினார். அங்கிருந்து மற்றொரு நபரிடம் வாயில் காற்று வீசுமாறு கூறினார்.
அவ்வாறு 7 நிமிடங்களுக்கு மேல் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுவன் உடலில் அசைவு ஏற்பட்டது. உடனடியாக சிறுவனை பைக்கில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு சென்றதும் சிகிச்சைக்கு பின் சிறுவன் பூரண குணமடைந்தான்.
சாலையில் வைத்து சிறுவனுக்கு டாக்டர் சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து டாக்டர் ரவளி கூறுகையில்:-
நான் மூத்த டாக்டர் ஒருவரை வீட்டில் இறக்கிவிட்டு மருத்துவமனைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன்.
அப்போது சிறுவனை அவருடைய தந்தை கண்ணீர் விட்டு அழுதபடி தூக்கி சென்ற காட்சியை பார்த்தேன். உடனே வாகனத்தை நிறுத்திவிட்டு அவரிடம் நடந்ததை கேட்டறிந்தேன்.
சிறுவனை பரிசோதித்ததில் அவருக்கு சிபிஆர் முதலுதவி அவசியம் என்பதை உணர்ந்து முயற்சி செய்தேன். நல்ல பலன் கிடைத்தது.
சிறுவனின் உயிரை காப்பாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிபிஆர் முதலுதவி செய்வதை அனைவரும் கற்றுக் கொண்டால் பல விலை மதிப்பு மிக்க உயிர்களை காப்பாற்றி விடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மசாய் மாறா தேசிய சரணாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
- 3 சிங்கங்கள் நடந்து வரும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
சமூக வலைதளங்களில் வன விலங்குகள் தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் வெளிவந்தாலும் அவற்றில் சில வீடியோக்கள் மட்டுமே பயனர்களை ரசிக்க செய்யும். அந்த வகையில் யூ-டியூபில் 'லேட்டஸ்ட் சைட்டிங்ஸ்' என்ற பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், சிங்கங்கள் நீச்சல் அடித்து ஆற்றை கடந்த காட்சிகள் பயனர்களை கவர்ந்துள்ளது.
அந்த வீடியோ கென்யாவில் உள்ள மசாய் மாறா தேசிய சரணாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு வன பகுதிக்குள் ஒரு ஆறு கடந்து செல்கிறது. வனப்பகுதியில் 3 சிங்கங்கள் நடந்து வரும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
அப்போது ஆற்றின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு செல்வதற்காக சிங்கங்கள் வரிசையாக வருகின்றன. பின்னர் ஆற்றில் குதித்து சிங்கங்கள் நீச்சல் அடித்தவாறு மற்றொரு கரையை கடந்து செல்லும் காட்சிகள் வீடியோவில் உள்ளன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பயனர்களின் பார்வைகளை குவித்து வருகிறது.
- மைக்கேல் என்பவருக்கு சமீபத்தில் முக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
- இணையத்தில் வைரலான நிலையில் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
துருக்கியை சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு சமீபத்தில் முக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரை இளமையாக காட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையை தொடர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது.
அதில், சிகிச்சைக்கு முன்பு அவரது தோற்றம் மற்றும் சிகிச்சைக்கு பின்னர் அவரது தோற்றம் குறித்த படங்கள் உள்ளன.
புகைப்படங்களுடன் அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த நிபுணர்கள் வெளியிட்ட பதிவில், மைக்கேலுக்கு பேஸ் லிப்ட், நெக் லிப்ட், கீழ் கண் இமை உள்ளிட்ட இடங்களில் முடி மாற்று செயல்முறைகளை நாங்கள் செய்தோம். அவர் நம்பமுடியாத மாற்றத்தை பெற்றார். அதை நீங்கள் புகைப்படங்களில் காணலாம். நாங்கள் எப்போதும் முழுமையானதாக எடுத்துக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த மாற்றத்தை நம்ப முடியவில்லை என ஒரு பயனரும், துருக்கியில் அற்புதங்களை செய்கிறார்கள் என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளனர். இதேபோல பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட இந்த பதிவு விவாதமாக மாறி உள்ளது.
- லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- புத்தாண்டு அட்டைகளும், உணர்வுபூர்வமான கடிதங்களும் ஏலத்திற்கு வருகிறது.
இளவரசி டயானா தனது முன்னாள் வீட்டு பணியாளர் மவுட் பென்ட்ரேவுக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் விடுமுறை வாழ்த்து அட்டைகள் வருகிற 27-ந் தேதி ஏலம் விடப்பட உள்ளன.
1981-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரையிலான 14 கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அட்டைகளும் பல உணர்வுபூர்வமான கடிதங்களும் இந்த ஏலத்திற்கு வருகிறது.
இளவரசர் சார்லசை மணந்த பிறகு அவர்கள் எழுதிக் கொண்ட கடிதங்களும் இதில் அடங்கும். பெவர்லி ஹில்சில் உள்ள ஜூலியன்ஸ் ஏல நிறுவனத்தால் இந்த ஏலம் நடத்தப்பட உள்ளது.இதில் 1982-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி எழுதப்பட்ட ஒரு கடிதம் இளவரசர் சார்லசுடன் அவரது தேனிலவு பயணத்தின் மகிழ்ச்சியை குறிப்பிடுகிறது.
இதே போல ஒரு கடிதத்தில், தாய்மை உணர்வில் மகிழ்ச்சி அடைந்த டயானா, இளவரசர் வில்லியம் பிறந்த பிறகு தன்னை மிகவும் பெருமைப்படக்கூடிய மற்றும் அதிர்ஷ்டசாலியான தாய் என்று விவரிக்கிறார். மேலும் குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கான தனது ஆர்வத்தையும் அதில் வெளிப்படுத்தி உள்ளார்.
1983-ம் ஆண்டு ஹெலிகாப்டரில் இருந்து கையசைத்து விடைபெற்ற விதத்தை அவர் விவரிக்கும் 2 பக்க கடிதங்கள் டயானாவின் இயல்பான தன்மையை வெளிப்படுத்துகிறது.
டயானாவின் கையால் எழுதப்பட்ட செய்திகள், அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் சிறந்த தருணங்கள் மற்றும் மைல்கற்களை இந்த கடிதங்கள் வெளிப்படுத்தும் என்பதால் இவை ஏலத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பாதுகாவலரை விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.
- பாதுகாவலரின் கனவை நனவாக்கிய சம்பவம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொருவரும் தங்களது கனவை நனவாக்கவே போராடுகின்றனர். ஆனால் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் தனது பாதுகாவலரின் கனவை நனவாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாகியவர்களில் அனிஷ்பகத் என்பவரும் ஒருவர் ஆவார். இவரிடம் பியாஸ்ஜி என்ற 65 வயதான முதியவர் ஒருவர் பாதுகாவலராக பணியாற்றி வந்தார்.
தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பியாஸ்ஜியை அறிமுகப்படுத்தி அவரிடம் அனிஷ்பகத், இந்த வயதில் ஏன் வேலை செய்கிறீர்கள் என கேட்கிறார். அதற்கு பியாஸ்ஜி, எனக்கு ஒரே ஒரு மகன் இருக்கிறான். ஆனால் அவன் என்னை கைவிட்டு விட்டான் என கூறுகிறார்.
உடனே அவரிடம் அனிஷ்பகத் என்னை மகனாக கருதி கொள்ளுங்கள். உங்களுடைய ஆசை என்ன? என கேட்கிறார். அதற்கு பியாஸ்ஜி, அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது தான் எனது கனவு என்கிறார்.
உடனே பாதுகாவலரின் கனவை நனவாக்க அனிஷ்பகத் அயோத்திக்கு டிக்கெட் போட்டு தனது பாதுகாவலரை விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.
இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பயனர்கள் பலரும் அனிஷ்பகத்தின் செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- உங்களது வாழ்க்கைப் பணி எங்களுக்குத் தொடர்ந்து ஊக்க மளிப்பதாக அமைந்து வருகின்றது.
- ஒரு நியாயமான, சமநிலை சமுதாயத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
ஒடுக்கப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காகத் தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள், செயல்படுத்திய புரட்சிகரத் திட்டங்கள் மற்றும் உறுதிகுலையாமல் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தது ஆகியவை ஒரு நியாயமான, சமநிலைச் சமுதாயத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன.
உங்களது வாழ்க்கைப் பணி எங்களுக்குத் தொடர்ந்து ஊக்க மளிப்பதாக அமைந்து வருகின்றது.
இவ்வாறு அதில் கூறியுளளார்.
- ராகுல் காந்தி எப்போதுமே வெள்ளைநிற டி-சர்ட்தான் அணிந்து வருகிறார்.
- தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எப்போதுமே வெள்ளைநிற டி-சர்ட்தான் அணிந்து வருகிறார்.
இந்த நிலையில் 54-வது பிறந்த நாளை கொண்டாடிய ராகுல்காந்தி வெள்ளை நிற டி-சர்ட்டை தொடர்ந்து பயன்படுத்துவது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். மேலும் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உங்கள் அனை வருக்கும் மனமார்ந்த நன்றி கள். எப்போதும் வெள்ளை நிற டி-சர்ட்டை' நான் ஏன் அணிகிறேன் என்ற கேள்வி அடிக்கடி என்னிடம் கேட்கப்படுகிறது. இந்த வெள்ளை நிற டி-சர்ட்டுகள் எனக்கு வெளிப்படைத் தன்மை, திடத்தன்மை மற்றும் எளிமை ஆகிய வற்றை குறிக்கிறது.
உங்கள் வாழ்க்கையில் எங்கே, எப்படி இந்த மதிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்? என்பதை #WhiteTshirtArmy என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வீடியோவில் சொல்லுங்கள். நான் உங்களுக்கு ஒரு வெள்ளை டி-சர்ட்டை பரிசாக தருகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதற்கு முன்பும் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இந்த கேள்விக்கு ராகுல் காந்தி விளக்கம் அளித்து இருந்தார். அப்போது, நான் வெள்ளை நிற சட்டை பயன்படுத்துவதற்கு வெளிப்படைத்தன்மையும், எளிமைதான் காரணம். மேலும் நான் ஆடைகளைப் பற்றி அதிகம் கவலைப்படு வதில்லை. நான் அதை எளிமையாக்க விரும்பு கிறேன்" என கூறி இருந்தார்.
- தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்.
- நியாயப்படுத்த முடியாத பெருங்குற்றம்.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசு நிர்வாகத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருப்பதுடன் நேற்று பாதிக் கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் இன்று சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில் கூறியிருப்பதாவது:-
கள்ளச் சாவு....க்கு எதுக்கு நல்ல சாவு (ரூ.10 லட்சம்)? என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜி.வி.பிரகாஷ்
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டள்ள பதிவில், காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாயப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடு கட்டாது. இனி மரணங்கள் நிகழாத வண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை என பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து இயக்குனர்கள் பா.ரஞ்சித், மோகன்ஜி உள்பட பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு உள்ளனர்.
- பலரும் இதுபோன்ற சாகசங்களை தடுக்க வேண்டும்.
- 2 இளைஞர்கள் வீடியோவில் பதிவு செய்வது போன்றும் காட்சிகள் உள்ளது.
சமூக வலைதளங்களில் அதிக லைக்குகளை பெற வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்களும், இளம்பெண்களும் பல்வேறு விதமான ரீல்ஸ் வீடியோக்களை தயாரித்து பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில வீடியோக்களில் அவர்கள் உயிரை பணயம் வைத்து எடுக்கும் சாகச காட்சிகள் பயனர்களை வியப்பில் ஆழ்த்தினாலும், சில நேரங்களில் அவை விபரீதத்திலும் முடிந்து விடுகிறது.
இந்நிலையில் ரீல்ஸ் வீடியோவுக்காக இளம்பெண் ஒருவர் ஒரு கட்டிடத்தில் இருந்து அந்தரத்தில் தொங்குவது போன்று ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள ஒரு பழமையான கட்டிடத்தின் மேற்பகுதியில் நிற்கும் இளம்பெண் ஒருவர் ஒரு வாலிபரின் கையை பிடித்துக்கொண்டு கீழே அந்தரத்தில் தொங்குவது போன்று காட்சி உள்ளது.
இதனை 2 இளைஞர்கள் வீடியோவில் பதிவு செய்வது போன்றும் காட்சிகள் உள்ளது. எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் இதுபோன்ற சாகசங்களை தடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.
- உணவு தரமாக இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
- விற்பனையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள்.
நாட்டில் முக்கிய நகரங்களுக்கு இடையே பயணிகள் விரைவாக செல்ல வசதியாக வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சில ரெயில்களில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் போபாலில் இருந்து ஆக்ராவுக்கு சென்ற வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்த ஒரு தம்பதிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக விதித் வர்ஷ்னி என்ற பயணி தனது எக்ஸ் தள பக்கத்தில் செய்துள்ள பதிவில், `கடந்த 18-ந் தேதி எனது மாமாவும், அத்தையும் போபாலில் இருந்து ஆக்ராவுக்கு வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்தனர். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்தது.
தயவு செய்து விற்பனையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என ரெயில்வே அதிகாரிகளை டேக் செய்திருந்தார்.
அவரது இந்த பதிவு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளுடன் வைரலாகியது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து ரெயில்வே சார்பில் அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், உங்களுக்கு ஏற்பட்ட பயண அனுபவத்திற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த விவகாரம் தீவிரமாக பார்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட சேவை அளித்தவருக்கு தகுந்த அபராதம் விதிக்கப்பட்டது என கூறி உள்ளனர்.