search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231534"

    • முதல் மந்திரி நிதிஷ்குமார் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்தார்.
    • அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். இச்சந்திப்பின் போது லாலுவின் மகன்கள் உடனிருந்தனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் பா.ஜ.க உடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்டது. இதையடுத்து, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி வைத்தார் அக்கட்சி தலைவரான நிதிஷ்குமார்.

    தொடர்ந்து, பீகார் முதல் மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல் மந்திரியாக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர்.

    இதற்கிடையே, டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த லாலு பிரசாத் யாதவ் வீடு திரும்பினார்.

    இந்நிலையில், முதல் மந்திரி நிதிஷ்குமார் நேற்று ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்துப் பேசினார். அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்தச் சந்திப்பின் போது லாலுவின் மகன்கள் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லல்லு பிரசாத் யாதவின் இன்னொரு மகனும், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவின் சகோதரருமான தேஜ்பிரதாப் யாதவும் மந்திரியாக பதவியேற்றார்.
    • பீகார் மந்திரி சபையில் இதுவரை 33 பேர் பொறுப்பு வகித்து வருகிறார்கள்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் பா.ஜனதாவுடனான உறவை ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார் துண்டித்தார்.

    அவர் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட மெகா கூட்டணியுடன் மீண்டும் இணைந்தார். அவர்களுடன் சேர்ந்து நிதிஷ்குமார் பீகாரில் புதிய ஆட்சியை அமைத்தார்.

    ஐக்கிய ஜனதா தளம்-ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி அரசு கடந்த 10-ந்தேதி பதவியேற்றது. நிதிஷ் குமார் முதல்-மந்திரியாகவும், தேஜஸ்வியாதவ் துணை முதல்-மந்திரியாகவும் பதவியேற்றனர்.

    இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி மந்திரிசபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.

    இந்த மந்திரி சபையில் 36 பேர் வரை மந்திரிகளாக இருக்க உச்சவரம்பு இருக்கிறது. இதில் 31 பேர் இன்று மந்திரிகளாக பதவியேற்றனர். காலை 11.30 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் பகுசவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    லல்லுபிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியினரே மந்திரி சபையில் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். பதவியேற்ற 31 பேரில் 16 மந்திரிகள் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சியில் 2 பேரும், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவை சேர்ந்த ஒருவரும், சுயேட்சையை சேர்ந்த ஒருவரும் மந்திரிகளாக பதவியேற்றனர்.

    இந்த மெகா கூட்டணியில் இடம் பெற்று இருந்தாலும் கம்யூனிஸ்டுகள் மந்திரி சபையில் இடம் பெறவில்லை.

    லல்லு பிரசாத் யாதவின் இன்னொரு மகனும், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவின் சகோதரருமான தேஜ்பிரதாப் யாதவும் மந்திரியாக பதவியேற்றார்.

    பீகார் மந்திரி சபையில் இதுவரை 33 பேர் பொறுப்பு வகித்து வருகிறார்கள். புதிய அரசு வருகிற 24-ந்தேதி சட்டசபையில் மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பீகார் மக்களுக்கு மட்டும் சேவையாற்ற விரும்புகிறேன்.
    • பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமையை உருவாக்க முயற்சி.

    பீகார் மாநிலத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்த ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், காங்கிரஸ் ஆதரவுடன் மெகா கூட்டணியின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

    இந்நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. பாட்னாவில் இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், பிரதமர் பதவி மீது ஆசையில்லை என்றும், பீகார் மக்களுக்கு மட்டும் சேவையாற்றவே விரும்புகிறேன் எனவும் கூறினார்.

    எனினும், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை உருவாக்க, தமது பங்களிப்பதை செலுத்த ஆவலுடன் இருப்பதாக கூறினார்.இது தொடர்பாக தம்மை பல தலைவர்கள் தொடர்பு கொண்டு வருவதாகவும், வரும் நாட்களில் இதற்கான நடவடிக்கைகளை பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

    பீகாரில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு புதிய ஆட்சியைப் அமைத்துள்ள மெகா கூட்டணிக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தினால் மக்கள் அதற்கு பதில் அளிப்பார்கள் என்றும் நிதிஷ்குமார் குறிப்பிட்டார்.

    முன்னதாக நிதிஷ்குமார் துணை ஜனாதிபதியாக விருப்பம் தெரிவித்ததாக, அம்மாநில பாஜக மூத்த தலைவர் சுசில்குமார் மோடி தெரிவத்திருந்தார். இதை மறுத்த நிதிஷ்குமார் அது பொய், தமக்கு அந்த பதவி மீது ஆசையே இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பீகாரில் ஆட்சி மாறியும் சபாநாயகர் விஜயகுமார் சின்கா ராஜினாமா செய்யவில்லை.
    • அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 24ம் தேதி ஓட்டெடுப்பு நடைபெறுகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. பா.ஜ.க.வுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்தார். ஆளுநர் பஹு சவுகானை நேரில் சந்தித்து தமது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார்.

    இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்தது. பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கூட்டணியின் தலைவராகவும் மாநில முதல் மந்திரியாகவும் நிதிஷ்குமார் தேர்வானார். இதன்பின், மீண்டும் ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரி, தமது கூட்டணியின் 164 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை வழங்கினார்.

    இதற்கிடையே, பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல் மந்திரியாக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர்.

    நிதிஷ்குமார் ஆட்சியில் இருந்தபோது பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜயகுமார் சின்கா சபாநாயகராக நியமிக்கப்பட்டார். தற்போது ஆட்சி மாற்றத்துக்கு பிறகும் விஜயகுமார் சின்கா ராஜினாமா செய்யவில்லை. இதனால் அவரை நீக்குவதற்காக ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலர் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளனர். அதை சட்டசபை செயலகத்தில் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக 24-ம் தேதி சட்டசபை கூடுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்தவுடன் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்கும் என தெரிகிறது. ஆளும் கூட்டணிக்கு 164 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் தீர்மானம் எளிதில் நிறைவேறும் என தெரிகிறது.

    • நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    • தேஜஸ்வி யாதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் விசாரணை தொடங்கி உள்ளது.

    பீகார் மாநிலத்தில் திடீர் அரசியல் திருப்பமாக பாஜகவுடனான கூட்டணியை முறித்த ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 7 கட்சிகள் இணைந்த புதிய மெகா கூட்டணி சார்பில் முதலமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

    துணை முதல்வராக லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். இருவருக்கும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், நிதிஷ்குமார் குடியரசு துணைத் தலைவராக விரும்பினார் என்று பாஜக மூத்த தலைவரும், பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தமது டூவிட்டர் பதிவில், நிதிஷ்குமாருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று அவரது கட்சியை சேர்ந்த தலைவர்கள் சிலர் தம்மிடம் வலியுறுத்தி வந்தனர், அவர் குடியரசு துணைத் தலைவர் ஆனால், நீங்கள் பீகார் முதலமைச்சராகலாம் என பேரம் பேசினர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மேற்கு வங்க முன்னாள் ஆளுனர் ஜக்தீப் தன்கரை இந்த தேர்தலில் வேட்பாளராக தேர்வு செய்தது. அவர் வெற்றி பெற்றுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். 

    தற்போதைய பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு எதிராக ஊழல் வழக்கில் விசாரணை தொடங்கி உள்ளது. அவருக்கு எதிராக சாட்சியம் உள்ளது. அதன் விளைவாக அவர் சிறைக்கு செல்லலாம் என்றும் சுசில்குமார் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    நிதிஷ்குமார் எங்களுக்கு துரோகம் செய்தது போன்று ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கும் துரோகம் செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

    காங்கிரஸ் அல்லாத அரசியல் என்ற கூறி வந்த நிதிஷ்குமாரின் அரசியல் நிறைவு பெற்று விட்டதா என பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி உள்ளார். 

    • பாரதிய ஜனதா தங்கள் கட்சியை அவமதித்து விட்டது.
    • பிரதமர் பதவிக்கும் அவர்கள் குறி வைத்து காய்களை நகர்த்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் தனது பதவியையும் ராஜினாமா செய்து விட்டு பகையை மறந்து எதிர்கட்சிகளுடன் தற்போது கைகோர்த்து உள்ளார். இன்று அவர் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார்.

    இது குறித்து நிதிஷ்குமார் கூறும் போது, பாரதியஜனதா தங்கள் கட்சியை அவமதித்து விட்டது. ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க அக்கட்சி முயற்சி செய்தது. எனவே கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று தெரிவித்தார்.

    நிதிஷ்குமாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    பாரதிய ஜனதாவை துணிந்து எதிர்த்துள்ளதால் நிதிஷ்குமாரின் செல்வாக்கு அதிகரித்து உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். பல்வேறு தலைவர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இதனால் வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலின் போது எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார் களம் இறக்கப்படலாம் என்ற பேச்சு அடி படத் தொடங்கி உள்ளது.

    ஏற்கனவே பாரதிய ஜனதாவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் பதவிக்கும் அவர்கள் குறி வைத்து காய்களை நகர்த்தி வருகின்றனர்.

    இப்போது நிதிஷ்குமாரும் மோடிக்கு எதிராக திரும்பி உள்ளதால் அவரையும் பிரதமர் வேட்பாளராக்கும் முயற்சி மேற்கொள்ளப்படலாம் என தெரிகிறது. பீகாரில் நிதிஷ் குமாருக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து உள்ளது. மந்திரி சபையில் இடம் பெறவும் முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் தாரிக்அன்வர் கூறும் போது, நாங்கள் பதவிக்காக ஆசை பட வில்லை. பாரதிய ஜனதா அல்லாத அரசுக்கு நாங்கள் ஆதரவு அளிக்க தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.

    • மெகா கூட்டணியின் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று பிற்பகல் பதவியேற்பு.
    • ஆதரவு கொடுத்தற்காக சோனியா, ராகுலுக்கு, நிதிஷ்குமார் நன்றி.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக பாஜகவின் சுஷில் குமார் மோடியும் பதவியேற்றனர்.

    அண்மை காலமாக இரு கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்த நிலையில், பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலவதாக நேற்று நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர்,  ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார்.

    இதனையடுத்து ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து மகா பந்தன் எனப்படும் மெகா கூட்டணியை அமைத்தன. பாட்னாவில் நடைபெற்ற இந்த கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதன்பின், மீண்டும் ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார், புதிய ஆட்சி அமைக்க 164 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தையும்  வழங்கினார். இந்நிலையில் இன்று பிற்பகல் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் அம்மாநிலத்தின் முதலமைச்சராக 8-வது முறை பதவியேற்கிறார். 


    துணை முதலமைச்சராக லாலுபிரசாத் யாதவ் மகனும், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவருமான தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்கிறார். இதனிடையே, தமக்கு ஆதரவு அளித்ததற்காக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் தொலைபேசி மூலம் பேசிய நிதிஷ்குமார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    மதச்சார்பற்ற சக்திகளை வலுப்படுத்த பாஜக அல்லாத அரசை ஆதரிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பீகாரில் அரசியலில் ஒரே நாளில் ஏற்பட்ட இந்த மாற்றம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நிதிஷ்குமாரின் முடிவை பாஜக கடுமையாக சாடி உள்ளது. 


    பீகார் மக்கள் பாஜக-ஐக்கிய ஜனதாதள கூட்டணி ஆட்சிக்கே வாக்களித்ததாகவும், ஆனால் மக்களின் ஆணையை நிதீஷ் குமார் மதிக்கவில்லை என்றும், பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

    ஐக்கிய ஜனதாதளத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது என்ற நிதிஷ்குமாரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் அவர் கூறியுள்ளார். பாஜக அவரை பலமுறை பீகார் முதலமைச்சராக்கியதும் என்றும் தெரிவித்தார்.

    பாஜகவுடன் இருந்தபோது நிதிஷ்குமாருக்கு கிடைத்த மரியாதை இனிமேல் ராஷ்டிரிய ஜனதா தளத்திடம் இருந்து கிடைக்காது என பாஜகவை சேர்ந்த சுஷில் குமார் மோடி கூறியுள்ளார்.


    பீகாரில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்தும், அவரை முதல்வராக்கினோம் என்றும், அவரது கட்சியை உடைக்க நாங்கள் முயன்றதில்லை, எங்களுக்கு துரோகம் செய்தவர்களின் கட்சிகளை மட்டுமே உடைத்தோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து மெகா கூட்டணி அமைத்தன.
    • நிதிஷ்குமார் பீகார் மாநில முதல் மந்திரியாக 8-வது முறையாக நாளை பதவியேற்க உள்ளார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. பா.ஜ.க.வுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் இன்று அறிவித்தார்.

    அதன்பின், ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து தமது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாகவும் கடிதம் கொடுத்தார்.

    இதற்கிடையே, ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்துள்ளது.

    இதையடுத்து, பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கூட்டணியின் தலைவராகவும் மாநில முதல் மந்திரியாகவும் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின், மீண்டும் ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார், புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும் தமது கூட்டணியின் 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் நிதிஷ்குமார் வழங்கினார்.

    இந்நிலையில், பாட்னாவில் நாளை மதியம் 2 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக 8-வது முறையாக பதவியேற்க உள்ளார்.

    • பீகார் அரசியலில் பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார் நிதிஷ்குமார்.
    • ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன.

    பாட்னா:

    பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், ஆளுநரைச் சந்தித்து தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    அதே நேரம், 160 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மெகா கூட்டணி மூலம் மீண்டும் பீகாரில் புதிய ஆட்சியை நிதீஷ்குமார் அமைக்க உள்ளார்.

    கவர்னருடனான சந்திப்புக்கு பிறகு நிதிஷ் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே வந்துள்ளேன். தனது கட்சியின் அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த முடிவு கட்சியின் முடிவு என கூறினார்.

    ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன.

    இதற்கிடையே, பீகாரில் மகாபந்தன் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், பீகாரில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரி நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்விஆகியோர் ஆளுநரை சந்தித்தனர்.

    160 சட்டசபை உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் ஆட்சி அமைப்பதற்கு அழைக்கும்படியான கடிதத்தை அளித்தனர்.

    நிதிஷ்குமார் கூட்டணிக்கு ஜித்தன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சியும் ஆதரவு அளித்துள்ளது.

    • பீகார் அரசியலில் திடீர் திருப்பமாக முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்.
    • இதன்மூலம் பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார் நிதிஷ்குமார்.

    பாட்னா:

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. இடையிலான உறவு சமீப காலமாக சீராக இல்லை. பீகார் மாநில பா.ஜ.க. தலைவர்கள் அவ்வப்போது நிதிஷ்குமாரை விமர்சித்து வருகிறார்கள்.

    மத்திய மந்திரி சபையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு அதிக இடங்களை அளிக்க வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலுடன் பீகார் சட்டசபைக்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நிதிஷ்குமார் வைத்திருந்தார். இதில் மத்திய மந்திரி சபையில் அதிக இடம் என்ற நிதிஷ்குமாரின் கோரிக்கையை பா.ஜ.க. மறுத்துவிட்டது.

    இதையடுத்து பா.ஜ.க. தலைமையிலான மந்திரி சபையில் இனி சேரப்போவது இல்லை என ஐக்கிய ஜனதா தளம் அறிவித்தது. மேலும் ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியது.

    இதற்கிடையே, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறினால் ஐக்கிய ஜனதா தளம் அரசை ஆதரிக்கத் தயார் என லல்லுவின் ராஷ்டீரிய ஜனதா தளம், மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சிகள் அறிவித்துள்ளன.

    இந்நிலையில், பீகார் முதல் மந்திரி பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஆளுநர் பாகு செளகானைச் சந்தித்து வழங்கினார். இதன்மூலம் பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார் நிதிஷ்குமார்.

    • பீகார் மாநில பா.ஜனதா தலைவர்கள் அவ்வப்போது நிதிஷ் குமாரை விமர்சித்து வருகிறார்கள்.
    • காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நிதிஷ்குமார் சமீபத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

    பாட்னா:

    பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    பா.ஜனதாவுக்கு 77 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதா அதிக இடங்களில் வென்றாலும் தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தப்படி நிதிஷ்குமார் முதல்-மந்திரி ஆனார்.

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா இடையிலான உறவு சமீபத்தில் சீராக இல்லை. பீகார் மாநில பா.ஜனதா தலைவர்கள் அவ்வப்போது நிதிஷ் குமாரை விமர்சித்து வருகிறார்கள்.

    மத்திய மந்திரிசபையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு அதிக இடங்களை அளிக்க வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலுடன் பீகார் சட்டசபைக்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நிதிஷ்குமார் வைத்திருந்தார்.

    இதில் மத்திய மந்திரி சபையில் அதிக இடம் என்ற நிதிஷ்குமாரின் கோரிக்கையை பா.ஜனதா மறுத்துவிட்டது. இதையடுத்து பா.ஜனதா தலைமையிலான மந்திரி சபையில் இனி சேரப்போவது இல்லை என்று ஐக்கிய ஜனதா தளம் அறிவித்தது.

    மேலும் ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சி செய்வதாகவும், அதற்காக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆர்.சி.பி. சிங்கை பா.ஜனதா வளைக்க முயற்சிப்பதாகவும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் சந்தேகித்தனர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.யாக இருந்தனர். சி.பி. சிங்கின் பதவிக்காலம் முடிந்தது. ஆனால் அவருக்கு நிதிஷ்குமார் மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. மேலும் அவருக்கு கட்சி சார்பில் நோட்டீசும் அனுப்பப்பட்டது. இதனால் ஆர்.சி.பி.சிங் சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகினார்.

    இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு அழைத்த 4 கூட்டங்களில் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை. ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழா, புதிய ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பதவி ஏற்பு விழா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் உள்ளிட்ட 4 கூட்டங்களை நிதிஷ்குமார் புறக்கணித்தார். இதனால் அவர் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி செல்வதாக கூறப்பட்டது.

    ஐக்கிய ஜனதா தளம் பா.ஜனதா இடையே விரிசல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இரு கட்சியினரும் பாட்னாவில் நேற்று முன்தினம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி விரிவான ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அடுத்த 48 மணி நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற வகையில் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

    இந்த பிரச்சினையில் தீர்வு காண பீகார் துணை முதல் மந்திரி தர்கிஷோர் பிரசாத் தலைமையில் பா.ஜனதா பிரதிநிதிகள் முதல்-மந்திரி நிதிஷ் குமாரை சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர்.

    பீகாரில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகலாம் என்ற பரபரப்பான சூழ்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டத்துக்கு நிதிஷ்குமார் அழைப்பு விடுத்திருந்தார்.

    அதன்படி பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டம் பாட்னாவில் இன்று தொடங்கியது. இதில் பா.ஜனதா கூட்டணியில் நீடிப்பதா அல்லது விலகுவதா என்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது.

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறினால் ஐக்கிய ஜனதாதளம் அரசை ஆதரிக்க தயார் என்று ஏற்கனவே லல்லுவின் ராஷ்டீரிய ஜனதா தளம், மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சிகள் அறிவித்துள்ளன. எனவே பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி லல்லு கட்சி மற்றும் மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நிதிஷ்குமார் சமீபத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. எனவே நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியை விட்டு வெளியேறினால் அவருக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது. அதுதொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இறுதியில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகலாமா என்றும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது. இதனால் பீகாரில் இன்று பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

    • மத்திய அமைச்சரவையில் மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் சேராது.
    • பாஜகவுடனான ஐக்கிய ஜனதாதள உறவு நன்றாக இருக்கிறது.

    பாட்னா:

    பீகாரில் ஆளும் கட்சியாக உள்ள நிதிஷ்குமார் தலைமையிலான ஜக்கிய ஜனதாதளத்துடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. அம்மாநிலத்தில் வலுவான ஆளும் கட்சி கூட்டணியாக இது கருதப்பட்ட நிலையில், அண்மை காலமாக இந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பீகாரில் உச்சநிலையில் இருந்தபோது அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அந்த திட்டத்தை ஆதரித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மேலும் பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் என்ற முறையில் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை.

    மத்திய அமைச்சரவையில் அக்கட்சியின் சார்பில் இடம் பெற்றிருந்த ஆர்.சி.பி.சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நிறைவடைந்ததால், தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் மத்திய அமைச்சரவையில் யாரும் இடம் பெறவில்லை. 


    இந்நிலையில் பாட்னாவில் நேற்று ஐக்கிய ஜனதாதள தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    மீண்டும் மத்திய அமைச்சரவையில் சேர மாட்டோம். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மத்திய அமைச்சரவையில் இணைவதில்லை என்று முடிவு செய்தோம். அந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    மத்திய அமைச்சரவையில் சேரக்கூடாது என்ற முடிவை எங்கள் தலைவர் நிதீஷ் குமார் எடுத்தார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து நீங்கள் முதலமைச்சரிடம் கேட்க வேண்டும். பாஜகவுடனான எங்கள் கட்சியின் உறவு சரியாக உள்ளது.

    குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஐக்கிய ஜனதாதளம் ஆதரவளித்தது. கூட்டணி தொடர்பான எங்களின் உறுதிப்பாட்டை இதைவிட வலுவாக நிரூபிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×