search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூமிபூஜை"

    • 1 கோடியே 18 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் திட்ட பணிக்கு பூமி பூஜை நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றதலைவர் பாக்கியலட்சுமி ஜெயராமன் தலைமை வகித்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியம் குந்துகோட்டை ஊராட்சியில் குந்து கோட்டை கிராம கூட்டு சாலை முதல் ஈரு செட்டி ஏரி கிராமம் வரை உள்ள 3.5 கிலோமீட்டர் வரை கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 18 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் திட்ட பணிக்கு பூமி பூஜை நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றதலைவர் பாக்கியலட்சுமி ஜெயராமன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் மூர்த்தி, ரத்தினம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தளி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசமூர்த்தி, ஒன்றிய பொறியாளர் விமலா திமுக ஒன்றிய செயலாளர்கள் திவாகர், ராஜா மற்றும் வார்டு உறுப் பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றிய ஒன்றிய குழு தலைவருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

    • மானாமதுரையில் நடந்த கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமிபூஜையில் அமைச்சர் பங்கேற்றார்.
    • கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் கசடு கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன் தலைமை தாங்கினார்.

    தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி வரவேற்றார். அமைச்சர் பெரியகருப்பன் பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தற்போது மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான பூமி பூஜை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் 8.50 கி.மீட்டர் தூரத்திற்கு பிரதானக்குழாய்கள் பதித்து, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான அக்ரஹாரம் சாலை, தாயமங்கலம் சாலை, அழகர்கோவில் சாலை, மதுரா நகர் சாலை, கன்னார் சாலை, சோனையா கோவில் என 6 இடங்களில் கழிவுநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளது.

    மேற்கண்ட 6 இடங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரானது 2.20 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மாங்குளம் குப்பைக் கிடங்கில் அமைக்கப்பட உள்ள (20 லட்சம் லிட்டர் கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் மற்றும் கசடு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று சுத்திகரிப்பட உள்ளது. இத்திட்டத்தினை ஓராண்டு காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விழாவில் துணைத் தலைவர் பாலசுந்தரம், நகராட்சி ஆணையாளர் கண்ணன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் லதா அண்ணாத்துரை, துணைத்தலைவர் முத்துச்சாமி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் ராஜாமணி, தி.மு.க. நகரச் செயலாளர் பொன்னுச்சாமி, மானாமதுரை வட்டாட்சியர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.4 கோடி 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அப்பணிக்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
    • தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, ஏமகுட்டியூர் பிரிவு செல்லும் சாலையில் நேருநகர் அருகில் தடுப்பு சுவர் அமைத்து, சாலையை அகலப்படுத்தி 1.4 கிலோ மீட்டர் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4 கோடி 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அப்பணிக்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.

    தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்வில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் நாகராஜ், உதவி கோட்டப் பொறியாளர் ஜெயசங்கர், உதவி பொறியாளர் கிருபாகரன், தடங்கம் கவுன்சிலர் மகேஸ்வரி, வார்டு உறுப்பினர் சக்தி, உள்ளிட்ட ஊர்பொது மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

    • 4.25 லட்சம் ரூபாய் மதிப்பில், துறிஞ்சிப்பட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
    • திட்டப் பணிகளை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் நேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெத்ததாளப்பள்ளி ஊராட்சி துறிஞ்சிப்பட்டி கிராமத்தில், 3 லட்சம் ரூபாய் மதிப்பில், குடியிருப்பு பகுதி தார்சாலை முதல் ஏற்கனவே உள்ள கழிவுநீர் கால்வாய் வரை பாதாள சாக்கடை அமைக்கப்படுகிறது. அதே போல், கனிமங்களும், குவாரிகளும் நிதியில் இருந்து 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் துறிஞ்சிப்பட்டியில், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.

    ஒன்றிய பொது நிதியில் இருந்து, 4.25 லட்சம் ரூபாய் மதிப்பில், துறிஞ்சிப்பட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. அதே போல், பெத்தனப்பள்ளி கிராமத்தில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைக் கால்வாயும், 15வது நிதிக்குழு மான்யம் 14 லட்சம் ரூபாய் மதிப்பில் பெத்தனப்பள்ளி கிராமத்தில் பாதாள சாக்கடைக் கால்வாய் என மொத்தம் 30.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் நேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி வெங்கடேசன், கவுன்சிலர் அமராவதி, முன்னாள் தலைவர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலை, குடிநீர், மின்சாரம், கழிவுநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
    • தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் செந்தமிழ்நகர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்களுக்கு கிடைக்கும் படி செய்கிறார். வாராந்திர குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களால் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்களை பரிசீலித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இது தவிர செந்தமிழ்நகர் என்ற திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். பல ஆண்டுகளாக இருக்க வீடு இன்றி புறம்போக்கு நிலத்தில் இருக்கும் விளிம்பு நிலை மக்களை கண்டறிந்து அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுத்து அதில் வீடு உள்ளிட்ட வசதிகளை அரசு சார்பில் செய்து கொடுத்து வருகிறார்.

    இந்த திட்டத்தில் வீடு கட்டிக்கொடுப்பதுடன் சாலை, குடிநீர், மின்சாரம், கழிவுநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சை அருகே 30 ஆண்டுகளாக இருளில் தவித்த கிராம மக்களுக்கு பட்டா வழங்கி விளக்கு வசதி செய்து கொடுத்தார்.

    தற்போது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மருதாநல்லூர் ஊராட்சியில் இருளர் சமுதாய மக்கள் நீர்நிலை பகுதியில் வசித்து வந்தனர். அவர்களுடைய இருப்பிடம் தேடிச்சென்று சாதிச்சான்றிதழ்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். அப்போது அவர்கள் பட்டா, வீடு கோரிக்கையை வைத்தனர்.

    இதையடுத்து விளிம்புநிலை மக்களான இருளர் சமுதாயத்தை சேர்ந்த 61 குடும்பங்கள் நீர்நிலை புறம்போக்கில் வசித்து வந்தது தெரிய வந்தது. ஆனால் நீர்நிலை புறம்போக்கில் அவர்களுக்கு பட்டா வழங்க முடியாது என்பதால் அரசின் முயற்சியோடு தனியார் இடத்தை விலைக்கு வாங்கி அதில் வீடு கட்ட முடிவு செய்யப்பட்டது. கலெக்டரிடன் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிகிறது.

    இது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது :-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் செந்தமிழ்நகர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி 9 இடங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை ஒன்றியம் புதுக்குடி அருகே வீடு கட்டப்பட்டு வருகிறது. தற்போது 2-வது கட்டமாக கும்பகோணம் ஒன்றியத்தில் இருளர் சமுதாய மக்களுக்கு, தனியாரிடமிருந்து இடம் அரசு சார்பில் விலை விலைக்கு வாங்கி தரமான கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கப்பட உள்ளது. இதற்காக பூமி பூைஜ போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராம பகுதிகளில், அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்
    • மலை கிராமங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு, இக்கல்லூரி முத்தாய்ப்பாக அமையும்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, சந்தனப்பள்ளியில் ரூ.14.74 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கட்டுமான பணிகளை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் காந்தி பேசியதாவது:-

    நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராம பகுதிகளில், அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், மலை வாழ்பகுதி மாணவ, மாணவிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில், தளி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்காலிக அரசு கலைக்கல்லூரி கட்டிடத்தை, கடந்த ஆண்டு ஜூலை 7-ம் தேதி, சென்னை தலைமை செய லகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்தார்.

    இக்கல்லூரியில் தமிழ், வணிகவியல், கணினி அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இக் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு, தற்போது தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப்பள்ளியில் ரூ.14.74 கோடியில் கட்டுமான பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இக்கல்லூரி 4809.29 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. மலை கிராமங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு, இக்கல்லூரி முத்தாய்ப்பாக அமையும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், செல்லகுமார் எம்.பி, எம்.எல்.ஏக்கள் ராமச்சந்திரன், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் ஓசூர் சப்கலெக்டர் சரண்யா, தருமபுரி மண்டல உயர்கல்வி இணை இயக்குநர் ராமலட்சுமி, தளி அரசு கலைக் கல்லூரி முதல்வர் மாறன், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், முன் னாள் எம்எல்ஏ முருகன், தாசில்தார் சரவணமூர்த்தி, பிடிஓக்கள் கோபாலகிருஷ்ணன், விமல்ரவிக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • புதிய ரேசன் கடை கட்டிடத்துக்கு பூமிபூஜை நடந்தது.
    • இதனை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விளத்தூர் ஊராட்சியில் பழமையான ரேசன் கடை இயங்கி வந்தது. இந்த ரேசன்கடையை விளத்தூர் மற்றும் அதன் அருகே உள்ள கிள்ளுக்குடி மற்றும் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் ரேஷன்கடை கட்டிடம் இருந்ததால் அதை அகற்றி விட்டு புதிய ரேசன் கடை கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி தனது உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 18 ஆயிரத்தை ஒதுக்கினார். இதையடுத்து ரேசன் கடை புதிய கட்டிட பூமி பூஜை நடந்தது. இதனை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இந்தவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர் வாலகுருநாதன் துணைத்தலைவர் சந்திரா பாஸ்கரன், தி.மு.க. கிளை செயலாளர் மருதுபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அந்தபகுதியில் இருந்த அங்கன்வாடி மையத்தில் தமிழரசி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    • ரூ.42 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் கட்டிட திட்டமிடப்பட்டது.
    • கட்டிட பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.

    குத்தாலம்:

    கோமல் ஊராட்சியில் ரூ.42.63 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் கட்டும் பணியை மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் ஊராட்சியில் ரூ.42 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் மற்றும் 15-வது நிதிக்குழு நிதியிலிருந்து ஊராட்சி செயலகம் கட்டிட திட்டமிடப்பட்டு, அதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.

    ஊராட்சிமன்ற தலைவர் எழிலரசி பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு ஊராட்சி செயலக கட்டிட பூமி பூஜையை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் கட்டிட பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.

    இந்நிகழ்ச்சியில், தி.மு.க ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் திவ்யா சரண்ராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வள்ளுவக்குடியில் ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்துள்ளது.
    • ரூ.42 லட்சத்தில் புதிய ஊராட்சி அலுவலக கட்டிடம்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வள்ளுவக்குடி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் உள்ளிட்டவைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

    வள்ளுவக்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் சேதம் ஏற்பட்டிருந்தது.

    இதனை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதன் படி சீர்காழி ஊராட்சி ஒன்றியம் சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.42லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமிபூஜை ஒன்றிய ஆணையர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றிய பொறியாளர் கலையரசன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட அமைப்பாளர் முருகன், ஊரட்சி மன்ற தலைவர் பத்மா முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

    • மாமன்னர் சிலையானது ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.
    • 25 அடி உயரத்திற்கு சிலை அமைய உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் உருவ சிலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.

    விழாவுக்கு ஆசிரியர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு முத்தரையர் சங்கம் அமைப்பு செயலாளர் சண்முகம் வரவேற்றார்.

    மாநிலத் தலைவர் மூர்த்தி, வழக்கறிஞர் சிவனேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு சிலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சுப்ரமணியன், அன்பான ந்தம், வேலூர் முருகேசன், சங்கர், திருவண்ணாமலை சுப்பிரமணியம், தஞ்சை முனிசிபல் காலனி நேதாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தமிழ்நாடு முத்தரையர் சங்கம் மாநிலத் தலைவர் மூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தஞ்சையில் மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் உருவ சிலை அமைக்க அனுமதி கொடுத்த முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் கே .என். நேரு ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பணிக்காக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த மேயர் சண். ராமநாதனுக்கும் நன்றி. மாமன்னர் சிலையானது ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.

    25 அடி உயரத்திற்கு சிலை அமைய உள்ளது. சிலை அமைக்கும் பணிகள் முடிவு அடைந்ததும் சிலையை விரைவில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றார்.

    • பேவர் பிளாக் சாலை அமைக்க பூமிபூஜை நடந்தது.
    • சி.எம்.துரைஆனந்த் தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சி 21-வது வார்டு பிள்ளைவயல் காளியம்மன் கோவில் தெருவில் நமக்கு நாமே திட்டம் மூலம் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கான பூமிபூஜையை சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் தொடங்கி வைத்தார்.

    இதில் துணைத் தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் அயூப்கான், சண்முகராஜன், விஜயகுமார், சி.எல்.சரவணன், ஆறுசரவணன், மகேஷ், மதியழகன், ஒப்பந்ததாரர்கள் தனசேகர், அமுதன் மற்றும் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இருவழிதடமாக அகலபடுத்த ரூ.11 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கம் பணிக்கும் பணிக்கு பூமிபூஜை நடைப்பெற்றது.
    • தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கலந்துக்கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுதி க்குட்பட்ட கெலமங்கலம் பேரூராட்சி சாலை முதல் உத்தனப்பள்ளி வரை நெடுஞ்சாலைதுறை மூலம் சாலை மேம்பாட்டு திட்டத்தில் இடைவழி தடத்திலிருந்து இருவழிதடமாக அகலபடுத்த ரூ.11 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கம் பணிக்கும் பணிக்கு பூமிபூஜை நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கலந்துக்கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் தேன்கனி க்கோட்டை உதவி கோட்ட பொறி யாளர் திருமால்செ ல்வன், ராயக்கோட்டை உதவி பொறியாளர் மன்னர்மன்னன், முன்னால் பேருரட்சி தலைவர் சையத் அசேன், ஒப்பந்ததாரர் சிவக்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் நாகராஜ், கிரி, சண்முகம், அகிலா சாதிக், வச்சலா லட்சுமைய்யா, இந்திய கம்யூனிட்டு கட்சி நகர செயலாளர் மது, துணைசெயலாளர் குருராஜ், ஜெயராமன், நகராஜ் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    ×