search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூமிபூஜை"

    • திட்ட பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் தலைமை தாங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகங்கை நகர் 26-வது வார்டு சோனையகோயில் எதிர்ப்புறம் உள்ள சாலையில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, பஸ் நிலையம் எதிர்புறத்தில் நவீன கட்டண கழிப்பறை அமைக்கும் பணி, ஆஞ்சநேயர் கோவில் செட்ஊரணி கரையை சுற்றி பேவர் பிளாக் அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு பூமி பூஜை நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் கார்கண்ணன், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், பொறியாளர் பாண்டீஸ்வரி, நகரமைப்பு அலுவலர், நகர் மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், கார்த்திகேயன், சரவணன், ராமதாஸ், விஜயக்குமார், சண்முகராஜன், மகேஷ், விஜயக்குமார், வீரகாளை மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    • சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 18.80 மதிப்பிட்டில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கான பூமி பூஜையை முசிறி எம்.எல்.ஏ.காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
    • தோளூர்ப்பட்டியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை தோளூர்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரிப.சரவணன் தலைமையில் நடைபெற்றது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 18.80 மதிப்பிட்டில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கான பூமி பூஜையை முசிறி எம்.எல்.ஏ.காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

    விழாவில் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மருதைதுரை காடுவெட்டி ஊராட்சித் தலைவர்புவனேஸ்வரிஅருணாச்சலம் ஒன்றிய துணை சேர்மன் பாபு சத்தியமூர்த்தி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருமேனி தி.மு.க.மேற்கு ஒன்றியசெயலாளர்தங்கவேல் ,

    கிழக்கு ஒன்றிய செயலாளர் பால.ந. திருஞானம் பாப்பாபட்டி பெரியசாமி, இளைஞரணி காடுவெட்டி சத்தியசீலன், நேசமணி, தொட்டியம் பேரூராட்சி கவுன்சிலர் கனகராஜ், பள்ளி ஆசிரியர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் சரோஜா நன்றி கூறினார்.

    இதைப்போல் தொட்டியம் தோளூர்ப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தோளூர்ப்பட்டியில் 15-வது நிதி குழுவில் ரூபாய் 22- லட்சம் செலவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை தோளூர்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரிப.சரவணன் தலைமையில் நடைபெற்றது.

    • திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.
    • ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை மேம்பாடு‍,சிறு பாலம் கட்டுதல் ஆகியவற்றிற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு ஒத்தக்கண் பாலம் பகுதியில், ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை மேம்பாடு‍, வடிவியல் மேம்பாடு, சிறு பாலம் கட்டுதல் மற்றும் வடிகால் கட்டுதல் ஆகியவற்றிற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார். மேயர் தினேஷ்குமார் , 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. நாகராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்எஸ்ஆர். ராஜ், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி ,வட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    • திருவெண்ணைநல்லூரில் விதை சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு பூமிபூஜை தொடங்கப்பட்டது.
    • ரூ.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையம் விதை சேமிப்பு கிடங்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூரில் வேளாண்மைத்துறை சார்பில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்புக் கிடங்கு பூமிபூஜை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வேளாண்மைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். விழுப்புரம் வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம், பேரூராட்சி துணை தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி வேளாண்மை இயக்குனர் பிரேமலதா வரவேற்றார். நிகழ்ச்சியில் திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம்கணேசன் கலந்துகொண்டு ரூ.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையம் விதை சேமிப்பு கிடங்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. நகர செயலாளர் பூக்கடை கணேசன், கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் சித்ரா, திருக்கோவிலூர் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கிருஷ்ணராஜ், நகர பொருளாளர் சையத் நாசர், இளைஞரணி சுலைமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடை, நிழற்கூரை, நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையம் ஆகிய பணிகளை தொடங்கி வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.காலேஜ்ரோடு அய்யப்பன் கோவில் முன் ரூ.31 ½லட்சம்மதிப்பில் நிழற்கூரை அமைக்க பூமிபூஜை நடந்தது. தெற்குதொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தனர்.

    இது போல் கே.வி.ஆர்.நகர் பகுதியில் ரூ.12 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை, பெரிச்சிப்பாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை, பெரியதோட்டம் மெயின் ரோடு பகுதியில் ரூ.26½ லட்சத்தில் நிழற்கூரை அமைப்பதற்கான பூமிபூஜை, கோம்பை தோட்டம் மெயின் ரோட்டில் ரூ.15 லட்சம்மதிப்பில் நிழற்கூரை அமைக்க பூமி பூஜை, பெரியதோட்டம்முதல் வீதியில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமையம்ரூ.25 லட்சத்தில் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து பணிகளைதொடங்கி வைத்தனர். மொத்தம் ரூ.1 கோடியே 20 லட்சம்மதிப்பில் நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர்.

    இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மாவட்டஇளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ்,திலக்ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • ரூ.23 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.
    • ஒன்றிய குழு தலைவர் டி.கேசவமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் ஊடேதுர்கம் ஊராட்சியில் 14-வது நிதி குழு மாண்யத்திட்டத்தில் வெள்ளி சந்தை கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், கொம்பேபள்ளி கிராமத்தில் ரூ 2. லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

     யூகொத்தப்பள்ளி கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் பேவர்பிளாக் அமைத்தல், வன்னியப்புர கிராமத்தில் ரூ.2 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் மொத்தம் ரூ.23 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழுதலைவர் டி.கேசவமூர்த்தி பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நாகமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் அசோ கன், ஊராட்சி செயலாளர் முனிராஜ், முன்னால் வார்டு உறுப்பினர் நாராயணசாமி, ஊர் முக்கியஸ்தார்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

    • ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீ பட்டத்தரசியம்மன்,ஸ்ரீ கன்னிமார் திருக்கோவில் கட்டப்படுவதற்கான பூமிபூஜை
    • பூஜைக்கு பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    மங்கலம்,

    திருப்பூர் மாவட்டம், மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வேட்டுவபாளையம் பகுதியில் புதிதாக ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீ பட்டத்தரசியம்மன்,ஸ்ரீ கன்னிமார் திருக்கோவில் கட்டப்பட உள்ளது.இதற்கான பூமிபூஜை வேட்டுவபாளையத்தில் நடந்தது. இந்த பூஜைக்கு எம்.செட்டி பாளையம்- வி.ஜெயம்என்.மகேந்திரகுமார் தலைமை தாங்கினார்.மேலும் இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் வேட்டுவபாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி,பழனிச்சாமி,சாமிநாதன்,வேலுச்சாமி,சந்திரசேகர்,துளசிமணி,சௌந்தரி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×