search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயக்கம்"

    • ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளதாக சேலம் கோட்ட அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்தனர்.
    • 2 பொது பெட்டி உள்ளிட்ட 16 பெட்டிகளை கொண்டதாக இந்த ெரயில் இருக்கும்.

    திருப்பூர்:

    வருகிற 25ந் தேதி, திருவனந்தபுரம் - சென்னை இடையே சிறப்பு ெரயில் (06056) இயக்கப்படுகிறது.இரவு, 7:40க்கு திருவனந்தபுரத்தில் புறப்படும் ெரயில் மறுநாள் மதியம், 12:30க்கு சென்னை சென்று சேரும்.மறுமார்க்கமாக, வரும் 26ந் தேதி மதியம், 3:10க்கு சென்னையில் புறப்படும் ெரயில் மறுநாள் காலை 7 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேரும்.

    சிறப்பு ெரயில் கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம், அலுவலா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். 7ஏ.சி., பெட்டி, 6 படுக்கை வசதி முன்பதிவு, 2 பொது பெட்டி உள்ளிட்ட 16 பெட்டிகளை கொண்டதாக இந்த ெரயில் இருக்கும்.ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளதாக சேலம் கோட்ட அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்தனர்.

    • தமிழகம் முழுவதும் உள்ள தர்காக்களில் பிரார்த்தனை செய்து 31-வது மாவட்டமாக மயிலாடுதுறைக்கு வருகைதந்துள்ளேன்.
    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக தலைமை வகித்தார்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த மேலசாலை அன்னை அஜ்மத் பீவி தர்காவில், மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க இடைகால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி அமைந்திடவேண்டும் என அவை தலைவரும், முன்னாள் தமிழ்நாடு வக்புவாரிய தலைவருமான தமிழ்மகன்உசேன் ஆன்மிக பயனமாக சிறப்பு பிரதாத்தனை செய்து வழிபட்டார்.

    அதில் மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ், மாவட்ட அவைதலைவர் பி.வி.பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ.சக்தி, ஒன்றிய செயலாளர்கள் ஏகே.சந்திரசேகரன், ஆதமங்கலம்.ரவிச்சந்திரன், கே.எம்.நற்குணன், சிவக்குமார், நகரசெயலாளர் வினோத் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

    பின்னர் தமிழ்மகன்உசேன் பேசுகையில், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்திட தமிழகம் முழுவதும் உள்ள தர்காக்களில் பிராத்தனை செய்து வருகிறேன். 31வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் வருகைதந்துள்ளேன்.

    எம்ஜிஆர்.ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி எப்படி வழிநடத்தபோகிறார் என நினைத்தபோது எடப்பாடி பழனிசாமி சிறப்பாக தலைமை வகித்து தன்னை ஆயப்படுத்திக்கொண்டு வழிநடத்தினார்.

    இதுதொடரவேண்டும் என்றார்.

    • பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை
    • சிறப்பு ரெயில்களை திருநெல்வேலியுடன் நிறுத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

    நாகர்கோவில்:

    ஆயுத பூஜை, பொங்கல், தீபாவளி மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் மக்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்களை ரெயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது.

    நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்தும் இயக்க ப்படும் சிறப்பு ரெயில்கள் குமரி மாவட்டத்தை புறக்கணிப்பதாக ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது. சிறப்பு ரெயில்கள் மதுரை கோட்டத்தின் எல்லையான திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படுவதாக பயணிகள் சங்கம் தெரிவிக்கிறது.

    மேலும் ரெயில்களை நாகர்கோவில் வரை இயக்க முடியாததற்கு முக்கிய காரணம் நாகர்கோவில் ரெயில் நிலையம் இட நெருக்கடி பிரச்சினையால் சிக்கி இருப்பது தான் என்றும் கூறுகின்றனர்.

    இது தொடர்பாக பயணி கள் நல சங்கத்தினர் கூறு கையில், நாகர்கோவி லிருந்து அதிக அளவிலான ரெயில்கள் கேரளா வழியாக, அதாவது திருவனந்த புரம் மார்க்கம் இயங்கு கின்றன. இதனால் தான் இட நெருக்கடி பிரச்சினை ஏற்படுகிறது.

    இதை தவிர்ப்பதற்கு மாற்று வழிகளை ஆராய்ந்து ரெயில்வே நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு சிறப்பு ரெயில்களை திருநெல்வேலி யுடன் நிறுத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய இட நெருக்கடியை குறைப்பதன் ஒரு பகுதியாக சென்னை - கொல்லம் அனந்தபுரி ரெயில், வருகிற 20-ந்தேதி முதல் நாகர்கோவில் டவுன் நிலையம் வழியாக இயக்கப்பட இருக்கின்றது. மேலும் ஒரு சில ரெயில் களை, குறிப்பாக பயணி கள் ரெயில்களை நாகர் கோவில் டவுன் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்கி னால் நாகர்கோவில் சந்திப்பு நிலைய இடநெருக்கடி பிரச்சனை ஓரளவுக்கு குறையும் என்ற ஆலோசனையும் ரெயில்வே துறையிடம் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு இயக்கும் போது தற்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அதிக அளவில் பயணிகள் ரெயில் சேவை உள்ளது போன்று, பகல் நேரத்தில் திருநெல்வேலிக்கும் அதிக அளவில் பயணிகள் ரெயில் சேவை வசதி கிடைக்கும்.

    திருவனந்தபுரத்திலிருந்து காலை 6.50 மணிக்கு புறப்ப ட்டு நாகர்கோவிலுக்கு 8.45 மணிக்கு வந்து சேரும் பயணிகள் ரெயிலை நாகர்கோவில் டவுன் வழி யாக திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இந்த ரெயில் தான் நாகர்கோவில் விட்டு விட்டு கோட்டயம் ரெயி லாக மதியம் புறப்பட்டு செல்கிறது.

    திருநெல்வேலி யிலிருந்து கோட்டயம் ரெயில், நாகர்கோவில் டவுன் வழியாக இயக்கப்படும் போது காலை 8.45 மணி முதல் மதியம் 1 மணி வரை தினசரி ஒரு நடை மேடை காலியாக கிடைக்கும். காலையில் நடை மேடை காலியாக இருந்தால் திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும் ஒரு சில சிறப்பு ரெயில்களை நாகர் கோவிலிருந்து இயக்க முடியும்.

    2-வது கோரிக்கையாக திருநெல்வேலியில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு 8.10 மணிக்கு வரும் பயணிகள் ரெயிலையும், நாகர்கோவிலில் இருந்து 7.55 மணிக்கு புறப்படும் கொச்சுவேலி ரெயிலையும் இணைத்து ஒரே ரெயிலாக திருநெல்வேலி -கொச்சுவேலி என நாகர் கோவில் டவுன் வழியாக இயக்கலாம்.

    திருவனந்தபுரத்திலிருந்து மாலையில் புறப்படும் பயணிகள் ரெயிலையும் நாகர்கோவிலில் இருந்து மாலையில் திருநெல்வேலி புறப்படும் பயணிகள் ரெயி லையும் இணைத்து ஒரே ரெயிலாக திருவனந்தபுரம் - திருநெல்வேலி பயணி கள் ரெயில் என்று இயக்க வேண்டும்.

    கொச்சுவேலியில் இருந்து மதியம் 1.40 மணிக்கு நாகர்கோவில் புறப்படும் பயணிகள் ரெயிலை நாகர்கோவில் டவுண் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்தும் மறு மார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு 6.20 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் ரெயிலாக இயக்க வேண்டும்.

    இவ்வாறு பயணிகள் ரெயில்களை மாற்றம் செய்து இயக்கும் போது நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலை யம் இட நெருக்கடி பிரச்சினைகளிலிருந்து விடிவு பெற்று விடும்.

    இவ்வாறு இடநெருக்கடி பிரச்சினை இல்லாமல் இருந்தால் நாகர்கோவிலுக்கு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் சிறப்பு ரெயில்களை அதிக அளவில் இயக்கலாம் என்றனர்.

    • 11 மாநிலங்களில் பாப்புலர் ப்ரண்ட் அமைப்புக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர்.
    • அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    அமலாக்கத்துறை மற்றும் தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் 11 மாநிலங்களில் பாப்புலர் ப்ரண்ட் அமைப்புக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர்.

    இதன் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

    அதனை கண்டித்து திட்டச்சேரி, கட்டுமாவடி, புறாக்கிராமம், ப.கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மேற்கண்ட பகுதிகளில் முழு கடை அடைப்பு நடைபெற்றது.

    நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அமைதியான முறையில் கடை அடைப்புகள் நடைபெற்றது.

    அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • குமரி மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அனுமதி இன்றி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

    நாகர்கோவில் :

    குமரி மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    சூழலியல் அதிர்வு தாழ்வு மண்டலத்தை மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அமல்படுத்த கூடாது என்று வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு குமரி மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் ஆமோஸ் தலைமை தாங்கினார். செயலாளர் சாந்தகுமார், ராமச்சந்திரன், சியோன் ஏசுதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆனால் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அனுமதி இன்றி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். அந்த வகையில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு அருகே உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

    • 2-வது முறையாக போராட்டம் நடத்த மக்கள் முயற்சி
    • அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

    குளச்சல், செப். 17-

    குளச்சல் அருகே உள்ள இரும்பிலி, பனவிளை வழியாக இயங்கி வந்த தடம் எண் 5 ஜி வி, 9 ஜெ, 9 ஜி மற்றும் 88 டி அரசு பஸ்கள் கடந்த 3 வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக வும் அதனை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நிறுத்த ப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வலியுறுத்தி கடந்த மாதம் 26-ந் தேதி ஏ.ஐ.சி.சி.டி.யு. சார்பில் மறியல் போராட்டம் நடத்த ஊர்மக்கள் திரண்டனர். தகவலறிந்த குளச்சல் பணிமனை கிளை மேலாளர் சுந்தர்சிங், கண்காணிப்பாளர் ஜெய ராஜ், கண்ட்ரோலர் காந்தி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது செப்டம்பர் 15-ந் தேதிக்குள் பஸ்கள் தொடர்ந்து இயங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.ஆனால் உறுதிமொழிப்படி பஸ்கள் இயக்கப்படவில்லை.

    இதனால் மீண்டும் மறியல் நடத்த பொதுமக்கள் முயற்சித்தனர். பணிமனை கிளை மேலாளர் சுந்தர்சிங் மாவட்ட லெனினிஸ்ட் செயலாளர் அந்தோணிமுத்துவிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி, 10 நாட்களுக்குள் உறுதியாக பஸ்கள் இயக்கப்படும் என கூறியதை அடுத்து மீண்டும் அனை வரும் கலைந்து சென்றனர்.

    • ரோட்டை முழுமையாக புதுப்பித்து விபத்துகளை குறைக்க வேண்டும்.
    • உடுமலை பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ் இவ்வழித்தடத்தில் சென்று வந்தது.

    உடுமலை:

    உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் ரோட்டில் சின்னாறு வரையுள்ள 28.80 கி.மீ., நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகங்களின் வழியாக இந்த ரோடு செல்கிறது.மறையூர், காந்தலூர், மூணாறு உட்பட கேரள மாநில பகுதிகளில் இருந்து அதிக அளவு வாகனங்கள் இந்த ரோட்டின் வழியாக உடுமலைக்கு வருகின்றன.

    அதே போல் உடுமலையிலிருந்து சுற்றுலா வாகனங்கள் இவ்வழியாக அதிக அளவு செல்கின்றன.சுற்றுலா மற்றும் இரு மாநில போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த ரோடு பல இடங்களில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குறிப்பாக தொடர் மழைக்குப்பிறகு ரோட்டோரம் அரிக்கப்பட்டுள்ளது.ரோட்டின் ஒரு பகுதி குழியாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது நிலைதடுமாறி இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். ரோட்டை முழுமையாக புதுப்பித்து விபத்துகளை குறைக்க வேண்டும்.

    உடுமலையில் இருந்து சின்னார், மறையூர் வழியாக மூணாறுக்கு இயக்கப்படும் பஸ்களை நம்பி, நூற்றுக்கணக்கான பயணிகள் உள்ளனர். முன்பு, மாலை 4:30 மணிக்கு உடுமலை பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ் இவ்வழித்தடத்தில் சென்று வந்தது.தற்போது எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இப்பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உடுமலைக்கு பல்வேறு பணிகளுக்காக வந்து செல்லும் மறையூர் மக்கள் இரவு, 7:30 மணி வரை காத்திருக்க வேண்டியுள்ளது.முக்கிய வழித்தடத்தில் திடீரென அரசு பஸ் நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பஸ் இயக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு இரு மாநில பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.எனவே உடுமலை கிளை போக்குவரத்து கழகத்தினர் மீண்டும் மாலை நேரத்தில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • ஓணம் பண்டிகையைaயொட்டி, கூடுதலாக ஒரு ெரயில் மங்களூரு முதல் தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது.
    • இரவு 7 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 7.52 மணிக்கு சேலம் வந்தடைகிறது.

    சேலம்:

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு ெரயில்வே நிர்வாகம் சேலம் வழியாக சிறப்பு ெரயில்களை இயக்குகிறது. இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி, கூடுதலாக ஒரு ெரயில் மங்களூரு முதல் தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது.

    அதன்படி மங்களூரு- தாம்பரம் சிறப்பு ெரயில் (வண்டி எண்-06050) வருகிற 11-ந் தேதி மங்களூருவில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 7.52 மணிக்கு சேலம் வந்தடைகிறது.

    பின்னர் இங்கிருந்து 7.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் வழியாக தாம்பரத்திற்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தேசிய வனக் கொள்கையின்படி, பசுமை வனப்பரப்பு 33 சதவீதம் வரை இருக்க வேண்டும்.
    • தமிழக அரசு விவசாயிகளின் பண்ணை நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வை இயக்கம் என்னும் திட்டத்தை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

    சேலம்:

    தமிழ்நாட்டின் மொத்த பரப்பில் பசுமை வனப் பரப்பு 24 சதவீதம் என்ற அள வில் உள்ளது. தேசிய வனக் கொள்கையின்படி, பசுமை வனப்பரப்பு 33 சதவீதம் வரை இருக்க வேண்டும். எனவே, தமிழ

    கத்தில் பசுமை வனப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதத்திற்கு உயர்த்து வதற்காக தமிழக அரசு விவசாயிகளின் பண்ணை நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வை இயக்கம் என்னும் திட்டத்தை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் தேக்கு, வேங்கை, சந்தனம், செம்மரம், மகோகனி, வேம்பு உள்பட 27 வகையான மரக்கன்றுகள் வனத்துறை, தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை நாற்றங்கால் மற்றும் தனியார் நாற்றங்காலில் உற்பத்தி செய்து வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதற்கான மரக்கன்றுகள் தற்போது வளர்க்கப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்ட விவசாயி கள் தங்களது வரப்பு மற்றும் வயல் ஓரங்களில் மரங்கள் நடவு செய்வதாக இருந்தால் எக்டருக்கு 160 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சமாக ஒரு விவசாயி 2 எக்டர் பரப்பிற்கு மரக்கன்றுகள் பெற்று பயன் பெறலாம். ஊடுபயிர் மற்றும் குறைந்த அடர்த்தி நடவு முறையில் வயல் முழுவதும் நடவு செய்வதாக இருந்தால் ஒரு எக்டருக்கு 100 முதல் 500 மரக்கன்றுகள் வழங்கப்படும்.

    இதில் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு இரண்டு எக்டருக்கு 200 முதல் 1000 மரக்கன்றுகள் வரை வழங்கப்படும். மரக்கன்று கள் தேவைப்படும் விவசாயி கள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்தபின் மரக்கன்றுகள் பெற்றுக் கொள்ளலாம்.

    பதிவு செய்யப்பட்ட வயலை தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ஆய்வு செய்து அளித்திடும் பரிந்துரையின் அடிப்படையில் கன்றுகள் வழங்கப்படும். மேலும், நன்றாக பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் மரக்கன்று களுக்கு பராமரிப்பு தொகை யாக 2-ம் ஆண்டில் இருந்து மரக்கன்று ஒன்றுக்கு ரூ.7 வீதம் 3 ஆண்டுகளுக்கு இத்தொகை வழங்கப்படும்.

    மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 2 லட்சத்து 95 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்ய இலக்கு பெறப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே, மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வமாக உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு இலவச மாக மரக்கன்றுகள் பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • மாபெரும் புத்தக திருவிழா வருகிற 18-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.
    • மாணவ-மாணவிகளின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் அறிவாற்றலை மேம்படுத்தவும் புத்தகங்கள் படிக்க வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் 2-வது மாபெரும் புத்தக திருவிழா வருகிற 18-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக திருவிழா நடைபெறும். இது தொடர்பாக மன்னார்குடியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் டி.ரெங்கையன் தலைமை தாங்கினார். மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் புத்தக திருவிழா தொடர்பாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 2-வது முறையாக புத்தக திருவிழா நடைபெற உள்ளது. மாணவ-மாணவிகளின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் அறிவு ஆற்றலை மேம்படுத்தவும் புத்தகங்கள் படிக்க வேண்டும். அதற்காக தான் புத்தக திருவிழா நடத்துகிறோம். மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு 15 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். பொதுமக்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்கி பயன் பெற வேண்டும்.

    மேலும் மாணவர்கள் தங்கள் வீட்டில் உள்ள புத்தகங்களை தானமாக அளிக்கலாம். இதற்காக புத்தக தானம் அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.

    ெமாத்தம் 40 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த முறை ரூ.40 லட்சம் அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகியது. இம்முறை ரூ.1 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. புத்தக திருவிழா நடைபெறும் 11 நாட்களுக்கு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அனைவரும் கலந்து கொண்டு புத்தக திருவிழாவை வெற்றியடைய செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மிட்டவுன் ரோட்டரி சங்க செயலாளர் வி.கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் சி.குருசாமி, யேசுதாஸ், அன்பரசு, சேதுராமன், பி.ரமேஷ், கோபால், கல்லூரி பேராசிரியர் இளங்கோவன் மற்றும் பொதுநல அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • எர்ணாகுளம்-வேளாங்கண்ணிக்கு மேலும் ஒரு சிறப்பு ெரயில் ராஜபாளையம் வழியாக இயக்கப்படுகிறது.
    • இந்த சிறப்பு ெரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ராஜபாளையம்

    எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ெரயில்(06035/06036) பட்டுக்கோட்டை வழித்தடத்தில் வாராந்திர ெரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கொல்லம், செங்கோட்டை, ராஜபாளையம், விருதுநகர், காரைக்குடி வழித்தடத்தில் ஓடுகிறது.

    தற்போது ஒரு புதிய வாராந்திர சிறப்பு ெரயில் ராஜபாளையம் வழி யாக எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ெரயிலாக(06039/06040) புதுக்கோட்டை, தஞ்சாவூர் என்ற புதிய வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.

    வருகிற 15-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை எர்ணாகுளம்-வேளாங்கண்ணி (06039) ரெயில் புதுக்கோட்டை, தஞ்சாவூர்,ராஜபாளையம் வழி திங்கட்கிழமைகளில் இயங்கும்.

    இதேபோல் வருகிற 16-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரை வேளாங்கண்ணி-எர்ணாகுளம்(06040) ரெயில் கொல்லம், கோட்டயம் செங்கோட்டை ராஜபாளையம் புதன்கிழமை களில் இயக்கப்படும். தஞ்சை வழியாக புதிய வழித்தடத்திலும் இந்த சிறப்பு ரெயில் செல்லும்.

    எனவே அந்த மாவட்டத்திற்கு செல்பவர்க ளுக்கு இந்த ெரயில் சேவை மிகுந்த பயனளிக்கும். இந்த சிறப்பு ெரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஈரோடு, சேலம், திருவண்ணாமலைக்கு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்தனர்.
    • தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் எப்போதும் போல் கோவில் வழி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் பழைய பஸ் நிலையம் புதிதாக கட்டும் பணி நடைபெறுகிறது. இறுதிகட்ட பணிகள் முடிந்து விரைவில் பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளது.

    மேலும் புதிய பஸ் நிலையத்திலும் பணிகள் நடைபெற்று வந்தது. பஸ் நிலைய கட்டுமான பணியால் ஈரோடு, சேலம் பஸ்கள் யூனிவர்சல் தியேட்டர் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் புதிய பஸ் நிலையத்தில் பணிகள் முடிந்த நிலையில், இடங்கள் காலியாக கிடந்ததால் அங்கிருந்து ஈரோடு, சேலம், திருவண்ணாமலைக்கு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி நாளை முதல் ஈரோடு, சேலம், திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் எப்போதும் போல் கோவில் வழி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.    

    ×