search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி நியமனம்"

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பெண்கள் உள்பட 79 பேரை பணி நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • கோவில் நிர்வாகம் சார்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு உள்ளது.

    மதுரை

    உலகப்புகழ் பெற்ற திருத்தலங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் 6 பெண்கள் உள்பட 79 பேரை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

    இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான படிவத்தை www.tenders.tn.gov.in, www.tnhrce.gov.in இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள், 5 கோபுர வாயில்களில் உள்ள பொருட்கள் பாதுகாப்பு வைப்பறை, அம்மன்-சுவாமி சன்னதி பிரகாரங்கள், தெற்கு நுழைவு வாயில் விபூதி விநாயகர் சன்னதி, ஆயிரங்கால் மண்டபம், 4 ஆடி வீதிகள், மீனாட்சி சுந்தரேசுவரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எல்லீஸ் நகர் வாகன பாதுகாப்பு மையம், திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோவில், கொந்தகை, தெய்வநாயகப் பெருமாள் கோவில், செல்லூர் செல்லத்தம்மன் கோவில், திருவாப்புடையார் ஆலயம், கோச்சடை மற்றும் விளாங்குடி தோட்டங்கள், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், முக்தீஸ்வரர் கோவில், ஆமூர் அய்யம்பொழில் ஈஸ்வரர் கோவில், மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதி வாகன பாதுகாப்பகம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் தட்டச்சர்- கணினி பணியாளர், டிராக்டர் டிரைவர், பேட்டரி கார்- ஆம்புலன்ஸ் டிரைவர், பிளம்பர், குங்குமம் தயாரிப்பு மிஷின்களை இயக்க தெரிந்த மெஷினிஷ்ட், மின் உதவியாளர், கூடல் செங்குளம் பண்ணை, தெப்பக்குளம் கல் தூண் பாதுகாக்கும் இடம், வாகனங்கள் நிறுத்துமிடம், தெப்பக்குளம் பெரிய கிணறு, நாகமலை புதுக்கோட்டை சித்தி விநாயகர் கோவில், மீனாட்சி தியேட்டர் ஆகிய இடங்களில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அடிக்கடி விமர்சித்து வருகிறது.
    • அரசின் பல்வேறுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மிஷன் முறையில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியில் சேர்க்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
    மத்திய அரசின் அனைத்து அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் உள்ள மனித வளங்களின் நிலை குறித்த மதிப்பாய்வு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அடிக்கடி விமர்சித்து வருகிறது.

    இந்நிலையில், அரசின் பல்வேறுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மிஷன் முறையில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியில் சேர்க்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனித வளத்தின் நிலையை மதிப்பாய்வு செய்தார். அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்துவது அரசால் செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×