search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவதி"

    • குமாரபாளையத்தில் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியில் சிக்கி மின் கம்பி அறுந்து விழுந்தது.
    • மின் கம்பி அறுந்ததால் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதியுற்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே தேவூர், புள்ளாக்கவுண்டம்பட்டி, வெள்ளாளபாளையம், செட்டிபட்டி, அரசிராமணி உள்ளிட்ட பல கிராமங்களில் விளையும் கரும்புகளை விவசாயிகள் லாரிகள், டிராக்டர்கள் மூலமாக குமாரபாளையம் எடப்பாடி சாலை வழியாக பள்ளிபாளையம் அருகே உள்ள சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்வது வழக்கம்.

    இதில் மின் கம்பிகள் அறுந்து விடுவது, மின் கம்பங்கள் சாய்வது அடிக்கடி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு கரும்பு லோடு ஏற்றிய லாரி காவேரி நகர் பகுதியில் வரும் போது மின் கம்பிகள் கரும்பில் சிக்கி இழுத்து வந்ததில் பல மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

    அந்த நேரத்தில் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் எந்த வித அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதனால் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பு வழங்கும் பணியை செய்தனர். குமாரபாளையம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். மின்வாரிய அதிகாரிகளின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • தார் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் பொபாதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • 20 நாட்களுக்கு முன்பு நடுரோட்டில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 21 வார்டுகள் உள்ளன. வட க்குத்தெரு 7-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான பிரதான சாலையாக இருக்கும் சி.எஸ்.ஐ. சர்ச் முதல் பாபு அப்துல்லா ஆட்டோ நிறுத்தம் வரை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    15 நாட்களுக்கு முன்பு பழைய தார் சாலையை அகற்றும் பணி தொடங்கப்பட்டது. தோண்டப்பட்ட தார்ச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் அந்தப்பகுதியில் செல்லக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.இதனால் அந்தப்பகுதி குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்கள் பழுது ஏற்பட்டு பள்ளி மாணவர்கள் சிரமத்தி ற்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் தார்ச்சாலை அமைப்பதற்காக வடக்கு தெரு கருணை பள்ளி செல்லும் வழியில் 20 நாட்களுக்கு முன்பு நடுரோட்டில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. தார்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் நடுரோட்டில் கொட்டப்பட்ட ஜல்லி கற்களால் இரவு நேரங்களில் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சைக்கிளில் செல்லக் கூடிய சிறுவர்கள் கீழே விழுந்து உயிர்பலி ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த ப்பகுதியில் கொட்டப்பட்ட ஜல்லிகற்களை அகற்றி விரைவில் தார்சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×