என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேட்பாளர்"
- பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
- தமிழ் படிக்கத் தெரியாதவர்களை வேட்பாளராக்கி, தற்போது அதனை நாம் தமிழர் கட்சி சமாளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதி நாதக வேட்பாளர் ஜெகதீஸ் சுந்தர் இன்று வேட்புமனுத் தாக்கலின்போது, தமிழில் எழுதி இருந்த உறுதிமொழிப் பத்திரத்தை படிக்கத் தெரியாமல் திக்கி நின்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர், தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கர் வாசிக்க, ஜெகதீஸ் சுந்தர் அதனை திரும்ப சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். முகப்பேரில் உள்ள பள்ளியில் ரோபோட்டிக் பயிற்சி ஆசிரியராக இவர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
பதட்டமாக இருந்ததால் உறுதிமொழியை படிக்க சிரமப்பட்டேன் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஸ் சந்தர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, விருதுநகர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் கௌசிக் நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் நடத்தும் அலுவலகம் சென்றார் அப்போது உறுதிமொழி வாசிக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் வேட்பாளர் கௌசிக்கிற்கு தமிழ் படிக்கத் தெரியாததால் உறுதிமொழி முழுவதையும் விருதுநகர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் படிக்க, தொடர்ந்து படித்தார் நாம் தமிழர் வேட்பாளர் கௌசிக்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி கூறுகையில், வேட்பாளர் கௌசிக் ஓமன் நாட்டில் படித்ததால் தமிழ் படிக்கத் தெரியாது என விளக்கம் அளித்துள்ளார்..
ஆனால், தமிழ் படிக்கத் தெரியாதவர்களை வேட்பாளராக்கி, தற்போது அதனை நாம் தமிழர் கட்சி சமாளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
- நாம்தமிழர் கட்சியின் தென்சென்னை மாவட்ட வேட்பாளராக தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.
- நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி பற்றி விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
பாராளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
நாம்தமிழர் கட்சியின் தென்சென்னை மாவட்ட வேட்பாளராக தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தமிழ்ச்செல்வி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது அவர் தனது Audi A4 சொகுசு காரில் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் அந்த Audi A4 சொகுசு காருக்கு தமிழ்ச்செல்வி இன்சூரன்ஸ் கட்டவில்லை என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இன்சூரன்ஸ் இல்லாத Audi A4 சொகுசு காரில் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்த தென் சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி பற்றி விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
- தி.மு.க.வில் இதற்காகவே ஒவ்வொரு வேட்பாளருக்கும் காணொலி வாயிலாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது.
- அ.தி.மு.க. வேட்பாளர்கள் 33 பேரும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரங்களும்களை கட்டி வருகிறது.
இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்வது வாடிக்கையாகி உள்ளது. அந்த வகையில் நேற்று பவுர்ணமி நாளில் எல்லா அரசியல் கட்சி வேட்பாளர்களும் வரிசையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்களுடன் முக்கிய பிரமுகர்களை அழைத்து வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்றைய தினத்தை மிகவும் நல்ல நாளாக கருதியதால் 75 சதவீதம் வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 33 பேரும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சிகளில்தான் இன்னும் சிலர் மனுதாக்கல் செய்வதற்கு நாளைய தினத்தை தேர்ந்தெடுத்து உள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளரின் சொத்து விவரங்கள், மனைவியின் சொத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டி உள்ளதால் ஒரு முறைக்கு இருமுறை அவற்றை சரி பாார்த்து வழக்கறிஞருடன் ஆலோசித்த பிறகே வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
தி.மு.க.வில் இதற்காகவே ஒவ்வொரு வேட்பாளருக்கும் காணொலி வாயிலாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது. மற்ற கட்சியினர் அவரவர் வழக்கறிஞர்கள் உதவியுடன் வேட்பு மனுவை பூர்த்தி செய்து தாக்கல் செய்து வருகின்றனர்.
வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடையும் என்பதால் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 600-க்கும் மேற்பட்டோர் நாளை மனுதாக்கல் செய்யலாம் என எதிர் பார்க்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விருதுநகர் மக்களவை தொகுதியில் கௌசிக் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
- நாம் தமிழர் கட்சி சமாளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து இருந்தார். அந்த வகையில் விருதுநகர் மக்களவை தொகுதியில் கௌசிக் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் விருதுநகர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் கௌசிக் நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் நடத்தும் அலுவலகம் சென்றார் அப்போது உறுதிமொழி வாசிக்க அறிவுத்தப்பட்டது.
இந்நிலையில் வேட்பாளர் கௌசிக்கிற்கு தமிழ் படிக்கத் தெரியாததால் உறுதிமொழி முழுவதையும் விருதுநகர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் படிக்க, தொடர்ந்து படித்தார் நாம் தமிழர் வேட்பாளர் கௌசிக்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி கூறுகையில், வேட்பாளர் கௌசிக் ஓமன் நாட்டில் படித்ததால் தமிழ் படிக்கத் தெரியாது என விளக்கம் அறித்துள்ளனர்.
ஆனால், தமிழ் படிக்கத் தெரியாதவரை வேட்பாளராக்கி, தற்போது அதனை நாம் தமிழர் கட்சி சமாளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
- கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
- மராட்டியத்தில் ஒரு தொகுதியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அந்த கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தை தவிர மேலும் 4 மாநி லங்களிலும் போட்டியிடுகிறது. தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. இந்த 4 மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.
கேரளாவில் 5 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 6 தொகுதிகளிலும், தெலுங்கானாவில் 10 தொகுதிகளிலும், மராட்டியத்தில் ஒரு தொகுதியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் ஆந்திராவிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை.
- 400 தொகுதிகளில் வெற்றியா, 450 தொகுதிகளில் வெற்றியா என்பது கேள்வி?
கோவை:
கோவை சரவணம்பட்டியில் இன்று நடந்த பா.ஜ.க நிர்வாகிகள் கூட்ட த்தில் பா.ஜ.க. மாநில தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-
நான் வருகிற புதன்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளேன். அடுத்து மாநில தலைவர் என்ற முறையில் தமிழகம் முழுவதும் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களையும் ஆதரித்து 3, 4 நாட்கள் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் தேர்தல் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
நீங்கள் வேட்பாளராக இருந்தால் எப்படி பணியாற்றுவீர்களோ, அதே போல் பணியாற்ற வேண்டும். அடுத்த 25 நாட்கள் நாம் எப்படி பணியாற்ற போகிறோம் என்பதே வெற்றியை உறுதி செய்யும்.
கோவையில் நாம் வெற்றியை சுவைத்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. வெவ்வேறு காரணங்களால் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறோம். 20 ஆண்டுகள் ஆனாலும் நமது பழைய பணிகளை மக்கள் போற்றுகின்றனர்.
2 டிரங்கு பெட்டிகளுடன் 2002-ல் கோவைக்கு படிக்க வந்தேன். கடின உழைப்பிற்கு மரியாதை கொடுக்கும் ஊர் இந்த ஊர். கோவையில் பிறந்து வாழ்ந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டேன். தற்போது தேர்தலில் போட்டியிடுகிறேன். கோவை மீது எனக்கு பாசம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கோவை எங்களது கோட்டை என்று பலரும் சொல்லி வருகின்றனர். கோட்டையில் ஓட்டை போட நான் வரவில்லை. மக்களின் மனங்களை வெல்லவே வந்துள்ளேன்.
இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை. மக்களை சந்திப்பது மட்டுமே நமது எண்ணம். டிபன் பாக்ஸ் கொடுத்தோம், வேறு பரிசு பொருட்கள் கொடுத்தோம் என்று வெற்றி பெற வேண்டும் என்பது இல்லை. தேர்தலில் பா.ஜ.க. வென்று மீண்டும் பிரதமராக மோடி வருவார். இதில் 400 தொகுதிகளில் வெற்றியா, 450 தொகுதிகளில் வெற்றியா என்பது கேள்வி?
இவ்வாறு அவர் கூறினார்.
- அனைவரும் நாளை நல்ல நேரம் பார்த்து வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
- வருகிற 27-ந் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கடந்த 20-ந் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வருகிற 27-ந் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் நாளை நல்ல நேரத்தில் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
எந்த ஒரு காரியத்தையும் நல்ல நாளில் தொடங்குவது அ.தி.மு.க.வின் வழக்க மாகும். ஜெயலலிதா, தான் தொடங்கும் அனைத்து செயல்களையுமே நல்ல நாள், நல்ல நேரம் பார்த்தே தொடங்கி அதில் வெற்றியையும் கண்டிருக்கிறார்.
இப்போது அவரது வழியை பின்பற்றியே எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் நாளை நல்ல நேரம் பார்த்து வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 7 இடங்களை ஒதுக்கியது போக மீதமுள்ள 32 இடங்கள் மற்றும் புதுச்சேரி தொகுதி ஆகியவற்றில் அ.தி.மு.க. வேட்பாளர்களே களம் இறங்குகிறார்கள்.
இவர்கள் அனைவரும் திருச்சியில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். பின்னர் அனைவரும் நாளை தங்களது தொகுதிகளுக்கு சென்று ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கிறார்கள். நாளை மதியம் 12 மணி முதல் 1 மணிவரை புதன் ஓரையாகும்.
அந்த நேரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கிறார்கள். முன்னதாக நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வேட்பாளர்கள் தங்களது இஷ்ட தெய்வங்களை வணங்கிவிட்டு வேட்பு மனுக்களில் கையெழுத்து போடவும் அ.தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.
ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி மேற் கொண்டிருந்த இந்த ஜோதிட நம்பிக்கை அரசியலில் அவருக்கு எப்படி கை கொடுக்கப் போகிறது? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- பாரதிய ஜனதா வெளியிட்ட நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலில் அது பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை.
- வேட்பாளர் படத்துக்கு மட்டும் இடம் விட்டுவிட்டு சுவர் விளம்பரம் செய்திருந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்ட நிலையில், தற்போது அந்த பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்துவிட்டன. இதையடுத்து கட்சி வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கட்சி தலைவர்கள் ஏப்ரல் மாதம் தொடங்கியதும், கேரள மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர்.
கேரள மாநிலத்தில் ராகுல்காந்தி எம்.பி.யாக உள்ள வயநாடு தொகுதியே முக்கியமான தொகுதியாகும். அந்த தொகுதியில் இந்த முறையும் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியே போட்டியிடுகிறார். மேலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளரான டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் வயநாடு தொகுதியில் களமிறங்குகிறார்.
காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டுகட்சிகள் இந்திய அளவில் ஒரே கூட்டணியில் இருக்கும் நிலையில், வயநாடு தொகுதியில் இருகட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்று தெரிந்துவிட்டநிலையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடப்போவது யார்? என்பது இதுவரை தெரியவில்லை.
பாரதிய ஜனதா வெளியிட்ட நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலில் அது பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. வயநாடு தொகுதி மட்டுமின்றி, கேரளாவில் உள்ள கொல்லம், எர்ணா குளம், ஆலத்தூர் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர் விவரங்களை பாரதிய ஜனதா வெளியிடவில்லை.
இதனால் இந்த தொகுதிகளில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார்? என்ற விவரம் தெரியாமல் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளனர். வேட்பாளர்கள் எப்படியும் அறிவிக்கப்பட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையில், அந்த தொகுதிகளில் பல இடங்க ளில் பாரதிய ஜனதா கட்சியினர், வேட்பாளர் படத்துக்கு மட்டும் இடம் விட்டுவிட்டு சுவர் விளம்பரம் செய்திருந்தனர்.
அந்த விளம்பரங்கள் தற்போது வரை வேட்பாளர்களின் படம் இன்றியே காணப்படுகின்றன. பாரதிய ஜனதா வெளியிடும் ஐந்தாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் கேரள மாநிலத்தில் அறிவிக்கப்படாமல் உள்ள தொகுதிகளின் வேட்பாளர் விவரங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நாம் தமிழர் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்ற தயாராக இருப்பதாக கூறினார்.
- அதிகாரப் பூர்வ அறிவிப்பை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்க உள்ளார்.
சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி 4 ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். பாரதிய ஜனதாவில் தனக்கு முக்கிய பொறுப்புகள் தருவார்கள் என்று எதிர்பார்த்தார்.
ஆனால் பாரதிய ஜனதாவில் அவருக்கு உரிய இடம் கிடைக்கவில்லை. இதனால் பா.ஜ.க. கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீண்டும் அவரது நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளன. கடந்த மாதம் அவர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை சந்தித்து பேசினார். அப்போது நாம் தமிழர் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்ற தயாராக இருப்பதாக கூறினார்.
அதை சீமானும் ஏற்றுக் கொண்டதால் வித்யாராணி நாம் தமிழர் கட்சியில் இணைந்து இருப்பதாக தெரிகிறது. அவரை மீண்டும் பாரதிய ஜனதாவில் செயல்பட வைக்க சிலர் முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யாராணி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. அவர் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளராக களம் இறங்குகிறார். இன்று (சனிக்கிழமை) மாலை இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்க உள்ளார்.
- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கிடையே, கட்சிகள் தங்களின் கூட்டணிகளை முடிவு செய்த நிலையில் தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
- நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
- 40 தொகுதிகளின் வேட்பாளர்களை சீமான் அறிமுகம்.
மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளது.
இந்நிலையில், 40 தொகுதிகளின் வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
அதன்படி, வரும் 23ம் தேதி மாலை சென்னையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
அங்கு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் ? என்ற பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும்.
- வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுகிறது.
தமிழகம்-புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
அதன்படி, வேட்பு மனுக்களானது காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பெறப்படும்.
மனுத்தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீ-க்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
மனுத்தாக்கல் நடைபெறும் நாட்களில் மாலை 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் ஒருவருக்கும் அனுமதியில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்