search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண மோசடி"

    • அருள்ராஜை திருமணம் செய்த பெண் வேலூர், கோவை, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15 வாலிபர்களை மணந்திருப்பது தெரியவந்தது.
    • பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வானியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 25). கரும்பு வெட்டும் கூலிதொழிலாளி. இவர் பேஸ்புக்கில் தனது நண்பர்கள் ஏராளமானவர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார்.

    அப்போது அருள்ராஜிக்கு வேலூரை சேர்ந்த இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. அப்போது அந்த பெண் தான் ஒரு ஆதரவற்றவர் என்று பகிர்ந்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அருள்ராஜ் அந்த பெண்ணை கடந்த ஆண்டு பண்ருட்டி திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் திருமணம் செய்தார்.

    ஆரம்பத்தில் இவர்கள் வாழ்க்கை இனிதாக சென்றது. அருள்ராஜ் கரும்பு வெட்டும் தொழிலுக்கு செல்லும்போது வெளியூர்களில் தங்குவது வழக்கம். அப்போது அந்த பெண் அருள்ராஜிடம் தனது உறவினர்களை பார்க்க செல்வதாக கூறிவிட்டு செல்வார். இதுபோன்று அடிக்கடி நடந்தது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அருள்ராஜ் தனது தங்கை திருமணத்துக்காக 7 பவுன் நகை, 90 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவை வாங்கி வைத்திருந்தார். இந்த பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்து வைத்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள்ராஜ் திருமணம் செய்த பெண் நகை, பணத்துடன் திடீரென மாயமானார்.

    நீண்ட நாட்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அருள்ராஜ் அந்த பெண் கொடுத்த முகவரி குறித்து விசாரித்தபோது அது போலியானது என தெரியவந்தது. அவர் வழங்கிய செல்போன் எண்ணும் வேறு நபருக்கு உரியது.

    அதிர்ச்சியடைந்த அருள்ராஜ் இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அருள்ராஜை திருமணம் செய்த பெண் வேலூர், கோவை, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15 வாலிபர்களை மணந்திருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • சொத்துக்கள் -ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கி பெண் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • கைதான தேவியிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூா் குறிச்சி தோட்டத்துப்பாளையத்தை சோ்ந்தவா் சுப்பிரமணி (வயது 52), விவசாயி. இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லை சோ்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்துள்ளாா்.

    இந்தநிலையில் சுப்பிரமணியின் தாய்க்கும், தேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சுப்பிரமணியின் தாய் கோபித்துக்கொண்டு அவரது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

    இதையடுத்து தேவி திண்டுக்கல்லில் சென்று வாழலாம் என சுப்பிரமணியை அழைத்துள்ளாா். அவா் வர மறுத்ததாக தெரிகிறது. கடந்த 15-ந்தேதி சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்படவே அவரது வலது காலில் தேவி ஊசி செலுத்தியுள்ளார். இதில் சுயநினைவை இழந்த சுப்பிரமணி திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், ரத்தத்தில் பூச்சிமருந்து கலந்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.

    இதையடுத்து விஷ ஊசி செலுத்தி தன்னை கொல்ல முயன்றதாக மனைவி தேவி மீது சுப்பிரமணி குன்னத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது சுப்பிரமணிக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்க தேவி , கணவருக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவான தேவியை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அவர் திண்டுக்கல்லில் பதுங்கியிருக்கலாம் என்பதால் போலீசார் அவரை தேடி திண்டுக்கல்லுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் தேவிக்கு விஷ ஊசி வாங்கி கொடுத்தவர்கள் யார், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். சுப்பிரமணிக்கு தேவியை பெண் பார்த்து திருமணம் செய்து வைத்த புரோக்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்தநிலையில் தலைமறைவான தேவி நாமக்கல்லில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று தேவியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தேவிக்கு ஏற்கனவே 2பேருடன் திருமணமான நிலையில் 3-வதாக சுப்பிரமணியை திருமணம் செய்து அவரது சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டதும், அந்த திட்டம் நிறைவேறாததால் சுப்பிரமணிக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயற்சித்ததும், ஆனால் அந்த திட்டம் நிறைவேறாததால் நாமக்கல்லுக்கு தப்பி சென்று 4-வதாக ரவி என்கிற ராமன் என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

    நாமக்கல்லை சேர்ந்த ரவிக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளது. கோடீஸ்வரரான அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்தார். இதையடுத்து 2-வது திருமணம் செய்து வைக்க அவருக்கு உறவினர்கள் பெண் பார்த்து வந்துள்ளனர்.

    இதையறிந்த தேவி, ரவியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். சுப்பிரமணியை விட ரவியிடம் அதிக பணம் உள்ளதால் அவரை திருமணம் செய்ய முடிவு செய்த தேவி, சுப்பிரமணி இதற்கு தடையாக இருப்பார் என்பதால் அவரை விஷ ஊசி போட்டு கொன்று விட்டு ரவியை திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டியுள்ளார்.

    சுப்பிரமணியை கொலை செய்தால் அவரது சொத்துக்களும் கிடைத்து விடும் என்பதால் கடந்த 15-ந்தேதி விஷ ஊசியை சுப்பிரமணிக்கு செலுத்தியுள்ளார். ஆனால் சுப்பிரமணி உயிர் பிழைத்து கொண்டதால், போலீசில் சிக்காமல் இருக்க நாமக்கல்லுக்கு தப்பி சென்ற தேவி கடந்த 27-ந்தேதி ரவியை திருமணம் செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சொத்துக்களை அபகரிக்கவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் தேவி இது போன்று பல ஆண்கள், தொழிலதிபர்களை மயக்கி திருமணம் செய்திருக்கலாம் என தெரிகிறது. அவருக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. கைதான தேவியிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சொத்துக்கள் -ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கி பெண் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவரை பிரிந்து வாழும் பெண்களை குறி வைத்து, ஆசை வார்த்தைகள் கூறி பழகி உல்லாசம் அனுபவித்ததோடு, நகை-பணத்தையும் பறித்துச் சென்ற வாலிபர் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
    • புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    குழித்துறை:

    குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த 29 வயது பெண் மற்றும் குழித்துறையைச் சேர்ந்த 26 வயது பெண் ஆகியோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தக்கலை துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் தனித்தனியாக ஒரு புகார் கொடுத்து உள்ளனர்.

    குழித்துறை பெண் கொடுத்த புகாரில், எனக்கு 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2018-ல் கணவரை பிரிந்து விட்டேன். இந்த நிலையில் எனது செல்போனுக்கு வந்த 'மிஸ்டு கால்' அழைப்பு மூலம், மார்த்தாண்டம் அருகே உள்ள மேல்புறம் பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபர் பழக்கமானார்.

    ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறிய அவர், பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறினார். இதில் நான் மயங்கி அவருடன் உல்லாசமாக இருந்தேன். அப்போது வீடியோ மற்றும் போட்டோ எடுத்துக்கொண்ட அவர், 13 பவுன் நகைகளையும் வாங்கிச் சென்றார். என்னை திருமணம் செய்யும்படி கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், வீடியோக்களை வெளியிடுவேன் என மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

    குளச்சலை சேர்ந்த 29 வயது பெண் கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் வசித்து வந்து உள்ளார். அப்போது தான் மேல்புறம் வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. 2-ம் திருமணம் செய்வதாக வாலிபர் கூறியதை நம்பி நெருங்கி பழகியதோடு, நகை-பணத்தையும் இழந்துள்ளார்.

    தற்போது திருமணம் செய்ய கேட்ட போது, வாலிபர் மறுத்து மிரட்டல் விடுப்பதாக போலீசில் கொடுத்த புகாரில் தெரிவித்து உள்ளார். இதே புகாரை மற்றொரு பெண்ணும் தெரிவித்து உள்ளார்.

    கணவரை பிரிந்து வாழும் பெண்களை குறி வைத்து, ஆசை வார்த்தைகள் கூறி பழகி உல்லாசம் அனுபவித்ததோடு, நகை-பணத்தையும் பறித்துச் சென்ற வாலிபர் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    • நடராஜன் தனது பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் காதலி அபிநயாவை திருமணம் செய்து கொண்டார்.
    • கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி அபிநயா நகை, பணத்துடன் திடீரென மாயமானார்.

    தாம்பரம்:

    தாம்பரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது25). இவர், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    அப்போது முடிச்சூர் சாலையில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்த அபிநயா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அப்போது அபிநயா தான் பெற்றோருடன் தகராறு செய்து வந்து விட்டதாகவும், இங்கு தனியாக விடுதியில் தங்கி இருப்பதாகவும் கூறினார்.

    இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ந்தேதி ரங்கநாதபுரம் பெருமாள் கோவிலில் நடராஜன் தனது பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் காதலி அபிநயாவை திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு நகை கடையில் வேலைக்கு சேர்ந்தனர். ஒரு நாள் மட்டும் வேலைக்கு சென்ற அபிநயா அதன்பிறகு வேலைக்கு செல்லவில்லை.

    இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி அபிநயா திடீரென மாயமானார். அவரது 2 செல்போன்களும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த 17 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் புதிய பட்டுப் புடவைகள் அனைத்தையும் அவர் சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன், தாம்பரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    அபிநயாவின் ஆதார் அட்டையை போலீசார் கைப்பற்றியபோது அதில் மதுரை தெற்கு, அரிசிகார தெரு, நன்மைதருவார் கோவில் என்று இருந்தது.

    இந்த நிலையில் செம்மஞ்சேரி பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள விடுதியில் அபிநயா தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று விடுதியில் இருந்த அபிநயாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் நகை மீட்கப்பட்டது.

    விசாரணையில் அபிநயாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரும், 8 வயதில் மகனும் இருப்பது தெரிய வந்தது.

    அவர் தாம்பரத்தில் இருந்து மாயமான பின்னர் மதுரைக்கு சென்று வந்து உள்ளார். அங்கு சுருட்டிய நகையை வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து மதுரைக்கு தனிப்படை போலீசார் சென்று உள்ளனர்.

    அபிநயா திட்டமிட்டு நடராஜனை காதலிப்பதுபோல் நடித்து கணவர், மகன் இருப்பதை மறைத்து திருமணம் செய்து 1½ மாதத்தில் நகை, பணத்தை சுருட்டிச்சென்று இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    விசாரணையில் அபிநயா இதேபோல் மேலும் 3 பேரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    அபிநயாவுக்கு கடந்த 2011-ம் ஆண்டு மன்னார்குடியை சேர்ந்த வாலிபருடன் முதலில் திருமணம் நடந்தது. பின்னர் 10 நாளிலேயே அவரை பிரிந்து விட்டு மதுரையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளான்.

    அங்கிருந்து ஓட்டம் பிடித்த அபிநயா கேளம்பாக்கத்தில் வாலிபர் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து 10 நாளில் அவரையும் உதறிவிட்டு ஊரப்பாக்கத்தில் தங்கி இருந்தபோது நடராஜனை காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து நகை-பணத்துடன் ஓட்டம் பிடித்து இருக்கிறார்.

    அபிநயா வேலைக்காக ஒவ்வொரு இடங்களில் தங்கும்போதும் பழக்க மாகும் வாலிபர்களை குறி வைத்து திருமண ஆசை காட்டி நகை-பணத்தை சுருட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.

    கடைசியாக சுருட்டிய நகை-பணத்தை அபிநயா 2-வது கணவர் செந்தில்குமாரிடம் கொடுத்து ஜாலியாக செலவு செய்து உள்ளார். இதையடுத்து அபிநயாவுக்கு உடந்தையாக இருந்ததாக செந்தில் குமாரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

    கைதான அபிநயா தனது பெயரில் 32 சிம்கார்டுகள் வாங்கி வைத்திருந்தார். அவர் ஒவ்வொருவரிடம் தனித்தனி செல்போன் நம்பரை கொடுத்து திட்டமிட்டு ஏமாற்றி இருக்கிறார்.

    மேலும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும் அபிநயாவுக்கு பலரிடம் நெருக்கமான பழக்கம் இருந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கமான வாலிபர் ஒருவர் துபாய் செல்வதற்கு 2 பவுன் நகை மற்றும் பணத்தை கொடுத்து உதவி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    விசாரணையின்போது அபிநயாவுடன் பழக்கத்தில் இருந்தவர்கள், ஏமாந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தற்போது நடராஜன் மட்டுமே போலீசில் புகார் செய்து உள்ளார்.

    இதே போல் நகை-பணத்தை இழந்தவர்கள் யார்? யார்? என்று கைதான அபிநயா, அவரது 2-வது கணவர் செந்தில்குமார் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் நடத்திய விசாரணையில் இளம்பெண் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து வாலிபரை ஏமாற்றி 2-வதாக திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
    • காதல் திருமணம் செய்த இளம்பெண் முதல் திருமணத்தை மறைத்து 2-வதாக வாலிபரை திருமணம் செய்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை:

    அரியலூர் மாவட்டம் மகாலிங்கபுரத்தை சேர்ந்த 37 வயது கட்டிட தொழிலாளி.

    இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    இந்தநிலையில் தொழிலாளி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கேரளாவுக்கு வேலைக்கு சென்றார். அப்போது இளம்பெண்ணுக்கு போன் மூலமாக கோவை கீரநத்தம் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். அப்போது இளம்பெண் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து வாலிபருடன் பழகி வந்தார்.

    2 பேரும் திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி இளம்பெண் தனது வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்தார். பின்னர் கோவில்பாளையத்துக்கு சென்று தனது கள்ளக்காதலனை சந்தித்தார். பின்னர் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணம் செய்து கொண்ட கையோடு 2 பேரும் பாதுகாப்பு கேட்டு கோவில்பாளையம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இளம்பெண் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து வாலிபரை ஏமாற்றி 2-வதாக திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் இளம்பெண்ணின் முதல் கணவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக கோவில்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து சென்றார். 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இளம்பெண்ணை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.

    காதல் திருமணம் செய்த இளம்பெண் முதல் திருமணத்தை மறைத்து 2-வதாக வாலிபரை திருமணம் செய்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சரவணனை திருமணம் செய்து வைத்த வகையில் சரிதாவுக்கு ரூ.20 ஆயிரம் கிடைத்ததும் மற்ற 8 புரோக்கர்களும் 1 லட்சம் ரூபாயை பங்கு போட்டுக் கொண்டதும் தெரிய வந்தது.
    • மோசடி கும்பல் குறித்து சரவணன் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது தாசப்பகவுண்டர் புதூர்.

    இந்த பகுதியை சேர்ந்த செல்வராஜ், கண்ணம்மாள் தம்பதி மகன் சரவணன் (35). கைத்தறி நெசவு தொழில் செய்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி பெற்றோர் பெண் பார்க்க தொடங்கினர்.

    இதற்காக புளியம்பட்டி பரிசாபாளையத்தை சேர்ந்த மலர், அந்தியூரை சேர்ந்த மற்றொரு பெண், கோபியை சேர்ந்த தங்கமணி, திண்டுக்கல்லை சேர்ந்த முத்துக்காளை, சாத்தூரை சேர்ந்த முத்து, விருதுநகர் மாவட்டம் சூளைக்கரையை சேர்ந்த விஜயலட்சுமி, கவுந்தப்பாடியை சேர்ந்த பாப்பாள், ஈரோட்டை சேர்ந்த சரவணன் ஆகிய 8 புரோக்கர்கள் சரவணனுக்கு பெண் பார்க்க தொடங்கினர்.

    இறுதியில் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரது மகள் சரிதா (27) என்பவரை சரவணனுக்கு பெண் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. பெண் பார்க்கும் போது சரவணனுக்கு சரிதாவை பிடித்து போனது.

    அவரது குடும்பப் பின்னணி குறித்து கேட்டபோது தாய், தந்தை விபத்தில் இறந்து விட்டதாகவும், அண்ணன் ஒருவர் திருமணமாகி கேரளாவில் வசிப்பதாகவும் கூறினர்.

    மேலும் சரிதா ஈரோட்டில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கி பேப்பர் கோன் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்வதாகவும், அவருக்கு அவரது பெரியம்மாள் விஜயலட்சுமி (60) என்பவர் ஆதரவாக உள்ளார் என்றும் கூறப்பட்டது.

    இதனால் மனம் இறங்கிய சரவணன் ஆதரவற்ற ஏழை பெண்ணை திருமணம் செய்தால் குடும்பம் நன்றாக இருக்கும் என்று நினைத்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். அதன்படி கடந்த 20.8.2022 அன்று சரவணன் தனது சொந்த ஊரில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் சரிதாவை திருமணம் செய்து கொண்டார்.

    திருமணம் முடிந்ததும் புரோக்கர்கள் 8 பேருக்கும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை கமிஷனாக சரவணன் கொடுத்தார். மன வாழ்க்கையை தொடங்கிய சரவணன் மனைவி சரிதா மீது அளவு கடந்த பாசம் வைத்தார். தாய் தந்தையை இழந்த பெண் என்பதால் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தார். இப்படியாக சில வாரங்கள் இவர்களது திருமண வாழ்க்கை நல்லபடியாக ஓடியது.

    இப்படி நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை செல்போன் வடிவில் சரவணனுக்கு பேரடியாக வந்து விழுந்தது. ஒரு நாள் மனைவியின் செல்போனை ஏதேச்சையாக சரவணன் பார்த்தார்.

    அப்போது வாட்ஸ்அப்பில் சரிதா அவரது பெரியம்மாள் விஜயலட்சுமிக்கு 2 வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தார். இதைப்பார்த்த சரவணன் போனில் பேசியிருக்கலாமே ஏன் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கிறார் என்று சந்தேகம் அடைந்து அந்த வாய்ஸ் மெசேஜை கேட்டார்.

    அதில் இங்கு எல்லோரும் இருப்பதால் பிரியாக பேச முடியாது. நான் இந்த வாரம் ஊருக்கு போக வேண்டும். ஆஸ்பத்திரிக்கு போகனும். பார்க்க ஆள் இல்லை. ஏதாவது பொய் சொல்லு. குத்து மதிப்பாக ஏதாவது பொய் சொல்லு. பெரியப்பா பாப்பாவை காலேஜில் சேர்க்க போயிட்டார். நான் தனியாக இருக்கேன். இந்த வாரம் பெட்ல சேர சொல்லி இருக்காங்கனு சொல்லு.

    இங்க இருந்துட்டு 10 பைசா என்னால மிச்சம் பண்ண முடியாது. இங்கே ஒரு குறையும் இல்லை என்று பேசி உள்ளார்.

    அடுத்த ஆடியோவில், இந்த வாரம் நீயா வந்து அழைச்சுட்டு போகிற மாதிரி நீயா வா. ஊருக்கு போயிட்டு, குழந்தைகளை பார்த்துட்டு வந்துடறேன். வேறு ஏதாவது கனெக்சன் இருக்கானு பாரு. அவன் கிறுக்கனா இருக்கனும். ஒரு வாரத்துல போயிட்டு ரிட்டர்ன் இங்க வரனும். வேறு ஏதாவது ஆள் இருந்தா பாரு. வயசான ஆளா பாரு. இந்த மாதிரி விவரமான ஆளு வேண்டாம்.

    வயசு அதிகமாக இருக்கிற மாதிரி, போனால் இரண்டு நாளில் எஸ்கேப் ஆகிற மாதிரி ஆளா பாரு. எனக்கு காசு தேவை இருக்கு. நான் ஈரோடு போயி வீட்டை காலி செய்ய வேண்டிய நிலை இருக்கு. ஏகப்பட்ட சிக்கலில் பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு. எல்லோரும் வீட்டில் இருப்பதால் பிரியா பேச முடியலை. அவர்கிட்ட இந்த வாரம் ஊருக்கு போகனும் என்று சொல்லி இருக்கேன். நீ வந்து அழைச்சுட்டு போக வந்தா விட்டுடுவாங்க. வந்து அழைச்சுட்டு போ, ஓடி போயிட மாட்டேன். நான் ஓடி போனா இந்த பையன் ஏதாவது பண்ணினாலும் பண்ணிக்கும். அதுவும் ஒரு பயமா இருக்கு. ரொம்ப பாசமாக இருக்காங்க. அதனால் விட்டுட்டு போகவும் மனசு இல்லை. இப்போதைக்கு கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் சொல்லிக்கலாம் என்ற முடிவில் இருக்கேன். இங்க இருந்து காசு, பணம் சம்பாதிக்க முடியாது. நல்லா யோசனை பண்ணி வேற யாராவது இருந்தால் சொல்லு. நீ வந்தால் போதும் என்று பேசி இருந்தார்.

    இதைக்கேட்ட சரவணன் அதிர்ச்சியில் உறைந்து போனார். பாசம் வைத்த மனைவி மோசடி கும்பலை சேர்ந்தவர் என்பதை அறிந்தவர் ஒரு வாரமாக விரக்தியில் இருந்தார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அவரிடம் கேட்டபோது நடந்தவற்றை கூறினார்.

    அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் சரவணனுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் மோசடி கும்பலை கூண்டோடு பிடிக்க திட்டமிட்டனர்.

    அதன்படி வாய்ஸ் மெசேஜ் குறித்து சரவணன் எதுவும் காட்டி கொள்ளாமல் சரிதாவிடம் தனது நண்பருக்கு பெண் பார்க்க வேண்டும் உனது பெரியம்மாளை பார்க்க சொல் என்று கூறினார்.

    அதன்படி சரிதா தனது பெரியம்மாளிடம் இது குறித்து தெரிவித்தார். அவர் கணவரை பிரிந்ததாக ஒரு பெண்ணின் போட்டோவை அனுப்பி வைத்தார். நண்பருக்கு பெண் பிடித்து விட்டது. மணப்பெண்ணை அழைத்து வந்தால் எளிமையாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று சரவணன் கூறினார். அதன்படி ரூ.80 ஆயிரம் கமிஷன் பேசப்பட்டது.

    இதனை அடுத்து சரிதாவின் பெரியம்மாள் ஒரு காரில் ஒரு பெண்ணை தாசப்பன்கவுண்டன் புதூருக்கு அழைத்து வந்தார். அவர்களை நண்பர்களுடன் சேர்ந்து சரவணன் மடக்கி பிடித்தார். இதனால் விஜயலட்சுமி, சரிதா மற்றும் விஜயலட்சுமியுடன் வந்த பெண் ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    திருமணம் செய்ய வந்த பெண்ணை விசாரித்த போது அவர் கரூர் மாவட்டம் திருமாநல்லூரை சேர்ந்த அர்சுணன் என்பவரது மனைவி விஜயா (36) என்பது தெரிய வந்தது. சரிதா உள்பட 3 பேரிடம் இருந்த செல்போனை வாங்கி விசாரித்த போது இவர்கள் திருமணம் ஆகாத வயதான வாலிபர்களையும், மனைவியை இழந்த வயதானவர்களையும் குறி வைத்து திருமண கமிஷனுக்காக இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    மேலும் சரவணனை திருமணம் செய்து வைத்த வகையில் சரிதாவுக்கு ரூ.20 ஆயிரம் கிடைத்ததும் மற்ற 8 புரோக்கர்களும் 1 லட்சம் ரூபாயை பங்கு போட்டுக் கொண்டதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து மோசடி கும்பல் குறித்து சரவணன் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது சரிதா ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவரை இதேபோன்று மோசடியாக ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு அவரிடம் 2½ லட்சம் ரூபாய் பறித்து கொண்டு தப்பியதும் அந்த டிரைவர் சரிதாவை தேடி கண்டுபிடித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டு வெளியே தெரிந்தால் அவமானம் என்று விரட்டி விட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

    சரிதாவின் பெரியம்மாளாக நடித்த விஜயலட்சுமியின் கணவர் ராமேஸ்வரம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்து ஓய்வுபெற்றவர். சரவணனின் நண்பருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அழைத்து வந்த கரூர் மாவட்டம் திருமாநல்லூரை சேர்ந்த அர்சுணன் மனைவி விஜயாவிற்கு 21 வயதில் ஒரு மகளும் 19 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    சரிதா மேலும் இதே போன்று 4 பேரை திருமணம் செய்து ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுபோக இந்த மோசடி கும்பல் இன்னும் நிறைய பேரை ஏமாற்றி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    இது குறித்து சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சம்பவம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி திருமண ஆசை காட்டி பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது.
    • தமிழகம் முழுவதும் பெண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பட்டியலை போலீசார் தாயரித்து வருகிறார்கள்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள சாணாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 48) லாரி டிரைவர். இவரது மனைவி ரம்யா, இந்த தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    ரம்யா ஓராண்டுக்கு முன் உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்த நிலையில், செந்தில் மறுமணம் செய்திட முடிவு செய்து, ஜோடி ஆப்-ல் பதிவு செய்து பெண் தேடி வந்தார். அதே ஆப் மூலமாக அறிமுகமாகிய பெண் ஒருவர் தான் கணவரை இழந்தவர் என்றும், நான் உங்களைப் போன்ற ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என ஆசைவார்த்தை கூறி அவரை ஏமாற்றி திருமணம் செய்தார்.

    பின்னர் திருமணம் முடிந்து ஒரு நாள் மட்டும் வீட்டிலிருந்த அந்த பெண் செந்தில் வீட்டில் இருந்த 4½ பவுன் நகை, பணம் மற்றும் செல்போனுடன் திடீரென மாயமானார். இது குறித்து செந்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது, அதன் விவரம் வருமாறு-

    டிரைவர் செந்திலை ஏமாற்றி விட்டு தலைமறைவான அந்த பெண் ஏற்கனவே கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த சலவை தொழிலாளி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி உள்பட பலரை இதே வகையில் ஏமாற்றி பணம், நகைகளை மோசடி செய்தது தெரிய வந்தது.

    மேலும் இது போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி திருமண ஆசை காட்டி பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பட்டியலை போலீசார் தாயரித்து வருகிறார்கள். ஆனால் அவரது பெயர், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அந்த பெண் தனது வழக்கறிஞர்கள் மூலம் பாதிக்கப்பட்ட லாரி டிரைவர் செந்தில் உடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. இதை ஏற்க மறுத்த செந்தில் சம்பந்தப்பட்ட பெண் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்ததால் தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக உள்ள அந்த பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட செந்தில் கூறியதாவது-

    ஏற்கனவே மனைவியை இழந்த நான் கடும் துயரத்தில் இருந்த போது சம்பந்தப்பட்ட அந்த பெண் என்னிடம் ஆறுதலாக பேசி எனது மனதை மாற்றினார், தொடர்ந்து அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சேலத்திற்கு வந்து அங்குள்ள ஒரு கோவில் முன் என்னை தாலி கட்ட சொல்லி வற்புறுத்தினார் .

    பிறகு என் வீட்டிற்கு வந்த அவர் எனது மனைவி , மகன் நகைகள் , பணம் மற்றும் செல்போன் உள்பட விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்து கொண்டு திடீரென மாயமானார்.

    இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வரை சென்று மீண்டுள்ளேன். இதுபோல் அந்த பெண் வேறு யாரையும் ஏமாற்றாமல் இருக்கும் வகையில் காவல்துறையினர் அவர் மீது விசாரணை மேற்கொண்டு அவரை சட்டத்தின் முன்னிறுத்தி உரிய தண்டனை பெற்று தர வேண்டும், இதற்கு நான் உறுதுணையாக இருப்பேன் என கண்ணீர் மல்க கூறினார்.

    • திருமணம் முடிந்ததும் இரண்டு நாளைக்கு மட்டுமே மாப்பிள்ளை வீட்டில் பெண் இருப்பார்.
    • கார் டிரைவர் ஜெயவேலை அனுப்பி மணப்பெண்ணை கொண்டு வந்து விடுவோம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால் (வயது 33). இவருக்கும், மதுரையை சேர்ந்த போலி திருமண கும்பலை சேர்ந்த சந்தியா (26) என்ற பெண்ணுக்கும் கடந்த 7-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 2-வது நாளில் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக்கொண்டு சந்தியா மாயமானார்.

    திருமண ஆசையில் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து தனபால் பரமத்திவேலூர் போலீசில் கொடுத்தார். அதன் பேரில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போலி மணப்பெண் சந்தியா, பெண் புரோக்கர் தனலட்சுமி ஆகிய இருவரும் சேலம் பெண்கள் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் கார் டிரைவர் ஜெயவேல், பெண் புரோக்கர் தனலட்சுமியின் உறவினர் ஏ.சி. மெக்கானிக் கவுதம் ஆகிய இருவரும் பரமத்தியில் உள்ள கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் மோசடி திருமணங்கள் நடத்திய அய்யப்பன் போலீஸ் பிடியிலிருந்து தப்பினார். தற்போது அவர் பேசிய வீடியோ வைரலாக வருகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் இதேபோல் வேறு பெண்களை வைத்து சுமார் 12 மோசடி திருமணங்கள் நடந்திருக்கிறது. மதுரையை சேர்ந்த பாலமுருகன் நெட்ஒர்க் தலைவனாக இருந்து கொண்டு அவன் சொல்கின்ற வேலைகளை நாங்கள் செய்வோம்.

    திருமணம் முடிந்ததும் இரண்டு நாளைக்கு மட்டுமே மாப்பிள்ளை வீட்டில் பெண் இருப்பார். பிறகு கார் டிரைவர் ஜெயவேலை அனுப்பி மணப்பெண்ணை கொண்டு வந்து விடுவோம். புரோக்கர் பாலமுருகனுக்கும் இந்த திருமண மோசடிகளுக்கு கார் டிரைவர் ஆக ஜெயவேல் இருந்துள்ளார்.

    ஓடிவரும் பெண்ணிடம் இருக்கும் பொருளை விற்று கார் டிரைவருக்கு கொடுப்போம். இந்த திருமண மோசடி தொழிலை கடந்த நான்கு வருடங்களாக தமிழக முழுவதும் செய்து வந்துள்ளோம். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 மோசடி திருமணங்களை நடத்தி வைக்கப்பட்டுள்ளது. தப்பு பண்ணிட்டேன் இதுக்கு மேல இவங்க கூட நான் சேர மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த வீடியோ பரமத்திவேலூர் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.

    அய்யப்பன் தப்பிய விவகாரம், வைரலாகும் வீடியோ ஆகியவை குறித்து பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் கூறும்போது, அய்யப்பன் பேசுவதாக கூறும் வீடியோ போலீசார் வாக்குமூலமாக எடுத்தது அல்ல. அவர் மீது புகார் கொடுத்தவர்கள் எடுத்ததாக தெரிகிறது. தப்பிய அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து தான் அய்யப்பன் தப்பி ஓடினார்.

    இதனிடையே அய்யப்பன் என்ற பெயரில் யாரும் சிகிச்சைக்கு இங்கு வரவில்லை என அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
    • போலீசார் மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர் :

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை அருகே உள்ள கள்ளிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் தனபால் (வயது 37). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தியா (27). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 7-ந் தேதி பரமத்திவேலூர் அண்ணா நகர் அருகே உள்ள புதுவெங்கரையம்மன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

    இந்த திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில் மணமகளின் அக்காள் மற்றும் மாமா என 2 பேர் மட்டுமே வந்திருந்ததாக‌ கூறப்படுகிறது. திருமணத்திற்கு ஏற்பாடு செய்த திண்டுக்கல் மாவட்டம் தாதன்குளத்தை சேர்ந்த புரோக்கர் பாலமுருகன் (45) என்பவர் திருமணம் முடிந்த பின்னர் அதற்கான கமிஷன் தொகையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்று கொண்டு மணமகளின் அக்கா மற்றும் மாமா என்று கூறி வந்த 2 பேரையும் அழைத்து கொண்டு சென்று விட்டார்.

    இந்த நிலையில் புதுமாப்பிள்ளை தனபால் பல கனவுகளுடன் தனது வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் 2 நாட்களில் தனபாலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 3-வது நாளில் தனபால் காலையில் எழுந்து பார்த்தபோது ‌‌தனது ஆசை மனைவி சந்தியாவை காணாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சந்தியாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து தனபால் உடனே மனைவி சந்தியா, புரோக்கர் பாலமுருகன் மற்றும் உறவினர்களாக வந்த 2 பேருக்கு போன் செய்தபோது, அனைவரது செல்போன்களும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது திருமண பட்டு சேலை மற்றும் சந்தியா கொண்டு வந்த துணிமணிகள் இல்லாததை கண்டு திடுக்கிட்ட தனபால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

    இதுகுறித்து தனபால் வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது ஒருபுறம் இருக்க அதே பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கு திருமணம் செய்து கொடுக்க மணமகளை தேடியபோது வேறு ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்ததை அறிந்த தனபால் அந்த நபர் மூலம் சந்தியா, புரோக்கர் மற்றும் உடன் வந்தவர்களை பிடிக்க எண்ணினார்.

    அதன்படி அந்த நபர் திருமணம் செய்து கொள்ள தனது விருப்பத்தை மதுரை மேலவாசல் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த புரோக்கர் தனலட்சுமியிடம் (45) கூறினார். பின்னர் மணமகனின் போட்டோவையும் புரோக்கரிடம் கொடுத்தனர். அதில் மணமகளுக்கு மாப்பிள்ளையை பிடித்துள்ளது என தனலட்சுமி செல்போனில் கூறியதையடுத்து திருமணத்தை முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் காலை திருச்செங்கோட்டில் உள்ள கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்து மணப்பெண் சந்தியா மற்றும் தனலட்சுமியின் உறவினர் என கூறப்பட்ட 4 பேர் உள்பட 5 பேர் ஒரு காரில் திருச்செங்கோடு வந்தனர். அப்போது அங்கு நின்ற தனபால் மற்றும் அவருடைய உறவினர்கள் சேர்ந்து சந்தியா, அவருடன் வந்தவர்களை மடக்கி பிடித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் சந்தியாவுக்கு இதுவரை 6 திருமணங்களை நடத்தி வைத்து நகை, பணம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

    தற்போது சந்தியாவுக்கு திருச்செங்கோட்டில் நடைபெற இருந்தது 7-வது திருமணம் ஆகும். இதையடுத்து சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, மதுரை மாவட்டம் வில்லாபுரம் அம்மாச்சியார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் மெக்கானிக் கவுதம் (26), மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மேல்நாச்சியாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் கார் டிரைவர் ஜெயவேல் (30) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவான புரோக்கர் பாலமுருகன் மற்றும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலை பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் அய்யப்பன் (28) ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கைதான 'கல்யாண ராணி' சந்தியா ஒவ்வொரு திருமணத்தின்போதும் மணமகன் வீட்டில் இருந்து நெருங்கி பழகி நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு மாயமாகி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் இந்த மோசடியில் ஒரு கும்பலே ஈடுபட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சினிமா போல நடந்த இந்த சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் சந்தியா மற்றும் புரோக்கர்கள் எத்தனை இடங்களில் இதுபோல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராமுவும், அவரது மனைவி லட்சுமியும் சேர்ந்து இதேபோல பல பெண்களை ஏமாற்றி பணம், நகை பறித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
    • ராமுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

    கோவை:

    கோவைப்புதூர் அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் 37 வயது பெண். இவரது கணவர் இறந்து விட்டார். இதனையடுத்து அவர் 2-வது திருமணம் செய்வதற்காக திருமண தகவல் மையம் மூலம் இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

    இதனை பார்த்த சின்ன தடாகத்தை சேர்ந்த ராமு என்பவர் பெண்ணை தொடர்பு கொண்டு தான் சுங்கத்துறையில் இணை கமிஷனராக பணியாற்றுவதாகவும், தனக்கு திருமணமாகி மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டதால் திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார்.

    கடந்த மாதம் 17-ந்தேதி பெண் ராமுவை சந்திக்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து ராமு சீருடை அணிந்து சென்று பெண்ணை சந்தித்து பேசினார்.

    பின்னர் ராமுவின் பேச்சை நம்பிய பெண் அவரை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். 2 பேரும் அடுத்த மாதம் திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.

    இந்தநிலையில் ராமு பெண்ணை கடைக்கு அழைத்து சென்று ரூ.50 ஆயிரத்துக்கு துணிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார். மேலும் பெண்ணை தொடர்பு கொண்ட ராமு தனது விவாகரத்து ஆன மனைவி ரூ.25 ஆயிரம் பணம் கேட்பதாக தெரிவித்தார். நாம் திருமணம் செய்ய உள்ளதால் அவர் கேட்பதால் பணம் கொடுக்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து பெண் ஆன்லைன் மூலமாக ராமுவுக்கு ரூ.25 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தார்.

    அதன் பின்னர் அவர் பெண்ணிடம் பேசுவதையும் பழகுவதையும் தவிர்ந்து வந்தார். இதனால் ராமு மீது பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சுங்கத்துறை அலுவலகத்துக்கு சென்று ராமு என்பவர் இணை கமிஷனராக வேலை பார்க்கிறாரா என விசாரணை நடத்தினார். அப்போது அப்படி யாரும் வேலை பார்க்கவில்லை என்பது அவருக்கு தெரிவந்தது. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சுங்கத்துறை அதிகாரியாக நடித்து பெண்ணிடம் ரூ.75 ஆயிரம் மோசடி செய்த ராமுவை கைது செய்தனர். இதற்கு உந்தையாக இருந்த அவரது மனைவி லட்சுமி (34) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கணவன்-மனைவி இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட ராமு இதேபோல சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த பெண்ணிடம் தான் சுங்கத்துறை அதிகாரி என கூறி அறிமுகமாகி உள்ளார்.

    பின்னர் அவர் அந்த பெண்ணிடம் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலமாக பயணிகள் கடத்தி வந்த தங்க நகைகள் தன்னிடம் ஏராளமாக உள்ளதாக கூறி அந்த பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராமுவும், அவரது மனைவி லட்சுமியும் சேர்ந்து இதேபோல பல பெண்களை ஏமாற்றி பணம், நகை பறித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதனால் ராமுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

    • கடந்த 2005-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
    • முதல் மனைவிக்கு தெரியாமல் 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த வேறு ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

    ஆந்திர மாநிலம் அம்பவாரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் 16-ந் தேதி விஜயவாடாவை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தம்பதியினர் ஐதராபாத்தில் வாடகை வீடு எடுத்து தங்கினர்.

    இந்த நிலையில் புதியதாக வீடு கட்ட ரூ.80 லட்சம் தேவைப்படுவதாகவும், உன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று பணத்தை வாங்கி வர வேண்டும் என இளம்பெண்ணிடம் சதீஷ்குமார் கூறினார். அதற்கு இளம்பெண் தன்னுடைய தாய் வீட்டில் அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்தார்.

    பணத்தை வாங்கி வரவில்லை என்றால் படுக்கை அறையில் எடுத்த நிர்வாண போட்டோக்களை ஆபாச வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார். இதையடுத்து இளம்பெண் பணம் வாங்கி வருவதாக கூறி தனது தாய் வீட்டிற்கு செல்லாமல் பெங்களூருவில் உள்ள தனது தோழி வீட்டிற்கு சென்று அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    பெங்களூருக்கு சென்ற சதீஷ்குமார் தனது மனைவி வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்று மனைவியை மீண்டும் மிரட்டினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் கணவரின் செல்போனை பிடுங்கி அதில் உள்ள போட்டோக்களை ஆய்வு செய்தபோது மேலும் 4 பெண்களை அவர் திருமணம் செய்த போட்டோக்கள் செல்போனில் இருந்தது.

    இதனைக் கண்டு திடுக்கிட்ட இளம்பெண் இதுகுறித்து குண்டூர் டி.ஐ.ஜி.யிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகூர் மீரான், தரங்கினி ஆகியோர் சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கடந்த 2005-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

    இதையடுத்து தனது மனைவியுடன் அமெரிக்காவில் வேலைக்குச் சென்ற சதீஷ் பாபு முதல் மனைவிக்கு தெரியாமல் 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த வேறு ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தகவல் முதல் மனைவிக்கு தெரிந்ததால் அவரை விவாகரத்து செய்துள்ளார்.

    மீண்டும் ஆந்திராவிற்கு வந்த சதீஷ்குமார் குண்டூர் நரசராவ் பேட்டை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 2017-ம் ஆண்டும், 2019-ம் ஆண்டு நெல்லூரை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து மேலும் இதுபோல் வேறு பெண்கள் யாரையாவது திருமணம் செய்து ஏமாற்றினாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணமாகி விவாகரத்து பெற்று வரன் தேடும் வசதியான பெண்களை கண்டுபிடித்து காதல் வலை வீசினார் சிவசங்கர் பாபு.
    • சிவசங்கர் பாபுவை திருமணம் செய்த சில பெண்கள் தற்போது கர்ப்பம் அடைந்து உள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் அடப்பா சிவசங்கர் பாபு. இவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுவதாகவும் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.

    திருமணமாகி விவாகரத்து பெற்று வரன் தேடும் வசதியான பெண்களை கண்டுபிடித்து காதல் வலை வீசினார். அவர்களின் நம்பிக்கையை பெரும் அளவிற்கு நைசாக பேசி மனதை மயக்குவார். இதை உண்மை என நம்பிய விவாகரத்து பெற்ற இளம்பெண்கள் 7 பேரை அடுத்தடுத்து திருமணம் செய்து லட்சக்கணக்கில் நகை, பணத்தை மோசடி செய்துள்ளார்.

    இளம்பெண்ணை திருமணம் முடித்த சில மாதங்களில் அவரிடமிருந்து நகை, பணத்தை வாங்கிக்கொண்டு அடுத்த பெண்ணை தேடி செல்வார்.

    ஒரே பெண்ணிடம் மட்டும் ரூ.30 லட்சம் பணம் மற்றும் ஏராளமான நகைகளை ஏமாற்றி வாங்கிச்சென்று அடகு வைத்தது தெரிய வந்தது. சிவசங்கர் பாபுவை திருமணம் செய்த சில பெண்கள் தற்போது கர்ப்பம் அடைந்து உள்ளனர்.

    அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபுவை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் கச்சிபவுலி போலீசார் சிவசங்கர் பாபுவை கைது செய்தனர். மேலும் இதுபோல் பெண்களை ஏமாற்றி உள்ளாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×