search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 232788"

    • நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீசார் மீட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டினர்.
    • நகைகள் மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டு அவற்றை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்கின்றனர்

    சென்னை:

    திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பணம், நகைகளை கைப்பற்றியதாக கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வலம் வருகிறது. 

    அதில், 'திருமலை திருப்பதி பாலாஜி கோயிலில் 16 அறங்காவலர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரின் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 128 கிலோ தங்கம்... 150 கோடி ரூபாய் ரொக்கம்... 70 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள்!!!' என்று பதிவிடப்பட்டுள்ளது.

    அந்த வீடியோவில், ஏராளமான நகைகள் மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டு அவற்றை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுப்பதுபோல் உள்ளது.

    இந்த வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் வீடியோவுடன் பகிரப்படும் தகவல் குறித்து கூகுள் மூலம் தேடும்போது, ஏற்கனவே இந்த வீடியோவை, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலரான சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையுடன் தொடர்புபடுத்தி கடந்த ஆண்டு வெளியிட்டதும், அது உண்மைல்ல என்றும் தெரியவந்தது. 

    உண்மையில் அந்த வீடியோவது, தமிழகத்தின் வேலூரில் உள்ள ஒரு நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை காவல்துறையினர் மீட்டு, பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டியபோது எடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. வீடியோவில் 'மாவட்ட காவல்துறை, வேலூர்' என தெளிவாக இருக்கிறது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளது. அதே வீடியோவையே மீண்டும் சமூக வலைத்தளங்களில் உலவ விட்டுள்ளனர்.

    எனவே, தற்போது பரவும் வீடியோவுக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் வீட்டில் நடந்த ரெய்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகிறது.

    • ஜப்பான் மின்சாரத்துறை மந்திரி தலைகுனிந்து மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக பதிவிட்டிருந்தார்.
    • இந்த புகைப்படத்தை மியான்மரில் 2018ம் ஆண்டில் இருந்தே பரப்பி வருகின்றனர்.

    ஜப்பான் மின்சாரத்துறை மந்திரியின் புகைப்படம் என்று கூறி, சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக ஒரு புகைப்படம் வலம் வருகிறது. ஜப்பானில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைபட்டதற்காக பொதுமக்கள் மத்தியில் மின்சாரத்துறை மந்திரி 20 நிமிடங்கள் தலைகுனிந்து மன்னிப்பு கேட்பதாக, அந்த புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தனர்.

    இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ததில், அது 2015ல் வெளியான புகைப்படம் என்பதும், அதில் தலைகுனிந்து நிற்பவர் ஜப்பான் மின்சாரத்துறை மந்திரி இல்லை என்பதும் தெரியவந்தது. புகைப்பட ஏஜென்சியான நிப்பான் நியூஸ் இந்த புகைப்படத்தை வெளியிட்டு, படவிளக்கத்தையும் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, புகைப்படத்தில் இருப்பவர் ஜப்பானின் முன்னணி கார் நிறுவனமான ஹோண்டா மோட்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற டகாஹிரோ ஹசிகோ ஆவார். அவர் தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது செய்தியாளர்கள் முன்னிலையில் தலைகுனிந்து வணக்கம் தெரிவித்திருக்கிறார். எனவே, அவர் ஜப்பான் மின்சாரத்துறை மந்திரி என்ற கூற்று உண்மையல்ல என்று தெளிவாகிறது.

    இந்த புகைப்படத்தை ஜப்பான் மந்திரியுடன் தொடர்புபடுத்தி மியான்மரில் 2018ம் ஆண்டில் இருந்தே பரப்பி வருகின்றனர். கடந்த மே மாதம் 6ம் தேதியில் இருந்து மீண்டும் இப்படம் வைரலானது. அதில், 'நீங்கள் மியான்மரில் மந்திரியாக இருந்தால் எப்போதும் குனிந்து ஒரு கட்டத்தில் விழுந்து இறந்துவிடுவீர்கள்' என்று தங்கள் கருத்தையும் பதிவிட்டு வைரலாக்கினர். பலமுறை இந்த புகைப்படம் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது.

    தற்போது தமிழகத்தை தொடர்புபடுத்தி, வாசகத்தை மாற்றி இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். சில இடங்களில் செடி வளர்ந்து மின்கம்பியோடு மோதும் பொழுது அதில் அணில் ஓடும், அணில் மின்கம்பிகளில் ஓடும்போது இரு கம்பிகளும் இணைவதால் மின்தடை ஏற்படுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். அவர் சொன்னதை வைத்து கேலி செய்யும் வகையில் இந்த புகைப்படத்துடன் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர். 

    • பீதியை ஏற்படுத்தும் விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்தது.
    • பொதுமக்கள் தேவையில்லாத அழைப்புகளை எடுக்காமல் உஷாராக இருப்பது நல்லது என அறிவுறுத்தல்

    சென்னை:

    மும்பை போலீசார் எச்சரிக்கை விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் 140 என்று தொடங்கும் செல்போன் எண்களில் இருந்து அழைப்பு வந்தால் அதை எடுக்காதீர்கள், அப்படி எடுத்து பேசினால் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் பறிபோகும், எச்சரிக்கையாக இருங்கள், என்று போலீசார் கூறுகின்றனர். மும்பையில் உள்ள சாலையில் போலீசார் நின்ற படியும், ரோந்து வாகனங்களில் சென்ற படியும் இது பற்றி ஒலிபெருக்கியில் எச்சரிக்கை விடுகிறார்கள். இதேபோல் மகாராஷ்டிர காவல்துறை கூறியதாக வாட்ஸ்அப் குழுக்களில் ஒரு எச்சரிக்கை தகவல் பரப்பப்பட்டது.

    ஒரு ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளம் செய்த வித்தியாசமான விளம்பரப் பிரச்சாரத்தால்தான் இந்த பிரச்சனை ஆரம்பித்து, மும்பைவாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. 140ல் தொடங்கும் ஒரு செல்போன் எண்ணில் இருந்து பேசிய நபர், ஒரு கொலையை நேரில் பார்த்ததாகவும், அந்த கொலையை தனது போனில் படம் பிடித்ததாகவும், கொலையாளிகள் தன்னைப் பின்தொடர்ந்ததாகவும் கூறி உள்ளார். மறுமுனையில் அவரது உரையாடலை கேட்ட நபர் அதிர்ச்சியில் உறைய, 'இது புதிய நிகழ்ச்சிக்கான விளம்பர அழைப்பு' என்று கூறியிருக்கிறார்கள். இதுபோன்று பலரை தொடர்புகொண்டு பேசி உள்ளனர்.

    அந்த நபர் பேசியதை பதிவு செய்து காவல்துறையின் டுவிட்டர் மற்றும் ஹெல்ப்லைனில் பலரும் புகார் அளித்துள்ளனர். அதன்பிறகே 140ல் தொடங்கும் எண்களில் இருந்து வந்தால் யாரும் அழைப்பை எடுக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தலை வழங்கி உள்ளனர்.

    இந்த தகவல் வேகமாக பரவ மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த தகவல் உண்மைதானா? என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர்.

    இதுபற்றி, மகாராஷ்டிர காவல்துறையின் சைபர் பாதுகாப்பு பிரிவு டிஐஜி விளக்கம் அளித்தார். ரோந்து காவல்துறையின் மொபைல் வேன்கள் தவறான எச்சரிக்கையை வெளியிட்டதாகவும், 140ல் தொடங்கும் எண்கள் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் எண்கள் என்றும் தெளிவுபடுத்தினார்.

    மேலும், ஒருவர் தனது வங்கிக் கணக்கு விவரங்கள், OTP அல்லது கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு எண்ணை கொடுக்காத வரையில் எந்த பாதிப்பும் இல்லை என்று சைபர் போலீஸ் தெரிவித்துள்ளது. மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்தது.

    எனவே, 140 என்று தொடங்கும் செல்போன் அழைப்பை எடுத்தால் வங்கி பணம் பறிபோகும் என்ற கூற்று உண்மையில்லை என்பது தெளிவாகிறது. இருப்பிலும் இந்த தகவல் மீண்டும் மீண்டும் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படுகிறது.

    இது தொடர்பாக சென்னையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தொலைபேசியில் பேசும் மோசடி கும்பல் வங்கி வாடிக்கையாளர்களின் விவரங்களை கேட்டறிந்து மோசடி செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த கும்பல் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு நம்பர், ரகசிய நம்பர் ஆகியவற்றை வாங்கி மோசடியில் ஈடுபடுகிறது.

    மும்பையில் 140 என்று தொடங்கும் போன் நம்பரை எடுத்ததும் வங்கி பணம் மோசடி செய்யப்படுவதாக தகவல் பரவுகிறது.

    சென்னையில் இது போன்ற மோசடி இதுவரை நடைபெறவில்லை. ஆனாலும் பொதுமக்கள் இது போன்ற தேவையில்லாத அழைப்புகளை எடுக்காமல் உஷாராக இருப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2010ல் ஆன்லைன் சமூக வலைத்தளமான டீவியன்ட் ஆர்ட்டில் இதே புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.
    • டிஜிட்டல் டூல்களை பயன்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டது என்ற உண்மை வெளிப்படுகிறது.

    சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக, சிறகுகள் கொண்ட பாம்பின் புகைப்படம் வைரலானது. அது உண்மையான பாம்புதான் என்ற வகையில் கருத்து பகிரப்பட்டது. அந்த படத்தைப் பார்த்த மக்கள் பலரும் ஆச்சரியமடைந்தனர். அதேசமயம், இது உண்மையாக இருக்காது, ஏமாற்று வேலை என்றும் பலர் கமென்டில் பதிவிட்டனர்.

    இதையடுத்து இந்த படத்தின் உண்மைத்தன்மையை சரிபார்த்ததில், சாதாரண பாம்பின் புகைப்படத்தை டிஜிட்டல் முறையில் சிறகுகள் இணைத்து உண்மையான பாம்பு போன்று சித்தரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம், படத்தை தேடியபோது, ஓவியர்கள் மற்றும் கலை ஆர்வலர்களுக்கான ஆன்லைன் சமூக வலைத்தளமான டீவியன்ட் ஆர்ட்டில் அதே படம் பகிரப்பட்டிருந்தது தெரியவந்தது. குராமே என்ற பயனர் 2010இல் அப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் திட்டத்திற்காக இதை உருவாக்கியதாக கூறியிருந்தார். ஒரு பாம்பின் புகைப்படம் மற்றும் இறக்கைகளின் படத்ததை தனித்தனியாக சேகரித்தாக கூறியிருந்தார். எனவே, டிஜிட்டல் டூல்களை பயன்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டது என்ற உண்மை வெளிப்படுகிறது. பழைய படத்தை சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக்கி வருவதும் தெரியவந்தது.

    மேலும், இன்றுவரை சிறகுகள் கொண்ட பாம்பு போன்ற உயிரினங்கள் எதுவும் இல்லை. கடந்த காலங்களில் கூட இத்தகைய உயிரினம் இருந்ததற்கான பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களோ அல்லது படங்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பிடிஐ செய்தி நிறுவனத்தின் பெயரில் வெளியான ஒரு டுவிட்டர் பதிவு வைரலானது.

    மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியின் அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருக்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடனான கூட்டணியை சிவ சேனா முறித்துக்கொண்டு பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க வேண்டும் என அதிருப்தி குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

    இந்த சூழ்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்தின் பெயரில் வெளியான ஒரு டுவிட்டர் பதிவு வைரலானது. மகாராஷ்டிர முதல்வராக பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிசை தேர்ந்தெடுக்காவிட்டால் சகி நாகா ரெயில் நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவேன், என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுப்பதாக அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பார்த்த பலரும் அன்னா ஹசாரேவுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர்.

    இதையடுத்து, உண்மை சரிபார்க்கும் ஊடக நிறுவனமான பூம், இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டதில், சம்பந்தப்பட்ட பதிவு வெளியான டுவிட்டர் கணக்கு பிடிஐ பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் போலியான கணக்கு என்பது கண்டறியப்பட்டது. அத்துடன், மகாராஷ்டிராவில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பாக, அன்னா ஹசாரே எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் தெரியவந்தது.

    மேலும், அந்த தகவலின் குறிப்பிட்டபடி மும்பை அந்தேரி கிழக்கில் அமைந்துள்ள சகி நாகாவில் ரெயில் நிலையம் இல்லை, மெட்ரோ நிலையம் மட்டுமே உள்ளது. எனவே, பிடிஐ பெயரில் வெளியிடப்பட்ட பதிவு போலியானது என உறுதி செய்யப்பட்டது.

    • ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயிலில் மூத்த குடிமக்களுக்கான சலுகை அமலுக்கு வர உள்ளதாக பொய்யான ஊடக தகவல் தெரிவிக்கிறது.
    • மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை ரத்து செய்ததால் அரசுக்கு கூடுதலாக 1500 ரூபாய் கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

    புது டெல்லி:

    இந்தியாவில் ரெயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. அதன்பின் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டபோது அனைத்து கட்டண சலுகைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

    பின் ரெயில் போக்குவரத்து தொடங்கியதில் இருந்து மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், 11 விதமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் ரயில் பயணத்தில் கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேள்வி எழுந்தபோது, மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை ரத்து செய்ததால் அரசுக்கு கூடுதலாக 1500 ரூபாய் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

    இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட கட்டண சலுகை மீண்டும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக செய்திகள் பரவின. இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என ரெயில்வே அமைச்சகம் இணையத்தில் மறுத்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயிலில் மூத்த குடிமக்களுக்கான சலுகை அமலுக்கு வர உள்ளதாக பொய்யான ஊடக தகவல் தெரிவிக்கிறது. இது போன்ற எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை. மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் & மாணவர்களுக்கு மட்டுமே பயண கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

    இவ்வாறு ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ×