search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 232838"

    • விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக வந்த எருமை மாடுகள் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.
    • உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியை அடுத்துள்ள பெருமாட்டு நல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்னிவாக்கம் கிராமத்தில் காயரம்பேடு கிராமத்தை சேர்ந்த கண்ணையா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.

    நேற்று அங்கு மின் கம்பி அறுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக வந்த 4 எருமை மாடுகள் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தன. உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் அப்பகுதிக்கு வந்து இறந்து கிடந்த மாடுகளை அப்புறப்படுத்தி விசாரித்து வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தினேஷ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • தகவல் அறிந்து சென்ற ராமாபுரம் போலீசார் தினேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போரூர்:

    சென்னை ராமாபுரம் பூத்தப்பேடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (30). அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு மது போதையில் வீடு திரும்பிய தினேஷ் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று படுத்து தூங்கினார். பின்னர் நள்ளிரவில் கண் விழித்து எழுந்த தினேஷ் தனது கையை மேலே தூக்கியதாக தெரிகிறது. அப்போது தலைக்கு மேலே சென்ற உயர் மின் அழுத்த கம்பியின் மீது எதிர்பாராத விதமாக அவரது கை பட்டது.

    இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தினேஷ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற ராமாபுரம் போலீசார் தினேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த மழை காரணமாக கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்தது.
    • பெரியம்மா கம்பியை தொட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.

    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுபாக்கம் புதுகாலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயி. அவரது மனைவி பெரியம்மா. இவர் நேற்று இரவு துணிதுவைத்துவிட்டு அதனை காய வைப்பதற்காக வீட்டின் வெளிபுறம் உள்ள கம்பியில் தொங்கவிட்டார்.

    அப்போது பலத்த மழை காரணமாக அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்தது. இதனை கவனிக்காமல் பெரியம்மா கம்பியை தொட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இவரது அலறல் சத்தம்கேட்டு கணவர் ஆறுமுகம் ஓடிவந்தார். அவர் தனது மனைவியை காப்பாற்ற முயன்றபோது அவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    இதனை அறிந்த வீட்டில் இருந்த ஆறுமுகத்தின் மகன் மணிகண்டன் (வயது 32). ஓடிவந்து தனது பெற்றோரை காப்பாற்ற முயன்றார். அப்போது மணிகண்டனும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனை அறிந்த கிராம மக்கள் அங்கு வந்தனர். 3 பேரும் மயங்கி கிடப்பதை பார்த்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன், ஆறுமுகம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பெரியம்மாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே வீட்டில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பவித்திரன் மேல்மருவத்தூர் தனியார் கல்லூரி ஒன்றில் என்ஜினியரிங் படித்து வருகிறார்.
    • விவசாய நிலத்தில் உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் பம்ப் சுவிட்ச்சை போட்டபோது எதிர்பாராத விதமாக உடலில் மின்சாரம் பாய்ந்தது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த வீராபுரத்தை சேர்ந்தவர் மகன் பவித்திரன், (வயது 20) மேல்மருவத்தூர் தனியார் கல்லூரி ஒன்றில் என்ஜினியரிங் படித்து வருகிறார். அவரது விவசாய நிலத்தில் உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் பம்ப் சுவிட்ச்சை போட்டபோது எதிர்பாராத விதமாக உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட பவித்திரன் அதே இடத்தில் உயிரிழந்தார்.

    திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • ஆற்காடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பெரிய குக்குண்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). விவசாயி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

    தம்பதிக்கு சொந்தமாக விவசாய நிலம் வீட்டின் அருகே உள்ளது. நிலத்திற்கு செல்வதற்காக இன்று காலை சுமார் 7 மணி அளவில் சரவணன் நடந்து சென்றார். வயல்வெளியில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்தது.

    அதில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

    இதனை அறியாமல் சரவணன் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக இறந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு சாந்தி நிலத்திற்கு ஓடி வந்தார். அப்போது சரவணன் மீது மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது தெரியாமல் அவரை தூக்க முயன்றார். இதில் சாந்தி மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதனைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்கும், மின்சார துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது சம்பந்தமாக ஆற்காடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சாரம் தாக்கி தம்பதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • இன்று காலை வழக்கம் போல் பெரியசாமியும், முத்துராணியும் வேலைக்கு சென்று விட்டனர்.
    • தவதர்ஷினி குளிப்பதற்காக ஹீட்டரில் தண்ணீர் சுட வைத்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள போஜனம்பட்டி ஏ.வி. பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துராணி. தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். முதல் மகளான தவதர்ஷிணி (வயது 13) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் பெரியசாமியும், முத்துராணியும் வேலைக்கு சென்று விட்டனர். தவதர்ஷினி குளிப்பதற்காக ஹீட்டரில் தண்ணீர் சுட வைத்தார்.

    சிறிது நேரம் கழித்து தண்ணீர் சூடேறி விட்டதா என்பதை பார்க்க கை வைத்தபோது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட தவதர்ஷிணி படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர் மாணவியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    ஆனால் வரும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உயிரிழந்த 15 வயது சிறுவன் குருமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பால்ராஜ் (வயது 24).

    விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சாலையில் நித்யா டிக்கரிங் வெல்டிங் வெர்க்ஸ் எனும் பெயரில் சொந்தமாக வெல்டிங் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

    இவருடைய ஒர்க்‌ஷாப்பில், பகுதி நேர பணியாளராக பணிபுரிந்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த கர்ணமகாராஜன் என்பவரின் மகன் குருமூர்த்தி (15). என்ற 9-ம் வகுப்பு பயின்று வந்த சிறுவன், வழக்கம்போல இன்றும் தனது வேலையை முடித்துவிட்டு இரவில் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். அப்போது தவறுதலாக மின்சார சுவிட்ச் பெட்டியை காலால் மிதித்ததில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியுள்ளது.

    இதனைக் கண்ட கடையின் உரிமையாளர் பால்ராஜ் குருமூர்த்தியை காப்பாற்ற மின் ஒயரை இழுத்தார். அப்போது அவரின் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் கையில் ரத்த காயம் ஏற்பட்டது.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குருமூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையிலான போலீசார் மின்சார விபத்து குறித்து வெல்டிங் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் பால்ராஜிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் உயிரிழந்த 15 வயது சிறுவன் குருமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பரமக்குடி ரெயில் நிலையத்தில் ரெயில் வந்து நின்றதும் முகேஷ்குமார் மற்றும் அவருடன் வந்த நண்பர்கள் உற்சாக மிகுதியில் ரெயில் என்ஜின் மீது ஏறினர்.
    • ரெயில் என்ஜின் மீது ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதை ரெயில் நிலையத்தில் திரண்டு நின்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பரமக்குடி:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது 17). இவர் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த நண்பர்களுடன் வந்தார்.

    அவர்கள் அனைவரும் திருச்சியில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரெயிலில் இன்று பரமக்குடி வந்தனர். பரமக்குடி ரெயில் நிலையத்தில் ரெயில் வந்து நின்றதும் முகேஷ்குமார் மற்றும் அவருடன் வந்த நண்பர்கள் உற்சாக மிகுதியில் ரெயில் என்ஜின் மீது ஏறினர்.

    அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மற்றும் பொதுமக்கள் என்ஜினை விட்டு கீழே இறங்குமாறு எச்சரித்தனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக ரெயில் என்ஜின் மீது ஏறியபடி இருந்தனர்.

    அப்போது முகேஷ்குமார் கையில் வைத்திருந்த கொடியை மேல்நோக்கி தூக்கியபோது, கொடி கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பி மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் பட்டது. இதனால் வாலிபர் முகேஷ்குமார் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். மின்சாரம் தாக்கியதில் அவரது உடல் கருகியது.

    ரெயில் என்ஜின் மீது ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதை ரெயில் நிலையத்தில் திரண்டு நின்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் முகேஷ்குமாரை மீட்டு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் உடல் முழுவதும் கருகியதால் முகேஷ்குமார் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • கொளத்தூர் பூம்புகார் நகரில் உள்ள தியாகராஜன் என்பவரது கடையில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார்.
    • மாதவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கொளத்தூர்:

    சென்னை புழல், கிருஷ்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மாதவன் (42). எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். நேற்று காலை 11 மணிக்கு கொளத்தூர் பூம்புகார் நகரில் உள்ள தியாகராஜன் என்பவரது கடையில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். அப்போது மின்சாரம் தாக்கி மாதவன் மயங்கி விழுந்தார்.

    அவரை தியாகராஜன் ஆட்டோவில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாதவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலாஜாபாத்தில் உள்ள மதுக்கடை அருகே உள்ள மின் கம்பம் மீது லாரி மோதியதில் சேதம் அடைந்தது.
    • பலியான மோகன்ராஜீக்கு காஞ்சனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 46). இவர் வாலாஜாபாத்தில் துணை மின்நிலையத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு வாலாஜாபாத்தில் உள்ள மதுக்கடை அருகே உள்ள மின் கம்பம் மீது லாரி மோதியதில் சேதம் அடைந்தது. அதில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் மோகன்ராஜ் ஈடுபட்டார்.

    அவர் மின் கம்பத்தில் ஏறி பணி செய்து கொண்டு இருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் மின் கம்பியில் தொங்கிய நிலையில் மோகன்ராஜ் பலியானார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக போலீசுக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் பலியான மோகன்ராஜின் உடலை மின் கம்பத்தில் ஏறி மீட்டனர். பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பலியான மோகன்ராஜீக்கு காஞ்சனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    பணியின்போது மின்சாரம் தாக்கி ஊழியர் இறந்த சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வாலிபர் பஞ்சாயத்து அலுவலகத்தின் சுவர் மீது ஏறி கீழே குதிக்க முயன்றார்.
    • எதிர்பாராதவிதமாக அங்கு அறுந்த மின் வயரில் தவறி விழுந்தார். இதில் மின்சாரம் பாய்ந்து சந்தோஷ் பரிதாபமாக இறந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே உள்ள பெரிங்கராச்சிராயைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 43).

    இவர் தனது சகோதரன் சஜீவ் (39) என்பவருடன் மது அருந்தி உள்ளார். அப்போது அவர்களுக்குக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அரிவாளால் சஜீவை வெட்டினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். அவர் அருகில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தின் சுவர் மீது ஏறி கீழே குதிக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு அறுந்த மின் வயரில் தவறி விழுந்தார். இதில் மின்சாரம் பாய்ந்து சந்தோஷ் பரிதாபமாக இறந்தார்.

    • மகாலட்சுமி திடீரென மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்தார்.
    • உயிரிழப்பு தொடர்பாக மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பூங்குன்றனார் தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 46). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தண்ணீர் பிடிப்பதற்காக மோட்டார் சுவிட்ச்சை போட்டார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதி்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×