search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்சன் திலிப்குமார்"

    • நெல்சன் திலிப்குமார் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப்குமார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தை இயக்கியிருந்தார்.

    அதன்பின்னர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது ரஜினி இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    தனுஷ் - கமல் - நெல்சன்

    தனுஷ் - கமல் - நெல்சன்

    இந்நிலையில் நெல்சன் திலிப்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாகவும், இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நெல்சன்-தனுஷ்-கமல் கூட்டணி இணையவுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் சுனில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி, தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய ரஜினியிடம், ரசிகர் ஒருவர் அருகில் சென்று லவ் யூ தலைவா என்று கூறினார். இதற்கு பதிலளித்த ரஜினி ஒழுங்கா போய் வேலைய பாரு என்று அறிவுரை கூறி அந்த ரசிகரை அனுப்பி வைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    • ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் இணைந்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     


    ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால் இணைந்துள்ளதாகவும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளதாகவும் படக்குழு புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட்.
    • இப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் அனைவரையும் கவர்ந்து உலக அளவில் ஹிட் அடித்தது.

    நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக அரபிக் குத்து பாடல் அனைவரையும் தாளம் போட வைத்து உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானது.


    பீஸ்ட் - அரபிக் குத்து

    இந்நிலையில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்த அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.


    • ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் இயக்கவுள்ளார்.
    • அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு "ஜெயிலர்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

    கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். "ஜெயிலர்" என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் வில்லனாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாகவும் இது குறித்த பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

    ஜெயிலர்

    ஜெயிலர்

    இந்நிலையில் ஜெயிலர் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தின் தலைப்பில் தற்போது மலையாளத்தில் புதிய படம் ஒன்று தொடங்கி உள்ளதாகவும், இதன் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருதாகவும் கூறப்படுகிறது. தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தை மலையாளத்தில் வெளியிடும் பொழுது அதற்கு சில தலைப்பு சிக்கல் வரலாம் என தெரிகிறது. இதனால் ரஜினியின் ஜெயிலர் படம் மலையாளத்தில் வேறு தலைப்பில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

    • ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் இயக்கவுள்ளார்.
    • இப்படத்தின் பெயரை சில தினங்களுக்கும் முன்பு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினியின் 169-வது படத்திற்கு ஜெயிலர் என்ற பெயர் வைக்கப்பட்டு போஸ்டர் வெளியிட்டதில் இருந்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் லேசான சலசலப்பு எழுந்து வருகிறது. முதல் போஸ்டர் வெளியிட்டதில் ரஜினியின் முகம் இல்லாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது.

    இதனை இணையத்தில் கருத்து தெரிவித்து பகிர்ந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டிருப்பது குறித்தும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். சமீபத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஒருவரின் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு வந்த ரஜினியிடம் சில ஊடகத்தினர் இதைக் கேள்வியாகவே கேட்டனர். அப்போதுதான் ரஜினிக்கே இந்த விஷயம் புரிந்திருக்கிறது. ஒரு நிமிடம் நின்றவர் காருக்குள் ஏறி அமர்ந்துவிட்டார்.

    ஜெயிலர்

    ஜெயிலர்


    இந்த போஸ்டரை வெளியிட்ட பிறகு ரசிகர்கள் தாங்களாகவே ரஜினியின் முகம் இருக்கும்படியான போஸ்டர் டிசைனை வெளியிட்டிருக்கிறார்கள். விதவிதமான ரஜினியின் முகம் இந்த போஸ்டர்களை அலங்கரிக்கிறது. குறிப்பாக ஜெயிலர் போஸ்டரில் உள்ள குறையைச் சொல்லி நெல்சன் மீது கடுமையான விமர்சனத்தை வைக்கிறார்கள். ஒரு போஸ்டர் வெளியிடும்போது அதற்கு தனியாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அதையே படத்தின் பெயரோடு வெளியிடப்படும்.

    ஆனால் எந்தவித புதிய போட்டோவும் இல்லாமல் இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பழைய தொழிற்சாலையின் பின்னணியில் ரத்தம் தோய்ந்த கத்தியை தொங்கவிட்டிருக்கிறார்கள். ரஜினி ரசிகர்கள் இதை அப்படியே விட்டுவிடாமல் இந்தத் தொழிற்சாலையின் ஒரிஜினல் போட்டோவை தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள். அதையும் வெளியிட்டு இவ்வளவு அஜாக்கிரதையாகவா ரஜினி பட போஸ்டரை வெளியிடுவது என்று குமுறியிருக்கிறார்கள்.

    • ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் இயக்கவுள்ளார்.
    • இப்படத்தின் பெயரை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் தலைவர் 169 படம் பற்றிய வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி விவாதமாக மாறியிருந்தது. இருந்தும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

    "ஜெயிலர்"

    இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 169 படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதன்படி தலைவர் 169 படத்திற்கு "ஜெயிலர்" என்று பெயிரடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    ×