search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233013"

    • அதிகபட்சமாக 107 டிகிரி வரை ஈரோடு மாவட்டத்தில் வெயில் பதிவானது.
    • வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    ஈரோடு, 

    தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் வெயில் முடிந்தாலும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது.

    மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கு வதற்கு முன்பே வெயிலின் தாக்கம் சுட்டெரித்தது. அதிகபட்சமாக 107 டிகிரி வரை ஈரோடு மாவட்டத்தில் வெயில் பதிவானது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் அக்னி நட்சத்திரம் வெயில் நிறை வடைந்ததால் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முன்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாகவே பதிவாகி வருகிறது.

    நேற்று மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டுக்கு ள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    முக்கிய சாலைகள் மதிய நேரம் வெறிச்சோடி காணப்படுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது.

    குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் வெளியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அனல் காற்று, புழுக்கத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் அவதி வருகின்றனர்.

    வீட்டில் 24 மணி நேரமும் மின்விசிறி தொடர்ந்து இயங்கினாலும் புழுக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். முடிந்தவரை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறு த்தியுள்ளனர். குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

    வெயில் தாக்கத்தின் போது வெளியே செல்வ தால் உடலில் நீர் சத்து குறைந்து மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிக அளவில் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வெயிலின் தாக்கம் காரணமாக 1 - ந் தேதிக்கு பதிலாக 7-ந் தேதிக்கு பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

    எனினும் தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக பதிவாகி வருவதால் பள்ளி திறப்பை மேலும் தள்ளி போட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கோட்டை தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார்.
    • ரெயில் ஓட்டுநர்களையும் சேர்த்து காலி பணி யிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

    ஈரோடு, 

    அகில இந்திய ரெயில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக அனைத்து கோட்ட அளவிலான ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் ஈரோடு ஓட்டுனர் அலுவலகம் முன்பு ரெயில் ஓட்டு நர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கோட்டை தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார். மண்டல துணைச் செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினார்.

    விருப்ப மாறுதல் வேண்டி பதிவு செய்தவர்களை கடந்த 4 வருடமாக பணி மாற்றம் செய்யாததை கண்டித்தும், வந்தே பாரத் உட்பட பல புதிய ரெயில்களை ஓட்ட போதுமான ரெயில் ஓட்டுநர்களையும் சேர்த்து காலி பணி யிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

    பெண் ரெயில் ஓட்டுநர்க ளுக்கான அடிப்படை வசதிகளை உடனே ஏற்ப டுத்தி தர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலி யுறுத்தி ரெயில் ஓட்டுநர்கள் கோஷத்தில் ஈடுபட்டனர்.

    • கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 889 ஆக உள்ளது.
    • கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 889 ஆக உள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதனால் மாவட்டத்தில் இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 152 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் இதுவரை 736 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • 7 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
    • கொரோனா பாதிப்புடன் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவ டிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது. கடந்த ஒரு மாதமாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பை விட குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று சுகாதாரத்து றையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 880 உள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 7 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 124 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 736 பேர் உயிரி ழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

    • ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஈரோடு:

    பா.ஜ.க.பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை சம்பவத்தை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் சூரம்பட்டி நால்ரோட்டில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அய்யாசாமி முன்னிலை வகித்தார்.

    இதில் மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ., கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம், கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றி னார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கர் படுகொலையில் சம்பந்தப்பட்ட குற்றவா ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் குணசேகரன், சின்னதுரை, மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாவட்ட தலைவர் செல்வமணி, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஏ.கே.மகேஷ் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    • மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
    • சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் மரணம் அடைந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கொரோனா 2-வது அலையில் ஈரோடு மாவட்ட த்தில் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆயிரக்க ணக்கா னோர் பாதிக்கப்பட்டனர். ஆக்சிஜன் கட்டுப்பாடு ஏற்பட்டது.

    மாவட்டம் முழுவதும் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. முதிய வர்கள் கொரோனா பாதிப்பால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தனர்.

    இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டது. குறிப்பாக கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்த ப்பட்டது.

    முககவசம் அணிந்து செல்லுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை கடுமையாக கடைபிடிக்க ப்பட்டது.

    இது போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரண மாக மாவட்டத்தில் கொரோ னா தாக்கம் குறைய தொடங்கியது. கடைசியாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்தது. அதன் பிறகு பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்பட்டாலும் உயிர் இழப்பு ஏற்படாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளன.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 8 பேர் முதல் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    இதனால் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் இதுவரை கொரோ னாவால் பாதித்த வர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 824 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்த வர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 30 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்ட முழுவதும் கொரோனா பாதிப்புடன் 59 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கொரோ னா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 735 ஆக உயர்ந்துள்ளது.

    89 வயதான அந்த முதியவர் கடந்த 20-ந் தேதி சளி, காய்ச்சல், மூச்சு திணறல் பாதிப்புடன் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக வந்தார்.

    அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 21-ந் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து அந்த முதியவர் கொரோனா தனிவார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை யில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

    இறந்த முதியவருக்கு கொரோனா பாதிப்பு டன் சில இணை நோய்களும் இருந்துள்ளன.

    • ஊர்வலமாக கையில் பூட்டுடன் காங்கிரசார் சென்றனர்.
    • சூரம்பட்டி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    ஈரோடு:

    ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து இந்திய அளவில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தமிழ்நாட்டிலும் காங்கிரசார் பல்வேறு கட்ட போராட்ட ங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். இதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    இந்நிலை யில் மேற்கண்ட கோரிக்கை யை வலியுறுத்தி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சூரம்பட்டியில் உள்ள தபால் நிலையத்தை பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர். தடையை மீறி போராட்டம் நடைபெற்றால் கைது செய்யவும் நடவடிக்கைக்கு தயாராக இருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை எஸ்.கே.சி. ரோட்டில் காங்கிரசார் ஒன்று திரண்டனர். மாநகர பொறு ப்பாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா முன்னிலை வகித்தார்.

    மாநில செயற்குழு உறுப்பி னரும், கவுன்சிலரு மான ஈ.பி.ரவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்ராஜா, சிறுபான்மை பிரிவு மாநில துணைத்த லைவர் ஜாவர் அலி,

    மாநில ஒருங்கிணைப்பாளர் ஜிப்பர் அகமது, மாவட்ட தலைவர் மாப்பிள்ளை மீரான், மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், அல்டிமேட் தினேஷ், சிறுபான்மை பிரிவு பாட்ஷா, முகமது யூசுப், கனகராஜ், விஜயலட்சுமி உள்பட கலந்து கொண்டனர்.

    பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சூரம்பட்டி நால்ரோட்டிற்கு கையில் பூட்டுடன் காங்கிரசார் சென்றனர்.

    அப்போது சூரம்பட்டி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தடையை மீறி பூட்டு போடும் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறினர்.

    இதனால் காங்கிரசார் மேற்கொண்டு செல்லாமல் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • தியேட்டர்களிலும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர உத்தரவு விடப்பட்டுள்ளது.
    • இது தொடர்பாக அந்தந்த தியேட்டருக்கு முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து வேகம் எடுக்க தொடங்கியது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதன் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    தற்போது தினமும் 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் தடுப்பு நடவடி க்கையை தீவிரப்படுத்தி உள்ள சுகாதாரத் துறையினர் பல்வேறு கட்டுப்பா டுகளையும் விதிக்க தொடங்கியுள்ளனர்.

    பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போதும் முககவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுபோல் சோப்பு களை கொண்டு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும், மக்கள் கூடும் இடங்களில் கவனமு டன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதி ப்பு பதிவாகி வருகிறது. கடந்த 2 நாட்க ளாக தி னசரி பாதிப்பு 7 ஆக பதிவாகி வருகிறது.

    தினசரி பாதிப்பு பெ ரிய அள வில் இல்லா விட்டா லும் சுகாதா ரத்துறையினர் தடுப்பு நடவடிக்கை களில் ஈடு பட்டு வருகின்றனர்.

    முதற்க ட்டமாக அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் அங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயா ளிகள், நோயாளிகளுடன் வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என உத்தரவு அமலுக்கு வந்தது.

    இதனையடுத்து டாக்டர்கள், செவிலியர்கள் முககவசம் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்குள் முக கவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவு அமலுக்கு வந்தது.

    தற்போது அங்கு வரும் நீதிபதிகள், வக்கீல்கள், வழக்கு சம்பந்தமாக வரும் போலீ சார் அனைவரும் முககவசம் அணிந்து வருகின்றனர்.

    தொடர்ந்து தற்போது தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவு விடப்பட்டு ள்ளது.

    இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்து விட்டது. இது தொடர்பாக அந்தந்த தியேட்டருக்கு முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் திரைப்படம் பார்க்க வரும் மக்கள் கண்டிப்பாக முகக வசம் அணிந்து வர வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.

    இதனால் பெரும்பா லானவர்கள் முககவசம் அணிந்து படம் பார்க்க சென்றனர். முககவசம் அணியாமல் வருபவ ர்களுக்கு தியேட்டர் சார்பில் முககவசம் வழங்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்வதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    அவ்வாறு செல்ல நேரிட்டால் கண்டிப்பாக முகவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

    • மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோ னாவால் பாதித்தவ ர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 742 ஆக உயர்ந்து ள்ளது.

    கொரோ னா பாதிப்பு டன் சிகிச்சை பெற்ற வந்த 3 பேர் பாதி ப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 984 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குண மடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரண மாக உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 24 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முந்தினம் மட்டும் 72 பேருக்கு கொரோனா தினசரி பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ள னர். 

    • மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • முககவசம் அணிந்து செல்வது அவசியம் என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.

    கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இது கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 729 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 975 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 20 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கொரோனா தினசரி பரிசோதனையை அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தற்போது நாளொன்றுக்கு 60 முதல் 70 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    இதேப்போல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முககவசம் அணிந்து செல்வது அவசியம் என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    • ஈரோடு புனித அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஊர்வலம் நடந்தது.
    • கிறிஸ்தவர்கள் முழங்க வழிபாட்டு பாடல்களை பாடியபடி சென்றனர்.

    ஈரோடு:

    ஏசு கிறிஸ்து இறை பணியை தொடங்குவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்துள்ளார். இதனை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் விரதம் மேற்கொண்டு ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் தினத்தை கொண்டாடு வது வழக்கம்.

    ஈஸ்டர் தினத்திற்கு முந்தைய ஞாயிற்றுக்கி ழமையை கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கிறார்கள்.

    அதன்படி இன்று காலை ஈரோடு புனித அன்னை ஆலயத்தில் பங்கு தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் குருத்தோலை ஊர்வலம் நடந்தது.

    இந்த ஊர்வலமானது நடு வீதியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் இருந்து தொடங்கி ஸ்டேட் பேங்க் சாலை வழியாக புனித அமல அன்னை ஆலயத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து குருத்தோலை ஞாயிறுயையொட்டி சிறப்பு திருப்பலியும் நடந்தது.

    இதேபோல் சி.எஸ்.ஐ. சர்ச்சில் பாதிரியார் தலைமையில் குருத்தோலை ஊர்வலம் சர்ச்சில் தொடங்கி, மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக சவிதா சந்திப்பு வரை சென்று மீண்டும் மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக சர்ச்சில் நிறைவடைந்தது.

    இந்த ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இசை வாத்தியங்கள் முழங்க வழிபாட்டு பாடல்களை பாடியபடி சென்றனர்.

    தொடர்ந்து வருகிற 6-ந் தேதி பெரிய வியாழனும், இயேசு சிலுவையில் அறை யப்பட்ட நாளான 7-ந் தேதி புனித வெள்ளியும், ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டா டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது
    • ரெயில்வே நுழைவாயில் முன்பு அமர்ந்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர்

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல் போன்ற போராட்ட த்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல்காந்திக்கு விதிக்க ப்பட்ட தண்டனையை கண்டித்தும், அந்தத் தண்டனையை திரும்ப பெற வலியுறுத்தியும், இதேப்போல் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் இன்று ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஈங்கூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை ஈங்கூர் ரெயில் நிலையத்தில் சென்னிமலை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று காலை ஈங்கூர் நால் ரோட்டில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னிமலை வடக்கு வட்டார தலைவர் சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், வட்டாரத் தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், முருகேஷ், ரவி, கதிர்வேல், ஈஸ்வரமூர்த்தி, ராவுத்குமார், ஆண்ட முத்துச்சாமி, சர்வே ஸ்வரன், சென்னிமலை முன்னாள் வட்டாரத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர்கள் தில்லை சிவக்குமார் கிருபாகரன், மாவட்ட பொதுச் செயலாளர் ஈங்கூர் சண்முகம், பனியம்பள்ளி நடராஜ், வாசுதேவன், சக்திவேல், அசோகபுரம் பழனிசாமி, சீதாபதி, பழனிவேல், மணி, சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மக்கள் ராஜன் தலைமையில் நிர்வாகிகள் ஈங்கூர் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். ஈங்கூர் ரெயில் நிலையம் நுழைவாயிலில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டது. உடனடியாக நிர்வாகிகள் ரெயில்வே நுழைவாயில் முன்பு அமர்ந்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் 50-க்கும் மேற்பட்ட காங்கிர சாரை கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ×