என் மலர்
நீங்கள் தேடியது "லாரி டிரைவர்"
- கோவை சூலூர் அருகே ஒரே நேரத்தில் 3 பெண்களுடன் குடும்பம் நடத்திய வாலிபர் பணப்பிரச்சினையால் சிக்கினார்.
- வாலிபர் மீது நடவடிக்கை தேவையில்லை என 3 பெண்களும் கூறியதால் பணத்தை திருப்பி வாங்கிக் கொடுக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
சூலூர்:
சூலூர் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வாலிபர், லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். அவருக்கு உறவுப்பெண்ணுடன் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் லாரி டிரைவருக்கு பழக்கம் ஏற்பட்டது. வசதியான அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை பெற்றவர். குடும்பத்தினருடன் தகராறு செய்து விட்டு கோவை வந்தார். இங்கு பெட்ரோல் பங்க்கில் வேலைபார்த்தார்.
லாரி டிரைவான வாலிபர் பெட்ரோல் பங்க்கிற்கு அடிக்கடி சென்று வந்ததில் அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. திருமண ஆசை காட்டி அந்த பெண்ணுடன் வாலிபர் தனிக்குடித்தனம் நடத்தினார். திருமணம் செய்யாமலேயே அவர்கள் கணவன்- மனைவி போல் 7 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர்.
இந்தநிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணும், வாலிபரின் நண்பரும் காதலித்து வந்துள்ளனர். அந்த பெண் மீது மோகம் கொண்ட வாலிபர், நண்பரை பற்றி தவறாக கூறி அவர்களை பிரித்தார்.
பின்னர் அந்த பெண்ணுடன் இவர் பழகி காதலிக்கத் தொடங்கினார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணையும் வாலிபர் திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வெவ்வேறு இடங்களில் குடி வைத்து 3 பெண்களுடனும் வாலிபர் உல்லாசமாக வாழ்ந்து வந்தார்.
சமீபத்தில் 3 பெண்களுக்கும் வாலிபரின் உண்மை நிலவரம் தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். 3 பேரும் வாலிபருக்கு நெருக்கடி கொடுத்தனர். எங்களை ஏமாற்றி விட்டாயே என கூறி கண்டித்தனர்.
இந்தநிலையில் ஐதராபாத் பெண்ணிடம் இருந்து வாலிபர் ரூ.10 லட்சம் வாங்கி உள்ளார். அந்த பெண்ணின் குடும்ப சொத்தை விற்பனை செய்துள்ளனர். அதில் அந்த பெண்ணுக்கு ரூ.10 லட்சம் பங்கு கிடைத்துள்ளது. அந்த பணத்தை வாங்கி வாலிபர் ஏமாற்றி விட்டார்.
தற்போது பணத்தையும், வாழ்க்கையையும் இழந்த ஐதராபாத் பெண் நேற்று சூலூர் போலீஸ்நிலையம் வந்து புகார் செய்தார். தன்னை ஏமாற்றிய வாலிபரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை திருப்பி வாங்கி தர வேண்டும் என கூறி கண்ணீர் வடித்தார்.
இதையடுத்து விசாரணைக்காக அந்த வாலிபரும், மற்ற 2 மனைவிகளும் அங்கு வந்தனர். அவர்களில் ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் மட்டும் தனக்கு பணத்தை திருப்பிக் கொடுத்தால் பிரச்சினை செய்யாமல் சென்று விடுகிறேன், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றார்.
இதேபோல ஆழியார் பெண், வாலிபர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் எனக்கு இப்போது தான் தெரியவந்தது. முதல் மனைவிக்கு குழந்தை இருப்பதால் அவர்கள் வாழ்க்கை வீணாகி விடக்கூடாது, எனவே நான் பிரிந்து செல்ல தயாராக இருக்கிறேன். அதற்காக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றார்.
முதல் மனைவியோ ஒரு படி மேலே போய் எனது கணவர் நல்லவர் தான். இந்த பெண்கள் தான் அவரை வளைத்து போட்டு உள்ளனர். எனவே என் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றார்.
இதுதொடர்பாக வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். வாலிபர் மீது நடவடிக்கை தேவையில்லை என 3 பெண்களும் கூறுவதால் பணத்தை திருப்பி வாங்கிக் கொடுக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று சூலூர் போலீஸ்நிலையத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
- வெங்கமேடு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்த போது வேம்புசாமிக்கு கை, கால்கள் உதறல் ஏற்பட்டு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
- ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து வேம்புசாமியை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு அடுத்துள்ள குட்டைக்காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் வேம்புசாமி (61). இவர் கடந்த 30 வருடங்களாக ஈரோட்டில் உள்ள தனியார் லாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பண்ணாரி சர்க்கரை ஆலையில் இருந்து சர்க்கரை மூட்டைகளை ஏற்றி கொண்டு திருவண்ணா –மலை சென்று கொண்டி ருந்தார். அவருடன் கிளீனர் குமார், கணக்காளர் செல்வ–ரத்தினம் ஆகியோரும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அதிகாலை சுமார் 3 மணியளவில் கொடுமுடி அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்த போது வேம்புசாமிக்கு கை, கால்கள் உதறல் ஏற்பட்டு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
அவருடன் வந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து வேம்புசாமியை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இது குறித்து வேம்புசாமியின் மனைவி கண்ணம்மாள் (57) அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- துரைசிங்கம், சந்திரசேகரன், சரவணன் ஆகிய 3பேரும் லாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்கள்.
- சமையல் பொருட்கள் வாங்கியதில் ஒருவருக்கொருவர் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையை சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் துரைசிங்கம் (வயது 27). அதுபோல் சிவகங்கை சோழபுரத்தை சேர்ந்த ராமு என்பவரது மகன் சந்திரசேகரன் (32). கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன் ( 21 ). இவர்கள் 3பேரும் காரணம்பேட்டை அருகே உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான லாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அங்கேயே தங்கி சமையல் செய்து சாப்பிட்டும் வருகிறார்கள். இதில் சமையல் பொருட்கள் வாங்கியதில் ஒருவருக்கொருவர் பிரச்சனை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று சந்திரசேகர் மற்றும் சரவணன் ஆகியோர் துரை சிங்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதில் துரைசிங்கத்தை இருவரும் பலமாக தாக்கினார்கள். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து துரைசிங்கம் பல்லடம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சந்திரசேகரன் மற்றும் சரவணன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- நாகராஜ் மது போதையில் வீட்டிற்கு வந்து விஜயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
- நாகராஜ் வீட்டில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த கே.ஆர்.பாளையம் கே.கே.நகர் முதல் வீதியை சேர்ந்தவர் நாகராஜ் (35). லாரி டிரைவர். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை விட்டு பிரிந்த விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலி த்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
நாகராஜிக்கு மதுப்பழக்கம் உள்ளதால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இதேபோல் சம்பவத்தன்று இரவு நாகராஜ் மது போதையில் வீட்டிற்கு வந்து விஜயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதைப்பார்த்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.
இதையடுத்து விஜயலட்சுமியும், அவரது மகள்களும் லீலாவதி என்பவர் வீட்டில் இரவு தூங்க சென்றனர். மறுநாள் மகள் வீட்டிற்கு வந்தபோது நாகராஜ் வீட்டில் பேன் மாட்டும் கொக்கியில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து விஜயலட்சுமி சித்தோடு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமங்கலம் அருகே லாரி டிரைவர்-கிளீனரை தாக்கி பணம் பறித்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- வழிப்பறி நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர்.
திருமங்கலம்
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சிவபாபு(வயது26). லாரி டிரைவரான இவர் கடந்த 25-ந் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தொழிற்பேட்டைக்கு இன்வெர்ட்டர் பேட்டரிகளை ஏற்றி வந்தார்.
அப்ேபாது நிறுவனம் மூடப்பட்டிருந்ததால் லாரி தொழிற்பேட்டை பகுதியில் நிறுத்தினார். பின்னர் சிவபாபு, கிளீனர் சூரஜூடன் சாப்பிடுவதற்காக கூத்தியார்குண்டு சென்றார்.சர்வீஸ் ரோடு பகுதியில் நடந்து சென்றபோது 2 பேரையும் வழிமறித்த கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு ரூ.5 ஆயிரம் ெராக்கம், 2 செல்போன்களை பறித்து சென்றது. இந்த தாக்குதலில் சிவபாபு, சூரஜ் ஆகியோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். வழிப்பறி நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர்.
அதில் லாரி டிரைவர்-கிளீனரை தாக்கி பணம் பறித்தது கூத்தியார்குண்டை சேர்ந்த கண்ணன் மகன் ராஜலிங்கம்(21), ராஜேந்திரன் மகன் விஜயராஜா(27), முருகன் மகன் ராஜவேலு(27), கணேசன் மகன் பிரபாகரன்(27) என தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- பள்ளபட்டி பாலம் அருகே காரின் மேற்கூரையில் கட்டப்பட்டிருந்த சூட்கேஸ் தவறி ரோட்டில் விழுந்தது.
- மதுரையில் இருந்து திருச்சி நோக்கி லாரி ஓட்டி வந்த அலங்காநல்லூர் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் நடுரோட்டில் சூட்கேஸ் கிடப்பதை கண்டு அதை எடுத்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் செந்தில். இவர் அழகர் கோவில் அருகே உள்ள கிடாரிபட்டிக்கு சிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ வழிபாடு நடத்த சென்றார். பின்னர் மீண்டும் நத்தம் வழியே பழனிக்கு திரும்பி கொண்டிருந்தார். பள்ளபட்டி பாலம் அருகே காரின் மேற்கூரையில் கட்டப்பட்டிருந்த சூட்கேஸ் தவறி ரோட்டில் விழுந்தது. அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி லாரி ஓட்டி வந்த அலங்காநல்லூர் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் நடுரோட்டில் சூட்கேஸ் கிடப்பதை கண்டு அதை எடுத்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார்.
அந்த சூட்கேசில் ரூ.25 ஆயிரம் பணமும், 3 பவுன் தங்கநகை மற்றும் செல்போன் ஆகியவை இருந்தது. இதையடுத்து நத்தம் போலீசார் உரியவர்களை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தார். பின்னர் ரமேஷ் கையாலேயே அதனை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். அவற்றை பெற்றுக்கொண்ட செந்தில் குடும்பத்தினர் ரமேசுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர். லாரி டிரைவர் ரமேசின் நேர்மையை பாராட்டி நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி சன்மானம் வழங்கி பாராட்டினார்.
- மேலூர் அருகே லாரி டிரைவர் உள்பட 2 பேரிடம் கத்தியை காட்டி மர்மநபர்கள் வழிப்பறி செய்தனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது37). மினி லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று திருச்சியிலிருந்து மதுரைக்கு லாரியில் வந்து கொண்டிருந்தார். மேலூர் அருகே உள்ள தெற்குபட்டி நான்கு வழிச்சாலையில் விஜயன் லாரியை நிறுத்தி கீழே இறங்கினார்.
அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென விஜயனை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,840 மற்றும் வெள்ளி நகையையும் பறித்து கொண்டு தப்பினர். இதே போல் மேலூர் அருகே உள்ள சுண்ணாம்பூரை சேர்ந்தவர் முருக பெருமாள். இவர் மோட்டார் சைக்கிளில் மேலூர் நான்கு வழிச்சாலையில் வந்த போது மர்ம நபர்கள் மறித்து கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை மறித்தனர். 2 சம்பவங்கள் தொடர்பாக மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- உணவு சாப்பிடுவதற்கு வாகனத்தை நிறுத்தி விட்டு தோமஸ் சாலையை கடந்து சென்றார்.
- சாலையை கடக்கும் போது இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதி தோமஸ் தூக்கி வீசப்பட்டார்.
கன்னியாகுமரி :
மார்த்தாண்டம் அருகே உள்ள சாங்கை பகுதியை சேர்ந்தவர் தோமஸ் (வயது 55), லாரி டிரைவர்.
இவர் இன்று அதிகாலை திருவனந்தபுரத்தில் இருந்து லாரியில் பழைய பொருட்கள் ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் புறப்பட்டார். களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் வந்தபோது உணவு சாப்பிடுவதற்கு வாகனத்தை நிறுத்தி விட்டு தோமஸ் சாலையை கடந்து சென்றார்.
அவர் சாப்பிட்டு விட்டு சாலையை கடக்கும் போது மார்த்தாண்டத்தில் இருந்து நித்திரவிளையை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது. இதில் தோமஸ் தூக்கி வீசப்பட்டார். விபத்தினை நேரில் கண்டவர்கள் அங்கே ஓடி வந்தனர்.
அவர்கள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் சம்பவ இடத்திலேயே தோமஸ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தோமஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். களியக்காவிளை ஒற்றாமரம் பகுதியில் இரவு நேரங்களில் அதிகமாக ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் உணவு சாப்பிடுவதற்கு வாகனங்கள் சாலையோரம் நிறுத்துவதால், வாகன நெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதில் பலர் உயிரிழப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே இரவு நேரங்களில் செயல்படும் ஓட்டல்களுக்கு நேர கட்டுப்பாடு வழங்க வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மேலூர் அருகே மாயமான லாரி டிரைவர் சாலையோரத்தில் பிணமாக கிடந்தார்.
- போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது45). லாரி டிரைவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமாகி விட்டார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர்.
ஆனால் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி அவரது உறவினர்கள் மேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மேலூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் நாவினிப்பட்டி அருகே உள்ள சின்ன ஆலங்குடி கோவில் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் இறந்து கிடந்தார். அவர் சாலையோரம் பிணமாக கிடப்பதை இன்று அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர்.
அவர்கள் அதுபற்றி மேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மேலூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாயமாகி தேடப்பட்டு வந்த நிலையில் நாகராஜன் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் எப்படி இறந்தார்? என்பது பிரேத பரிசோதனை முடிவில் தான் தெரியவரும் என்பதால், அதற்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
- லாரியை சூலூர் போலீஸ் நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தி விட்டு, லாரியிலேயே படுத்து தூங்கி விட்டார்.
- மது போதையில் லாரியை இயக்கியதற்காக அவருக்கு சூலூர் போலீசார் அபராதம் விதித்தனர்.
சூலூர்:
விழுப்புரத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி(வயது41). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி 15 வயதில் மகள் உள்ளார்.இந்த நிலையில் அவரது முதல் மனைவி இறந்து விடவே ராஜீவ்காந்தி 2-வதாக திருமணம்செய்து கொண்டார். அவருக்கு சில தினங்களுக்கு முன்பு 2-வதும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில் ராஜீவ்காந்தி இரும்பு பொருட்களை ஏற்றுவதற்காக மும்பைக்கு சென்றார். பின்னர் அங்கு பொருட்களை ஏற்றி கொண்டு சேலத்திற்கு வந்தார்.
அப்போது கோவை சூலூர் அருகே அருகே அவர் வந்த போது லாரியை திடீரென நிறுத்தி விட்டு மது அருந்தினார். பின்னர் லாரியை இயக்கி கொண்டு சென்ற அவரால் மேற்கொண்டு இயக்க முடியவில்லை என தெரிகிறது. இதனால் லாரியை சூலூர் போலீஸ் நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தி விட்டு, லாரியிலேயே படுத்து தூங்கி விட்டார்.
நீண்ட நேரமாக லாரி அங்கேயே நின்றதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் லாரி அருகே சென்று பார்த்தனர். அப்போது டிரைவர் தூங்கி கொண்டிருந்தார். அருகே மதுபாட்டிலும் இருந்தது. அவரை எழுப்பி பார்த்தனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை.
இதையடுத்து போலீசார் லாரியை போலீஸ் நிலையம் எடுத்து சென்றனர். பின்னர் தண்ணீரை ஊற்றி டிரைவரை எழுப்பினர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் தனக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. தற்போது 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. நான் செய்யும் டிரைவர் தொழிலில் 2 பெண் குழந்தைகளை வைத்து வளர்ப்பது மிகவும் கஷ்டம் எனவும் அந்த மன வருத்தத்திலேயே மது அருந்தியதாகவும், பிறந்த குழந்தையை கூட இன்னும் பார்க்கவில்லை. அதனை பார்க்கவும் எனக்கு பிடிக்க வில்லை. அதனால் நான் ஊருக்கு செல்லவில்லை எனக் கூறி புலம்பினார்.
இதையடுத்து ராஜீவ்காந்திக்கு பெண் பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியே உருவாகும். பெண்களுக்கு அரசின் பல நலதிட்டங்கள் நடைமுறையில் உள்ளது என அறிவுரை கூறினர்.
தொடர்ந்து மது போதையில் லாரியை இயக்கியதற்காக அவருக்கு சூலூர் போலீசார் அபராதம் விதித்தனர்.
- சூர்யா தனது லாரியில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து பிரகாஷை கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.
- கொலை சம்பவத்தால் அக்கரைப்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அக்கரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரியில் கடந்த சில நாட்களாக சவுடு மண்குவாரி இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காலை ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர்களான பிரகாஷ் (வயது31), சூர்யா(வயது29) என்ற டிரைவர்கள் சவுடு எடுக்க குவாரிக்கு வந்தனர்.
அப்பொழுது மண் ஏற்றுக் கொண்டு இரண்டு லாரிகளும் வெளியே வரும்போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஒருவரை, ஒருவர் தள்ளிக் கொண்டனர். இதில், ஆத்திரம் அடைந்த சூர்யா தனது லாரியில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து பிரகாஷை கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.
இதில், துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பிரகாஷ் பலியானார். இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலை கண்டு அருகில் இருந்த டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
படுகொலை செய்யப்பட்ட பிரகாஷ் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட பிரகாஷ் மீது லாரியை வழி மறித்து கொள்ளையடித்த வழக்கு பெரியபாளையம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் பணம் மற்றும் நகைகள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இந்த கொலை சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
இதில், சூர்யாவுக்கும் பிரகாசுக்கும் இடையே பணம் மற்றும் நகைகள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை கடந்த சில நாட்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், குற்றவாளி சூர்யாவின் பூர்வீகம் கிருஷ்ணாபுரம் கண்டிகை என்றும் பிரகாசுடன் ஏற்பட்ட பழக்கத்தால் சூர்யா தனது குடும்பத்துடன் ஆத்துப்பாக்கம் கிராமத்துக்கு குடி பெயர்ந்து தெரியவந்துள்ளது. இந்தக் கொலை சம்பவத்தால் அக்கரைப்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது பிரச்சினையால் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பு நிலவுகிறது.
- மாரியப்பன், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
- கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஒட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மேலசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). லாரி டிரைவர். இவரது மனைவி மாரியம்மாள் (45).
இவர் தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம். மாரியப்பனுக்கு மதுக்குடிக்கும் பழக்கம் உண்டு என கூறப்படுகிறது. மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த அவர், அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று வழக்கம் போல மாரியம்மாள் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.
மாலையில் ஊருக்கு வெளிப்புறம் உள்ள காட்டுப்பகுதியில் மாரியம்மாள் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அங்கு சென்ற மாரியப்பன், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன், அருகில் கிடந்த கம்பால் சரமாரியாக மாரியம்மாளை தாக்கினார். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
அவ்வழியாக சென்றவர்கள், படுகாயமடைந்து மயங்கி கிடந்த மாரியம்மாளை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாரியம்மாளை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மாரியப்பன் இன்று காலை தூத்துக்குடி சிப்காட் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் ஒட்டப்பிடாரம் போலீசாரிடம் ஒப்படைந்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.