search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து இந்தியா தொடர்"

    • அஸ்வினுக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது அஸ்வின் தனிமைபடுத்தப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

    5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி டிரா ஆனது. 2-வது மற்றும் 4-வது டெஸ்டில் இந்தியா வெற்றி ( 151 ரன், 157 ரன்) பெற்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றியை (இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்) பெற்றது.

    கொரோனா பாதிப்பு காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது.

    ஒத்திவைக்கப்பட்ட இந்த டெஸ்ட் போட்டி வருகிற 1-ந் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்த டெஸ்டில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் கடந்த 16- ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர். பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் , பந்து வீச்சு பயிற்சியாளர் மாம்ரே ஆகியோர் மேற்பார்வையில் இந்திய வீரர்கள் லீசெஸ்டரில் ஏற்கனவே பயிற்சியை தொடங்கி விட்டனர்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் முடிந்தபிறகு ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இன்று லீசெஸ்டர் சென்று அடைவார்கள்.

    இந்த நிலையில் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான ஆர்.  அஸ்வின் இந்திய அணியோடு இங்கிலாந்து செல்லவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தான் அவர் வீரர்களுடன் செல்லவில்லை.

    கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அஸ்வின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவர் ஏற்கனவே ஒருமுறை கொரோனா பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார்.

    அஸ்வின் முழு குணமடைந்து அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளுடன் இருந்தால் மட்டுமே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆட முடியும். டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு அவர் குணமடைந்து விளையாடுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டிக்கு முன்பு பயிற்சி ஆட்டம் நடக்கிறது.

    35 வயதான அஸ்வின் 86 டெஸ்டில் விளையாடி 442 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 30 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும், 23 முறை 4 விக்கெட்டுக்கு மேலும் கைப்பற்றி உள்ளார்.

    59 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது ஒரு இன்னிங்சின் சிறந்த பந்து வீச்சாகும். 140 ரன் கொடுத்து 13 விக்கெட் வீழ்த்தியது ஒரு டெஸ்டின் சிறந்த பந்து வீச்சு ஆகும்.

    • கேஎல் ராகுல் காயம் காரணமாக டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை.
    • ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார்

    இந்திய அணி கடந்த வருடம் (2021) ஆகஸ்டு மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து உள்ளது.

    முதல் பயணமாக கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, பும்ரா, சமி, அஸ்வின், ஜடேஜா, முகமது சிராஜ், சர்துல் தாகூர், பிரிதிஷ் கிருஷ்ணா, புஜாரா, ஹனுமன் விஹாரி, விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகியோர் லண்டன் சென்றடைந்தனர்.

    ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்த பிறகு இரண்டாவது பயணமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோர் லண்டன் செல்ல உள்ளனர்.

    இந்நிலையில் கேஎல் ராகுல் காயம் காரணமாக டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை. அதனால் அவருக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். நாளைக்குள் அவர் அணியில் இடம் பெறுவாரா? இல்லையா என்பது குறித்து தகவல் தெரியும். ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

    • இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சொந்த வேலை காரணமாக இன்று லண்டன் செல்கிறார்.
    • ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் லண்டன் செல்கிறார்.

    இந்திய அணி கடந்த வருடம் (2021) ஆகஸ்டு மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் செப்டம்பர் 10-ந் தேதி 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடக்கவிருந்த நிலையில் கொரோனா காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து கடைசி டெஸ்ட் போட்டி நடக்கவிருக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய இந்திய அணி இன்று லண்டன் சென்றடைந்தது. முன்னாள் கேப்டன் விராட் கோலி, பும்ரா, சமி, அஸ்வின், ஜடேஜா, முகமது சிராஜ், சர்துல் தாகூர், பிரிதிஷ் கிருஷ்ணா, புஜாரா, ஹனுமன் விஹாரி, விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகியோர் லண்டன் சென்றடைந்தனர்.

    இந்திய கேப்டன் ரோகித் சர்மா சொந்த வேலை காரணமாக இன்று லண்டன் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இங்கிலாந்தில் இந்திய அணியில் இணைவார்.

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டி முடிவடைந்த பிறகு 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

    ×