search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233879"

    • கவர்னரின் செயல்பாடு தி.மு.க. கூட்டணி கட்சியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
    • சர்ச்சைக்குரிய வகையில் செயல்படும் கவர்னரை கண்டித்து வருகிற 12-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே சில நிர்வாக பிரச்சினைகளில் கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 14 மசோதாக்கள் மீது கவர்னர் ஆர்.என்.ரவி முடிவெடுக்காமல் இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார்.

    கடந்த ஜனவரி மாதம் கவர்னர் ரவி சட்டசபையில் உரை நிகழ்த்திய போது சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்தார். மேலும் சில வார்த்தைகளை சேர்த்து வாசித்தார்.

    இதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரைதான் சபை குறிப்பில் இடம்பெறும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். இதை பார்த்த கவர்னர் ஆர்.என்.ரவி பாதியிலேயே சட்டசபையில் இருந்து வெளியேறினார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த பிரச்சினைக்கு பின்னர் கவர்னர் அளித்த குடியரசு தின தேனீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்று சகஜமாக பேசிக் கொண்டனர்.

    இதன் பிறகு ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் சட்டசபையில் அந்த சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றி அனுப்பினார்.

    இதன் பிறகும் கவர்னர் அந்த மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவதுடன் அது தொடர்பான கருத்துக்களையும் வெளியிட்டார்.

    இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

    கவர்னரின் செயல்பாடு தி.மு.க. கூட்டணி கட்சியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சர்ச்சைக்குரிய வகையில் செயல்படும் கவர்னரை கண்டித்து வருகிற 12-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் சென்னைக்கு இன்று மதியம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் செல்கிறார்கள்.

    இருவரும் அருகருகே நின்று பிரதமரை வரவேற்க இருப்பதால் அப்போது பரஸ்பரமாக பேசிக்கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் சென்ட்ரல் ரெயில் நிலையம், விவேகானந்தர் இல்லம், பல்லாவரம் அரசு திட்டங்களின் தொடக்க விழா கூட்டத்திலும் பிரதமர், கவர்னருடன், முதலமைச்சரும் பங்கேற்கிறார்.

    பல்லாவரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கான மேடையில் பிரதமருக்கு வலது புறம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இடது புறம் கவர்னர் ஆர்.என்.ரவி அமர்வதற்கு இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது.

    எனவே இந்த மேடையிலும் இருவரும் சுமூகமாக பேசிக்கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விமான நிலையத்தில் பிரதமரை வழியனுப்பும் நிகழ்ச்சிக்கும் இருவரும் செல்கின்றனர். அப்போதும் சகஜமாக பேசிக் கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஸ்டெர்லைட் போராட்டம், மசோதா குறித்த ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம்.
    • 12ம் தேதி மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதச்சார்பாற்ற முற்போக்குக் கூட்டணி அறிவிப்பு.

    சென்னை:

    ஸ்டெர்லைட் போராட்டம், மசோதா குறித்த ஆளுநரின் பேச்சை கண்டித்து வரும் 12ம் தேதி மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதச்சார்பாற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. சட்டமன்ற மாண்பை குலைக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் நிறுத்தும் வரை போராட்டம் ஓயாது என்றும் மதச்சார்பாற்ற முற்போக்குக் கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அனைத்துக்கும் விடை காண இன்னும் சிறிதுநாட்கள் கால அவகாசம் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
    • மீண்டும் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா குறித்து கவர்னர் ரவி முடிவு எடுக்க மேலும் சில நாட்கள் எடுத்துக் கொள்வார் என்று தெரியவந்துள்ளது.

    சென்னை:

    ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் ஏராளமான பொதுமக்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வந்தது.

    இதனால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் முதலில் சில விளக்கங்கள் கேட்டு இருந்தார். அதற்கு சட்டத்துறையில் இருந்து தேவையான விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஆனாலும் அந்த விளக்கங்கள் கவர்னருக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் கடந்த 6-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டார்.

    இந்த சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு போதிய அதிகாரம் இல்லை என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி சட்டசபையில் நேற்று முன்தினம் கவர்னர் திருப்பி அனுப்பி இருந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அவை முன்பு வைக்கப்பட்டது.

    இந்த தடை சட்ட மசோதாவை சட்டசபையில் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கோரினார். இதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்ததை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா உறுப்பினர்களின் பார்வைக்கு மீண்டும் வைக்கப்பட்டது. இந்த மசோதா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தளவாய் சுந்தரம் (அ.தி.மு.க.) உள்பட சட்டமன்ற அனைத்துக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் ஆதரித்து பேசினார்கள். இதைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் என்னென்ன காரணங்களுக்காக ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுகிறது என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    அரசியல் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரப்பட்டியலின் 34-வது பிரிவில் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ள விதிகளை சுட்டிக்காட்டி சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    சுமார் 8 பக்கங்கள் கொண்ட இந்த சட்ட மசோதா முழு விவரங்களுடன் முழுமையாக தயாரிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு தமிழக அரசின் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டது. சட்டத்துறையில் நேற்று காலை இந்த மசோதாவின் அனைத்து பக்கங்களும் மீண்டும் சரிபார்க்கப்பட்டது. சட்ட விதிகள் அனைத்தும் முறையாக தெளிவுபடுத்தப்பட்டு இருந்ததால் சட்டத்துறையும் நேற்றே கவர்னருக்கு அனுப்ப அனுமதித்தது.

    இதைத்தொடர்ந்து சட்டத்துறை அதிகாரிகள் நேற்று மாலை 6 மணி அளவில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை அதிகாரிகளிடம் வழங்கி விட்டு வந்தனர். தமிழக சட்டசபையில் ஒரு சட்டம் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டால் அதற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்து தான் ஆக வேண்டும். பம்மலில் நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய டி.ஆர்.பாலு எம்.பி., "கவர்னர் இனி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவில் கையெழுத்து போட்டே தீர வேண்டும்" என்றார்.

    அந்த வகையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்குவாரா? அல்லது சட்ட விதிகளை சுட்டிக்காட்டி கையெழுத்து போட மறுப்பாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து இதுதொடர்பாக கருத்துக்கள் கேட்டதாக தெரிகிறது. சட்ட நிபுணர்களிடமும் இது தொடர்பாக ஆலோசித்து உள்ளார்.

    இந்த நிலையில் நேற்றிரவு 8 மணிக்கு கவர்னர் ஆர்.என். ரவி சென்னை திரும்பினார். இன்று காலை அவரிடம் தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா ஆவணங்கள் கொடுக்கப்பட்டன.

    இதையடுத்து அந்த ஆவணங்களை கவர்னர் ரவி ஆய்வு செய்தார். சட்ட நிபுணர்களிடம் அவற்றை வழங்கி கருத்துக்கள் கேட்டு உள்ளார். ஏற்கனவே கேட்கப்பட்ட விளக்கங்களுக்கு புதிய மசோதாவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதா? என்றும் கேட்டறிந்தார்.

    இவை அனைத்துக்கும் விடை காண இன்னும் சிறிதுநாட்கள் கால அவகாசம் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. எனவே மீண்டும் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா குறித்து கவர்னர் ரவி முடிவு எடுக்க மேலும் சில நாட்கள் எடுத்துக் கொள்வார் என்று தெரியவந்துள்ளது.

    சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசிய பிறகு அவர் கையெழுத்து போடுவாரா? என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது. அவர் தமிழக அரசின் சட்ட மசோதாவை மத்திய அரசின் ஆய்வுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
    • மசோதாவில் என்னென்ன காரணங்களுக்காக ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுகிறது என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    சென்னை:

    ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் ஏராளமான பொதுமக்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வந்தது.

    இதனால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் முதலில் சில விளக்கங்கள் கேட்டு இருந்தார். அதற்கு சட்டத்துறையில் இருந்து தேவையான விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஆனாலும் அந்த விளக்கங்கள் கவர்னருக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் கடந்த 6-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டார்.

    இந்த சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு போதிய அதிகாரம் இல்லை என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி சட்டசபையில் நேற்று கவர்னர் திருப்பி அனுப்பி இருந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அவை முன்பு வைக்கப்பட்டது.

    இந்த தடை சட்ட மசோதாவை சட்டசபையில் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கோரினார். இதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்ததை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா உறுப்பினர்களின் பார்வைக்கு மீண்டும் வைக்கப்பட்டது.

    இந்த மசோதா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தளவாய் சுந்தரம் (அ.தி.மு.க.) உள்பட சட்ட மன்ற அனைத்துக்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் அதிகரித்து பேசினார்கள்.

    இதைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதாவில் என்னென்ன காரணங்களுக்காக ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுகிறது என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    அரசியல் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரப்பட்டியலின் 34-வது பிரிவில் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ள விதிகளை சுட்டிக்காட்டி இதுதொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    சுமார் 8 பக்கங்கள் கொண்ட இந்த சட்ட மசோதா முழு விவரங்களுடன் முழுமையாக தயாரிக்கப்பட்டு நேற்றிரவு தமிழக அரசின் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டது.

    சட்டத்துறையில் இன்று காலையில் இந்த மசோதாவின் அனைத்து பக்கங்களும் மீண்டும் சரிபார்க்கப்பட்டது. சட்ட விதிகள் அனைத்தும் முறையாக தெளிவுபடுத்தப்பட்டு இருந்ததால் சட்டத்துறையும் இன்று கவர்னருக்கு அனுப்ப அனுமதித்தது.

    இதைத்தொடர்ந்து சட்டத்துறை அதிகாரிகள் இன்று கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை அதிகாரிகளிடம் வழங்க உள்ளனர்.

    தமிழக சட்டசபையில் ஒரு சட்டம் 2-வதுமுறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டால் அதற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்து தான் ஆக வேண்டும்.

    அந்த வகையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்குவாரா? அல்லது சட்ட விதிகளை சுட்டிக்காட்டி கையெழுத்து போட மறுப்பாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து இதுதொடர்பாக கருத்துக்கள் கேட்டதாக தெரிகிறது. சட்ட நிபுணர்களிடமும் இதுதொடர்பாக ஆலோசித்து உள்ளார்.

    இந்த நிலையில் இன்று மாலை கவர்னர் ஆர்.என். ரவி சென்னை திரும்புகிறார். எனவே தமிழக அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பி உள்ள ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
    • ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் தங்கள் கருத்துக்களை முன் வைத்து பேசினார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ந்தேதி ஒப்புதல் அளித்தது. அக்டோபர் 1-ந்தேதி அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

    இதையடுத்து தமிழக சட்டசபையில் அக்டோபர் 19-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட் டது. பின்னர் கவர்னர் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ந்தேதி அனுப்பப்பட்டது. அதற்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை.

    சட்ட மசோதாவில் சில விளக்கங்கள் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவி நவம்பர் 24-ந்தேதி அரசுக்கு கடிதம் எழுதினார். அதற்கு சட்டத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி அமைச்சர் ரகுபதி மற்றும் அதிகாரிகள் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினார்கள். அப்போது சட்ட மசோதா சம்பந்தமாக கவர்னர் ரவி சில சந்தேகங்களை எழுப்பினார். அதற்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6-ந்தேதி சட்ட மசோதாவை அரசுக்கு கவர்னர் ரவி திருப்பி அனுப்பினார்.

    அதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.

    அதன்படி தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டசபையில் கவர்னர் கடந்த 6-ந்தேதி திருப்பி அனுப்பிய தமிழ்நாடு இணைய வழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுக்களை ஒழுங்கு முறைப்படுத்துதல் சட்ட மசோதாவை மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அனுமதி கோரினார்.

    இதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி தரவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதிகப்படியான பணத்தை இழந்ததன் காரணமாக மனமுடைந்து, இதுவரை 41 பேர் தற்கொலை செய்து கொண்ட துயரமான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதே என்ற வேதனையோடுதான் எனது உரையை நான் தொடங்குகிறேன்.

    பள்ளி செல்லும் மாணவர்களுக்கிடையே, இணைய வழி விளையாட்டு எந்தவித பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, பள்ளிக்கல்வித்துறை ஜூலை 2022-ல் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இந்தக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டிலுள்ள 2,04,114 அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் கருத்து கோரப்பட்டது. மாணவர்களின் ஒரு முகப்படுத்தும் திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 74 சதவீதம் ஆசிரியர்கள் சொன்னார்கள். மாணவர்களின் நுண்ணறிவு ஈவு, எழுதும் திறன் மற்றும் படைப்பாற்றலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக 64 சதவீதம் ஆசிரியர்கள் சொன்னார்கள்.

    இணையதள விளையாட்டு உரிமையாளர்கள் மற்றும் இதர தரப்பினரிடையே நடத்தப்பட்ட ஆலோசனையின்படியும், பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு 26-9-2022 அன்று அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.

    ஆனால், சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை 131 நாட்கள் கழித்து, சில குறிப்புகளுடன் 6-3-2023 அன்று சட்டப்பேரவைத் தலைவருக்கு கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளார். கவர்னர் எழுப்பியுள்ள கேள்விகளும், அதற்கான பதில்களும் அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு, சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் பரிசீலனைக்கு வைக்கும் கருத்துருவானது அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்ட முன்வடிவானது உறுப்பினர்களின் பார்வைக்கு மீண்டும் வைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இதனை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த சட்டம் அறிவால் மட்டுமல்ல, இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

    இனியொரு உயிர் பறிக்கப்படாமல்; இனியொரு குடும்பம் நடுத்தெருவில் நிற்காமல்; இனியொரு நாள்கூட இந்த ஆன்லைன் அநியாயம் தொடராமல் இருக்க அனைத்து உறுப்பினர்களும் இந்தச் சட்ட முன்வடிவை ஆதரிக்க வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதன் மீது ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் தங்கள் கருத்துக்களை முன் வைத்து பேசினார்கள். இதைத் தொடர்ந்து சட்ட மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேறியது.

    • இன்றும், நாளையும் டெல்லியில் தங்கி இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய அரசின் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் இன்று சட்டசபையில் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு ஏற்கனவே சட்டசபையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி கவர்னரிடம் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருந்தது. ஆனால் அதற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளிக்காமல் முதலில் சில விளக்கங்களை கேட்டிருந்தார்.

    இந்த விளக்கங்களுக்கு சட்டத்துறை சார்பில் விரிவான பதில் அனுப்பப்பட்டிருந்தது. ஆனாலும் அதில் திருப்தி அடையாத கவர்னர் ஆர்.என்.ரவி அந்த சட்ட மசோதாவை இம்மாதம் முதல் வாரத்தில் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

    அதில் இந்த சட்ட மசோதாவை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் இன்று சட்டசபையில் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு செய்தது.

    இந்த சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலையில் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இன்றும், நாளையும் டெல்லியில் தங்கி இருக்கும் கவர்னர், மத்திய அரசின் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'கவர்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி சென்றுள்ளார். அவரது நிகழ்ச்சிகள் எதுவும் வெளியிடப்படவில்லை. நாளை இரவு அவர் சென்னை திரும்புவார் என்று தெரிவித்தனர்.

    • குடும்பத்தினருடன் சூரிய அஸ்தமனத்தை பார்க்க சென்ற கவர்னர், மேகமூட்டமாக இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.
    • கவர்னர் அமர்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த நாற்காலிகள் குப்பை வண்டியில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில்:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி, அவரை வரவேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று கன்னியாகுமரி வந்தார்.

    இதையடுத்து குடும்பத்தினருடன் சூரிய அஸ்தமனத்தை பார்க்க சென்ற கவர்னர், மேகமூட்டமாக இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இந்நிலையில், அவர் அமர்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த நாற்காலிகள் குப்பை வண்டியில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    • அதர்மத்திற்கு எதிராக யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ அவர்களெல்லாம் கடவுள் என்று அய்யா வைகுண்டர் கூறியுள்ளார்.
    • சாதி, இனம் மதத்திற்கு அப்பாற்பட்ட அனைத்து மனிதர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

    தென்தாமரைகுளம்:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த கவர்னர் ஆர் என்.ரவி நேற்றிரவு கன்னியாகுமரியில் தங்கினார்.

    இன்று காலை சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதிக்கு சென்று தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    துரதிஷ்டவசமாக நமது சமூகத்தில் தவறான சில பழக்க வழக்கங்கள் இருந்தது. அய்யாவின் போதனைகளை மக்கள் தங்களது வாழ்வியலில் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் சமதர்ம சமநிலையை அடைய முடியும். மனிதநேயம் மட்டும் தான் நமது கலாச்சாரத்தின் அடிப்படை.

    அய்யா வைகுண்டர் ஒரு தெய்வீக ஆத்மா. பாரதம் எனும் பாரம்பரிய வழி வந்தவர். எப்போதெல்லாம் தர்மம் விழுகிறதோ அப்போதெல்லாம் மனித உருவில் கடவுள் அவதரிப்பார். அதர்மத்தை ஒழிப்பதற்காக அவதாரம் எடுத்தவர் அய்யா வைகுண்டர்.

    சமூகத்தில் ஏற்றத்தாழ்வு, தீண்டாமை போன்ற பல தீய பழக்கங்கள் இருந்தது. இது வெட்கக்கேடான விஷயம். பின்னர் பிரிட்டிஷாரால் நாம் காலனி ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டோம்.

    மனிதநேயம் மட்டும் தான் நமது கலாச்சாரத்தின் அடிப்படை. அதர்மத்திற்கு எதிராக யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ அவர்களெல்லாம் கடவுள் என்று அய்யா வைகுண்டர் கூறியுள்ளார்.

    சாதி, இனம் மதத்திற்கு அப்பாற்பட்ட அனைத்து மனிதர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் இதில் ஒரு அங்கம் தான்.

    அய்யாவின் போதனைகளை மக்கள் தங்களது வாழ்வியலில் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் சமதர்ம சமநிலையை அடைய முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சாமி தோப்பு சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி அய்யாவழி வழக்கப்படி தலைப்பாகை அணிந்து கோவிலுக்கு சென்றார். அவரை சாமிதோப்பு தலைமை பதி நிர்வாகி பால ஜனாதிபதி, பால லோகாதிபதி ஆகியோர் வரவேற்றனர். கவர்னர் வருகையையொட்டி சாமிதோப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • கவர்னர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய போது கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பி இருந்தார்.
    • கடிதத்தில் கவர்னர், தமிழக அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி சட்டசபையில் மசோதா நிறைவேற்றியது. பிறகு அது கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பல நாட்களாக இந்த மசோதா மீது கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குள் மேலும் பலர் சூதாட்டத்தில் பணத்தை இழந்து உயிரை மாய்த்தனர். எனவே மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

    இதற்கிடையே கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 8-ந்தேதி திடீரென ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார். மேலும் இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதனை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளது. இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று முன்தினம் கூறுகையில், 'சட்டசபையில் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்' என்று அறிவித்தார். இதனால் தமிழக அரசியலில் ஆன்லைன் சூதாட்ட மசோதா விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் உள்ளது" என்று கூறினார்.

    இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய போது கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில் அவர் தமிழக அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறி இருப்பதாவது:-

    ஆன்லைன் சூதாட்டம் என்பது, கவலை தரக்கூடிய விஷயம். அதை ஒழுங்குப்படுத்தாததால், அதற்கு அடிமையாகி, பணத்தை இழந்து, சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு ஏற்படுகிறது.

    அதேநேரம், ஆன்லைன் விளையாட்டு உள்ளிட்ட இணையதளம் தொடர்பான விஷயங்களை, ஒரு மாநில அரசால் மட்டும் தடை செய்ய முடியாது. இது, மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வரும் விஷயம். எனவே, தேசிய அளவில் இதற்கு நடவடிக்கை தேவை.

    எனவே சீரான முறையில் தேசிய அளவில் ஒழுங்காற்று நடவடிக்கையே இதில் அவசியமேயொழிய மாநில அரசு மட்டுமே ஒழுங்கு முறையோ சட்டத்தையோ கொண்டு வருவதால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. அது நிச்சயமற்றதாகவும் இருக்கும்."

    ஒரு நபரின் திறமையைக் கொண்டு சம்பாதிப்பது அரசியலமைப்பின் 19 (1) (ஜி) பிரிவின் கீழ் அவரது அடிப்படை உரிமையாக உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

    அதற்கு எதிராக, எந்த அரசும் சட்டம் இயற்ற முடியாது.

    ஒரு மாநில அரசால், திறமையான விளையாட்டை ஒழுங்குப்படுத்த மட்டுமே முடியும். அதை முற்றிலும் தடை செய்ய முடியாது.

    இவ்விஷயத்தை ஏற்கனவே தெளிவுபடுத்திய பின்னும், மாநில அரசு அவசர சட்டத்தில் உள்ள அம்சங்களையே, சட்டமாக நிறைவேற்றி மீண்டும் அனுப்பி உள்ளது.

    இதைமீறி, இந்த சட்டத்தை நிறைவேற்றினால், இது உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக அமையும். இதற்கு பதிலாக, ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

    'இதை விளையாடுபவர்கள் தங்கள் 'ஆதார்' அட்டை, 'பான்' அட்டை போன்றவற்றை, ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தொகைக்கு மேல் விளையாட முடியாது' என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

    இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி அதில் கூறி உள்ளார்.

    மசோதாவை திருப்பி அனுப்ப மூன்று விஷயங்களை வரிசைப்படுத்தி உள்ளார் கவர்னர். அது குறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-

    முதலாவதாக இத்தகைய மசோதா, மத்திய அரசு வரம்பில் வரும் விஷயம் என்பதால் அதை மாநில அரசு நிறைவேற்றுவது முரணானதாக இருக்கும். அத்தகைய சட்டத்தை மாநில அரசால் நிறைவேற்ற முடியாது.

    இரண்டாவதாக, இது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் வழங்கியுள்ள உத்தரவுகளுக்கு முரணாகவும் அமையும்.

    மூன்றாவதாக இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்களால் பிற விஷயங்களும் பாதிப்பை எதிர்கொள்ளும் என்று கவர்னர் கடிதத்தில் கூறியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    • கவர்னர் ஆர்.என். ரவி 5 நாள் பயணமாக நேற்றுமுன்தினம் மாலை நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார்.
    • ஊட்டியில் ராஜ்பவன் மாளிகையில் கவர்னர் ஆர்.என். ரவி குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.

    ஊட்டி:

    தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த தடை சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காத கவர்னர் ஆர்.என்.ரவி, சில விளக்கங்கள் கேட்டு நவம்பர் 24-ந்தேதி அரசுக்கு கடிதம் அனுப்பினார்.

    தமிழக அரசு சார்பில் 24 மணி நேரத்தில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பின் சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் அதிகாரிகள் கவர்னரை சந்தித்து உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தினர்.

    கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த கவர்னர், அந்த மசோதாவை நேற்று முன்தினம் அரசுக்கே திருப்பி அனுப்பினார். மேலும் இந்த சட்டத்தை நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார். கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் கவர்னர் ஆர்.என். ரவி 5 நாள் பயணமாக நேற்றுமுன்தினம் மாலை நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். ஊட்டியில் ராஜ்பவன் மாளிகையில் அவர் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.

    இதனால் கவர்னரை கண்டித்து ஊட்டி ராஜ்பவன் மாளிகையை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பிய கவனர்னரின் நடவடிக்கையை கண்டித்து நடக்கும் இந்த போராட்டத்தில் அனைத்துக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

    அரசியல் கட்சியினர் போராட்ட அறிவிப்பால் இன்று ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஊட்டி ராஜ்பவன் மாளிகையை யாரும் நெருங்க முடியாதபடி போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    250-க்கும் மேற்பட்ட போலீசார் ராஜ்பவன் மாளிகை பகுதியில் நிறுத்தப்பட்டு கண்காணித்தபடி இருந்தனர். மேலும் போராட்டக்காரர்கள் ராஜ்பவன் மாளிகை அருகே வர முடியாதபடி ஆங்காங்கே தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை நீலகிரியை ஒட்டிய கேரள மாநில பகுதியான வயநாட்டுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். அதன்படி அவர் காலை 7.30 மணிக்கே காரில் வயநாடு புறப்பட்டுச் சென்றார். அவர் செல்லும் வழியில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க கவர்னரின் காரை பின் தொடர்ந்து பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் வாகனங்களில் சென்றனர்.

    இதற்கிடையே கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த சிலர் காலை 8 மணிக்கு ராஜ்பவன் அருகே உள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் முன்பு திரண்டனர். அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் ராஜ்பவன் மாளிகை நோக்கிச் சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    சிலர் கைதாக மறுப்பு தெரிவித்து கோஷமிட்டனர். அவர்களை குண்டு கட்டாக போலீசார் தூக்கி வேனில் ஏற்றினர். மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை கவர்னர் திருப்பி அனுப்பிய விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும்.
    • ஆன்லைன் சூதாட்டத்தடை சட்ட முன்வரைவை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி. திருப்பி அனுப்பியிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு இல்லை என்று கவர்னர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கவர்னர் அவ்வாறு கூறியது உண்மை என்றால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை கவர்னர் திருப்பி அனுப்பிய விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். வரும் 20-ந்தேதி தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், அதில் ஆன்லைன் சூதாட்டத்தடை சட்ட முன்வரைவை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்கனவே ஒப்புதல் தந்திருக்கிறார். அதைப் போல முந்தைய அரசாங்கம் இயற்றிய சட்டத்திற்கு அன்றைய கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார்.
    • ஒரு நீதிமன்றம், சட்டமன்றம் ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கு சட்டம் இயற்றுவதற்கு உரிமை உண்டு

    சென்னை:

    ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி 2-வது முறையாக தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அடுத்தகட்டமாக தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு ரகுபதி கூறியதாவது:-

    தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்கனவே ஒப்புதல் தந்திருக்கிறார். அதைப் போல முந்தைய அரசாங்கம் இயற்றிய சட்டத்திற்கு அன்றைய கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார். அது நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது நீதிமன்றம், சட்டமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி தள்ளுபடி செய்யவில்லை.

    வேறு சில காரணங்களை சொல்லி அதாவது இதில் கூறப்பட்டுள்ள காரணங்கள் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே நீங்கள் புதிய சட்டம் கொண்டு வாருங்கள் என்று சொல்லி சட்டமன்றத்துக்கு புதிய சட்டம் கொண்டு வருவதற்கு அதிகாரம் இருக்கிறது என்பதை நீதிமன்றமே தனது தீர்ப்பில் சொல்லி இருக்கிறது.

    அதன்படி இந்த புதிய சட்டம் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே ஒரு நீதிமன்றம், சட்டமன்றம் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கு சட்டம் இயற்றுவதற்கு உரிமை உண்டு. நீங்கள் புதிய சட்டம் இயற்றுங்கள் இதில் உள்ள குறைபாடுகளை நீக்கிவிட்டு இயற்றுங்கள் என்று சொல்கிற போது அதை அதிகாரம் இல்லை என்று கூறி நீக்க எந்த அடிப்படையில் கவர்னர் நீக்கி இருக்கிறார் என்பது எங்களுக்கு புரியவில்லை.

    அதைப்பற்றி தெளிவாக அவர் என்ன அனுப்பி இருக்கிறார் என்பதை கோப்புகளை படித்து விட்டு தெளிவான விடையை நிச்சயமாக முதலமைச்சர் தருவார்.

    இந்த மசோதா 2-வது முறை அல்ல, முதல் முறையாக திருப்பி அனுப்பி உள்ளார்கள். இதற்கு முன்பு சில கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு பதில் சொல்லி இருந்தோம்.

    இதை திருப்பி சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அவர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதை மறுப்பதற்கு அவருக்கு வாய்ப்பே கிடையாது. அது தான் சட்டம்.

    கேள்வி: கவர்னர் திருப்பி அனுப்பி உள்ள மசோதாவுடன் ஒரு கடிதமும் சேர்த்து அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறாரே?

    பதில்: நான் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று தான் சென்னை வந்தேன். கவர்னர் கடிதம் அனுப்பி இருக்கிறாரா? என்பதெல்லாம் தெரியாது. அவர் அனுப்பியதை படித்து பார்த்த பிறகு தான் எதையும் தெளிவாக சொல்ல முடியும். நானாக எதுவும் சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×