search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233898"

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 96.22 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 3-வது இடத்தை பிடித்தது.
    • 96.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    விருதுநகர்

    பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 96.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 307 மாணவர்கள், 12 ஆயிரத்து 612 மாணவிகள் உட்பட 24 ஆயிரத்து 919 பேர் தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 662 மாணவர்க ளும், 12 ஆயிரத்து 315 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 94.76 சதவீதம் பேரும் மாணவிகளில் 97.65 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ள னர். சராசரி அடிப்படையில் 96.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ஆதிதிராவிட நலப்பள்ளி மாணவர்கள் 97.7 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 97.79 சதவீதமும், அரசு பள்ளி களில் 93.13 சதவீதமும், நகராட்சி பள்ளிகளில் 96.02 சதவீதமும், பகுதியாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் 97.45 சதவீதமும், தனியார் பள்ளிகளில் 99.27 சதவீத மும், சுயநிதி பள்ளிகளில் (மாநில பாடத்திட்டம்) 98.47 சதவீதமும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

      சென்னை:

      எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை காலை 9.30 மணிக்கு பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளையும், நண்பகல் 12 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் வெளியிடுகிறார்.

      பள்ளிக்கூடங்கள் மற்றும் பொது நூலகங்கள் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.

      மாணவ-மாணவிகளின் மதிப்பெண்களையும் உடனே தெரிந்து கொள்ளலாம் என்றும் தேர்வு துறை அறிவித்துள்ளது.

      www.dge.tn.gov.in

      www.dgel.tn.gov.in

      www.dge2.tn.gov.in

      www.tnresults.nic.in

      ஆகிய தேர்வத்துறை, இணைய தளங்களில் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

      அதே சமயத்தில் மாணவ-மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகளை செல்போனுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

      ×