என் மலர்
நீங்கள் தேடியது "சீரமைப்பு"
- ெரயில் பெட்டிகளுக் கான இணைப்பு துண்டிக் கப்பட்டதையடுத்து ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து துண் டிக்கப்பட்ட ரெயில் பெட்டிகளின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஏற்பட்டதால் ரயிலில் இருந்த பெரும்பாலான பயணிகளும் ெரயிலை விட்டு இறங்கினர்.
- பின்னர் அவர்கள் நாகர்கோவில் ெரயில் நிலையத்திலிருந்து பஸ் மூலமாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றனர்.சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சீரமைப்பு பணியை மேற்கொண்ட ஊழியர்கள் துண்டிக்கப்பட்ட இணைப் பை சரி செய்தனர்.
நாகர்கோவில், அக்.27-
கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும் தினமும் எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்பட்டு வரு
கிறது.
இணைப்பு துண்டிப்பு
நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ெரயில் இன்று அதிகாலை 5.20 மணிக்கு நாகர்கோவில் ெரயில் நிலையத்தை வந்த டைந்தது. இதையடுத்து ெரயிலில் இருந்து பயணிகள் இறங்கினார்கள். கன்னியா குமரிக்கு செல்லும் ெரயில் பயணிகள் மட்டும் ெரயிலில் அமர்ந்திருந்தனர்.
நாகர்கோவில் ெரயில் நிலையத்திலிருந்து நீண்ட நேரம் ஆகியும் ெரயில் கன்னியாகுமரிக்கு புறப்பட வில்லை. ெரயிலில் இருந்த பயணிகள் ெரயிலை விட்டு இறங்கினர். இது குறித்து விசாரித்த போது என்ஜின் பெட்டிக்கும் அதனுடைய இணைப்பு பெட்டிக்கும் இடையே உள்ள இணைப்பு துண்டிக் கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
சரி செய்தனர்
ெரயில் பெட்டிகளுக் கான இணைப்பு துண்டிக் கப்பட்டதையடுத்து ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து துண் டிக்கப்பட்ட ரெயில் பெட்டிகளின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஏற்பட்டதால் ெரயிலில் இருந்த பெரும்பாலான பயணிகளும் ெரயிலை விட்டு இறங்கினர்.
பின்னர் அவர்கள் நாகர்கோவில் ெரயில் நிலையத்திலிருந்து பஸ் மூலமாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றனர்.சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சீரமைப்பு பணியை மேற்கொண்ட ஊழியர்கள் துண்டிக்கப்பட்ட இணைப் பை சரி செய்தனர்.
தாமதம்
இதைத் தொடர்ந்து ெரயிலை கன்னியாகுமரிக்கு கொண்டு செல்ல நடவ டிக்கை எடுக்கப்பட்டது. காலை 7.40 மணிக்கு நாகர்கோவில் ெரயில் நிலை யத்திலிருந்து புறப்பட்டு கன்னியா குமரிக்கு சென்றது. சுமார் 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக சென்றது.
ெரயிலில் ஒரு சில பயணிகள் மட்டுமே இருந்த னர். ெரயில் நிலையத்தில் இணைப்பு துண்டிக்கப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. நடுவழியில் இதே போன்று சம்பவம் நடந்திருந்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டிருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்த னர்.
- நகராட்சி ஆணையரிடம் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
- மார்த்தாண்டம் காந்தி மைதானம் முதல் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் வரை உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது.
நாகர்கோவில்:
விஜய்வசந்த் எம்.பி. மார்த்தாண்டத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பொது மக்களைச் சந்தித்து குறை களைக் கேட்டு பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
அப்போது எம்.பி. அலுவ லகம் வருகை தந்த குழித் துறை நகராட்சி ஆணையர் ராமதிலகத்திடம் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வசதி வாரியம் சாலையின் ஒரு பகுதியில் புதிய குடிநீர் குழாய்கள் பதித்து உள்ளன. பணிகள் முடிவடைந்த தும் சாலைகள் சரியாக மூடப்ப டாத காரணத்தினாலும் குண்டும் குழியுமாகப் போக்குவரத்துக்கும் மக்கள் நடந்து செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி அதற்கான பணிகள் எப்போது முடியும் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விஜய்வசந்த் எம்.பி. ஆணை யரிடம் கேட்டு அறிந்து விரைவாக பணிகள் முடிக்க வேண்டும் என வலி யுறுத்தினார்.
மேலும் மார்த்தாண்டம் காந்தி மைதானம் முதல் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் வரை உள்ள சாலைகள் குண்டும் குழியு மாக உள்ளது. அதனைச் சீரமைக்க வேண்டியும், மார்த்தாண்டம் மேம்பாலம் கீழே செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளதை சீரமைக்க வேண்டியும், மற்றும் குழித்துறை நகராட்சி யிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் மார்த்தாண்டம் மீன் சந்தை அருகே சேகரித்து வைக்கப்பட்டுள்ளதால் துர் நாற்றம் வீசி வருகிறது.
இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகை யில் உள்ளதால் அந்த கூடத்தை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது தூய்மை அலுவலர் ஸ்டான்லி குமார், நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், வார்டு உறுப்பினர்கள் ரீகன், வட்டார தலைவர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மழை நீரோடையின் மேல் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- மழை நீர் தேங்கி சுகாதார கேட்டையும் ஏற்படுத்தி வந்தது.
கன்னியாகுமரி:
கருங்கல் சந்திப்பில் இருந்து புதுக்கடை செல்லும் சாலையில் ரோட்டோரம் அமைக்கப்பட்டு இருந்த மழை நீரோடைகள் ஆக்கிர மிக்கப்பட்டு இருந்ததோடு, சில பகுதிகள் சேதமடைந்தும் காணப்பட்டது.
இதனால் மழைக்காலங் களில் மார்த்தாண்டம் சாலையிலிருந்தும் சந்திப் பில் இருந்தும் மழைநீர் ரோடு வழியாக ஓடி ஆர்.சி. தெருவில் ஆறுபோல் பெருக்கெ டுத்து ஓடி வந்தது. மட்டுமல்லாமல் சேதமடைந்து இருந்த பகுதியில் மழை நீர் தேங்கி சுகாதார கேட்டையும் ஏற்ப டுத்தி வந்தது.
இதனால் அப்பகுதி மக்க ளும், வியாபாரிகளும் பெரும் பாதிப்புக்கு உள் ளாகி வந்தனர். எனவே கருங்கல் புதுக்கடை சாலை யில் உள்ள மழை நீரோடை களை சீரமைக்க வேண் டும் என பேரூராட்சி நிர்வா கத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த மழை நீரோடையை சீர மைப்பதற்கு 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் தமிழக அரசு ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இந்நிதியில் கருங்கல் சந்திப் பில் இருந்து புதுக்கடை செல்லும் சாலையில் ரோட்டின் வலதுபுறம் கூனாலுமூடு வரை மழை நீரோடையின் மேல் அமைக் கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கள் அகற்றப்பட்டு, மழை நீரோடை சீரமைக்கும் பணி தொடங்கியது.இப்பணியை கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேரூ ராட்சி துணைத்தலைவர் மரிய செல்வம், பேரூராட்சி உறுப்பினர்கள் டெல்பின், ராஜசேகர், ஜெயக்குமார், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் அருள்ராஜ் உட்பட பலர் கலந்து கொண் டனர்.
- தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணை பாட்டிலுடன் வந்த வக்கீல் கைது
- பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததினால் நடவடிக்கை
கன்னியாகுமரி:
களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் புனித தேவ குமார் இவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.
இவர் 14.10.2022 அன்று மண்ணெண்ணை பாட்டிலுடன் தான் தீ குளிக்க போவதாக அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டிருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது :-
குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான குழித்துறையில் இருந்து மடிச்சல் செல்லும் சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் சுமார் 3 வருடமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனை சரி செய்ய பல முறை புகார் அளித்தும் குழித்துறை நகராட்சியோ, மாவட்ட நிர்வாகமோ எந்த நடவடிக்கை எடுக்க வில்லை. அதனால் இந்த மாதம் 30-ந் தேதி சாலையை செப்பனிட வில்லை என்றால் தான் 31-ந் தேதி குழித்துறை சந்திப்பில் தீ குளிக்க போவதாக மண்ணெண்ணை பாட்டிலுடன் அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளத்தில் விடுத்திருந்தார்.
அந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் அதிகாரிகள் அவரிடம் சில நாட்களில் சாலையை செப்பனிடுவோம் என்றும், இப்போது எங்களிடம் போதிய நிதி இல்லை என்றும் பேச்சு வார்தையில் ஈடுபட்டு வந்தனர். அதற்கு உடன்படாத அவர் இன்று காலை தீ குளிப்பதற்காக மண்ணெண்ணை பாட்டிலுடன் தனது வீட்டில் இருந்து கிளம்பிய போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததினால் அவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மழை நீருடன் சாக்கடை நீர் ரோடுகளில் கரைபுரண்டு ஓடுவதை தடுக்கும் வகையில் கழிவுநீர் கால்வாய் உடைப்புகளை சீரமைக்கும் பணி
- மேயர் மகேஷ் அந்த பகுதி முழுவதும் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை நீருடன் சாக்கடை நீர் ரோடுகளில் கரைபுரண்டு ஓடுவதை தடுக்கும் வகையில் கழிவுநீர் கால்வாய் உடைப்புகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அங்குள்ள ஒரு கடையின் மேற்கூரை சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அந்த கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகவும், புகார் வந்ததால் கடையில் ஆய்வு செய்ய அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து மாநகராட்சி சுகாதார அதிகாரி ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் ஆகியோர் அந்தக் கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் அந்த பகுதி முழுவதும் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகரப் பகுதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு வார்டாக ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் கோட்டார் பகுதி மிக முக்கியமான பகுதியாகும். இந்த பகுதியில் மழை நேரங்களில் தண்ணீர் ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதை சரி செய்யும் வகையில் கழிவுநீர் ஓடைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது.
தற்பொழுது சாலையில் மழை நீர் தேங்காமல் கழிவு நீர் ஓடையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தற்பொழுது கழிவுநீர் ஓடை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிவடைந்ததும் கழிவு நீரோடையின் மேல் மூடிகள் அமைக்கப்படும். ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
அகற்றப்பட்ட பிறகும் பொதுமக்கள், வியாபாரிகள் மீண்டும் அந்த இடத்தை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குப்பையில்லா மாநகராட்சியாக நாகர்கோவில் மாநகராட்சி மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சதாசிவம் உள்பட பலர் உடனிருந்தனர்.
- அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
- நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு 160-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட வெட்டுமணி ஒய்.எம்.சி.ஏ. கலையரங்கில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறும் தீர்வுதளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் அந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத் துறைக்கென ரூ.165 கோடியும், பழுதடைந்த நெடுஞ்சாலைகளை சீரமைப்பதற்காக ரூ.15 கோடியும் நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் நடைபெற்று வருகிறது. ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி சாலைகளை சீரமைப்பதற்கென ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்திற்குட்பட்ட திருக்கோவில்களை சீரமைப்பதற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கியிருந்த நிலையில் தற்போது அந்த குப்பைகளை படிப்படியாக அகற்றிவருவதோடு, பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றுவதற்கு பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாக மாற்றிட பொதுமக்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க தலைவர் அல்அமீன், செயலாளர் கார்த்திகேயன் முதல் மனுவை கொடுத்தனர். மனுவில், மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையை முழுமையாக தார் போட்டு சீரமைத்து அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு 160-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றனர்.
- சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் மூன்று பாசனவாய்க்கால் செல்கிறது.
- பாசன வாய்க்கால்களில் பாலம் அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மேலபனையூர் தெற்கு தெரு கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் சுடுகாடு அமைந்துள்ளது.
இந்த சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் மூன்று பாசனவாய்க்கால் செல்கிறது.
இந்த மூன்று வாய்க்காலிலும் பாலம் இல்லை. வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது.
இதனால் தெற்கு தெருவில் இறந்தவரின் உடலை சேறு- சகதியும் நிறைந்த வயல் வழியாக சுடுகாட்டிற்கு தகனம் செய்ய எடுத்து செல்லும் அவலநிலை உள்ளது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே சுடுகாட்டிற்கு செல்லும்.வழியில் உள்ள பாசன வாய்க்கால்களில் பாலம் அமைத்து சாலையை தார் சாலையாக சீரமைக்க வேண்டும். சுடுகாட்டில் தெருவிளக்கு வசதிகள் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஏற்கனவே ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
- மேயர் மகேஷ் தகவல்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில்மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 40-வது வார்டுக்குட்பட்ட வைத்திய நாதபுரம், வடலிவிளை, இசங்கன்விளை, பறக்கை ரோடு பகுதிகளில் இன்று காலை கவுன்சிலரும் மண்டல தலைவருமான அகஸ்டினா கோகிலவாணியுடன் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அந்த பகுதியில் கழிவுநீர் ஓடை சீரமைப்பு பணி சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை முன்பு அமைக்கப்பட உள்ள ரவுண்டானாவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகர பகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மை பணி நடந்து வருகிறது. தற்போது சாலை சீரமைப்பு பணிக்கு ஏற்க னவே ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.தற்போது மேலும் ரூ.10 கோடியே 80 லட்சம் நிதி வந்துள்ளது. மொத்தத்தில் தற்பொழுது ரூ.41 கோடியே 80 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த நிதியின் மூலமாக எந்தெந்த வார்டுகளில் எந்தெந்த சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கவுன்சிலரின் கருத்துக்கள் கேட்கப்பட்டு முதற்கட்டமாக அந்த சாலைகள் சீரமைக்கப்படும். நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் ரவுண்டானா ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்படும். இந்த ரவுண்டானா 30 அடி சுற்றளவில் அமைக்கப்படும்.
கலெக்டர் அலுவலக முன்பகுதியில் உள்ள ரவுண்டானா அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பகுதியில் நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. எந்த வகையான நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட்டு அந்த நினைவு தினம் அந்த பகுதியில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது கவுன்சிலர் விஜிலா ஜஸ்டஸ், பால்அகியா, பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், செயற்குழு உறுப்பினர் சதாசிவம் உடனிருந்தனர்.
- அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் என்னென்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்.
- தஞ்சை பெரிய கோவில் முகப்பு பகுதிகளை அழகுப்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 1 கோடியே 22 லட்சம் செலவில் கடந்த 2010-11-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யபட்டு 2013-ம் ஆண்டுபேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
தற்போதுதஞ்சை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.
அதை சீரமைத்து அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்படுவது குறித்து எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. தலைமையில் இன்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் அரங்கத்தை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.
பின்னர் நிருபர்களுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் என்னென்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும், சீரமைக்க நிதி எவ்வளவு குறித்து ஆலோசனை நடத்தபட்டது. உடனடியாக சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும்.
அதேபோல், தஞ்சையில் விமான போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணியிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.
அப்போது, தஞ்சை விமான படை தளத்திற்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு இடமா ற்றம் செய்வது குறித்து பிரச்சினை இருந்தது. தற்போது இதுகுறித்து, தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்தி ராவிடம் ஆலோசனை நடத்தினோம்.
அவர் நில மாற்றம் குறித்து இரண்டு அமைச்சகமும், ஏற்றுக்கொண்டால் விரைவில் தீர்க்கப்பட்டு விமான சேவை தொடங்கப்படும் என்றார்.
மேலும், தஞ்சை பெரிய கோவில் முகப்பு பகுதிகளை அழகுப்படுத்தவும், கோவில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியா ளர் கார்த்திகேயன், மண்டல குழுத்தலைவர் நீலகண்டன், மாநகர நல அலுவலர் (பொ) அசோகன் ஆகியோர் உடன் உள்ளனர்.
- 2 முதல் 5 வயது வரையிலான 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப சுகாதாரக் கல்வி பயின்று வருகின்றனா்.
- ஓடுகளால் அமைக்கப்பட்ட இக்கட்டடம், மிகவும் பழுதடைந்து, மின் இணைப்பு கூட இல்லாமல் பராமரிப்பின்றி உள்ளது.
அவினாசி:
சமூக ஆா்வலரும், வக்கீலுமான திருமூா்த்தி முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: -
அவிநாசி வட்டம், சேவூா் அருகே தண்டுக்காரன்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட ராமியம்பாளையம்கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ராமியம்பாளையம், சாலைப்பாளையம், ஓடத்தோட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து 2 முதல் 5 வயது வரையிலான 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப சுகாதாரக் கல்வி பயின்று வருகின்றனா்.
50 ஆண்டுகளுக்கு முன் கருங்கல்லாலும், ஓடுகளால் அமைக்கப்பட்ட இக்கட்டடம், மிகவும் பழுதடைந்து, மின் இணைப்பு கூட இல்லாமல் பராமரிப்பின்றி உள்ளது.மேலும் தற்போது ஓடுகள் உடைந்தும், சுவா்கள், தரைகள் தளம் இடிந்தும் உள்ளதால் மழை நீா் மையத்துக்குள் வழிகிறது.தரை ஓதத்தினால் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளன.
இதனால் குழந்தைகள் உட்காா்ந்து பயிலவோ, ஓய்வெடுக்கவோ, விளையாடவோ கூட இடமின்றி உள்ளதால், பெற்றோா் மிகவும் அச்சமடைந்துள்ளனா்.ஆகவே சிதிலமடைந்து காணப்படும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. உத்தரவிட்டுள்ளார்.
- கோரவலசை பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியம் மாரந்தை ஊராட்சி தளிர்தலை கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் மழையால் முழுமையாக சேதமடைந்தது.
இதனால் பொதுமக்களின் போக்குவரத்திற்கு சிரமம் உள்ளதாகவும், மழை காலம் ஆரம்பித்துவிட்டதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும் பொதுமக்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்நாதனிடம் கோரிக்கை விடுத்ததன் பேரில் மாரந்தை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார். சேதமடைந்த தளிர்தலை தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதேபோல் கோரவலசை பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
- பொதுமக்கள் குமுறல்
- உள்ளாட்சி தேர்தல் முடிந்து 7 மாதங்கள் ஆகியும் இந்த சாலை சீரமைப்பிற்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள 52 வார்டு களில் சாலை மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடந்த மாநகராட்சி கூட்டத்திலும் சாலை சீர மைப்பிற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள் ளது. சாலை சீரமைப் பிற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட பிறகும் பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாகவே காட்சி அளிக்கின்றன. குறிப்பாக நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட ஜோசப் தெரு சாலை மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.
இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளது. ஏராளமான பொது மக்கள் வசித்து வருகிறார்கள். பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்த சாலையை பயன்ப டுத்தி வருகிறார்கள். இரு சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் இந்த சாலை வழியாக தினமும் சென்று வருகிறார்கள்.
ஆனால் இந்த சாலையின் அவல நிலையை சொல்லி மாளாது. அந்த அளவிற்கு மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. சாலை யில் உள்ள ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி கீழே விழும் நிலை உள்ளது.சாலையில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு கற்கள் பெயர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த சாலையை சீர மைக்க விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலரை நேரில் சந்தித்து பலமுறை மனு அளித்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை. தேர்தல் நேரத்தில் சாலை சீரமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த உள்ளாட்சி பிரதிநிதிகளும் இதற்கு நடவடிக்கை எடுக்க வில்லை.
உள்ளாட்சி தேர்தல் முடிந்து 7 மாதங்கள் ஆகியும் இந்த சாலை சீரமைப்பிற்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது மட்டுமின்றி 17-வது வார்டுக்குட்பட்ட மேலும் பல்வேறு சாலைகளும் மோசமான நிலையிலேயே காணப்படுகிறது. இந்த சாலை களையும் சீரமைக்க வேண்டும் என்பதே அனை வரின் கோரிக்கையாக உள்ளது. இதேபோல் நாகர் கோவில் மாநகராட்சிக் குட்பட்ட 52 வார்டுகளிலும் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைக்க முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக் கீடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை வைத்து உள்ள னர்.
மேயர் மகேஷ் இந்த சாலை சீரமைப்பில் தனி கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.