என் மலர்
நீங்கள் தேடியது "வேட்பு மனு"
- 10 ரூபாய் நாணயங்களோடு தயார்
- பொது வேட்பா–ளராக அரசியல் கட்சிகள் ஏற்க வேண்டுகோள்
திருச்சி,
திருச்சி உறையூர் பகுதியை சோ்ந்தவா் ராஜேந்திரன் (வயது 61). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவா். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டபோது ராஜேந்திரன் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய் தார். ஆனால், அப்போது அவரது வேட்பு மனு பரி–சீலனையின்போது தள்ளு–படி செய்யப்பட்டது.தேர்தல் மன்னன் பத்ம–ராஜன் போல், இவரும் விழிப்புணர்வுக்காக பல் வேறு தேர்தல்களில் போட் டியிட மனு செய்து வருகி–றார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டி–யிட முடிவு செய்துள்ளார். இதற்காக கடந்த வாரம் மனு தாக்கல் செய்வதற்காக சென்றபோது அவரது மனு ஏற்கப்படவில்லை.இதுகுறித்து அவா் திருச் சியில் நிருபர்களிடம் கூறி–யதாவது:-தமிழ்நாடு அரசுப் போக் குவரத்து கழகத்தில் பணி–புரியும் பேருந்து நடத்து–நா்கள் வசூல் செய்து கொண்டு வரும் பேருந்து கட்டணத்தில் பத்து ரூபாய் நாணயங்களை பொதுமக் கள் பெற்றுக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனா். பல இடங்களில் வங்கிகள் கூட நாணயங்களை பெற்றுக் கொள்வதில்லை. வியாபாரிகளும் பெரும்பா–லான நேரங்களில் இந்த நாணயங்களை புறக்கணித்து வருகின்றனா்.10 ரூபாய் நாணயம் செல்லும், அதனை புறக்க–ணிக்கக் கூடாது என ரிசா்வ் வங்கி தரப்பில் அவ்வப்போது அறிவிப்பு–களும் வெளியிடப்படுகிறது. ஆனால், யாரும் அதனை பின்பற்றுவதில்லை. எனவே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட விருப்ப மனு–வுடன், டெபாசிட் தொகை–யாக 10 ரூபாய் நாணயங்க–ளுடன் சென்றேன். ஆனால், எனது மனுவை ஏற்க–வில்லை.டெபாசிட் தொகைக்கு நாணயங்களை மட்டுமே வழங்க இருக்கிறேன். ஏனெ–னில், 10 ரூபாய் செல்லுமா? செல்லாதா? என இடைத் தோ்தல் களத்தின் மூலம் அனைவருக்கும் அறிவிக்க உள்ளேன். எனவே, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மீண்டும் ஈரோடு சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறேன். அனைத்தும் சரியாக இருந்தும் எனது வேட்பு மனுவையும், டெபாசிட் தொகையையும் நிராகரித்தால் மக்கள் மன்றத்தில் அரசும், தோ்தல் ஆணையமும் பதில் அளிக்க வேண்டும்.மேலும், தோ்தல் விதி–முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். நல்ல மனிதா்கள் தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என்று மக்களிடம் பிரசாரம் செய்யப் போகிறேன். என்னை பொது வேட்பா–ளராக அரசியல் கட்சிகள் ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறி–னார்.
- வேட்புமனு தாக்கலையொட்டி தேர்தல் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- இதுவரை இல்லாத வகையில் முதல் நாளிலேயே 4 மந்திரிகள் உள்பட மொத்தம் 221 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.
தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதா 212 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதி களுக்கும், ஜனதா ளம் (எஸ்) 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மீதமுள்ள வேட்பாளர்களை ஓரிரு நாளில் இந்த கட்சிகள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்புமனு தாக்கலையொட்டி தேர்தல் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 100 மீட்டர் தொலைவில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
முதல் நாளில் பீலகி தொகுதியில் தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி, தேர்தல் அதிகாரியிடம் தனது மனுவை தாக்கல் செய்தார். சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் சிக்பள்ளாப்பூர் தொகுதியிலும், கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் யஷ்வந்த புரா தொகுதியிலும், பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல் கதக் மாவட்டம் நரகுந்து தொகுதியிலும் மனுதாக்கல் செய்தனர்.
மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே 221 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் ஆண்கள் 197 பேரும், பெண்கள் 24 பேரும் அடங்குவர். இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான ஆளும் பா.ஜனதாவை சேர்ந்த 27 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 26 பேரும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 10 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஒருவரும், ஜனதா தளம் (எஸ்) சார்பில் 12 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பொதுவாக வேட்பு மனு தாக்கல் தொடங்கினாலும் முதல் நாளில் மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால் கர்நாடக தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில் முதல் நாளிலேயே 4 மந்திரிகள் உள்பட மொத்தம் 221 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கட்சிகளை சேர்ந்த 100 பேர் அடங்குவர்.
எந்த கட்சியையும் சாராத 45 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் வேட்பாளர்கள் முதல் நாளிலேயே மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர். வரும் நாட்களில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) கர்நா டகத்தில் அரசு விடுமுறை ஆகும். அதனால் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை (சனிக்கிழமை) வழக்கம் போல் மனு தாக்கல் நடைபெறும்.
20-ந் தேதி மதியம் 3 மணிக்கு மனுதாக்கல் நிறைவடைகிறது. மனுக்களை வாபஸ் பெற 24-ந் தேதி கடைசி நாள் ஆகும். போட்டியில் இருந்து விலகி கொள்ள விரும்பும் வேட்பாளர்கள் அன்றைய தினம் மதியம் 3 மணிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.
மே மாதம் 10-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். வாக்குகள் எண்ணிக்கை 13-ந் தேதி நடக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
- ஊராட்சி துணைத்தலைவராக அ.தி.மு.க. நிர்வாகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
- இந்த தேர்தலில் வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட வேலானூரணி ஊராட்சி யில் ஊராட்சி மன்ற தலைவ ராக அ.தி.மு.க.வை சேர்ந்த அங்காளஈஸ்வரி உள்ளார்.இந்த நிலையில் வேலா னூரணி ஊராட்சியில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேலானூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் உலக தேவன்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி பூமிநாதன் ஊராட்சி மன்ற துணைத்தலைவருக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த தேர்தலில் வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பூமிநாதன் வேலானூரணி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டார். இந்த நிகழ்ச்சியில் நரிக்குடி ஒன்றிய (பொறுப்பு) தலைவரும், நரிக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செய லாளருமான அம்மன்பட்டி ரவிச்சந்திரன், வேலாணூ ரணி ஊராட்சி மன்ற தலைவர் அங்காள ஈஸ்வரி, ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள், ஊராட்சி ஊழி யர்கள் மற்றும் நிர்வாகிகள், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
- வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.
சென்னை:
தமிழகம்-புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட (ஆர்.டி.சி.) அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் இடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தென் சென்னைக்கு அடையாறிலும், வடசென்னைக்கு மூலகொத்தலம் மாநகராட்சி அலுவலகத்திலும், மத்திய சென்னைக்கு செனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்றால் டெபாசிட் தொகை ரூ.12,500 செலுத்த வேண்டும். அத்துடன் அதற்குரிய ஜாதி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் வேட்பாளர் தரப்பில் தேர்தல் செலவினங்களுக்கு என புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும். அந்த வங்கி கணக்கு, வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.
அதோடு படிவம் 26-ல் பிரமாண வாக்கு மூலத்தில் எல்லா காலங்களும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பிரமாண வாக்குமூலம் 20 ரூபாய் பத்திரத்தில் அளிக்க வேண்டும்.
வேட்பு மனுவுடன் வேட்பாளர் 3 மாதத்துக்குள் எடுத்த ஸ்டாம்ப் சைஸ் போட்டோ வழங்க வேண்டும். போட்டோவில் கட்சி சின்னங்கள், கொடிகள் உள்ளிட்ட எந்த அடையாளங்களும் இருக்கக்கூடாது.
இது தவிர அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சி வேட்பாளர்கள் என்றால் ஒரு முகவராலும், இதர வேட்பாளர்கள் 10 முகவராலும் முன்மொழிய பட வேண்டும்.
முன்மொழிபவர் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர் வேறு பாராளுமன்ற தொகுதியின் வாக்காளராக இருந்தால், அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் தேர்தல் கமிஷனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் கோருவதற்கு, சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமையிடத்தில் இருந்து படிவம் ஏ மற்றும் பி சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.
தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்தில் இருந்து 100 மீட்டர் வரையிலும், வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும்.
- வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுகிறது.
தமிழகம்-புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
அதன்படி, வேட்பு மனுக்களானது காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பெறப்படும்.
மனுத்தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீ-க்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
மனுத்தாக்கல் நடைபெறும் நாட்களில் மாலை 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் ஒருவருக்கும் அனுமதியில்லை.
- சுயேட்சையாக சிலர் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
- இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படாது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் முதல் கட்டமாக வருகிற 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி கடந்த 20-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேகனா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் சுயேட்சையாக சிலர் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் முன்வரவில்லை. 2-வது நாளான நேற்று முன்தினம் சுயேட்சையாக போட்டியிட கூத்தன் என்ற தெய்வநீதி என்பவர் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, 3-வது நாளான நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் அவர் வேட்பு மனுவை வருகிற 25-ந் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். இதுதவிர, நேற்று சுயேட்சையாக கூட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. புதுச்சேரியில் 3 நாள் முடிவில் ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளார். இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படாது.
மனு தாக்கல் பெறுவதற்கு 25, 26, 27 என 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் வருகிற 25-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் முகூர்த்த நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என எண்ணி உள்ளனர்.
அதன்படி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான வருகிற 27-ந் தேதி அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என கூறப்படுகிறது.
- கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கனிமொழி எம்.பி. தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பாக ரூ.30.34 கோடி காட்டியிருந்தார்.
- தனது பெயரில் ரூ.60 லட்சத்து 60 ஆயிரத்து 187 கடன் இருப்பதாகவும், கணவர் பெயரில் கடன் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.பி.யும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கனிமொழி 2-வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார்.
இதனையொட்டி நேற்று அவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான லட்சுமிபதியிடம் மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து 290 மதிப்பிலான 3 கார்கள் வைத்திருப்பதாகவும், 704 கிராம் தங்கம், 13.03 காரட் வைரம் உள்ளிட்டவைகள் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த நகைகளின் மதிப்பு ரூ.55 லட்சத்து 37 ஆயிரத்து 455 ஆகும்.
இவ்வாறாக ரொக்கப்பணம், வங்கி கையிருப்பு என மொத்தம் ரூ.18 கோடியே 54 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாக தனது பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். இதேபோல் தனது கணவர் அரவிந்தன் பெயரில் ரொக்கப்பணம், கையிருப்பு, கார் என மொத்தம் ரூ.66 லட்சத்து 21 ஆயிரத்து 347 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், நிலங்கள், வணிக கட்டிடம், வீடு என மொத்தம் ரூ.2 கோடியே 26 லட்சத்து 31 ஆயிரத்து 550 மதிப்பிலான அசையா சொத்துகளும் என மொத்தம் ரூ.2 கோடியே 92 லட்சத்து 52 ஆயிரத்து 897 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது பெயரில் ரூ.60 லட்சத்து 60 ஆயிரத்து 187 கடன் இருப்பதாகவும், கணவர் பெயரில் கடன் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக மொத்தம் ரூ.38.77 கோடி அசையும் சொத்தாகவும், ரூ.18.54 கோடி அசையா சொத்துகளும் இருப்பதாக தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கனிமொழி எம்.பி. தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பாக ரூ.30.34 கோடி காட்டியிருந்தார். ஆனால் இந்த முறை மொத்த சொத்து மதிப்பாக ரூ.57.32 கோடி காட்டியுள்ளார்.
இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.27 கோடி வரை உயர்ந்துள்ளது. இதில் அசையும் சொத்து மதிப்பு ரூ.17 கோடி அளவும், அசையா சொத்து மதிப்பு சுமார் ரூ.10 கோடி அளவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில் அவரது சொத்து மதிப்பு 80 சதவீதம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
- 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.
- வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் மனோ ஆகியோரின் வேட்புமனுக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சேலம்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கியது. 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில் மொத்தம் 1403 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்திருப்பதால் மொத்த வேட்புமனு எண்ணிக்கை 1749 ஆக உள்ளது.
40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வேட்பு மனுவை பரிசீலனை செய்து வரும் தேர்தல் அதிகாரி சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறி வேட்பு மனு மீதான பரிசீலனையை தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்துள்ளார்.
அதேபோல் வடசென்னை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் மனோ ஆகியோரின் வேட்புமனுக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பரஸ்பரம் ஆட்சேபணை தெரிவித்த நிலையில் 2 பேரின் வேட்பு மனு மீதான பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- அதிக வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் நான் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
- மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை வேரறுக்க வேண்டும்.
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனுக்கான பரிசீலனை இன்று நடந்தது.
தி.மு.க., பா.ஜ.க, அ.தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
பின்னர் வேட்பு மனு தாக்கல் பரிசீலனை முடிந்து மன்சூர் அலிகான் வெளியே வந்தார்.
தமிழகத்தில் முதல் நாளில் நான்தான் மனுத்தாக்கல் செய்தேன். எனக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும் வருகிற 30-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய உள்ளேன். டார்ச் லைட் சின்னம் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் எனக்கு விளக்கு பிடிப்பதற்கு விருப்பமில்லை. அந்த சின்னம் வேண்டாம்.
அதிக வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் நான் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை வேரறுக்க வேண்டும். நான் எந்த கட்சிகளையும் வேறுபாடு பார்க்க மாட்டேன். அனைவரையும் தாக்கி பேசுவேன் என்றார்.
முன்னதாக வேட்பு மனு பரிசீலனைக்காக கலெக்டர் அலுவலகத்திற்குள் மன்சூர் அலிகான் சென்றார்.
எதிரில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வந்தார். அப்போது இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதியில் நீங்கள் (தி.மு.க) தான் வெற்றி பெறுவீர்கள். ஆனால் வேலூர் தொகுதியில் மட்டும் நான் வெற்றி பெறுவேன் என்றார். அதற்கு கதிர் ஆனந்த் அதனை நான் பார்த்துக்கொள்கிறேன் என சிரித்துக் கொண்டே பதில் அளித்துவிட்டு சென்றார்.
- 8 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்று சென்றனர்.
- நள்ளிரவு 1.30 மணி அளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் இறந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறும் என்று கடந்த 7-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 10-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 17-ந் தேதி வரை நடந்தது.
பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்தன. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, சுயேட்சைகள் என 58 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் கடந்த 18-ந் தேதி வேட்பு மனுக்கள் சரிபார்க்கும் பணி நடந்தது. இதில் சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்காத 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
நேற்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இதில் 8 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்று சென்றனர்.
எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உடன் 47 பேர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாக கூட்ட அரங்கில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. அப்போது தி.மு.க வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு மைக் சினமும் ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து ஒவ்வொரு வேட்பாளருக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வேட்பாளர் மற்றும் அவர்களது முகவர்களிடம் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர் பத்மாவதி என்பவருக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் போது மற்ற சுயேட்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் பத்மாவதி கர்நாடகா மாநிலம் பெங்களூரு, உதயா நகர், மஞ்சு நாத்சுவாமி நிலையம் பகுதியை சேர்ந்தவர்.
இவரது ஓட்டு கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜபுரம் தொகுதியில் உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எவ்வாறு போட்டியிடலாம் என்று வேட்பாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பத்மாவதிக்கு மட்டும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
வேட்பாளர் பத்மாவதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தகுதியானவரா? என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் முழுவதுமாக வெளியிடுவது நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து அறிந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு விரைந்து வந்தார். தேர்தல் நடத்தும் அதிகாரி மனிஷ் அறையில் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
இந்த குழப்பம் நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் நள்ளிரவு வரை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணி அளவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஈரோடு தேர்தல் நடத்தும் அதிகாரி மனிஷ் கூறும்போது,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்பு மனு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய விதிப்படி லோக்சபா, ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு எந்த மாநிலத்தில் இருந்தும் எந்த மாநிலத்துக்கும் வேட்பா ளராக போட்டியிடலாம்.
ஆனால் சட்டசபை தொகுதிக்கு அம்மாநிலத்தில் வாக்காளராக உள்ளவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற விதி உள்ளது. இதன் அடிப்படையில் கர்நாடகா மாநில பெண் சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனையடுத்து நீண்ட இழுப்பறிக்க பிறகு நள்ளிரவில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 46 பேர் போட்டியிடுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடும் 46 பேரின் பெயர்கள், முகவரிகள், அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள் ஆகியவை ஒட்டப்பட்டுள்ளது.
- வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
- காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம்.
2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி விலகினார். இதையடுத்து சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப் பேற்றார்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் தேவை என்று மேலிடத்தை விமர்சனம் செய்து கபில் சிபில், குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கடசியில் இருந்து விலகினார்கள். இதைத்தொடர்ந்து கட்சியை வலுப்படுத்துவதற்காக ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணையை காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு நேற்று முன்தினம் வெளியிட்டது.
அதன்படி காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது. 22 ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. கடைசியாக 2000 ஆண்டு நடந்த தேர்தலில் ஜிதேந்திர பிரசாத்தை தோற்கடித்து சோனியாகாந்தி தலைவரானார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் 30-ந்தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1-ந் தேதி பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ந்தேதி கடைசி நாளாகும்.
ஒன்றுக்கும் மேற்பட்டோர் போட்டியிட்டால் அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து காங்கிரஸ் தலைமை அலுவலகங்களிலும் தேர்தல் நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்-மந்திரியும், சீனியருமான அசோக் கெலாட் போட்டியிடுகிறார். சோனியா, ராகுல் ஆதரவுடன் அவர் களத்தில் குதிக்கிறார்.
கேரளாவில் இருந்து ராஜஸ்தான் திரும்பியவுடன் அசோக் கெலாட் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதேபோல் அதிருப்தி குழுவில் உள்ள சசிதரூர், மனீஷ் திவாரி ஆகியோரும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய பிரதேச முன்னாள் முதல் அமைச்சரும், மற்றொரு சீனியர் தலைவருமான திக் விஜய் சிங் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று முன்பு தகவல் வெளியானது. தற்போது தான் தலைவர் பதவிக்கு போட்டியிட வில்லை என்று திக்விஜய் சிங் அறிவித்து உள்ளார்.
- 2016ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளில் பதவிக்காலம் முடிகிறது.
- 66வது மகாசபை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கமான சைமாவில் 6 நிர்வாக பதவி, 21 செயற்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன. 2016ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளில் பதவிக்காலம் முடிகிறது.கடந்த 2ந்தேதி கூடிய செயற்குழுவில் தற்போது உள்ள நிர்வாகிகளே, 2022 - 2025ம் ஆண்டில் பதவியில் தொடரலாம் எனவும், உறுப்பினர் யாரேனும் தெரிவித்தால் சங்க விதிமுறைகள்படி தேர்தல் நடத்தப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.வருகிற 29ந்தேதி மாலை 4:30 மணிக்கு, ஹார்வி ரோட்டில் உள்ள சங்க அரங்கில் 66வது மகாசபை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை தவிர்க்கும் சைமாவின் செயற்குழு முடிவு ஒருதரப்பு உறுப்பினர் குழுவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.புதியவர்கள், இளைஞர்களுக்கு மூத்த நிர்வாகிகள் வழிவிடவேண்டும் என சங்க தலைமையை வலியுறுத்தி தேர்தலுக்கு ஆயத்தமாகிவருகின்றனர். எதிர்ப்போருக்கு பதவி வழங்கி தேர்தலை தவிர்ப்பதற்காக அமைதி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் 7 நிர்வாக பதவி,20 செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி தேதி. இந்தநிலையில் கே.எம். நிட்வேர் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியத்தை தலைவராக கொண்டு அனைத்து நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 27 பேர் திரண்டு வந்து சங்க அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தலைவர் பதவிக்கு சுப்பிரமணியம், துணை தலைவருக்கு பெஸ்ட் கார்ப்பரேஷன் ராஜ்குமார், எஸ்.என்.க்யூ.எஸ்., இளங்கோவன், பொதுச்செயலாளருக்கு எஸ்.டி. எக்ஸ்போர்ட்ஸ் திருக்குமரன், இணைச் செயலாளருக்கு சில்வின் நிட் பேஷன் சின்னசாமி, ஈஸ்டன் குளோபல் கிளாத்திங் குமார் துரைசாமி, பொருளாளர் பதவிக்கு ராயல் கிளாசிக் மில் கோபாலகிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 20 பேர் மனுதாக்கல் செய்தனர்.
தேர்தல் குறித்து ஏற்றுமதியாளர் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் கூறுகையில், கடந்த 6 ஆண்டுகள் ஒரு தலைமையின் கீழ் சங்க நிர்வாகம் செயல்பட்டு வந்தது.விதிமுறைப்படி தற்போது புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. கே.எம்., நிட்வேர் சுப்பிரமணியத்தை தலைவராக கொண்டு சங்கத்தின் அனைத்து பதவிகளுக்கும் 27 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 6 ஆண்டுகளாக பதவி வகித்தோர் தற்போதைய தொழில் சூழல் உணர்ந்து தேர்தலில் போட்டியை தவிர்க்கவேண்டும் என்றார்.