search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் சாதனை"

    • கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • சென்னை ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

    திருப்பூர் :

    சென்னை ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி சென்னை மான்போர்டு ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இதில் கேரளா , கர்நாடகா,தெலுங்கானா , மகாராஷ்டிரா,பாண்டிச்சேரி , அசாம் போன்ற பல மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் திருப்பூர் பாண்டியன் நகர் அரசு பள்ளி மாணவர்கள் ராகவ் பெருமாள் மற்றும் லலித் குமார் இருவரும் தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இதையடுத்து அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் அய்யர் மற்றும் கராத்தே பயிற்சியாளர் நாட்ராயன் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் பாராட்டினர்.

    • தேசிய கராத்தே போட்டியில் விழுப்புரம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • விழுப்புரம் மாவட்டத்திற்க்கு பெறுமை சேர்த்த மாணவர்களை பாராட்டினர்,

    விழுப்புரம்,

    சேலம் தனியா ர்பொறியியல் கல்லூரியில் 8-வது தேசிய அளவிலான ஒபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சார்ந்த ஜுனியர், சீனியர் மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் விழுப்புரம் ஜார்ஜ் கார்னேஷன் கிளப் வளாகத்தில் பயிற்சியாளர் சென்சாய் செல்வகுமாரிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் ஜெயஸ்ரீ, அரிகரன், குருபிரசாத், வளர்மதி, ஷேக்ஆப்தாப், போகேஷ்வரன், கமலேஷ், சந்தோஷ், நிஷாந்த், விக்னேஷ்வரன், சஞ்சய், பாலகுமரன், ஷேக்ரிகான், அஸ்ரபி, அப்ரிகான், அப்ஷா பேகம், காளிதாஸ் ஆகியோர்கள் பங்கேற்றனர். இதில் கட்டா பிரிவில் 15 மாணவர்களும் கும்தே பிரிவில் 17 மாணவர்களும் கேடயம் மற்றும் சான்றிதழ் பெற்று சாதனை படைத்தனர்.

    விழுப்புரம் மாவட்டத்திற்க்கு பெறுமை சேர்த்த மாணவர்களை பயிற்சியாளர் சென்சாய் செல்வகுமார் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் சென்சாய் வைத்தியநாதன் மற்றும் பலரும் பாராட்டினர்.

    • பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளை ஏ.வி.பி. கல்வி குழுமத்தினர் பாராட்டினர்.
    • பல்வேறு பாடங்களில் 100 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10 மற்றும் 12-ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளது. இதில் 12-ம்வகுப்பு தேர்வில் மாணவன் ஹரிஷ் 600க்கு 596 மதிப்பெண் பெற்று மாநில அளவிலும், பள்ளியில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி புவனா 595 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும் மாணவி அங்கயற்கண்ணி 594 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பெற்றுள்ளனர். 66 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

    இதேப்போல் 10-ம்வகுப்பு தேர்வில் இப்பள்ளி மாணவி நக்சத்திரா 500க்கு 491 மதிப்பெண்ணும், மாணவன் தனுஜ் இமயவரம்பன் 491 மதிப்பெண்ணும் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளனர். மாணவி ரித்திகா 489 மதிப்பெண் பெற்று 2-ம் இடம் பெற்றுள்ளார்.

    மாணவன் கவின் அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்ணும், மாணவி ரித்திகா அறிவியலில் 100, தமிழில் 99 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். கணிதத்தில் மாணவர் முகமது இம்தியாஸ், நக்சத்திரா, ரிசாபேஷ்,ஸ்ரீநிஷா, தனுஜ் இமயவரம்பன் ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் ஆனந்த், அன்பரசி, ஹன்சிகா, கவின், கவுசிக், முகமது ஷகிலா ஆகியோர் 100க்கு 99 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    பொதுத்–தேர்–வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளை ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன், அறக்கட்டளை பொருளாளர் லதா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் பிரியா ராஜா, ஒருங்கிணைப்பாளர் வனிதாமணி மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோர் பாராட்டினர்.

    • பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
    • திருச்சி மாவட்டத்தில் 92.25 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    திருச்சி:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் பிளஸ்-2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டமும், 10-ம் வகுப்பு தேர்வில் கன்னியாகுமரி மாவட்டமும் முதலிடத்ைத பிடித்துள்ளது.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் திருச்சி மாவட்டத்தில் 92.25 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 16,615 பேரும், மாணவிகள் 16,942 பேரும் தேர்வு எழுதினர். இதில் 14,562 மாணவர்களும், 16,396 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.15 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 4,186 பேரும், மாணவிகள் 3,704 பேரும் தேர்வு எழுதினர். இதில் 4,018 மாணவர்களும், 3,647 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அரியலூர் மாவட்டத்தில்91.66 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 5,237 பேரும், மாணவிகள் 4,993 பேரும் தேர்வு எழுதினர். இதில் 4,619 மாணவர்களும், 4,758 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கரூர் மாவட்டத்தில் 83 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 6,080 பேரும், மாணவிகள் 5,971 பேரும் தேர்வு எழுதினர். இதில் 4,640 மாணவர்களும், 5,362 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 87.85 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 11,375 பேரும், மாணவிகள் 11,085 பேரும் தேர்வு எழுதினர். இதில் 9,381 மாணவர்களும், 10,350 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் திருச்சி மாவட்டத்தில் 95.93 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 14,890 பேரும், மாணவிகள் 16,941 பேரும் தேர்வு எழுதினர். இதில் 13,894 மாணவர்களும், 16,643 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.95 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். மாணவர்கள் 9,933 பேரும், மாணவிகள் 3,734 பேரும் தேர்வு எழுதினர். இதில் 3,836 மாணவர்களும், 3,674 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 96.47 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 9,923 பேரும், மாணவிகள் 4,555 பேரும் தேர்வு எழுதினர். இதில் 3,742 மாணவர்களும், 4,337 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் கரூர் மாவட்டத்தில் 92.37 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 4,834 பேரும், மாணவிகள் 5,411 பேரும் தேர்வு எழுதினர். இதில் 4,305 மாணவர்களும், 5,158 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 91.58 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 8,606 பேரும், மாணவிகள் 9,969 பேரும் தேர்வு எழுதினர். இதில் 7,519 மாணவர்களும், 9,492 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.


    ×