என் மலர்
நீங்கள் தேடியது "ஆறு"
- கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் அதிகளவு வந்து கொண்டிருந்தது.
- நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பார்வதி புரத்தைச் சேர்ந்தவர் சுஷ்மா (வயது 26). சாப்ட்வேர் என்ஜினீயர்.
டெல்லி துவாரகா நகர் பகுதியைச் சேர்ந்த ஷியாம் (28) சாப்ட்வேர் என்ஜினீயர். இருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுஷ்மாவும் ஷியாமும் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் ஷியா முக்கும் சுஷ்மாவுக்கும் தலை தீபாவளி என்பதால் அதனை கொண்டாடு வதற்காக பார்வதிபுரத்திற்கு வந்திருந்தனர். தலை தீபா வளியை கொண்டாடிய இவர்கள் நேற்று காலை காளிகேசம் பகுதியை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். அந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் அதிகளவு வந்து கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் இருந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சுஷ்மா எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து சுஷ்மா கூச்சலிட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் சுஷ்மா தண்ணீரில் மூழ்கத் தொடங்கினார். மனைவியை காப்பாற்று வதற்காக ஷியாம் ஆற்றில் குதித்தார்.
அப்போது அவர் அந்த பகுதியில் உள்ள சூழலில் சிக்கிக்கொண்டார். இவருக்கும் நீச்சல் தெரியாது. இதனால் தண்ணீரில் இருந்த சூழலில் இருந்து ஷியாமால் வெளியே வர முடியவில்லை. ஆனால் சுஷ்மா அந்த பகுதியில் உள்ள செடி ஒன்றை பிடித்துக் கொண்டு கரைக்கு பத்திரமாக வந்தார்.மனைவி கண்ணெதிரே ஷாயாம் தண்ணீரில் மூழ்கி மாயமானார்.இதனால் சுஷ்மா கூச்சலிட்டார். அங்கிருந்த சுற்றுலா பயணி கள் அங்கு திரண்டனர்.
இதுகுறித்து நாகர் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரி விக்கப்பட்டது. தீய ணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஷியாம் பிணமாக மீட்கப்பட்டார். ஷியாம் உடலை பார்த்து சுஷ்மா கதறி அழுதார். இது குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஷியாமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலை தீபாவளி கொண்டாட வந்த இடத்தில் என்ஜினீயர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடும் பணி தீவிரம்
- தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டியும், டியூப்களில் மிதந்து சென்றும் தேடுதல் வேட்டை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. எனவே அணைகளில் இருந்து ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் குமரி மாவட்ட நீர்நிலைகளில் அதிக அளவு தண்ணீர் ஓடுகிறது.
திருவட்டார் அருகே உள்ள பரளியாற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடு கிறது. இருப்பினும் ஆபத்தை உணராமல் பலரும் ஆற்றில் குளித்து வருகின்றனர். திருவட்டார் கொற்றுபுத்தன் வீடு பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் நாயர் (வயது 52) என்பவரும் இன்று காலை ஆற்றில் குளிக்க வந்தார்.
அவர் தண்ணீரில் இறங்கி குளித்த போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். அப்போது தண்ணீரின் வேகம் அதிக மாக இருந்ததால் அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிகி றது.
ஆனால் இதனை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து அந்த பகுதி யில் குளித்துக் கொண்டிருந்த வர்கள் மதுசூதனன் நாயரை தேடினர். அப்போது தான் அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
எனவே அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என கருதி தேடினர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து குலசேகரம் போலீசார் மற்றும் தீய ணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விைரந்து வந்து, மதுசூதனன் நாயரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றில் தண்ணீர் அதிக அளவு வேகமாக சென்றதால், தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டியும், டியூப்களில் மிதந்து சென்றும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து நீரோட்டத்தையே காண முடியாத அளவுக்கு உள்ளது.
- ஆற்றில் கலக்கும் கழிவுநீர் வழித்தடங்களை கண்டறிந்து அதனை தடுத்து அப்புறப்படுத்த வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூரில் நகரின் மையமாக ஓடம்போக்கி ஆறு செல்கிறது. ஒரு காலத்தில் இந்த ஆற்றில் ஓடம் போக்குவரத்து இருந்ததால் இதனை ஓடம்போக்கி ஆறு என்று அழைத்ததாக கூறுகின்றனர்.
இந்த ஆற்றின் மூலம் திருவாரூர் நகரம், விளமல், வன்மீகபுரம், தியானபுரம், சாப்பாவூர், கடாரம்கொண்டான், அலிவலம், கீவளூர் ஆகிய இடங்களில் பாசன வசதிகளும் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து இருப்பது நீரின் போக்கை மாற்றுகிறது.
மேலும் நகர்ப்புறங்களில் உள்ள தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் இந்த ஆற்றில் கலந்து விடுகிறது. இதனால் இந்த ஆற்றின் தண்ணீர் தெளிவற்ற நிலையில் கருமை நிறமாக காட்சியளிக்கிறது.
மேலும் இந்த ஆற்றில் பெரும்பாலான இடங்களில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து நீரோட்டத்தையே காண முடியாத அளவுக்கு உள்ளது.
இதனால் நீரின் தூய்மை மாறுவதோடு, ஆற்று நீரின் போக்கும் மாறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த ஆற்றில் தெளிந்த நீரோட்டம் இருக்கும் வகையில் செய்திட வேண்டும்.
அதற்கேற்ற வகையில் ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.
ஆற்றில் கலக்கும் கழிவுநீர் வழித்தடங்களை கண்டறிந்து அதனையும் தடுத்து, அப்புறப்படுத்த வேண்டும்.
இதன் மூலம் ஆற்றில் தெளிவான நீரோட்டத்தை ஏற்படுத்தி நகரின் அழகை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளிக்க சென்றார்.
- தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி வாலிபர் உடலை மீட்டனர்.
பூதலூர்:
கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக கல்லணை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் ஓரளவுக்கு ஓடிக் கொண்டுள்ளது. நேற்று விடுமுறை நாளாக இருந்ததால் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் கல்லணைக்கு வந்து பார்வையிட்டனர்.
கல்லணையில் உள்ள மற்ற ஆறுகளில் கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் ஆபத்தை உணராமல் சிறுவர் முதல் பெரியவர் வரை இறங்கி குளித்து மகிழ்ந்தனர்.
திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சியை சேர்ந்த கார்த்திக் என்கிற பாலகிருஷ்ணன் (வயது 33 ) தனியார் நிறுவன தொழிலாளி. இவர் தனது நண்பர் சிவக்குமார் உடன் கல்லணையை சுற்றி பார்க்க வந்தார். சுற்றிப் பார்த்தவர் சிவகுமாரை மணலில் உட்கார வைத்துவிட்டு கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளிக்க தொடங்கினார். ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீரில் மூழ்கினார். இது குறித்து சிவக்குமார் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு துறை அலுவலர் சகாயராஜ் ,போக்குவரத்து அலுவலர் முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தேடி உயிரற்ற நிலையில் கார்த்தி என்கிற பாலகிருஷ்ணன் உடலை மீட்டனர். இதுகுறித்து தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐயா பிள்ளை விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- மழைநீரும், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரும் சேர்ந்து சென்னையில் பல இடங்களில் வீடுகளை மூழ்கடித்தது.
- 2 ஆறுகளை இணைக்கும் வகையில் விரைவில் ஆய்வு நடத்த நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளததில் மிதக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு ஒரே நாளில் பெய்த அதிக கன மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் வெள்ளம் திறந்துவிடப்பட்டது.
மழைநீரும், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரும் சேர்ந்து சென்னையில் பல இடங்களில் வீடுகளை மூழ்கடித்தது. அதன் பிறகு கடந்த 2011-ம் ஆண்டு பெய்த கனமழையாலும் சென்னை வெள்ளக் காடானது.
வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் ஆறுகளின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
ஆனாலும் தனித் தனியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளால் சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க முடியாது. எனவே சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் வெள்ளப் பாதிப்பை தடுக்க திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஆறுகளை இணைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக கொசஸ்தலை ஆறு மற்றும் ஆரணி ஆறுகளை இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த 2 ஆறுகளையும் இணைக்கும் வகையில் விரைவில் ஆய்வு நடத்த நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆறுகளை இணைப்பதற்கான தொழில் நுட்ப சாத்தியக்கூறுகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
வடசென்னை பகுதியில் கடல்நீர் முகத்துவாரத்தின் வழியே ஆறுகளில் புகுவதை தடுக்க இந்த நதிகள் இணைப்பு தேவைப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை, தாமரை பாக்கம் சாலை அருகே கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை உள்ளது. இங்கிருந்து உபரி நீரை வெளியேற்ற இணைப்பு கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.
காரனோடை புதுவயல் சாலை அல்லது வெங்கல், பஞ்செட்டி அருகே உள்ள ஆறுகளை இணைக்கும் வகையில் கால்வாய் அமைக்க பரிந்துைரக்கப்பட்டு உள்ளது. இது நிலத்தடிநீரை அதிகரிக்கும்.
பஞ்செட்டி வரை கடல்நீர் கிட்டத்தட்ட 15 கி.மீ வரை உள்ளே புகுந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வறண்ட நிலையில் காணப்படுகிறது.
ஆறுகளை இணைப்பதன் மூலம் 2030-ம் ஆண்டுக்குள் கடல்நீர் உட்புகுவதை குறைக்க முடியும்.
ஆறுகள் இணையும் இடங்களில் இணைப்பு காய்வாயுடன் அணைகள் கட்டப்பட்டு வெள்ளப் பெருக்கை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- 2 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.
- நீண்ட நேரம் தேடி ராணுவ வீரர் உடலை மீட்டனர்.
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மகிமைபுரம் பூண்டி, புதுத்தெருவை சேர்ந்தவர் ஆரோன் இளையராஜா (வயது38).
இவர் திருச்சியில் உள்ள ராணுவ பட்டாலி யனில் ஹவில்தாராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் 2 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
நேற்று தனது அண்ணன் மகன்களான சூர்யா (18), ஹரீஷ் (12) மற்றும் மனைவி சுகன்யாவுடன் அந்த பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றார்.
இவர்கள் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது சூர்யாவும், ஹரீசும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் 2 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.
இதை பார்த்த ஆரோன் இளையராஜா, ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த அண்ணன் மகன்கள் 2 பேரையும் மீட்டார். பின்னர் அவர் கரைக்கு செல்ல முயன்ற போது தண்ணீரில் மூழ்கி மாயமானார்.
இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் திருக்காட்டு ப்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி நீண்ட நேரம் தேடி ராணுவ வீரர் ஆரோன் இளையராஜா உடலை மீட்டனர்.
தகவல் அறிந்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெகதீசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிர மணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆரோன் இளையராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ் ஏற வெட்டாற்றை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
- தட்டிப்பாலத்தில் ஒவ்வொரு நாளும் ஆபத்தான முறையில் பெண்கள் கடந்து சென்று வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஒக்கூர் ஊராட்சியில் விளா ம்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது.
இக்கிராம த்தில் சுமார் 100- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்திற்கு இதுநாள் வரை அரசு, தனியார் பஸ்களோ கிடையாது. நாகப்பட்டினம் செல்வதற்கு 10 கிலோ மீட்டர் நடந்து வந்து கீழ்வேளூரில்தான் பஸ் ஏற வேண்டும்.
விளாம்பாக்கத்தில் இருந்து கீழ்வேளூர், நாகப்ப ட்டினம், திருவாரூரில் படிக்கும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், வயல் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் ஆற்றுக்கு அடுத்துள்ள கோகூர் சென்று பஸ் ஏற வெட்டா ற்றை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதற்காக கிராமத்தினரே தட்டிப்பாலம் அமைத்து சென்று வருவதும் மழை, வெள்ளக் காலத்தில் அந்த தட்டிப்பாலம் ஆற்றில் அடித்து செல்வதுமாக தொடர்கதை யாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஆற்றில் தற்போது உள்ள உடைந்த தட்டிப்பாலத்தில் ஒவ்வொரு நாளும் ஆபத்தான முறையில் மாணவர்கள் மற்றும் பெண்கள் கடந்து சென்று வருகின்றனர்.
எனவே உடனடியாக ஒரு ஆம்புலன்ஸ் செல்லும் அளவுக்காவது சிமெண்ட் பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கூடலுார் தொரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில் மரம் விழுந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- அவசர காலத்தில், 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், ஊட்டி, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அவ்வப்போது சாலைகளில் மரங்கள்; மூங்கில்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி-பர்சன்ஸ்வேலி சாலை, தீட்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை மரம் விழுந்தது. கூடலுார் தொரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில் மரம் விழுந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக-கேரளா-கர்நாடக இடையே இயக்கப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் டிரைவர்கள், சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தீயணைப்பு துறையினர் வந்து, மரங்களை அறுத்து அகற்றிய பின், ஒரு மணி நேரத்துக்கு பின்பு போக்குவரத்து சீரானது. பந்தலுார் சுற்றுவட்டார பகுதியில் தொடரும் மழையால் கடும் மேக மூட்டம் நிலவுவதால், வாகனங்கள் 'மிஸ்ட் லைட்' பயன்படுத்தி இயக்கப்படுகின்றன.
மேலும், கூடலுாரில் உற்பத்தியாகும் பாண்டியார்-புன்னம்புழா ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றோர பகுதிகளுக்கு குளிக்கவும், துணி துவைக்கவும் மக்கள் செல்ல கூடாது; சிறுவர்களை ஆற்றோரத்துக்கு பெற்றோர் அனுப்ப கூடாது என வருவாய் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஊட்டி பூங்கா, படகு இல்லம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. கடும் குளிர் நிலவுவதால், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளூர் மக்கள் அவதிப்படுகின்றனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி, தேவாலாவில் 55 மி.மீ. கூடலுாரில் 44 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா கூறுகையில், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாண்டியார்-புன்னம்புழா ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஆற்றில் குளிக்கவும், கடக்கவும் யாரும் செல்ல கூடாது. அவசர காலத்தில், 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.
- வீடியோ எடுத்த வாலிபர்கள், ஆற்றுக்குள் விழுந்த சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது.
- வாலிபர்கள் அமர்ந்திருந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது.
திருவனந்தபுரம்:
சமூக வலைதளங்களில் அதிக லைக்குகள் வாங்குவதற்காக பலர் வித்தியாசமான வீடியோக்களை எடுத்து பதிவிடுகிறார்கள். அதுபோன்று வீடியோ எடுப்பதற்காக இளைஞர்கள் பலர், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் வீடியோ எடுப்பது அதிகரித்து வருகிறது. அவ்வாறு வீடியோ எடுக்கும் போது உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இருந்தபோதிலும் இளைஞர்கள் பலர், உயிரை பணயம் வைத்து வீடியோ எடுத்து வெளியிடுகிறார்கள்.
அதுபோன்ற வீடியோ எடுத்த வாலிபர்கள், ஆற்றுக்குள் விழுந்த சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது. கேரள மாநிலம் மலப்பரம் மாவட்டம் காளிக்கா கெட்டுங்கால் சிரா ஆற்றில் குளிபபதற்காக கருளா பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் சென்றனர். அப்போது அவர்கள், அங்கு ஆற்றுக்கு மேலே வளைந்தபடி வளர்ந்திருந்த தென்னை மரத்தின் மீது ஏறி நின்று, அங்கிந்து ஆற்றுக்குள் குதிப்பது போன் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட திட்டமிட்டனர்.
அதன்படி 4 வாலிபர்கள், மரத்தின் மேல் ஏறி அமர, கரையில் இருந்து சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர். அப்போது வாலிபர்கள் அமர்ந்திருந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது. இதனால் மரத்தின் மேல் அமர்ந்திருந்த வாலிபர்கள் ஆற்றுக்குள் விழுந்தனர். ஆற்றில் முழுவதுமாக தண்ணீர் இருந்ததால், அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மரம் முறிந்து வாலிபர்கள் ஆற்றுக்குள் விழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
- தண்ணீர் அதிகமாக சென்றதில் சந்திரசேகர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
- இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை பாதியில் கைவிட்டு சென்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குருவாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் உத்திராபதி மகன் சந்திரசேகர் (வயது 65). விவசாயி.
இவர் நேற்று காலை 11 மணியளவில் முடிகொண்டான் ஆற்றில் இறங்கி அக்கரையில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு நண்பர்கள் சிலருடன் சென்றுள்ளார்.கோவிலில் சாமி தரிசனம் செய்து மீண்டும் மாலை 3 மணி அளவில் திரும்பி ஆற்றில் இறங்கி வந்துள்ளார்.
அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதில் சந்திரசேகர் அடித்து செல்லப்பட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் திருமருகல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் திருமருகல் தீயணைப்புத் துறையினர் மற்றும் திட்டச்சேரி போலீசார் சந்திரசேகரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை பாதியில் கைவிட்டு சென்றனர். இருப்பினும் கிராம மக்கள் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.கோவிலுக்கு சென்றவர் ஆற்றில் மூழ்கி முதியவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நேரடி நெல்விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
- ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் இருந்தும் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன.
திருவாரூர்:
முத்துப்பேட்டை தாலுகா இடும்பாவனத்தில் மறைக்கா கோரையாறு உள்ளது.
மேலபெருமழை, பள்ளிமேடு, தில்லைவிளாகம், தொண்டியக்காடு, இடும்பாவனம் போன்ற பகுதிகளில் உள்ள சாகுபடி நிலங்களுக்கு இந்த ஆற்றின் மூலம் தான் தண்ணீர் செல்கிறது.
கடைமடை பகுதிகளான இப்பகுதியில் நேரடி நெல்விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது இந்த ஆற்றில் தண்ணீர் செல்லமுடியாதவாறு ஆகாயதாமரைகள் படர்ந்து ஆக்கிரமித்துள்ளது.
இதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தண்ணீர் திறப்பதற்கு முன்பே ஆற்ைற ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அகற்றவில்லை.
தற்போது ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் இருந்தும் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடும்பாவனம் மறைக்கா கோரையாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தீர்வு கிடைக்குமா? விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
- நொய்யலாற்றுக்கு காஞ்சனா நதி என்ற மற்றொரு சிறப்பு பெயரும் உள்ளது.
நீலாம்பூர்,
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை யொட்டிய அடிவாரத்தில் சாடிவயல் என்ற பகுதியில் இருந்து சிற்றோடைகள் இணைந்து நொய்யல் ஆறு உருவெடுக்கிறது.
அங்கு உருவெடுத்து சமவெளி பகுதியாக செல்லும் நொய்யாலானது கோவை, சூலூர், பல்லடம், மங்கலம், திருப்பூர், ஈரோடு வழியாக சென்று கரூர் அருகே உள்ள நொய்யல் என்ற கிராமத்தில் கலந்து காவிரியுடன் சங்கமம் ஆகிறது.
சுமார் 180 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த நொய்யாலானது பயணிக்கி றது. இவ்வளவு கிலோமீட்டர் தூரம் பயணித்து காவிரி ஆற்றில் கலக்கும் ஒரே ஆறு என்ற அருமை நொய்யலாற்றுக்கே உள்ளது. இந்த நதிக்கு காஞ்சனா நதி என்ற மற்றொரு சிறப்பு பெயரும் உள்ளது.
மழைக்காலங்களில் இந்த ஆற்றின் வழியாக காட்டா ற்று வெள்ளம் பெரு க்கெடுத்து ஓடும். இந்த நொய்யல் ஆற்றை சுற்றிலும் 32 அணைக்கட்டுகளும் 40-க்கும் மேற்பட்ட குளங்களும் உள்ளன. இவை அனைத்தும் நொய்யல் ஆற்றை சார்ந்தே இருக்கிறது.
மேலும் இந்த நொய்யல் ஆறு பயணிக்க கூடிய கிராம ஆற்றுப்படுக கைகளிலும் தடுப்பு அணை களும் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆற்றின் மூலம் நொய்யல் ஆறு செல்லும் வழியில் இருபுறங்களிலும் உள்ள விவசாய நிலங்களும் பயன் அடைந்து வருகிறது. இதுதவிர குடிநீருக்கும் இந்த தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இப்படி பல்வேறு சிறப்புகளுடன், மக்களுக்கு பயனளித்து வந்த நொய்யல் ஆறு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுகள் கலந்து மாசற்று கிடக்கிறது. நொய்யல் ஆற்றில் தற்போது, தண்ணீர் நுரையுடன் செல்வதை காண முடிகிறது. போதிய மழை இல்லாததால் ஆறும் வறண்டு காணப்படுகிறது. அப்படியே தண்ணீர் வந்தாலும் அதனை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது.
நொய்யல் ஆற்றை காப்பாற்றும் விதமாக இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். ஆனாலும் கழிவுகள் ஆற்றில் கலந்து கொண்டு தான் இருக்கிறது என கூறுகின்றனர் விவசாயிகள்.
நொய்யல் ஆறு தொடங்கிய பகுதியில் சிறிது மாசு ஏற்பட்டாலும் ஆறு செல்ல செல்ல கோவையின் புறநகர் பகுதியில் உள்ள சூலூர், சாமளாபுரம், இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் முழுவதுமாக சாக்கடையாக மாறிவிடுகிறது. அதேபோல இதனை சார்ந்துள்ள குளங்களும் சாக்கடை நீர் நிறைந்ததாகவே காணப்டுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
இங்குள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நீர் ஆதாரமாகவும், கால்நடைகளுக்கான நீர் ஆதாரமாகவும் நொய்யல் ஆறு விளங்கி வருகிறது. தொழிற்சாலை மற்றும் சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யல் ஆறு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் எங்களால் விவசாயமும் செய்ய முடியாத நிலையே உள்ளது. பலமுறை விவசாயிகள் போராட்டம் நடத்தியும், மாசு கட்டுப்பாட்டு வா ரியம், பொதுப்பணித்துறை இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை.
மேலும் தற்போது உள்ள காலகட்டத்தில் குளத்தில் தண்ணீர் இருந்ததா என வருங்கால சமுதாயம் கேட்கும் நிலை உருவாகும். நொய்யல் ஆற்றில் வரும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து குளத்தில் விட வேண்டும். அதற்கான சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும் அதுவே இதற்கான தீர்வு எட்ட முடியும் அவ்வாறு அமைத்தால் மட்டுமே கொங்கு மண்டலத்தை காப்பாற்ற முடியும் இல்லை என்றால் கொங்கு மன்ற த்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலைமை உருவாகும்.
எனவே அரசு நொய்யல் ஆற்றை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது.
இது குறித்து பேசிய ஆறுகள் பாதுகாப்பு மற்றும் கவுசிகா நதி பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த செல்வராஜ் கூறும்போது, சூலூர் பகுதியில் விவசாய நிலங்களில் உள்ள தென்னை மரங்கள், வாழை மரங்கள் உள்ளிட்டவை இந்த நீர் நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் அனைத்தும் விஷத்தன்மை உடையதா கவும், தென்னை மரங்களில் தென்னை காய் காய்க்கக்கூடிய அளவில் கூட இல்லை. அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வில் பயன்ப டுத்தக்கூடிய நிலத்தடி நீரின் தன்மை மாறி உள்ளது உப்புத்தன்மை நிறைந்ததாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.