என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனி மூட்டம்"

    • பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
    • கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலும், இரவில் லேசான மழையும் பெய்து வருகிறது. தொடர்ந்து இதமான காலநிலையே நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.

    ஊட்டி, குன்னூா் கோத்தகிரியில் கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சாலையில் ஊா்ந்து செல்லும் நிலைஏற்பட்டது. கடும் குளிா் மற்றும் பனி மூட்டம் காரணமாக பெரும்பாலான முக்கிய சாலைகளில் வாகனங்கள் குறைந்த அளவே காணப்பட்டன. காலை நேரத்தில் 16 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை காணப்பட்டது.

    காட்சிமுனைகளைக் காணமுடியாமல் சுற்றுலாப் பயணிகள் பனிமூட்டத்தை மட்டும் கண்டு செல்லும் சூழல் ஏற்பட்டது. அவ்வப்போது மழையும் பெய்து வருவதால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • விழிப்புணர்வுடன் செல்ல அறிவுறுத்தல்
    • கடும் குளிரால் வேலூரில் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொட்டும் பனிப்பொழிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. கடந்த வாரத்தில் காற்றுடன் மழை பெய்தது. இதனால் பனிப்பொழிவு ஓரளவு குறைவாக இருந்தது.தற்போது குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த 2 நாட்களாகவே வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடுமையான பனி மூட்டம் காணப்படுகிறது.

    சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காலை நேரத்தில் எதிரே இருப்பது கூட தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு கொட்டுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விடிந்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கிறார்கள்.

    மாலை 5 மணிக்கு மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. காலை, மாலை பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள முடங்கியுள்ளனர். வெயில் வந்த பிறகே, வீடுகளில் இருந்து வெளியில் வருகிறார்கள். கடும் பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைத்து உறைய வைக்கிறது.

    பனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வேலூர் மக்கள் வீதியிலும், வீட்டு முன்பும் குப்பைகள் மற்றும் பழைய பொருட்களை கொளுத்திவிட்டு குளிர் காய்கிறார்கள். கொட்டும் பனிக்கும், உறைய வைக்கும் குளிருக்கும் ஸ்வெட்டர், சால்வை விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

    பனிப்பொழிவு, குளிர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனி கொட்டுவதால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள். பனிக்கு டீக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.

    சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் விழிப்புணர்வுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை பனி மூட்டம் இருந்தது.
    • திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து நல்ல பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 110 ஏரிகள் முழு அளவை எட்டி உள்ளன.

    மழை விட்டு விட்டு பெய்து வந்தாலும் கடும் குளிரும் மக்களை வாட்டி வருகிறது. மழைக்காலத்தில் பனியின் தாக்கம் அதிகம் ஏற்பட்டு வானிலை மாறி உள்ளது.

    காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

    காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை பனி மூட்டம் இருந்தது. சாலைகளே தெரியாத அளவுக்கு புகைபோல் பனி படர்ந்து இருந்தது.

    கோனேரிக்குப்பம், ஏனாத்தூர், ஓரிக்கை, தாமல், பரந்தூர், வையாவூர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பொன்னேரி கரை, ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு ஊட்டியை போல் மாறியது.

    இதனால் பொதுமக்கள் கடும் குளிரால் அவதி அடைந்தனர். வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றனர்.

    திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. எங்கும் பார்த்தாலும் வெள்ளை போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து காணப்பட்டது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், சாலைகள் என அனைத்து இடங்களிலும் பனி மூடி குளிர் பிரதேசமாக காட்சியளித்தது.

    இதன் காரணமாக திருவள்ளூரில் முக்கிய சாலையான சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் காலை 8 மணி வரை முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக ஊர்ந்து சென்றன.

    சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் கூட தெரியாத அளவிற்கு பனி படர்ந்து இருந்தது.

    திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் காலை 8 மணி வரை பனி நீங்காததால் எந்த நடைமேடையில் ரெயில் வருகிறது என தெரியாமல் மேம்பாலத்தின் மீது நின்றபடி பயணிகள் பார்த்துவிட்டு அதன் பின் நடைமேடைகளுக்கு சென்றனர்.

    கடும் பனி மூட்டம் நீடித்தாலும் சில இடங்களில் இன்றும் லேசான சாரல் மழை பெய்தது.

    • சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும் கடும் பனிமூட்டம் நிலவியது.
    • தேசிய நெடுஞ்சாலையில் பகலிலும் வாகனங்கள் விளக்கை போட்டபடி சென்றன.

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்திலிருந்து கடும் பனி கொட்டுகிறது. இதனால் சாலைகள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு உள்ளன.

    அதிகபட்சமாக இன்று அதிகாலை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடும் பனி கொட்டியது. இதனால் சென்னை- அரக்கோணம் - காட்பாடி- ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும் ரெயில்கள் வழக்கத்தை விட தாமதமாக சென்றன.

    இன்று காலையில் சென்னை நோக்கி வந்த காவேரி, மைசூர், சேரன், நீலகிரி, திருவனந்தபுரம்- ஏலகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னையில் இருந்து அரக்கோணம் காட்பாடி வழியாக சென்ற கோவை, சப்தகிரி, டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் 4 மின்சார ரெயில்கள் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    கடும் பனிமூட்டம் காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் குறைக்கப்பட்டது. அதனால் தாமதம் ஏற்பட்டது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும் கடும் பனிமூட்டம் நிலவியது. தேசிய நெடுஞ்சாலையில் பகலிலும் வாகனங்கள் விளக்கை போட்டபடி சென்றன.

    வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். பனிமூட்டத்தால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

    கடும் பனி காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் தெருக்களில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். டீ கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. சாலையோரங்களில் சொட்டர் விற்பனை களைகட்டியது.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • விழிப்புணர்வுடன் செல்ல போலீசார் அறிவுறுத்தல்

    ஆம்பூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காலை திடீரென சாரல் மழை பெய்தது.

    வேலூர் மாநகர பகுதியில் திடீர் மழை காரணமாக காலையில் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவ மாணவிகள் கடும் அவதியடைந்தனர். பாதாள சாக்கடை பணிகள் முடிவடையாத தெருக்கள் சேறு சகதியுமாக காட்சியளித்தன. வேலூர் மாநகரப் பகுதியில் மழை காரணமாக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் கடும் பனி கொட்டியது.

    ஆம்பூரில் இன்று காலை பனி மூட்டம் அதிகளவில் காணப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் காலை விடிந்த பிறகும் வாகனங்கள் முகப்பு விளக்கு போட்டபடி சென்றன.

    நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் மெதுவாக சென்றன.

    நெடுஞ்சாலையில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் விழிப்புணர்வுடன் செல்ல வேண்டுமென போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • கடுமையான குளிர் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • பரவலாக பெய்துவரும் மழை காரணமாக வண்ணார்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சீனிவாசன் என்பவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் சில நாட்களாக பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வழக்கமாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அந்த வகையில் தற்போது நெல்லையில் காலை நேரத்தில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் உள்ளது.

    கடுமையான குளிர் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். மாநகரில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பகுதி, வண்ணார்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலைகள், ரெயில்வே மேம்பால பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் இன்று காணப்பட்டது.

    மேலும் பரவலாக பெய்துவரும் மழை காரணமாக வண்ணார்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சீனிவாசன்(வயது 50) என்பவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அவர் வடக்கு பைபாசில் உள்ள மருத்துவமனை எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த நேரத்தில் அவர் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    • நாமக்கல் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை பனிமூட்டம் ஏற்பட்டது.
    • இந்த பனிப்பொழிவால் சாலைகள் மறைக்கப்பட்டி ருந்தது. விவசாய பயிர்களும் வெளியில் தெரியாமல் பனியால் மூடப்பட்டிருந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் , பொத்த னூர், பாண்ட மங்கலம், வெங்கரை, கொந்தளம்,சேளூர், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், ஜேடர்பாளையம் ,கொத்தமங்கலம், குரும்பல

    மகாதேவி, ஜமீன் இளம்பள்ளி, சோழசிரா மணி, சுள்ளிப்பாளையம், குப்பிரிக்காபாளையம், மணியனூர், கந்தம்பாளை யம், ஒத்தக்கடை, பரமத்தி, கபிலர்மலை, திடுமல், தி. கவுண்டம்பாளையம் , பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை பனிமூட்டம் ஏற்பட்டது.

    இந்த பனிப்பொழிவால் சாலைகள் மறைக்கப்பட்டி ருந்தது. விவசாய பயிர்களும் வெளியில் தெரியாமல் பனியால் மூடப்பட்டிருந்தது. அதிக பனிப்பொழிவின் காரணமாக விவசாயிகள் தங்களது விவசாய தோட்டத்திற்கு சிரமப்பட்டு சென்றனர். அதேபோல் பணியின் காரணமாக அதிக குளிர் ஏற்பட்டது. அதிகாலையில் கூலி வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் தங்களது உடலை வருத்திக் கொண்டு அவதிப்பட்டு சென்றனர். வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி சென்றது. நாளை, மார்கழி மாதத்தின் முதல் நாள் வரும் முன்னரே கார்த்திகை கடைசி நாளான இன்று கடும் பனி பொழிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 4 தினங்களாக சென்னையில் கடுங்குளிர் நிலவுகிறது.
    • பனி மூட்டத்தால் சென்னை மாநகரில் உள்ள சாலைகள், முக்கிய கட்டிடங்கள், வீடுகளில் பனி மூட்டம் சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளித்தது.

    சென்னை:

    சென்னையில் அதிகாலையில் கடும் குளிர், பனி மூட்டம் அதிகரித்து வருகிறது.

    சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகப ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    சென்னையில் எழும்பூர், சென்ட்ரல்,வேப்பேரி, பெரம்பூர், மயிலாப்பூர், மெரினா கடற்கரை, கோயம்பேடு, அண்ணா நகர், வடபழனி, கிண்டி, அடையாறு உள்ளிட்ட பல இடங்களில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் கடும் குளிர், பனி மூட்டம் நிலவி வருகிறது.

    கடந்த 4 தினங்களாக சென்னையில் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். தற்போது சென்னை குளிர்பிரதேசமாக மாறி உள்ளது.

    சென்னையில் அதிகாலையில் பல்வேறு சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்தது.

    மேலும் சூரியன் உதயமாகியும் வானில் வெளிச்சம் தெரியாமல் சூரியன் பகல் நிலவு போன்று காட்சி அளித்தது.

    இதனால் சாலையில் பயணம் செய்த வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி சென்றனர்.

    பனி மூட்டத்தால் சென்னை மாநகரில் உள்ள சாலைகள், முக்கிய கட்டிடங்கள், வீடுகளில் பனி மூட்டம் சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளித்தது.

    • வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து ரெயில்களும் இன்று தாமதமாக சென்றன.
    • அதிகாலையில் வெளியில் வந்தவர்கள் 50 மீட்டர் தொலைவுக்குள் உள்ளவர்களைகூட பார்க்க முடியாத பனிபுகை மூட்டத்துக்குள் சிக்கி தவித்தனர்.

    புதுடெல்லி:

    பருவ நிலையில் ஏற்பட்ட மாற்றம், இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட தட்ப வெப்ப நிலை மாற்றம் காரணமாக வடமாநிலங்களிலும், மத்திய மாநிலங்களிலும் கடந்த மாதம் முதல் கடுமையான குளிர் நிலவுகிறது.

    அதிலும் டிசம்பர் 15-ந் தேதிக்கு பிறகு குளிரின் தாக்குதல் அதிகரித்து கொண்டே வந்தது. கடந்த 2 தினங்களாக தலைநகர் டெல்லியில் தாங்க முடியாத அளவுக்கு பனி மூட்டமும், குளிரும் காணப்பட்டது.

    பொதுவாக டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் சராசரி அதிகபட்ச தட்ப வெப்பநிலை 27.32 டிகிரி செல்சியசாக இருக்கும். 1901-ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு டெல்லியில் குளிர் நிலவியது. 122 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தாங்க முடியாத குளிர் ஏற்பட்டுள்ளது.

    வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் நைனிடால், தர்மசாலா, டேராடூன் போன்ற நகரங்களில்தான் பனிப்பொழிவும், குளிர் காற்றும் தாங்க முடியாதபடி இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இந்த நகரங்களை விட டெல்லியில் கடுமையான குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது.

    கடந்த ஒரு வாரமாக டெல்லி மற்றும் வடமாநிலங்களில் பல்வேறு நகரங்களில் மக்கள் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியில் வர முடியாதபடி முடங்கி உள்ளனர். கடுமையான குளிர் காரணமாக தீ மூட்டம் போட்டு சுற்றி அமர்ந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) வடமாநிலங்களில் மிக மிக கடுமையான குளிர் காற்று வீசியது.

    அருணாச்சலப் பிரதேசத்தில் 11 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் மக்கள் பனியோடு உறைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளனர். டெல்லியில் இன்று காலை 3 டிகிரி செல்சியசாக தட்ப வெப்பநிலை இருந்தது. இதனால் டெல்லி மக்கள் கடுமையான அவதிக்குள்ளானார்கள்.

    வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து ரெயில்களும் இன்று தாமதமாக சென்றன. அதிகாலையில் வெளியில் வந்தவர்கள் 50 மீட்டர் தொலைவுக்குள் உள்ளவர்களைகூட பார்க்க முடியாத பனிபுகை மூட்டத்துக்குள் சிக்கி தவித்தனர்.

    பஞ்சாப், அரியானா, சண்டிகர், உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களிலும் கடுமையான குளிர் நிலவுகிறது. இந்த மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு குளிர் காற்று வீசும் என்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லியில் நாளை வரை மிக கடுமையான குளிர் இருக்கும் என்று வானிலை இலாகா ரெட் அலர்ட் விடுத்துள்ளது. டெல்லிக்கு வந்து சேர வேண்டிய 2 ரெயில்கள் இன்று தாமதமாக சென்று சேர்ந்தன.

    • 18வது கொண்டை ஊசி வளைவில் பஸ் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே காட்டு மாடு திடீரென புகுந்தது.
    • விபத்து நடந்த இடத்தில் சிறுமலை பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் பொதுமக்களை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலையில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளன. இங்கு வேலை செய்ய திண்டுக்கல் மற்றும் கிராமங்களில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் பணிக்கு சென்று வருகின்றனர்.

    இன்று அதிகாலையில் 18 பயணிகளுடன் அரசு பஸ் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சிறுமலை நோக்கி சென்றது. பஸ்சை தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த விஜயகுமார் (40) என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக திண்டுக்கல் கள்ளிபட்டியை சேர்ந்த சேகர் இருந்தார்.

    திண்டுக்கல்லில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்த நிலையில் சிறுமலை பகுதி முழுவதும் கடும் பனி மூட்டம் நிலவியது.

    18வது கொண்டை ஊசி வளைவில் பஸ் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே காட்டு மாடு திடீரென புகுந்தது. இதனால் டிரைவர் பஸ்சை ஓரமாக திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை மீட்க ஓடி வந்தனர்.

    பஸ்சுக்குள் சிக்கி இருந்தவர்களை அவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 2 ஆம்புன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த வெங்கடேஷ் (40), சிறுமலை தென்மலையை சேர்ந்த பழனியம்மாள் (65), பாஸ்கரன் (62), கார்த்திக் (26), கணேசன் (67), ஒய்.எம்.ஆர். பட்டியை சேர்ந்த கோபால் (40) ஆகியோர் உள்பட 14 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து நடந்த இடத்தில் சிறுமலை பஞ்சாயத்து தலைவர் சங்கீதா வெள்ளி மலை, கிராம நிர்வாக அதிகாரி வசந்தகுமார் ஆகியோர் பொதுமக்களை அழைத்து சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மலைப்பகுதிகளில் மட்டுமின்றி நகர்ப்பகுதிகளிலும் பனி மூட்டம் மற்றும் மேக மூட்டம் நிலவுகிறது.
    • கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகளும் விடுதிகளிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வரும் நிலையில் கொடைக்கானலில் கடும் பனி மூட்டத்துடன் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மலைப்பகுதிகளில் மட்டுமின்றி நகர்ப்பகுதிகளிலும் பனி மூட்டம் மற்றும் மேக மூட்டம் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    இரவு, பகல் என 24 மணி நேரமும் கொடைக்கானலில் தற்போது ஒரே சீதோசனம் நிலவி வருகிறது. தெருக்கள் மற்றும் சாலைகளில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எதிரில் வருபவர்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களை மெதுவாக இயக்கவும், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்யும் மழை காலையிலும் தொடர்வதால் பள்ளி மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்கள் பின்னர் ஏமாற்றத்துடன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.

    கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகளும் விடுதிகளிலேய முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் இதுபோன்ற ஒரு சீதோசனம் கொடைக்கானலில் காணப்படுவது அபூர்வமான நிகழ்வாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால் வியாபாரிகளும் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

    • அவர்கள் முகப்பு விளக்குகளை போட்டபடி மெதுவாக சென்றனர்.
    • தீ விபத்து ஏற்பட்டு புகை வருவது போல் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மார்கழி மாதத்தில் பனி அதிகமாக பெய்யும். கடந்த ஒரு வாரமாக பனி குறைந்துவிட்ட நிலையில் இன்று காலை திடீரென பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சாலை தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். அவர்கள் முகப்பு விளக்குகளை போட்டபடி மெதுவாக சென்றனர். இந்த பனிமூட்டம் காலை 8 மணி வரை நீடித்தது. ஏற்கனவே பனிமூட்டம் ஊருக்கு வெளியில் மட்டும் தெரியும். ஆனால் தற்போது ஊரில் உள்ளேயும் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இந்த பனிமூட்டம் எங்கோ தீ விபத்து ஏற்பட்டு புகை வருவது போல் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேல்மலையனூரில் இன்று காலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு ஒளிரவிட்டபடி சென்றனர்.நேற்று முன்தினம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் சாரல் மழை பெய்தது. ஆனால் இன்று பனிமூட்டம் காணப்படுகிறது

    ×