search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ட்ரஷர் ஐலண்ட்"

    • தொடக்க விழாவில் கேரளா பிரில்லியன்ட் அகடமி, நெல்லை பயிற்சி மையத்திலிருந்து லமிஸ் நசீம் தாவரவியல் வல்லுனர், சஹானாஸ் வேதியல் வல்லுனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    • பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி நீட் தேர்விற்கு எவ்வாறு தயாராவது, பெற்றோர்களின் பங்களிப்பு பற்றி விளக்கினார்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் 9, 10 மற்றும் 11 -ம் வகுப்பு மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது.

    இதன் தொடக்க விழாவில் கேரளா பிரில்லியன்ட் அகடமி, நெல்லை பயிற்சி மையத்திலிருந்து லமிஸ் நசீம் தாவரவியல் வல்லுனர், சஹானாஸ் வேதியல் வல்லுனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர். பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி நீட் தேர்வின் முக்கியத்துவத்தைப் பற்றியும், தேர்விற்கு எவ்வாறு தயாராவது, பெற்றோர்களின் பங்களிப்பு பற்றியும் விளக்கினார். பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் மற்றும் அகாடமி வல்லுனர்கள் நீட் தேர்வு குறித்த விழிப்புணர்வை பெற்றோர்கள்,மாணவர்களிடம் ஏற்படுத்தினர்.

    • குழந்தைகள் அனைவரும் இளஞ்சிவப்பு நிறத்தில் உடை அணிந்து ரோஜாபூக்களாக பள்ளிக்கு வந்தனர்.
    • பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வின் தலைமை தாங்கினர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் பிரிவு குழந்தைகளுக்கு வாரந்தோறும் சிறப்பு தின கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வார கொண்டாட்டமாக ரோஜா தினம் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் அனைவரும் இளஞ்சிவப்பு நிறத்தில் உடை அணிந்து ரோஜாபூக்களாக பள்ளிக்கு வந்தனர்.

    ரோஜா தினத்தையொட்டி குழந்தைகள் ரோஜாப்பூவின் படம் வரைந்தும், வண்ணத்தாளில் பூ வடிவத்தை செய்தும் எடுத்து வந்தனர். அவற்றைக்கொண்டு வகுப்பு முழுவதும் அலங்கரிக்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வின் தலைமை தாங்கினர். ஆசிரியைகள் ரோஜா தினம் பற்றி உரையாற்றினர். குழந்தைகள் ரோஜாப்பூ குறித்த பாடல்களை பாடினர்.

    பின்னர் பள்ளியில் உள்ள அனைவருக்கும் ரோஜா பூக்களை கொடுத்து மகிழ்ந்தனர்.

    • 6-ம் வகுப்பு மாணவி ஹரி நந்தனா மாவட்ட அளவில் 3-வது இடத்தை பிடித்தார்.
    • மாணவ -மாணவிகளை தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டினர்.

    தென்காசி:

    தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட 44-வது பிடா செஸ் ஒலிம்பிக் - 2022 போட்டிகளில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    அதில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி ஹரி நந்தனா மாவட்ட அளவில் 3-வது இடத்தையும், மாணவன் ஜகத்பிரபு 17-ம் இடத்தையும் பிடித்து பரிசுகளை வென்றனர்.

    மாணவன் சமேரியா மாவிஸ் போட்டியில் கலந்துகொண்டு ஆறுதல் பரிசு பெற்றார். மாணவன் வசீகரன் போட்டியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழை பெற்றார். வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ×