என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபானம்"

    • 13-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தனியார் மதுபான பார் திறக்க முயற்சி நடக்கிறது.
    • இது குறித்து மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே பொன்மனை பரவூர் பகுதியில் தனியார் மதுபான பாருக்கான கட்டுமான பணி நடைபெற்று வந்தது.

    இதையடுத்து பொன் மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்மனை சந்திப்பில் நேற்று மாலை நடைபெற்றது. போராட்டத்தில் உறுப்பினர் ஜாஸ்மினி, பெண்கள், குழந்தைகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் ஜான் போஸ்கோ, அ.தி.மு.க. மோகன்குமார், கம்யூனிஸ்டு பிரசாத், தி.மு.க. சேம் பெனட் சதீஷ், நாம் தமிழர் கட்சி சீலன், சமூக ஆர்வலர் சர்வேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் தனியார் மதுபான பார் திறப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் பேசினார்கள். இந்த போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வர்கள் கலந்து கொள்ள வில்லை.

    இது குறித்து பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் கூறுகையில், பொன்மனை பேரூராட் சிக்குட்பட்ட 13-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தனியார் மதுபான பார் திறக்க முயற்சி நடக்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை.

    இதனால் பொதுமக்களுடன் அனைத்து கட்சியினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உடனே தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் தொடர்ந்து அப்பகுதியில் மதுபான கடை திறக்க முயற்சி செய்தால் பொது மக்களுடன் சேர்ந்து மிக பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என கூறினார்.

    போராட்டத்தின் முடிவில் வார்டு உறுப்பினர் சாந்தி நன்றியுரை கூறினார்.

    • அரசு அனுமதி இல்லாமல் விற்பனைக்காக வெளி மாநில மதுபாட்டில்கள் 48 அடங்கிய 14 அட்டைப்பெட்டிகள் வீட்டில் வைத்திருந்ததை போலீசார்கள் கண்டுபிடித்தனர்.
    • அப்துல் கனி அண்ணன் தம்பிகளான சஞ்சீவி, முரளி ஆகிய இருவருக்கும் 1 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.2 ஆயிரமும் அபராதம் விதித்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் பகுதியில் கடந்த 8.12 2016 அன்று அப்போதைய பாபநாசம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில், அன்பழகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கோவில் தேவராயம்பேடை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவி வயது 34 அவரது அண்ணன் முரளி 40 ஆகிய இருவரும் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயற்சி செய்தார்கள்.

    உடனே அவர்களைப் பிடித்து விசாரணை செய்தபோது அரசு அனுமதி இல்லாமல் விற்பனைக்காக வெளி மாநில மதுபாட்டில்கள் 48 அடங்கிய 14 அட்டைப்பெட்டிகள் வீட்டில் வைத்திருந்ததை போலீசாார்கள் கண்டுபிடித்தனர்.

    பின்னர் அங்கிருந்த 672 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து பாபநாசம் போலீசார்கள் வழக்கு பதிவு செய்து அண்ணன் தம்பிகளான சஞ்சீவி, முரளி ஆகிய இருவரையும் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர் படுத்திருந்தனர்.

    வழக்கை விசாரணை செய்த பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் கனி அண்ணன் தம்பிகளான சஞ்சீவி, முரளி ஆகிய இருவருக்கும் 1 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.2 ஆயிரமும் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.

    • டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை மதுபானகடைகள் அனைத்தும் மூட வேண்டும்.
    • மேற்படி நாட்களில் மதுபா னங்கள் ஏதும் விற்பனை செய்யக்கூடாது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், முத்துப்பேட்டை தர்ஹா பெரிய கந்தூரி விழா தொடர்பாக 25.11.2022 கொடியேற்றம் மற்றும் 04.12.2022 அன்று சந்தனகூடு நடைபெறவுள்ளதை முன்னிட்டு 25.11.2022 வெள்ளி கிழமை மற்றும் 04.12.2022 ஞாயிற்று கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு முத்துப்பேட்டை மற்றும் முத்துப்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லரைவிற்பனை மதுபா னகடைகள் அனைத்தும் மூடவும் அன்றைய நாட்களை விடுமுறை நாட்களாக அறிவித்து முத்துப்பேட்டை மற்றும் முத்துப்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை மதுபானகடைகள் அனைத்தும் மூடவும், மேற்படி நாட்களில் மதுபா னங்கள் ஏதும் விற்பனை செய்யக்கூடாது என தொடர்புடைய டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு ஆணையிடப்படுகிறது.

    மேற்படி ஆணையை செயல்படுத்த தவறும்ப ட்சத்தில் தொடர்புடைய மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர்காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • திருச்சி மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை நடந்தது
    • 71 பேர் கைது-942 மதுபாட்டில்கள் பறிமுதல்

    திருச்சி:

    குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று தமிழக முழுவதும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் அதனை கண்டு–கொள்ளாமல் முன்ன–தாகவே ஒரு சிலர் மது–பானங்களை வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டு சட்ட–விரோதமாக கள்ளச்சந்தை–யில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். திருச்சி மாநகரில் டாஸ் மாக் மதுபான கடைக–ளுக்கு அருகாமையில் நின்று கொண்டு மது பிரியர்க–ளுக்கு விரும்பிய மது பாட்டில்களை விற்பனை செய்தனர். ஒரு பாட்டிலுக்கு அளவுக்கு ஏற்ப ரூ.50 முதல் ரூ.200 வரை விலை கூடுதல் விலை நிர்ணயம் செய்து விற்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருச்சி மாநகர போலீசார் ஆங்காங்கே ரோந்து சென்று சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 31 பேரை கைது செய்தனர். அவர்கள் வசம் இருந்து 280 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோன்று திருச்சி புறநகர் பகுதியில் முசிறி மற்றும் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மது வேட்டையில் இறங்கினர். இதில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 40 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 662 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதில் மணிகண்டம் நடுப்பாகலூர் பகுதியில் வீட்டில் பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் பதுக்கிய ஜெயராமன் (வயது 37) என்பவரை திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தரசு, இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் தனிப்படை போலீ–சார் கைது செய்தனர். அவரி–டமிருந்து 180 பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் பறி–முதல் செய்யப்பட்டது. திருச்சி மாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை வெளிப்படையாக நடந்தது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடிப்பழக்கத்தை அரசாங்கம் பணமாக்கக் கூடாது என்று உமா பாரதி கூறினார்.
    • மது விற்பனைக்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே மதுபானக் கடையில் பாஜக தலைவர் மாட்டுச் சாணத்தை வீசினார்.

    பாஜக ஆளும் மாநிலத்தில் மது விற்பனைக்கும் அருந்துவதற்கும் எதிரான பிரச்சாரத்தை மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான உமா பாரதி மேற்கொண்டுள்ளார்.

    அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலம் ஓர்ச்சா நகரில் உள்ள மதுபானக் கடையின் முன்பு சாலைகளில் திரிந்த மாடுகளை இழுத்து கட்டி அதற்கு வைக்கோல் ஊட்டினார். பின்னர், பசும்பால் குடிக்கவும், மதுவைத் தவிர்க்கவும் என்று மதுவிற்கு எதிராக கோஷம் எழுப்பினார்.

    கோவில்களுக்கும், அரண்மனைகளுக்கும் பெயர் பெற்ற நிவாரி மாவட்டத்தில் உள்ள ஓர்ச்சா நகரத்தில் மதுபானம் விற்கும் கடையின் முன் நின்று, பசுக்களைக் கட்டிவிட்டு, "பசும்பால் குடிக்கவும்.. மதுவை தவிர்க்கவும்" என்ற பிரசாரத்தை மேற்கொண்டார்.

    மேலும் அவர், குடிப்பழக்கத்தை அரசாங்கம் பணமாக்கக் கூடாது என்றும் கூறினார்.

    மது விற்பனைக்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே மதுபானக் கடையில் பாஜக தலைவர் மாட்டுச் சாணத்தை வீசினார். மார்ச் 2022ல், போபாலில் உள்ள ஒரு மதுபானக் கடை மீது கல் எறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சீர்காழி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
    • 650 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கோவில் பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50) இவரது வீட்டின் பின்புறம் உள்ள வயலில் புதுச்சேரி சாராயம் மற்றும் குறைந்த விலை மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சீர்காழி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ஆறுமுகம் வீட்டின் பின்புறம் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள வயலில் புதுச்சேரி மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் 650 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் தப்பியோடிய ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.

    • லாட்ஜ்களில் தங்குவதை விட செலவு குறைவு என்பதால் தற்போது இதுபோன்ற ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.
    • வீடுகளில் தனியார் மது பார் நடத்த ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கட்டணம் வழங்கி லைசென்ஸ் பெற்று கொள்ள வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்து உள்ளது.

    டேராடூன்:

    இந்தியாவில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களுக்கு செல்வோர் அங்கு லாட்ஜில் அறை எடுத்து தங்குவது வழக்கம்.

    தற்போது சுற்றுலா தலங்களில் லாட்ஜ்களுக்கு மாற்றாக ஹோம் ஸ்டே தங்கும் வசதிகள் அதிகரித்து வருகிறது. இது சுற்றுலா தலங்களில் வசிப்போர் தங்கள் வீடுகளில் சுற்றுலா பயணிகள் தங்க ஒன்று அல்லது 2 அறைகளை ஒதுக்கி கொடுத்து அங்கே அவர்கள் விரும்பும் நாட்கள் வரை தங்கி செல்ல அனுமதிப்பார்கள்.

    இதற்காக விருந்தினர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையையும் பெற்று கொள்வார்கள். இது லாட்ஜ்களில் தங்குவதை விட செலவு குறைவு என்பதால் தற்போது இதுபோன்ற ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளிலேயே தனிநபர்கள் பார் நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    வீடுகளில் நடத்தப்படும் பார்களில் 60 லிட்டர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது பானங்கள் வைத்து கொள்ளலாம். 9 லிட்டர் அளவுக்கு பீர் பாட்டில் வைத்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    வீடுகளில் தனியார் மது பார் நடத்த ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கட்டணம் வழங்கி லைசென்ஸ் பெற்று கொள்ள வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்து உள்ளது. இந்த லைசென்ஸ் பெறுவோர் வருமான வரி கட்டுவோராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

    மேலும் மாநில கலால் துறைக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட் கட்ட வேண்டும் என்றும் அறிவித்து உள்ளது.

    இது தவிர வீடுகளில் நடைபெறும் தனியார் மதுபார்களில் 21 வயதுக்கு குறைந்தோருக்கு எக்காரணம் கொண்டும் மதுபானம் வழங்க கூடாது. மிலிட்ரி மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. ஒரு பாக்ஸ் ஒயின் மட்டுமே வைத்து கொள்ள வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது.

    மலைப்பாங்கான இந்த மாநிலத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கவே இதுபோன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    • மதுபான கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கிராம மக்களும் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கானத்தான்காடு, சண்முகநாதபுரம் பஞ்சாயத்தில் அரசு மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர், கோட்டாட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், வட்டாட்சியர், காவல்துறை சார்பு ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

    கானாத்தான்காடு கிராமத்தில் 500க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை அருகே டாஸ்மாக் மதுபானகடை அமைக்க ஏற்பாடுகள் நடந்தது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சண்முகநாதபுரம் ஊராட்சியில் மதுபானகடையை அமைக்ககூடாது என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் மதுரை ஐகோர்ட்டில் தடை ஆணை பெற்றுள்ளனர். தடையை மீறி நேற்று கடை திறக்கப்பட்டதால் கிராம மக்கள் கடை முன்பு திரண்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிந்தனர். காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நேற்று இரவு தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரிடம் மேல் முறையீடு செய்தனர். மதுபானகடையை உடனே அகற்ற வேண்டும் இல்லை என்றால் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராம மக்களும் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐ.பி.எல். போன்ற விளையாட்டு போட்டிகளில் மதுபானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • ஏற்கனவே மற்ற மாநிலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் மதுபானங்களுக்கு அனுமதி உள்ளது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சர்வதேச தரத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறபோது இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி உள்ளது.

    சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெற வேண்டும் என்றால் மற்ற மாநிலங்களை போல் தமிழ்நாட்டிலும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதால் அதற்கான அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சர்வதேச நிகழ்வு, போட்டிகள் நடைபெறும் இடங்களில் மது அருந்த அனுமதி கேட்டதால் தரப்பட்டுள்ளது. ஐ.பி.எல் போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானத்திலும் மது அருந்துவதற்கான அனுமதியை வாங்கி வைத்துள்ளனர்.

    ஆனால் திருமண மண்டபங்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட இதர நிகழ்ச்சிகளில் மது பரிமாற ஒருபோதும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது. அரசும் இதற்கு அனுமதி கொடுக்காது என்பதை நான் உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் உச்சபட்ச மின் தேவை என்பது வரலாறு காணாத அளவிற்கு 19 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ளது.

    இருப்பினும் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே அதற்கான டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டு குறைந்த விலைப்புள்ளியில், அவசர தேவைக்கு ரூபாய் 8க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இந்த டெண்டர் மூலமாக தமிழ்நாடு அரசு இந்த 3 மாதத்தில் மட்டும் 1,313 கோடி ரூபாய் சேமித்துள்ளது. அதற்கு காரணம் முதலமைச்சர் எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கை தான்.

    இன்னும் கூடுதலாக மின் தேவை ஏற்பட்டாலும் அதை சமாளிப்பதற்கு மின்வாரியம் தயாராக உள்ளது. எனவே தமிழ்நாட்டை பொறுத்தவரை கோடை காலத்தில் எவ்வளவு மின் தேவை ஏற்படுகிறதோ அதை முழுமையாக சமாளிக்க கூடிய வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சர்வதேச விளையாட்டு போட்டிகளின்போது மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கப்படும்.
    • மார்ச் 18ந் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையில் திருத்தம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

    திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி அனுமதி பெற்று மது அருந்தலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியது.

    தமிழகத்தில் பார்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே இதுவரை மதுபானம் அருந்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது மது அருந்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்கள் (ஸ்டேடியம்) ஆகிய இடங்களிலும் மது அருந்தலாம் என்று அரசு புதிய அனுமதியை வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

    இதுகுறித்து தழிழக அரசின் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு 54 மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி தமிழ்நாடு மதுபானத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி விளையாட்டு மைதானங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை மொத்தமாக வாங்கி பரிமாறலாம். ஒரு நாள் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிக்கு கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம். மாவட்ட கலெக்டர் மற்றும் மதுவிலக்கு (கலால்) துணை ஆணையர்களிடம் இதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளலாம்.

    எப்.எல்.12 எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதியை பெற்று மதுபானங்களை திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பரிமாறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான மதுபாட்டில்களை டாஸ்மாக் மொத்த விற்பனை கிடங்கில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது கலால் உதவி ஆணையரிடம் தெரிவித்தால் அவர் அருகில் உள்ள கடைகளில் இருந்து சரக்கு வாங்கிக்கொள்ள அனுமதி தருவார். இதற்காக விழா நடத்துபவர்கள் 1 வாரத்துக்கு முன்னதாகவே விண்ணப்பித்து அனுமதி வாங்கி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    வணிக வளாகங்கள் கான்பரன்ஸ் ஹால், கன்வென்ஷன் டெண்டர், திருமண மண்டபம், வரவேற்பு ஹால், விளையாட்டு மைதானம் ஸ்டேடியம் ஆகிய இடங்களில் 1 நாள் மது விருந்துக்கு ரூ.11 ஆயிரம் அனுமதி கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும்.

    நகராட்சி பகுதிகளுக்கு ரூ.7,500-ம் மற்ற பகுதிகளுக்கு ரூ.5 ஆயிரம் செலுத்தி விழா நடத்துபவர்கள் முன் அனுமதி பெற வேண்டும். நிகழ்ச்சிகளுக்கு கலால் துறை அதிகாரிகளால் வழங்கப்படும் மதுபானங்களை தவிர வேறு எந்த மதுபானமும் அங்கு குடிக்க அனுமதிக்க கூடாது என்றும் நிகழ்ச்சி முடிந்த பிறகு மதுபானங்கள் மீதி இருந்தால் அதை சம்பந்தப்பட்ட கலால் அதிகாரிகளிடம் ஒப்படைத்து கணக்கை நேர் செய்துவிட வேண்டும் என்றும் அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    சுதந்திர தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வள்ளலார் நினைவு நாள், மே தினம், திருவள்ளுவர் நாள், நபிகள் பிறந்தநாள், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் மட்டும் மது குடிக்க அனுமதி கிடையாது என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், அறிவிக்கயைில் சில திருத்தம் செய்து தமிழிக அரசு அறிவித்துள்ளது.

    அதில், வணிக பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்களில் மதுபானம் பரிமாற சிறப்பு உரிமம் வழங்கும் முறை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், சர்வதேச விளையாட்டு போட்டிகளின்போது மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மார்ச் 18ந் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையில் திருத்தம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

    • சுமார் 30 லாரிகள் மது பாட்டில்களை ஏற்றி வந்தன.
    • டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுபான குடோன் செண்பகராமன் புதூர் பகுதியில் உள்ளது. இந்த குடோனுக்கு பல்வேறு மதுபான கம்பெனிகளில் இருந்து சுமார் 30 லாரிகள் மது பாட்டில்களை ஏற்றி வந்தன. ஆனால் அவற்றை இறக்க முடியாமல் அனைத்து லாரிகளும் குடோன் முன்பு நிறுத்தப்பட்டுள்ளன.

    மது பானங்களை லாரிகளில் இருந்து இறக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்களில் 44 பேர், சி.ஐ.டி.யூ. பணியாளர்களாக உள்ளனர். அவர்கள் தற்போது கூடுதல் இறக்க கூலி கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாவட்ட பொருளாளர் முருகன் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தை பொது செயலாளர் சந்திரபோஸ் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் தங்க மோகன், கணேசன், வின்சென்ட், ராஜன், மீரான், ஆறுமுகவேல் உட்பட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

    போராட்டம் காரணமாக லாரிகளில் இருந்து மது பாட்டில்களை இறக்குவதிலும், அதனை டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் மது தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

    • சட்ட விரோதமாக மதுபான விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 52 மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ,9,800 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கள்ளகிணர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கள்ளகிணர் தனியார் நூற்பாலை அருகே மீன் கடையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அங்கு இருந்த மீன் கடையில் தர்மபுரியை சேர்ந்த பழனி என்பவரது மகன் அம்மு(வயது 22) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 52 மதுபான பாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ,9,800 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×