search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபானம்"

    • மதுக்கடைகளின் உரிமம் காலாவதி ஆவதை தொடர்ந்து இக்கடைகளில் ஏற்கனவே மதுபான கொள்முதல் குறைக்கப்பட்டது.
    • டெல்லியில் சட்டவிரோத மதுபானம் விற்பனையை கண்காணிக்க உத்தரவு பிறப்பிப்பு

    புதுடெல்லி:

    டெல்லியில் 864-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் டெல்லி மாநில தொழில்துறை, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம், டெல்லி மாநில சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் உள்பட 4 அமைப்புகள் மூலம் மதுபான விற்பனை கடைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுபோல தனியார் அமைப்புகளும் கடைகள் நடத்தி வருகிறார்கள். இதில் 475 மதுபான கடைகளின் உரிமம் நேற்றுடன் காலாவதி ஆனது. இதற்கிடையே கலால் துறையில் புதிய நடைமுறைகளையும், கொள்கைகளையும் அமல் படுத்த டெல்லி அரசு முயற்சி மேற்கொண்டது.

    இதன்காரணமாக டெல்லியில் செயல்பட்டு வந்த 475 மதுபான கடைகளில் சுமார் 468 கடைகளை இன்று முதல் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    மதுக்கடைகளின் உரிமம் காலாவதி ஆவதை தொடர்ந்து இக்கடைகளில் ஏற்கனவே மதுபான கொள்முதல் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக மதுபானங்களுக்கு கடந்த சில நாட்களாக கடும் தட்டுப்பாடு நிலவியது.

    இந்நிலையில் இன்று முதல் இக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் தலைநகர் டெல்லியில் மதுபானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதற்கிடையே டெல்லி கலால் துறை மந்திரியும், துணை முதல்வருமான மணிஸ் சிசோடியா, டெல்லியில் சட்டவிரோத மதுபானம் விற்பனையை கண்காணிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • மதுரை அருகே விதி மீறும் மதுபானம் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
    • குறைந்த விலைக்கு மதுபானங்களை கொள்முதல் செய்து, 20 சதவீதம் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.

    மதுரை

    மதுரை ஐகோர்ட் வக்கீல்கள் முத்துக்குமார், அர்ச்சனாதேவி, காயத்திரி , சமூக ஆர்வலர்கள் அருண், வினோதா, ஷாலினி ஆகியோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அவர்கள் கலெக்டர் அனீஷ் சேகரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எல்லீஸ் நகர் பிரதான சாலையில் செயல்படும் மதுபான கூடம், விதிமுறைகளை மீறி செயல்படுகிறது. இங்கு எம்.ஆர்.பி.யை விட 4 சதவீதம் குறைந்த விலைக்கு மதுபானங்களை கொள்முதல் செய்து, 20 சதவீதம் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.

    வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை. கிளப் செயல்படும் கட்டிடத்துக்கு அருகில் பள்ளிகூடம், கோவில்கள் உள்ளன. பார்க்கிங் இடத்தில் டேபிள்களை போட்டு மதுபானம் அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்து நடக்கிறது. பார் ஊழியர்களுக்கு முறையான ஊதியம், வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ. வழங்கப்படவில்லை. எனவே விதிமுறைகளை மீறி செயல்படும் மதுபானக் கூடங்களுக்கு சீல் வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    மனுவை பெற்று கொண்ட கலெக்டர், இதுகுறித்து மத்திய கலால் வரி துறை உதவி ஆணையருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    ×