search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி கற்பழிப்பு"

    • பொள்ளாச்சி செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய கரிச்சிக்குமார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • மீண்டும் சிறுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி பஸ் நிறுத்தத்தில் கொண்டு வந்து விட்டு விட்டு சென்றுவிட்டார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சற்று மன வளர்ச்சி குன்றியவர். சம்பவத்தன்று பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்வதற்காக சிறுமி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்கு காத்து நின்றுள்ளார்.

    அப்போது காய்கறி வியாபாரியான சின்ன பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்த சிவசாமி என்பவரது மகன் கரிச்சிக்குமார் (வயது 29) அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சிறுமியை ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    பொள்ளாச்சி செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய கரிச்சிக்குமார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மீண்டும் சிறுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி பஸ் நிறுத்தத்தில் கொண்டு வந்து விட்டு விட்டு சென்றுவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டுக்கு தாமதமாக வரவே, அவரது தாய் விசாரித்த போது சிறுமி நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.

    இதையடுத்து சிறுமியின் தாய் உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கரிச்சிக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவியை வாலிபர் கர்ப்பமாக்கியுள்ளார்.
    • மாணவி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பிரியா வழக்கு பதிவு செய்து, வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அதே ஊரை சேர்ந்த சந்தோஷ் (வயது22). இவர் டிராக்டர் டிரைவராக உள்ளார். சந்தோசும், மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியுடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். அது பற்றி சந்தோஷிடம் கூறியதற்கு வெளியில் சொன்னால் உன்னை உயிரோடு விடமாட்டேன் என்று மாணவியை மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த மாணவி இதுகுறித்து தன் தாயாரிடம் கூறினார்.

    இதுகுறித்து அவர்கள் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பிரியா வழக்கு பதிவு செய்து, சந்தோஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • பாதிக்கப்பட்ட மாணவி நாகர்கோவிலில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
    • மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே உள்ள அழகிய பாண்டியபுரம் நன்றிகுழி பகுதியை சேர்ந்த 16 வயது நர்சிங் மாணவி ஒருவர் நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் நர்சிங் படித்து வந்த போது எனது ஊரைச் சேர்ந்த தனேஷ் (வயது 20) என்பவர் என்னை காதலிப்பதாக கூறினார். பின்னர் நான் நெல்லையில் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது தனேஷ் விபத்தில் சிக்கி வீட்டில் இருந்து வந்தார்.

    இதையடுத்து அவரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கு சில நாட்கள் தங்கி இருந்தேன். அப்போது தனேஷ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக நாகர்கோவில் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் .

    இதையடுத்து தனேஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி நாகர்கோவிலில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    • நன்றாக படிக்க வைப்பதாக கூறி பிளஸ்-2 மாணவியை பலமுறை போலி சாமியார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலி சாமியாரை கைது செய்தார். பின்னர் அவரை செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அடுத்த ராமானுஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். சாமியாரான இவர் அதே பகுதியில் உள்ள கோவிலில் குறி சொல்லி வந்தார்.

    இவரிடம் அப்பகுதி மக்கள் தங்களது குறைகளை கூறி பரிகாரம் கேட்டு வந்தனர். இதனால் சாமியார் பிரசாந்த் அப்பகுதியில் பிரபலமாக இருந்தார்.

    இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறி கேட்பதற்காக சாமியார் பிரசாந்திடம் சென்றார்.

    அப்போது மாணவியை நன்றாக படிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி தன்வசப்படுத்தினார். இதனால் மாணவி அடிக்கடி பிரசாந்தை சந்தித்து வந்தார்.

    ஆனால் சாமியார் பிரசாந்துக்கு மாணவி மீது ஆசை ஏற்பட்டது. அவரை நன்றாக படிக்க வைப்பதாக கூறி வசப்படுத்தி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று சாமியார் பிரசாந்த் மிரட்டியதாகவும் தெரிகிறது.

    இதற்கிடையே சாமியார் பிரசாந்த்தின் பாலியல் தொல்லை எல்லை மீறியதால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    விசாரணையில் போலி சாமியார் பிரசாந்த் ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலி சாமியார் பிரசாந்த்தை கைது செய்தார். பின்னர் அவரை செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    ×