என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீபக் சாஹர்"
- ஆஸ்திரேலியா போன்ற களத்தில் கூடுதல் பவுன்ஸ் இருக்கும்.
- ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றால் 4 -5 வேகப்பந்துவீச்சாளர்கள் வரை அழைத்து செல்ல வேண்டும்.
சென்னை:
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக பெற்ற தோல்விகளால் ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது. இதனையடுத்து வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவதில் இந்திய அணி கவனம் செலுத்தி வருகிறது.
7-வது டி20 உலகக்கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இந்த போட்டிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தீபக் சஹார் இடம்பெற வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
தீபக் சஹார் குறித்து கவாஸ்கர் கூறுகையில்:-
ஆஸ்திரேலியா போன்ற களத்தில் கூடுதல் பவுன்ஸ் இருக்கும். பவர் ப்ளே ஓவர்களில் தீபக் சஹார் விக்கெட் எடுக்கக்கூடிய வீரர். ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றால் 4 -5 வேகப்பந்துவீச்சாளர்கள் வரை அழைத்து செல்ல வேண்டும். அதில் தீபக் சஹார் மிக முக்கியமாக தேவை. எனவே வரும் டி20 உலகக்கோப்பையில் தீபக் சஹாரை சேர்ப்பது இந்திய அணிக்கு பெரிய பலனை கொடுக்கும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.
- காயத்தில் இருந்து குணமடையாததால் தீபக் சாஹர் சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்கா தொடரில் ஆடவில்லை.
- இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடிய பிறகு அங்கிருந்து வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டு செல்லும்.
பெங்களூர்:
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் தீபக் சாஹர். 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற சிறந்த பவுலர் ஆவார்.
வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த போட்டியின் போது தீபக் சாஹர் காயம் அடைந்தார்.
இதன் காரணமாக அவர் ஐ.பி.எல். போட்டியில் விளையாடவில்லை. அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். ஏலத்தில் மிகப் பெரிய விலைக்கு எடுத்தது.
காயத்தில் இருந்து குணமடையாததால் தீபக் சாஹர் சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்கா தொடரில் ஆடவில்லை. இதே போல் அயர்லாந்து பயணத்திலும் இடம் பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் உடல் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.
இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கு தீபக் சாஹர் உடல் தகுதி பெறுவார் என்று எதிர்பாக்கபபடுகிறது.
தீபக் சாஹர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு உடல் தகுதி தேர்வு நடைபெறும். இதன் முடிவில் தான் அவர் உடல் தகுதியுடன் உள்ளாரா என்று தெரியவரும்.
இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடிய பிறகு அங்கிருந்து வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டு செல்லும். ஜூலை 22-ந் தேதி முதல் ஆகஸ்ட் 7-ந் தேதி வரை இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்று பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்