என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரபாஸ்"
- 600 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
- தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது
கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. 600 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
படத்தின் விஸ்வல் எஃபக்டுகள் ஹாலிவுட் தரத்தில் மேற்கொண்டுள்ளனர். கமல்ஹாசன் சுப்ரீம் யாஸ்கின் என்ற கதாப்பாத்திரத்தில் சிறிது நேரம் வந்தாலும் மக்கள் மனதில் பதிந்துள்ளார். கல்கி இரண்டாம் பாகமும் வர இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், கல்கியை பார்த்தேன். என்ன ஒரு படம். இயக்குனர் நாக் அஸ்வின் இந்திய சினிமாவை வேர லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டார். நாக் அஸ்வின், அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் படக்குழுவுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துகள். இரண்டாம் பகுதிக்காக காத்திருக்கிறேன்', இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இரண்டு நாட்களில் 298.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இந்தியாவில் மட்டும் 95 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்று மற்றும் நாளை வார விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் விரைவில் ரூ. 400 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது.
- சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
மகாபாரதம் யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி.
சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 180 கோடி வசூலித்த நிலையில் படத்தின் இரண்டு நாட்களுக்கான வசூல் ரிப்போர்ட் வந்துள்ளது. அதன்படி கல்கி திரைப்படம் 298.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் இரண்டு நாட்களிலே இத்தனை கோடி வசூலை ஈட்டி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் பல கோடியை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
- தி ராஜா சாப் படப்பிடிப்பில் நடிகை மாளவிகா மோகனன் இணைந்துள்ளதாக தகவல்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ், பாகுபலி திரைப்படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார்.
பாகுபலியை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் பான் இந்தியா அளவில் வெளியிடப்படுகிறது.
அந்த வகையில், சாஹோ, ராதே ஷ்யாம், ஆகிய பான் இந்தியா திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.
'சலார்' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
பிரபாஸ் ஒப்பந்தமாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் 'தி ராஜா சாப்'. இப்படத்தின் அறிவிப்பு முதல் தோற்றத்துடன் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.
மாருதி இயக்கும் இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். பீப்பிள் மீடியாபேக்டரியின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தில் பிரபாஸூடன், மாளவிகா மோகனன், நிதி அர்வால், ரித்தி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் பரவிய நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை மாளவிகா மோகனன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
- கல்கி 2898 கி.பி படத்தின் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி' கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
- இந்த வாகனம் கடந்த மாதம் சென்னை மஹேந்திரா சிட்டியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது.
இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்தில் மஹேந்திரா கம்பெனி மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய, படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி' கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் வரும் இந்த புஜ்ஜி கதாபாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.
இந்த வாகனம் கடந்த மாதம் சென்னை மஹேந்திரா சிட்டிக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
கற்பனையிலும் நினைத்து பார்த்திராத வடிவத்தில், மூன்று சக்கரங்களுடன், நவீன வசதிகளுடன், பார்த்தவுடன் எதிர்காலத்தை கண்முன் கொண்டு வரும் வகையிலான புஜ்ஜி வாகனம், பார்த்தவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்த வாகனத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வாகனம் கிட்டத்தட்ட 20 அடி நீளமும் 11 அகலமும் 7 அடி உயரமும் கொண்டது. இந்த வாகனத்தின் எடை 6 டன் அதாவது 6000 கிலோ ஆகும்.
2 மஹேந்திரா எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் 125 bhp மற்றும் 9,800 Nm டார்க் சக்தியுடன் இந்த வாகனம் இயக்கப்படுகிறது. இந்த வாகனத்தின் பின்புறம் 47 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தால் அதிகபட்சமாக 45 கிமீ வேகத்தில் பயணிக்கமுடியும். இந்த வாகனத்தில் 2 ஹப்லெஸ் டயர் முன்புறத்தில் 1 ஹப்லெஸ் டயர் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு டயரின் எடையும் 1 டன் ஆகும்.
இந்த வாகனத்தின் மையத்தில் ஓட்டுநருக்கு ஒரு இருக்கை உள்ளது. வாகனத்தின் பின்புறத்தில் கைது செய்யப்பட்டவர்களை அடைப்பதற்கு ஒரு சிறிய சிறை ஒன்று உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏ.டி. படம் வருகிற 27-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
- இதனால் ராஜசேகரின் கல்கி திரைப்படம் கிட்டத்தட்ட 20 காட்சிகள் விற்று தீர்ந்து விட்டது.
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏ.டி. படம் வருகிற 27-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்பட பலர் நடித்துள்ளனர்.
இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. ஏராளமான ரசிகர்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தெலுங்கு ரசிகர்கள் ஒரு சுவாரசிய நிகழ்வை நடத்தியுள்ளனர். கல்கி2898 ஏ.டி என்ற திரைப்படம் வெளியாகும் நாளில் தெலுங்கில் நடிகர் ராஜசேகர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கல்கி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆகிறது.
இதனால் ஏராளமான ரசிகர்கள் பிரபாசின் கல்கி 2898 ஏ.டி.க்கு பதிலாக ராஜசேகர் நடித்த கல்கி படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
இதனால் ராஜசேகரின் கல்கி திரைப்படம் கிட்டத்தட்ட 20 காட்சிகள் விற்று தீர்ந்து விட்டது.
இதையடுத்து ராஜசேகர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த முன்பதிவுக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை" என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். கல்கி 2898 ஏ.டி திரைப்பட குழுவினருக்கு பாராட்டும் அவரது வாழ்த்தையும் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து `புக் மை ஷோ' நிறுவனம் ஒரு பதிவை பதிவிட்டுள்ளனர். யாரும் கவலைக் கொள்ள வேணாம், யாரெல்laaம் ராஜசேகரின் கல்கி திரைப்படத்திற்கு தவறுதலாக புக் செய்யப்பட்டதோ அவர்களக்கு பிரபாஸின் கல்கி 2898 ஏடி திரைப்படத்திற்கு பதிவு செய்யப்படும், இந்த பிரச்சனையை விரைவில் சரிசெய்யப்படும் என அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரமாண்டமான செட் மற்றும் கச்சிதமான கிராஃபிக்ஸுடன் காட்சிகள் ஈர்க்கின்றன.
- இறுதியில் வரும் கமல்ஹாசனின் கெட்டப் நம்மை மிரட்டுகிறது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், 'கல்கி 2898'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது. அறிவியல் புனைவு திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 'கல்கி 2898 ஏடி' படத்தின் புதிய ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் நாக் அஸ்வின் இப்படத்தின் மூலம் புதியதோர் உலகை உருவாகியுள்ளார். பிரமாண்டமான செட் மற்றும் கச்சிதமான கிராஃபிக்ஸுடன் காட்சிகள் ஈர்க்கின்றன.
நடிகர்களுக்கான உடைகள் தொடங்கி, வித்தியாசமான வாகனத்தை வடிவமைத்தது முதல் இறுதியில் வரும் கமல்ஹாசனின் கெட்டப் வரை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
பிரமாண்டமான காட்சிகளுடன் கூடிய புதிய ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
- கர்ப்பிணியாக உள்ள தீபிகா படுகோனேவும் விழாவில் பங்கேற்றார்.
- போட்டா போட்டியில் சிறிது நேரம் விழா அரங்கம் சிரிப்பொலியில் அதிர்ந்தது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கல்கி 2898 ஏ.டி. இப்படத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்பட பலர் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் அறிவியல் கலந்து உருவாக்கப்பட்டுள்ள புராண காலத்து கதையான இந்த படம் வருகிற 27-ந்தேதி சர்வதேச அளவில் திரைக்கு வர இருக்கிறது.
இதையொட்டி படத்தின் பிரி ரிலீஸ் விழா மும்பையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் பங்கேற்றனர். கர்ப்பிணியாக உள்ள தீபிகா படுகோனேவும் விழாவில் பங்கேற்றார்.
விழா தொடங்கியதும் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். தீபிகா படுகோனே மேடையில் ஏறும்போது அவரது கையை பிடித்து உதவி செய்வதற்காக பிரபாஸ் முன் வந்தார். அதற்குள் ஓடி வந்த அமிதாப்பச்சன் நான் பிடித்துக்கொள்கிறேன். நீங்கள் வாருங்கள் என கூறி தீபிகா படுகோனே மேடை ஏற உதவினார்.
பிரபாஸ், அமிதாப்பச்சன் இடையே நடந்த போட்டா போட்டியில் சிறிது நேரம் விழா அரங்கம் சிரிப்பொலியில் அதிர்ந்தது.
தொடர்ந்து விழாவில் அமிதாப்பச்சன் பேசியதாவது:-
நாக் அஸ்வின் கல்கி 2898 ஏ.டி. படத்தின் கதையை என்னிடம் கூறும்போது இதெல்லாம் சாத்தியமா? என யோசித்தேன். மேலும் இவர் குடித்திருக்கிறாரா? என்று கூட நினைத்தேன். இப்போது படத்தை பார்க்கும் போது அற்புதமான படைப்பாக வந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கல்கி 2898 A.D. படத்தில் பைரவா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரபாஸ்.
- இது புராணக் கதைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் நடக்கும் சயின்ஸ் பிக்ஷன் கதையாகும்.
சென்னை:
நாக் அஸ்வின் இயக்கத்தில், இதிகாச கதையின் அடிப்படையில் உருவாகும் 'கல்கி 2898 A.D'
கல்கி 2898 A.D. படத்தில் பைரவா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரபாஸ். பைரவா குறித்த புது போஸ்டர் மூலம் படக்குழு சிவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்தது.
இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கும் கல்கி 2898 AD படம், பல மொழிகளில் பிரமாண்ட படைப்பாக உருவாகிறது. இது புராணக் கதைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் நடக்கும் சயின்ஸ் பிக்ஷன் கதையாகும். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், கல்கி 2898 AD படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகை ஷோபனாவின் கதாபாத்திரத்தின் பெயருடன் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. தற்போது அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. இந்தப் படம் வரும் 27-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'கல்கி 2898 AD' படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார்.
- சந்தோஷ் நாராயணன் இசையில் முழு பாடல் நாளை வெளியாகிறது.
இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் வரும் ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'கல்கி 2898 AD' படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. ஒரு பன்மொழி படைப்பாக, புராணக்கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைகதை வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர், புரமோசன் பணிகளை மிகப்பிரம்மாண்டமாக துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், கல்கி 2898 கி.பி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பைரவா பாலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும், சந்தோஷ் நாராயணன் இசையில் முழு பாடல் நாளை வெளியாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இவர் இயக்கிய பாகுபலி திரைப்படம், இந்திய சினிமாவில் ஒரு மைல் ஸ்டோன் என்று சொல்லலாம்.
- பிரபாஸ் ஏன் திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்பது குறித்து இயக்குனர் ராஜமவுலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது,
இந்திய சினிமா இயக்குனர்களுள் மிக முக்கியமானவர் ராஜமவுலி. இவர் இயக்கிய பாகுபலி திரைப்படம், இந்திய சினிமாவில் ஒரு மைல் ஸ்டோன் என்று சொல்லலாம். 1000 கோடி ரூபாய்க்கு மேல் உலகளவில் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். பிரபாஸ் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதனால் ரசிகர்கள் இவரது திருமணத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
முன்னதாக, பிரபாஸ் ஏன் திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்பது குறித்து இயக்குனர் ராஜமவுலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அவர்,
'பிரபாஸ் மிகவும் சோம்பேறி, 'திருமணம் செய்து கொள்வதிலும் சோம்பேறியாக இருக்கிறார். ஒரு பெண்ணைக் கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் பேசுவது அவருக்கு அதிக வேலையாக இருக்கும். அதனால்தான் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன்'. என்று மிகவும் கிண்டலாக கூறினார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபாஸ் கூறியதாவது, 'சோம்பேறி, கூச்ச சுபாவம், மக்களை சந்திக்க முடியாது. இந்த மூன்று பிரச்சினைகள் எனக்கு உள்ளன. நான் நிஜ வாழ்க்கையில்தான் கூச்சப்படுகிறேன், கேமரா முன் இல்லை'. என கூறினார்.
பிரபாஸ் தற்பொழுது கல்கி 2898 ஏடி படத்தில் நடித்துள்ளார். இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 27 அம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அமிதாப் பச்சனின் தோற்றமும் அண்மையில் வெளியானது.
- மல்ஹாசனின் தோற்றத்தை ரசிகர்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், 'கல்கி 2898'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. போலவே, அமிதாப் பச்சனின் தோற்றமும் அண்மையில் வெளியானது.
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'கல்கி 2898 ஏடி' படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் நாக் அஸ்வின் இப்படத்தின் மூலம் புதியதோர் உலகை உருவாகியுள்ளார். பிரமாண்டமான செட்டு மற்றும் கச்சிதமான கிராஃபிக்ஸுடன் காட்சிகள் ஈர்க்கின்றன. நடிகர்களுக்கான உடைகள் தொடங்கி, வித்தியாசமான வாகனத்தை வடிவமைத்தது, இறுதியில் வரும் கமல்ஹாசனின் கெட்டப், பறக்கும் தட்டுகள், கோட்டைகள் என மேக்கிங் மிரட்டுகிறது. பிரமாண்டமான காட்சிகளுடன் கூடிய ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக கமல்ஹாசனின் தோற்றத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
- நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார்.
- படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர்.
நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையில் படக்குழு அமிதாப் பச்சன் இப்படத்தில் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர். படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.
படத்தில் புஜ்ஜி என ஒரு அதிநவீன கார் இடம்பெற்றுள்ளது, இதற்காக மகேந்திர நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஒரு நிஜ காரை வடிவமைத்துள்ளனர். இதனை பொதுமக்கள் பார்வைக்காக சென்னை மகேந்தரா சிட்டியில் வைத்துள்ளனர். இந்த புஜ்ஜி கதாப்பாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் புஜ்ஜி& பைரவா என்ற அனிமேடட் சிரீஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வரும் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் வரும் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்