search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லட்சுமி நரசிம்மர்"

    • அவன் பல வருடங்கள் பிரம்மனைக் குறித்து கடும் தவம் புரியத் தொடங்கினான்.
    • பிரம்மன் அறிந்தோ அல்லது அறியாமலோ அவன் கேட்ட வரததை அளித்தார்.

    இக்கதை மிகவும் முக்கியமானதாகும்.

    அவதார நோக்கத்தின் முக்கியத்துவமும், பற்பல நீதிகளும் பின்னிப் பிணைந்த சரித்திரமாகும்.

    ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் வைகுண்டத்தைக் காவல் செய்த இரண்டு பக்தர்களான ஜெய, விஜயர்கள், சநகாதி முனிவர்களை, ஸ்ரீவைகுண்டத்தில் நித்யாவசம் செய்யும் பகவானை அடைய முடியாதபடி தடுத்ததால் ஏற்பட்ட சாபத்தைப் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

    சாபத்தினால் அவர்கள் இருவரும் ராட்சகர்களாகவும், விஷ்ணுவை நிந்திப்பவர்களாகவும் பிறப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    அடுத்தடுத்த பிறவிகளில் பகவானுடைய கருணையால் ஜெய, விஜயர்கள் ஹிரண்யாட்சகாவும், ஹிரண்யகசிபுவாகவும் பிறந்தார்கள்.

    ஆகையால் பகவான் விஷ்ணு வராக அவதாரத்தில் சிரண்யாட்சனை, வதம் செய்து அசுரர்களுக்கு பாடம் புகட்டினார்.

    தன்னுடைய மூத்த சகோதரனைக் கொன்ற விஷ்ணுவையும் அவனுடைய பக்தர்களையும் பலவிதமாக நிந்திக்கத் தொடங்கினான் ஹிரண்யகசிபு.

    அவன் பல வருடங்கள் பிரம்மனைக் குறித்து கடும் தவம் புரியத் தொடங்கினான்.

    பிரம்மாவும் அவனுடைய கடும் தவத்தை கண்டு மகிழ்ச்சி அவனுக்கு வரம் கொடுத்தார்.

    அவன் பிரம்மனிடம் ஒரு வரத்தை வேண்டி பெறுகிறான்.

    அவ்வரத்தின்படி இந்த உலகத்தில் உள்ள இயற்கை நியதிப்படி தான் மரணம் அடையக் கூடாது என்றும் மனிதர்களாலும், தேவர்களாலும் தனக்கு அழிவு நேரக்கூடாது என்றும் வேண்டினான்.

    அந்த அசுரன் தன்னுடைய சாமர்த்தியத்தால் இந்த உலகத்தில் எவ்வாறெல்லாம் மரணம் ஏற்படும் என்பதை சிந்திதது, தன்னுடைய மரணம் அவ்வாறெல்லாம் நிகழக் கூடாது என்று வரமாகக் கேட்டான்.

    அவ்வரத்தின் முக்கிய அம்சங்கள்:

    1. கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட எந்த பொருளாலும் தனக்கு அழிவு நேரக்கூடாது.

    2. பகலிலோ அல்லது இரவிலோ நேரக்கூடாது.

    3. பூமியிலோ அல்லது ஆகாயத்திலோ நேரக்கூடாது.

    4. எவ்விதக் கருவியாலும், கைகளாலும் தனக்கு மரணம் நேரக்கூடாது.

    5. மனிதனாலோ அல்லது விலங்குகளாலோ தனக்கு மரணம் நேரக்கூடாது.

    இவ்வாறு அவன் வரம் வேண்டினான்.

    மேலும் பிரம்மனிடம் தனக்கு மிகவும் பலமான சக்தியைக் கொடுக்கும் படியும் வேண்டினான்.

    பிரம்மன் அறிந்தோ அல்லது அறியாமலோ அவன் கேட்ட வரததை அளித்தார்.

    • காலை 7.30 மணிக்கு மேளதாளம் முழங்க, லஷ்மி நரசிம்ம பெருமாள் தேருக்கு எழுந்தருளினார்.
    • கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி, தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே பூவரங்குப்பம் கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. தென் அகோபிலம் என்று போற்றப்படும் இக்கோயில், கி.பி. 7-ம் நூற்றாண்டில் முதலாம் பல்லவ மன்னரால் கட்டப்ப ட்டதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய 8 நரசிம்மர் கோயிலில், இந்த பூவரசங்குப்பம் கோயில், நடுவில் இருக்கிறது. இக்கோயிலில், மூலவர் லட்சுமி நரசிம்மர், 4 கரங்க ளுடன் காணப்படுகிறார். இந்த கோவிலில், 150 ஆண்டுகளுக்குப் பின், பிரமோற்சவ விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 32 அடி உயரத்தில் புதியத் தேர் செய்யப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி வெள்ளோட்ட விழா நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து, பிரம்மோற்சவ விழா, கடந்த 30-ம் தேதி தொடங்கியது. இவ்விழா, தொடர்ந்து 11 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவம், கடந்த 6 ஆம் தேதி நடை பெற்றது. பிரம்மோற்சவ விழாவின் 9-ம் நாளான இன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, காலை 7.30 மணிக்கு மேளதாளம் முழங்க, லஷ்மி நரசிம்ம பெருமாள் தேருக்கு எழுந்தருளினார்.

    அதனைத் தொடர்ந்து, காலை 8 மணிக்கு தேர் புறப்பாடானது. விழுப்புரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமணன் தலைமை தாங்கி இத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முன்னால் எம்.எல்.ஏ புஷ்பராஜ், கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன், கோலியனூர் ஒன்றிய சேர்மன் சச்சிதானநந்தம், கண்டமங்கலம் தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி, தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். கோயில் முன்பிருந்து தேர் புறப்பட்டு, சிவன் கோயில் தெரு உள்ளிட்ட 4 மாடவீதிகள் வழியாக சென்று, மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தைக் காண பூவரசங்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    • வீட்டில் நரசிம்மரின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி பூஜை செய்து மந்திர துதியை 18 முறை உச்சரித்து வர வேண்டும்.
    • அசைவ உணவை முற்றிலும் தவிர்ப்பது சிறந்த பலனை கொடுக்கும்.

    சிலரது வாழ்வில்பலவிதமான எதிர்பாராத துன்பதுயரங்கள்வாட்டி வதைக்கும். அது போன்ற சமயங்களில் நம்முடைய வாழ்வை காப்பாற்ற ஒரு மஹா சக்தியின் அனுக்கிரகமே நம்முடைய முக்கிய தேவையாகும். அது போன்ற சமயங்களில் நம்மை காப்பாற்ற கூடிய சக்திகளில் நரசிம்மரின் சக்தி மிக முக்கியத்துவம் பெறுகிறது. கீழ்கண்ட மந்திரத்தை சொன்னால் நல்லதே நடக்கும்.

    ஓம் நமோ நாரஸிம்ஹாய

    வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே

    வஜ்ர தேஹாய வஜ்ராய

    நமோ வஜ்ர நகாய ச

    முதலில் ஒரு லட்சுமி நரசிம்ம சுவாமியின் சன்னதியில் மாலை வேளையில் இம்மந்திரத்தை 18 தடவைகள் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும். ஒரு சுவாதி நட்சத்திரத்தன்று மாலையில் பழங்கள், புஷ்பங்கள், தேங்காய், பழம், பசும் நெய், வஸ்திரம் ஆகியவற்றை சமர்ப்பித்து அர்ச்சனை ஆராதனைகளால் வழிபாட்டை தொடங்கி நமது குற்றங்குறைகளை தீர்த்து நல்வழிகாட்டும்படி மனமுருகி வழிபட்டு விட்டு பிறகு வழிபாட்டை வீட்டில் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.

    வராத நல் வாய்ப்புகள் வந்து நம் வாசலில் வணங்கி நிற்கும். வீட்டில் நரசிம்மரின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி பூஜை செய்து மந்திர துதியை 18 முறை உச்சரித்து வர வேண்டும்.அசைவ உணவை முற்றிலும் தவிர்ப்பது சிறந்த பலனை கொடுக்கும்.

    • நரசிம்மர் கோவிலுக்குச் செல்லும் நுழைவு வாசல் போன்று இந்த நாகர் வடிவ கோவில் உள்ளது.
    • ஒரு சிறிய குன்றின் மீது இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே அமைந்துள்ளது, நாம்பள்ளி குட்டா என்ற ஊர். இங்கு லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வெமுலவாடாவில் இருந்து கரீம்நகர் செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் ஒரு சிறிய குன்றின் மீது இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் வழியில் நாகதேவதைக்கு ஒரு கோவில் இருக்கிறது. பாம்பு வடிவத்தில் அமைந்த ஆலயம் இது. நரசிம்மர் கோவிலுக்குச் செல்லும் நுழைவு வாசல் போன்று இந்த நாகர் வடிவ கோவில் உள்ளது.

    பிரமாண்ட வடிவம் கொண்ட பாம்பின் வால் பகுதியில் இருந்து கோவில் பிரவேசம் தொடங்குகிறது. அந்த இடத்தின் வெளிப்பகுதியில், தூணை பிளந்து கொண்டு நரசிம்மர் வெளிவருவது போன்ற சிற்பம் வடித்து வைக்கப்பட்டுள்ளது. வளைந்து நெளிந்து கிடக்கும் பாம்பு உருவம், சிமெண்டால் செய்யப்பட்டிருக்கிறது. இதன் அருகில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாம்பு வயிற்றுப்பகுதியில் இருந்து உள்ளே செல்ல சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அப்படி பாம்பின் வடித்திற்குள் நுழைந்ததும், பக்த பிரகலாதனின் வாழ்க்கை வரலாறு அனைத்தும் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கும் அழகைக் காணலாம்.

    பக்த பிரகலாதன் பிறந்தது முதல், விஷ்ணு பக்தன் என்பதால் இரண்யகசிபு அவனை கொல்வதற்கு எடுக்கும் முயற்சிகள், மற்றும் இறுதியில் தூணில் இருந்து வெளிப்படும் நரசிம்மர், இரண்யகசிபுவை வதம் செய்வது வரை சிற்பமாக அழகுற வடித்து வைக்கப்பட்டுள்ளது. நாகர் வடிவ சிலையில் சுரங்கப்பாதை முடிவுறும் இடத்தில் நரசிம்மர், இரண்யகசிபுவை வதம் செய்யும் சிலை அமைந்துள்ளது. இங்கே நாக தேவதைகளின் பழமையான சிலைகளும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. பாம்பின் உடலுக்குள் செல்வது போல் அமைந்த சுரங்கத்தில் சூரிய வெளிச்சமும், காற்றும் வரும் வகையில் ஆங்காங்கே வட்ட வடிவ ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நாகர் வடிவ கோவிலை விட்டு வெளியே வந்ததும் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்குச் செல்லும் பாதை தொடங்குகிறது. இது சில நூறு செங்குத்தான படிகளைக் கொண்டதாக இருக்கிறது. மலையின் மீது சிறிய கோவிலாக லட்சுமி நரசிம்மர் ஆலயம் அமைந்திருக்கிறது. ஆலயத்தின் முன்பாக கொடிமரம் உள்ளது. அதன் அருகில் இடது புறம் சுமார் 20 அடி உயரத்தில் ஒரு சிறிய கற்தூண் நிற்கிறது.

    அந்த தூணின் உச்சியில் சிறிய தட்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், கீழே நின்றபடி அந்த தூணின் உச்சியை நோக்கி, சில்லறை காசுகளை தூக்கி வீசுகின்றனர். அப்படி வீசும் காசுகள், தூணின் உச்சியில் இருக்கும் தட்டில் விழுந்துவிட்டால், பக்தர்கள் நினைக்கும் காரியங்கள் நல்ல முறையில் நடந்தேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கோவில் கருவறைக்குள், தனது இடது பக்க மடியில் லட்சுமிதேவியை வைத்தபடி, நரசிம்ம சுவாமி அருள்பாலிக்கிறார்.

    நாம்பள்ளி பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், வெமுலவாடா பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திலும், கரீம்நகரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள நாம்பள்ளி குட்டா என்ற இடத்தில் இந்த லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்திருக்கிறது.

    • 28-ந்தேதி (செவ்வாய் கிழமை) தேர்திருவிழா நடக்கிறது
    • 30-ந்தேதி (வியாழக்கிழமை) தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.

    திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில். நரசிம்மரின் 9 வடிவங்களில் ஒன்றான மாலோவ நரசிம்மன் என்று அழைக்கப்படும் தேவியுடன் கூடிய திருமாலின் வடிவத்தில் இங்கு வீற்றிருக்கிறார்.

    திருமாலின் 5 வகையான பிரதிஷ்டைகளில் ஒன்றான அஸ்தாபன பிரதிஷ்டை அதாவது அமர்ந்த கோலத்தில் சிரித்த முகத்துடன் சாந்த சொரூபமாக ஏழரை அடி உயரத்தில் காட்சியளிக்கிறார். அவர் தாயார் லட்சுமி தேவியை தொடை மீது அமர்த்தி ஒருவருக்கொருவர் அணைத்தபடி கம்பீரமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இங்கு சிரித்த முகத்துடன் பெருமாள் இருக்க தாயாரின் பார்வை முழுவதும் பக்தர்களை பார்ப்பதாக இருப்பது தனி சிறப்பு. இந்த கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா நேற்று காலைகொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு சிம்ம வாகனம், சூரிய பிரபை, அனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திரபிரபை, யாளி வாகனம், போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான 24-ந்தேதி இன்று (வெள்ளிக்கிழமை) கருட சேவையும், 28-ந்தேதி (செவ்வாய் கிழமை) தேர்திருவிழாவும், 29-ந்தேதி (புதன்கிழமை) திருமஞ்சனமும், 30-ந்தேதி (வியாழக்கிழமை) தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.

    ×