search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவி சண்முகம்"

    • தேர்தல் ஆணையம் இங்கே முழுக்க முழுக்க தி.மு.க.வின் தேர்தல் பிரிவாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
    • ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் சார்பாக 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கே இருக்கின்றனர் என தெரியவில்லை.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு தேர்தலில் மிகப்பெரும் ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. வாக்காளர் பட்டியலில் 40 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படாமல் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.

    தேர்தல் ஆணையம் இங்கே முழுக்க முழுக்க தி.மு.க.வின் தேர்தல் பிரிவாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் சார்பாக 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கே இருக்கின்றனர் என தெரியவில்லை.

    தொகுதி முழுவதும் தி.மு.க.வினர் கட்டுப்பாட்டில் தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையினரும் செயல்படுகின்றனர். அனைத்து கட்சிக்கும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கும் உரிமை உண்டு. அந்த ஜனநாயக உரிமை இந்த தொகுதியில் பறிக்கப்பட்டுள்ளது.

    ஆளும் கட்சி வேட்பாளர் மட்டும் சுதந்திரமாக வாக்கு கேட்க அனுமதிக்கப்படுகிறார். எதிர்க்கட்சியான எங்களை வாக்காளர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது.

    தி.மு.க. சார்பாக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகப்பெரிய தேர்தல் முறைகேடுகளை செய்து வருகிறார். வாக்காளர்களை ஒவ்வொரு பூத்துக்கு அழைத்து சென்று 3 வேலை உணவு கொடுத்து ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் கொடுத்து இரவில் திருப்பி அனுப்பப்படுகின்றார்கள்.

    இதன் மூலம் எங்களுக்கு வாக்காளர்களை சந்திக்கும் வாக்கு கேட்கும் உரிமை மறுக்கப்படுகிறது. தி.மு.க.வினர், காவல் துறையினர் சேர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. வாகனங்களை மறிக்கின்றனர். சோதனை என்ற பெயரில் காவல்துறை மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

    அந்த கூட்டத்தை கூட்ட விடாமல் தடுக்க காவல்துறை அத்துமீறி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தேர்தல் ஆணையத்திற்கு முறையிட்டும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையத்தை கண்டித்து வீதியில் இறங்கி போராட்டம் நடத்தப்படும்.

    எனவே மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநில தேர்தல் ஆணையமும் உடனடியாக இதில் தலையிட்டு ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கும் தி.மு.க.வினர் அழைத்து சென்று அடைத்து வைத்துள்ள வாக்காளர்களை விடுவிக்க வேண்டும். அனைவருக்கும் வாக்கு சேகரிக்கும் உரிமையை செய்து தர வேண்டும். இல்லையெனில் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புகார் அளித்தும் இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
    • திமுக மாவட்ட நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தொகுதியில் பல்வேறு அராஜகங்களை செய்து வருகிறது.

    டெல்லியில் அதிமுக எம்.பி சிவி சண்முகம் கூறியதாவது:

    ஈரோடு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பான முறைகேடுகள் குறித்து கடந்த 3ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,26,876 வாக்களர்கள் உள்ளதாக பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது. இறந்தவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. புகார் அளித்தும் இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.

    வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது ஆனால் அந்த வாக்காளர்கள் அங்கு குடியிருக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது ஆனால் சரிபார்க்கும் போது அவர் இறந்திருக்கிறார், பெயர் நீக்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலில் ஒரு இடத்தில் இருக்கும் வாக்காளர் மற்றொரு இடத்திலும் இருக்கிறார். இப்படி குளறுபடி ஏற்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத்தில் 5 வாக்குகள் இருந்தால் அந்த 5 வாக்குகளும் ஒரே விலாசத்தில் இல்லை. இந்த வாக்காளர் பட்டியல் முழுமையாக திருத்தப்படவில்லை. ஒரு மோசடியான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு பூத் வாரியாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அந்த வாக்காளர் பட்டியலை நீக்கி முழுமையான தகுதியுள்ள வாக்காளர் பட்டியலை வெளியிடவேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம்.

    திமுக மாவட்ட நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தொகுதியில் பல்வேறு அராஜகங்களை செய்து வருகிறது. காவல் துறை திமுகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முறையாக செயல்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டமன்ற உறுப்பினர் இறந்த 15 நாட்களில் அவசரம் அவசரமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • முறைகேடுகளை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளதாக சிவி சண்முகம் தகவல்

    புதுடெல்லி:

    எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.பி.யான சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள மொத்த வாக்காளர்களில், நான்கில் ஒரு பகுதி வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை.

    தொகுதியில் உள்ள 238 பூத்களுக்கும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்ததில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளோம். குறிப்பாக 6 பூத்களில் உள்ள முறைகேடுகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.

    சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பின் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தலாம் என கால அவகாசம் இருந்தும் அவர் இறந்த 15 நாட்களில் அவசரம் அவசரமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை முறையாக பார்க்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரட்டை இலை சின்னத்தை சட்ட ரீதியாக பெற அனைத்து முயற்சிகளையும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
    • சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ள நிலையில் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தை நாடுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையூட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதற்கு பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளதால் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்கவில்லை என்று பதில் அளித்து இருந்தது.

    பொதுக்குழு முடிவை தேர்தல் ஆணையம் ஏற்காத நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.பி.யான சி.வி.சண்முகம் இன்று டெல்லி சென்றார்.

    இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட ஏதுவாக இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று நேரில் முறையிடுகிறார்.

    இரட்டை இலை சின்னத்தை சட்ட ரீதியாக பெற அனைத்து முயற்சிகளையும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

    சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ள நிலையில் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தை நாடுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கே.பி.முனுசாமி மறுத்தாலும் பத்து நாட்களுக்கும் மேலாக ஒதுங்கி இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.
    • சீனியர் என்பதால் கொஞ்சம் முரண்டு பிடித்தால் தேடி வருவார்கள் என்று முனுசாமி நினைத்திருக்கிறார்.

    அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக புகைந்து கொண்டிருப்பது கே.பி.முனுசாமி அந்தப் பக்கத்தில் இருந்து இந்தப் பக்கம் (ஓ.பி.எஸ்) பக்கம் வரப்போகிறார் என்பதுதான்.

    உண்மையில்லை என்று கே.பி.முனுசாமி மறுத்தாலும் பத்து நாட்களுக்கும் மேலாக ஒதுங்கி இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.

    இப்படி திடீரென்று புகைவதற்கு காரணம் சி.வி.சண்முகத்துடன் ஏற்பட்ட புகைச்சல் தானாம். பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதற்கான தீர்மானத்தை சி.வி.சண்முகம் வாசிக்க தயாராக இருந்த நிலையில் கே.பி.முனுசாமி வாசித்து விட்டார். அன்று தொடங்கிய பிரச்சினைதான். இதுவரை அவர்கள் ராசியாகவில்லை.

    அதன்பிறகு அடுத்தடுத்து நடந்த சில நிகழ்ச்சிகளிலும் எடப்பாடி பழனிசாமி சி.வி.சண்முகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது முனுசாமியை முணுமுணுக்க வைத்திருக்கிறது.

    சீனியர் என்பதால் கொஞ்சம் முரண்டு பிடித்தால் தேடி வருவார்கள் என்று முனுசாமி நினைத்திருக்கிறார். ஆனால் 'கொஞ்சம் விட்டுப்பிடிப்போம்' என்று எடப்பாடி பழனிசாமியும் இருந்து விட்டார்.

    சி.வி.சண்முகம் தாராளமாக மடியை அவிழ்க்கிறார். ஆனால் கே.பி.முனுசாமி துட்டு அவிழ்க்க யோசிக்கிறார். அப்போ இ.பி.எஸ். இப்படித்தானே இருப்பார் என்று கட்சிக்காரர்கள் வெளிப்படையாகவே கமெண்ட் அடிக்கிறார்கள்.

    • அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க ஓ.பி.எஸ். தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
    • வழக்கு விசாரணை முடிந்த பிறகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றதையொட்டி, முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம், வக்கீல் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் டெல்லி சென்றிருந்தனர்.

    கோர்ட்டு விசாரணைக்கு பிறகு சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க ஓ.பி.எஸ். தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

    அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதை கோர்ட்டு உத்தரவாதம் பிறப்பிக்கவில்லை. எங்கள் தரப்புகள் கூறும்போது, பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பான எந்தவித நடவடிக்கைகளையும் தொடங்கவில்லை என்று கோர்ட்டில் தெரிவித்து உள்ளோம்.

    பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பையே நாங்கள் வெளியிடவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளபோது தேர்தலை எப்படி நடத்துவோம். நாங்கள் சட்டபடியே செயல்படுகிறோம்.

    வழக்கு விசாரணை முடிந்த பிறகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும். வழக்கை விரிவான விசாரணைக்காக சுப்ரீம் கோர்ட்டு ஒத்தி வைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விழுப்புரம் மாவட்டம், வானூர் சட்டமன்ற தொகுதி திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
    • ஆரம்ப காலத்தில் இந்தியாவில் இருந்தவர்கள் எல்லாம் இந்துக்கள்தான். அப்படி இருக்கும்போது தவறாக ஆ.ராசா பேசி உள்ளார்.

    ஆவேசமாக பேசுவதில் அ.தி.மு.க.வின் சி.வி.சண்முகத்தை அடிச்சிக்க ஆளே இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான்.

    விழுப்புரம் மாவட்டம், வானூர் சட்டமன்ற தொகுதி திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் சி.வி.சண்முகம் சிறப்புரையாற்றினார். பேச்சும் சிறப்பாகத்தான் போய் கொண்டிருந்தது. அப்போது ஆ. ராசா இந்துக்களை பற்றி செய்த விமர்சனத்தை ஒருபிடி பிடித்தார்.

    ஆரம்ப காலத்தில் இந்தியாவில் இருந்தவர்கள் எல்லாம் இந்துக்கள்தான். அப்படி இருக்கும்போது தவறாக ஆ.ராசா பேசி உள்ளார். அப்படியானால் இந்துகள் ஓட்டு மட்டும் இனிக்கிறதா? என்று இவர் ஒரு கேள்வி எழுப்ப... மேடைக்கு பின்புறத்தில் இருந்து சில தி.மு.க.வினர் பதிலுக்கு ஆவேச குரல் எழுப்ப, மேடையில் பேசிக்கொண்டிருந்த சி.வி. சண்முகமும் ஆவேசத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்று விட்டார்.

    மிரட்டல் விடுக்கும் தி.மு.க.வுக்கு அஞ்சுபவன் நான் அல்ல. ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வாடா பார்ப்போம் என்று சவாலை தெறிக்க விட, மேடையின் பின்புறத்தில் நின்று பேசியவர்கள் ஓடி விட்டனர். தொடர்ந்து பேசிய சண்முகம் என்னை மிரட்டலாம், உருட்டலாம்... ஆனால் அசைக்கலாம் என்று மட்டும் நினைக்க வேண்டாம்.

    காவல் துறையினரும் நேர்மை, நியாயத்துடன் இருக்க வேண்டும். ஆட்சி மாறும்போது தெரியும் என்று பேச்சு திசை மாறி உச்சத்தில் செல்லவே பொதுக்கூட்டமே பரபரப்பானது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. தலைமை கழக மேலாளரான மகாலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரிடமும் பல்வேறு தகவல்களை கேட்டு பெற்றனர்.
    • தற்போது சி.வி.சண்முகத்திடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த ஜூலை 11-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மோதல் வெடித்தது.

    இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் சரமாரியாக கற்களை வீசி தாக்கி கொண்டனர். அ.தி.மு.க. அலுவலகத்துக்கு அன்றைய தினம் ஆதரவாளர்களோடு ஓ.பி.எஸ். சென்றபோதுதான் பெரிய கலவரம் ஏற்பட்டது.

    அ.தி.மு.க. அலுவலகத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அறைகளில் இருந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை தூக்கிச் சென்றனர்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையிலான போலீசார் அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 2 முறை நேரில் சென்று விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் அங்கிருந்த பல்வேறு தடயங்களை சேகரித்தனர். மோதல் சம்பவம் நடைபெற்ற போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளையும் கைப்பற்றினர். இதனை வைத்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரை அடையாளமும் கண்டுள்ளனர்.

    இது தொடர்பாக புகார்தாரரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் பல்வேறு தகவல்களை திரட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகத்தின் அலுவலகத்துக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்றனர்.

    அங்கு வைத்து மோதல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய போலீசார் அது தொடர்பான தகவல்களை முழுமையாக சேகரித்துள்ளனர். குறிப்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது குறித்தும், அப்போது ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பாகவும் சி.வி.சண்முகம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

    ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அறைகளில் இருந்த பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றதாகவும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தனர்.

    சி.வி.சண்முகம் அளித்த புகாரில் இதனை முழுமையாக தெரிவித்து இருந்தார். அதில் யார்-யார் சதி திட்டத்துடன் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் புகுந்தனர் என்பது பற்றிய விவரங்களும் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பாகவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் சி.வி.சண்முகத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சி.வி.சண்முகம் விரிவான பதிலை வாக்குமூலமாக அளித்துள்ளார்.

    இந்த வாக்குமூலத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தில் மோதலில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது குறித்தும், மோதலில் யார்-யாருக்கு முக்கிய பங்கு உள்ளது என்பது பற்றியும் சி.வி. சண்முகம் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். இந்த வழக்கில் புகார்தாரர்களிடம் மட்டுமே இதுவரை விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. தலைமை கழக மேலாளரான மகாலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரிடமும் பல்வேறு தகவல்களை கேட்டு பெற்றனர். தற்போது சி.வி.சண்முகத்திடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

    இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அலுவலக மோதல் சம்பவத்தில் சென்னையை சேர்ந்த ஓ.பி.எஸ் ஆதரவு முக்கிய பிரமுகர் ஒருவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக எடப்பாடி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இவரை போன்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பலருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் குறி வைத்துள்ளனர்.

    இந்த வழக்கு இன்னும் சில தினங்களில் ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை வேகப்படுத்தி உள்ளனர். விரைவில் விசாரணை அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.

    • அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
    • முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஐகோர்ட்டில் இன்று கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் உருட்டுக்கட்டை, கற்களால் தாக்கினர். இந்த மோதலில் 2 போலீசார் உள்பட 47 பேர் காயமடைந்தனர். காவல்துறையைச் சேர்ந்த 4 வாகனம் உள்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. அலுவலகத்தில் இருந்த கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஓ.பனனீர்செல்வம் ஆதரவாளர்கள் திருடிச்சென்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான 4- வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அண்மையில் தெரிவித்தது.

    இந்நிலையில், அ.தி.மு.க. அலுவலகம் சூறை தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும் இதுவரை விசாரணை தொடங்காதது அதிர்ச்சி தருகிறது. அலுவலகத்தில் இருந்து திருடப்பட்ட பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. அ.தி.மு.க. அலுவலகம் சூறை தொடர்பாக உரிய விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும். டிஜிபி உத்தரவிட தவறினால் வழக்குகளை வேறு தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    • விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் இன்று காலை அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டு கொள்ளாத தி.மு.க. அரசை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார்.

    முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டன.

    விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் இன்று காலை அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் டெல்லி சென்று பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் இன்று நேரில் சமர்பித்தார்.
    • 2428 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரமாண பத்திரங்களையும் சி.வி.சண்முகம் வழங்கி உள்ளார்.

    சென்னை:

    சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    அத்துடன் 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கட்சி விதிகளிலும் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு இருந்த அதிகாரங்கள் ரத்து செய்யப்பட்டு பொதுச்செயலாளருக்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பொதுக்குழுவில் பங்கேற்ற பொதுக்குழு உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளனர்.

    இந்த நகல்களையும், பொதுக்குழு தீர்மானங்களையும் உடனடியாக எடப்பாடி பழனிசாமி இ-மெயில் மூலமாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் டெல்லி சென்று பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் இன்று நேரில் சமர்பித்தார்.

    2428 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரமாண பத்திரங்களையும் சி.வி.சண்முகம் வழங்கி உள்ளார்.

    வக்கீல்கள் பாலமுருகன், பிரேம்குமார், வினோத் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

    பின்னர் பேட்டி அளித்த அவரிடம் உங்களது கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் உடனடியாக ஏற்றுக்கொள்ளுமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர் அதுபற்றி தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

    பொன்னையன் தொடர்பான ஆடியோ பற்றி கேட்டதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

    • சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • செல்போன் மற்றும் வாட்ஸ் அப் வழியாக மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று அளித்த பேட்டியில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது குற்றச் சாட்டுகளை தெரிவித்தார்.

    இந்த நிலையில் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் வாட்ஸ் அப் வழியாக மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    ×