search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைகள் கொள்ளை"

    • அகஸ்டின் பீரோவில் வைத்து இருந்த நகைகளை சரி பார்த்தார்.
    • போலீசார் சமையல் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை, கோடம்பாக்கம் அசோகா அவின்யூ பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் பாபு. தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட பொருளாளராக உள்ளார். இவரது மனைவி எலிசபெத். இவர் சென்னை மாநகராட்சியின் 112-வது வார்டு கவுன்சிலர் ஆவார். அகஸ்டின் பீரோவில் வைத்து இருந்த நகைகளை சரி பார்த்தார். அப்போது ரூ.6 லட்சம் மதிப்புள்ள 6 பவுன் வைர நகை திடீரென மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அகஸ்டின் பாபு வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக சமையல் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறையில் இருந்த லாக்கரில் வளையல், நெக்லஸ், கைசெயின், செயின் உள்பட 23 பவுன் தங்க நகைகளை வைத்து விட்டு சென்றார்.
    • பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன். நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர்.

    இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பாலச்சந்திரன் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று இவரது மகன் முகுந்த் சந்திரா (வயது 23). என்ஜினீயரிங் மாணவர். இவர் வீட்டை பூட்டி விட்டு தந்தையை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் வீட்டின் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின் , கைசெயின் தங்க மணி உள்பட 26½ பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.60 ஆயிரம் ரொக்க பணம், 2 போட்டோ காமராக்கள், கார் சாவி ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மறுநாள் வீட்டிற்கு திரும்பிய முகுந்த் சந்திரா வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து ராமநாதபுரம் போலீசார் நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    பீளமேடு அருகே உள்ள பாரதி காலனியை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 50). இவர் கத்தார் நாட்டில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். பரமேஸ்வரி கடத்த ஜூன் மாதம் தனது வீட்டிற்கு வந்தார்.

    அப்போது அறையில் இருந்த லாக்கரில் வளையல், நெக்லஸ், கைசெயின், செயின் உள்பட 23 பவுன் தங்க நகைகளை வைத்து விட்டு சென்றார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கோவைக்கு வந்தார். அப்போது லாக்கரை திறந்து பார்த்த போது அதில் இருந்த தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள். 

    • கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
    • நாய் அடகு கடையின் பின்புறமாக சென்று முன்பக்கமாக வந்து நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பாப்பாக்குடி கடைவீதியில் ராஜஸ்தானை சேர்ந்த சங்கர் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

    கடந்த 28-ந் தேதி இரவு 7 மணியளவில் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சங்கர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் சங்கர் மற்றும் அவரது கடையில் வேலை பார்த்து வரும் தில்கேஷ், அஜித் ஆகியோர் கடையை திறக்க வந்தனர்.

    அப்போது கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடையின் பின்பக்க சுவற்றை மர்ம நபர்கள் துளையிட்டு லாக்கரில் வைத்திருந்த 209 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து, போலீஸ் மோப்ப நாய் மலர் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் அடகு கடையின் பின்புறமாக சென்று முன்பக்கமாக வந்து நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதனைதொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • தனியார் நிறுவன ஊழியர்.
    • மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை நீலாம்பூர் அருகே உள்ள மயிலம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 9-ந் தேதி இவர் தேனியில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வருவதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார். அப்போது ரமேஷ் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கம்மல், வைர கம்மல், தங்க நாணயம் உள்பட ரூ.75 ஆயிரம் மதிப்பிலான தங்க வைர நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். நள்ளிரவு வீட்டிற்கு திரும்பிய ரமேஷ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • திருச்சி தனியார் பஸ் நிறுவன மேலாளர் வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர்
    • அவரது மனைவியும், மகளும் தீபாவளிக்கு ஆடைகள் வாங்குவதற்காக நேற்று காலை 11 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர்

    திருச்சி:

    திருச்சி அருகே உள்ள நவல்பட்டு அய்யன் புதூர் கோல்டன் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (வயது 47). இவர் திருச்சியில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை அவர் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் இருந்த அவரது மனைவியும், மகளும் தீபாவளிக்கு ஆடைகள் வாங்குவதற்காக நேற்று காலை 11 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர். பிற்பகல் 3 மணிக்கு மதிய உணவு இடைவேளைக்காக தனபால் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறையில் வைத்திருந்த 13 பவுன் நகை, வெள்ளி குத்துவிளக்கு, 2 வங்கி கணக்கு புத்தகங்கள், காசோலை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சம் என மதிப்பிட ப்பட்டுள்ளது.

    கொள்ளையர்கள் இரும்பு ராடால் கதவை உடைத்து திறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் 2 பீரோக்களை திறந்து பார்த்தனர். அந்த பீரோக்களின் சாவி அதன் அருகாமையிலேயே வைக்கப்பட்டிருந்தது.

    அதில் துணிமணிகளை தவிர நகை பணம் எதுவும் வைக்கவில்லை. ஆனால் சல்லடை போட்டு தேடி பூஜை அறையில் சாமி படங்களுக்கு பின்னால் வைத்திருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து தனபால் நவல்பட்டு போலீசில் புகார் செய்தார் தகவல் அறிந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். சப் இன்ஸ்பெக்டர் மணி வழக்கு பதிவு செய்துள்ளார்.

    குற்றவாளிகளை பிடிக்க துணை போலீஸ் பிரண்டு அறிவழகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டில் யாரோ வந்திருப்பது போல சத்தம் கேட்கிறது என்று தெரிவித்துள்ளார்.
    • வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே யுள்ள கட்டிகானபள்ளி பகுதியை சேர்ந்தவர் ரகமதுல்லா (வயது 37). இவர் வனத்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் தனது குடும்பத்து டன் ராயக்கோட்டை அருகேயுள்ள பூங்குறிச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    ரகமதுல்லாவின் வீட்டு மாடியில் உள்ள அறையில் உடல்நிலை சரியில்லாத அவரது தந்தை பாஷா மட்டும் தங்கியிருந்தார்.

    இந்நிலையில் ரகமதுல்லாவின் செல்போனுக்கு பேசிய பாஷா கீழே உள்ள வீட்டில் யாரோ வந்திருப்பது போல சத்தம் கேட்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து ரகமதுல்லா ஊருக்கு விரைந்து வந்தார்.அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    அதிர்ச்சி அடைந்த ரகமதுல்லா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    அதில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ரகமதுல்லா புகார்

    செய்தார் .

    போலீசார் வழக்கு பதிவு செய்து வனத்துறை அதிகாரி வீட்டில் கைவரிசை கட்டிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    • வீட்டில் தனலட்சுமி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர் மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
    • பீரோவில் தங்கச் செயின் மற்றும் டாலர், நெக்லஸ்,மோதிரம் உள்ளிட்ட சுமார் 32 பவுன் தஙக நகையையும், ரூ.ஒரு லட்சத்து 15 ஆயிரம் பணமும் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்

    திருச்சி :

    திருச்சி கலெக்டர் அலுவலகம் சாலை கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தனலட்சுமி (60). சந்திரசேகர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். வீட்டில் தனலட்சுமி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர் மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று தனலட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு பொன் நகரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விடுகிறார்.

    இந்த நிலையில் மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பூட்டை திறந்து உள்ளே சென்ற வசந்தி அறைக்கு சென்று அங்குள்ள பீரோவை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார் அந்த பீரோவில் தங்கச் செயின் மற்றும் டாலர், நெக்லஸ்,மோதிரம் உள்ளிட்ட சுமார் 32 பவுன் தஙக நகையையும், ரூ.ஒரு லட்சத்து 15 ஆயிரம் பணமும் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் திருட்டு நடந்து இருப்பது தனலட்சுமிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தனலட்சுமி கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முதல் கட்ட விசாரணை நடத்திய போது வீட்டின் அறையில் 4, 5 பீரோவில் இருக்கும் பொழுது குறிப்பாக நகை, பணம் உள்ள பீரோவை மட்டும் சாவி போட்டு யாரோ திருடி இருப்பது தெரிய வந்தது. மேலும் பீரோவின் சாவியை தனலட்சுமி ஒரு இடத்தில் வைப்பது வழக்கம். அந்த இடத்தில் இருந்து சாவியை எடுத்து பீரோவை வருமா சாமி திறந்து நகை பணத்தை எடுத்துள்ளனர்.

    எனவே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் மர்ம ஆசாமி யாரோ தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். திருட்டு போலி நகை பணத்தின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    சென்னை கேளம்பாக்கம் ராஜேஷ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (51). மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் கருப்பசாமி கோவிலுக்கு சாமி கும்மிடுவதற்காக ஒரு காரில் நேற்று புறப்பட்டு சென்றனர்.

    நள்ளிரவை கடந்து திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வலசுப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். அப்போது 42 சவரன் நகை மற்றும் 7 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை ஒரு பையில் போட்டு காரின் முன் பகுதியில் வைத்திருந்தனர். பின்னர் ஓய்வு முடித்து எழுந்து மீண்டும் புறப்பட தயாராகி விட்டு பார்த்த போது நகை மாற்றும் பணம் வைக்கப்பட்திருந்த பை திருடு போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது தொடர்பாக வளநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வாகன ஓட்டிகளை கடும் அச்சதிற்கு ஆளாக்கி உள்ளதுடன், பாதிக்கட்டவர்களை கடும் மன வேதனைக்கு ஆளாக்கி உள்ளது.

    • திருமணத்துக்கு வாங்கி வைத்திருந்த 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது
    • சி.சி.டி.வி.கேமரா மூலம் சிக்கிய 3 கொள்ளையர்கள்

    திருச்சி:

    திருச்சியில் திருமணத்துக்கு வாங்கி வைத்திருந்த 70 பவுன் நகைகள், மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

    திருச்சி கருமண்டபம், ஆர்.எம்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் தனபால் மனைவி நாகலட்சுமி (வயது55). தனபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். நாகலட்சுமி ரயில்வே துறையில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரு மகள்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நாகலட்சுமியின் சகோதரன் மகளுக்கு நாளைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அதற்கான நகைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொருட்களை நாகலட்சுமி பொறுப்பேற்று வாங்கி அவரது வீட்டில் வைத்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மேலும் நகைகள் வாங்குவதற்காக, வீட்டை பூட்டிவிட்டு உறவினர்களுடன் என் எஸ்.பி.சாலையில் உள்ள பிரபல நகைக்கடைக்குச் சென்றுள்ளார். பிற்பகலில் திரும்பி வந்து பர்த்தபோது, வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, திருமணத்துக்காக வாங்கி பீரோவில் வைத்திருந்த 70 பவுன் நகைகளையும், ரூ. 1 லட்சம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின்பேரில், கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் தடவியல் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு புலன்விசாரணை நடத்தினர். விசாரணையில் சந்தேகத்துக்குரிய 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் திருட்டில் தொடர்புடையது தெரிய வந்தது. தொடர்ந்து விடிய, விடிய அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார்.
    • தங்க நகைகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    கோவை :

    கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் கோபு (வயது 61). ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி.

    கடந்த மாதம் 17-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். அப்போது கோபு வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம், வலையல் உள்பட 2 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.இது குறித்து அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காரமடை அருகே உள்ள ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி அன்போணி (வயது 65). ஓய்வு பெற்ற ஹெல்த் சூப்பர்வைசர். கடந்த 3-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்றார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், கம்மல் உள்பட 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அன்போணி காரமடை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். 

    • செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    கோவை

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொன்னே கவுண்ட ன்புதூரை சேர்ந்தவர் மாமணி (வயது 32).

    இவர் அந்த பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மாமணி தனது வீட்டை பூட்டி விட்டு சீரியம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு தூக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுைழந்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள பீரோவை திறந்து அதில் இருந்த ஆரம், செயின், கம்மல், மோதிரம், வளையல் உள்பட 19 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மறுநாள் மாமணியின், வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தின் இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் தனது வீட்டிற்கு விரைந்து சென்றார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து மாமணி அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து அன்னூர் போலீசார் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 19 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    • காரைக்கால் நிரவியில் வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
    • கடந்த 14ந் தேதி, தனது குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நிரவி ரோஜா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தமிழகத்தில் உள்ள ஒரு சிமெண்ட் கடையில் காசாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 14ந் தேதி, தனது குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கபட்டு, படுக்கையறையில் இருந்த அலமாரி உடைக்கப்பட்டு, 4 பவுன் தங்க நகை திருடுபோய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, அவர் நிரவி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    • வீட்டை பூட்டி விட்டு மார்க்கெட் ரோட்டில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றார்
    • கொள்ளையர்கள் பீரோவில் இருந்த தங்க வைர நகை களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் ரபிதீன் (வயது 46). இவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 7-ந் தேதி ரபிதீனின் அண்ணன் இறந்து விட்டார்.

    இதனையடுத்து அவர் தனது வீட்டை பூட்டி விட்டு மார்க்கெட் ரோட்டில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றார். அப்போது இவரது வீட்டில் உள்ள பின் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் அறையில் இருந்த பிரோவை திறந்து அதில் இருந்த நெக்லஸ், வளையல், வைர மோதிரம், கம்மல், கைசெயின் உள்பட 19½ தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மாலையில் வீட்டிற்கு திரும்பிய ரபிதீன் வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த தங்க வைர நகை களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் பொள்ளாச்சி மேற்கு போலீ சாருக்கு தகவல் தெரி வித்தார். உடன டியாக போலீ சார் சம்பவ இடத்துக்கு விரை ந்து சென்று விசார ணை நடத் தினர்.

    பின்னர் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளை யர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பேக்கரி உரிமையாளர் வீட்டில் தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளை யர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகளில் பொருத்த ப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளை யர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள்.  

    ×