search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதார அமைச்சர்"

    • சிறப்பு மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை இன்று 50ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
    • வெள்ளச் சூழலைப் பொறுத்து மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் என்று அறிவிப்பு.

    காவிரி ஆறு மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில சுகாதாரத்துறை மருத்துவ முகாம்களை அமைத்துள்ளது.

    காவிரி டெல்டா மாவட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, 37 மருத்துவ முகாம்கள் உடனடியாக அமைக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தெரிவித்துள்ளார்.

    இந்த முகாம்களின் எண்ணிக்கை இன்று 50ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

    வெள்ளச் சூழலைப் பொறுத்து மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.

    மேலும், இந்த மருத்துவ முகாம்களில் சளி, காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு போன்ற புகார்கள் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

    இந்நிலையில், இன்றைய நிலவரப்படி நாமக்கல், ஈரோடு, கடலூர், கரூர், தஞ்சாவூர், தருமபுரி ஆகிய இடங்களில் 1,531 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த பகுதிகளில் தயார் நிலையில் உள்ள துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவைகளுடன் போதுமான அளவு நுண்ணுயிர் எதிர்ப்பிகள், ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் உள்ளன.

    பொதுமக்கள் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என்றும் சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். காய்ச்சிய தண்ணீரைக் குடிக்கவும், சத்தான உணவுகளை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

    குழந்தைகள் வெள்ள நீர் அல்லது அருகிலுள்ள பகுதிகளுக்கு செல்லாமல் இருப்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். டெங்கு, மலேரியாவை தடுக்க கொசுவலை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.

    மேலும், மீட்புப் பணியாளர்கள் அறிவுறுத்தும் வரை மக்கள் தற்காலிக தங்குமிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    மழைக்காலத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • விலங்குகள் கூட்டமாக இறப்பது கண்டறியப்பட்டால், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
    • ஆந்த்ராக்ஸ் பரவும் இடங்களுக்கு பொது மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் அதிரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதலால் காட்டுப்பன்றிகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    கூட்டமாக இறந்து கிடந்த காட்டுப்பன்றிகளின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, ஆந்த்ராக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வனத்துறையினர் கூட்டாக விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இயற்கையாகவே மண்ணில் காணப்படும் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியா பரவுவதைத் தடுக்க சுகாதாரத் துறை உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

    காட்டுப்பன்றிகளின் சடலங்களை புதைக்கச் சென்றவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்குத் தேவையான தடுப்பு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அரசு கூறியுள்ளது.

    விலங்குகள் கூட்டமாக இறப்பது கண்டறியப்பட்டால், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என எச்சரிக்கபட்டிருப்பதாகவும், இதுபோன்ற இடங்களுக்கு பொது மக்கள் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

    • சுகாதாரத் துறையில் சேவைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான திறனை வலுப்படுத்தும்.
    • பொது சுகாதாரப் பள்ளி நம் நாட்டு மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

    புதுச்சேரியில் ஜிப்மர் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிலையம் திறப்பது குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தை நாடு வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. நாடு பொது சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ள வலுவான முறையை உருவாக்கியது.

    ஜிப்மர் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிலையம் பொது சுகாதாரத்தில் மிக உயர்ந்த பாடத்தை வழங்கும். நிலையான மதிப்பு அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கும். மேலும், சுகாதாரத் துறையில் சேவைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான திறனை வலுப்படுத்தும்.

    பொது சுகாதார கல்வி நிலையத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு ரூ.66 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் நம் நாட்டு மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து, முழு உலகத்திற்கும் சேவை செய்யும். இது இந்தியத் தத்துவமான வசுதைவ குடும்பம் (உலகம் முழுவதும் ஒரே குடும்பம்). மருத்துவ மாணவர்கள், சுகாதார நிர்வாகிகள் இரக்கத்துடன் சேவைகளை வழங்குவதற்கு அழைப்பு விடுக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×