search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஸ்பெண்டு"

    • வடசேரி பஸ்நிலையத்தில் இருந்து காட்டுப்புதூருக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது.
    • போக்குவரத்து நிர்வாகம், துறை ரீதியாக விசாரணை நடத்தி டிரைவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி பஸ்நிலையத்தில் இருந்து காட்டுப்புதூருக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் அசம்பு ரோட்டில் சென்ற போது, திடீரென தாறுமாறாக ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர்.

    கடைசி நேர பஸ் என்பதால் பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் டிரைவரிடம் பஸ்சை நிறுத்துங்கள்... என கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து அவர் பஸ்சை நடுவழியில் நிறுத்தினார். அப்போது தான் டிரைவர் போதையில் இருப்பது தெரியவர பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் பஸ்சை விட்டு இறங்கினர்.

    இதுபற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, பஸ் டிரைவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் பஸ் டிரைவர் மது அருந்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் போக்குவரத்து நிர்வாகம், துறை ரீதியாக விசாரணை நடத்தி டிரைவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

    • கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
    • காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் போலீசார் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

    கள்ளக்குறிச்சி உட்கோட்டம் கரியாலுர் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ராமலிங்கம்.இவர் தற்போது நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணி புரிந்து வருகிறார்.

    இவர் கரியாலூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த போது சாராய வியாபாரிகளிடம் ரகசிய தொடர்பில் இருந்து வந்த காரணத்தினால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, குட்கா மற்றும் சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் தொடர்பில் இருந்து, காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் போலீசார் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • சாணார்பட்டி அருகில் உள்ள மடூர் புகையிலைப்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது.
    • கடையின் ஊழியரை சஸ்பெண்டு செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் உள்ள மடூர் புகையிலைப்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மதுபானம் வாங்க சென்ற குடிமகன் கூடுதலாக ரூ.10 கேட்டதால் தன்னிடம் பணம் இல்லை என்றும், நாளை வரும்போது தருகிறேன் என கூறி உள்ளார்.

    ஆனால் ரூ.130 மதுபான பாட்டிலுக்கு ரூ.140 கொடுத்தால்தான் சரக்கு கிடைக்கும் என்றும், இல்லையெனில் தர முடியாது எனவும் டாஸ்மாக் ஊழியர் கூறினார். எதற்காக ரூ.10 கூடுதலாக கேட்கிறாய் என கேட்டதற்கு ஒரு சில அதிகாரிகளின் பதவிகளை கூறி அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. அதற்காகத்தான் நாங்கள் ரூ.10 கூடுதலாக வாங்குகிறோம்.

    அனைத்து அதிகாரிகளுமே பணம் வாங்குகின்றனர். யார்? யார்? பணம் வாங்குகிறார்கள் என்ற விவரத்தை நான் உனக்கு விளக்கமாக வெளியில் வந்து சொல்கிறேன் என கூறினார். அவர் பேசிய இந்த உரையாடல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட கடையின் ஊழியரை சஸ்பெண்டு செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    • பயிற்சியின்போது விடுமுறை நாளில் தனது சொந்த ஊருக்கு வந்த இவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் அன்பு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • நீண்ட நேரம் ஆகியும் அன்பு அலுவலகத்திற்கு வரவில்லை. சந்தேகமடைந்த அவருடன் பணிபுரியும் ஊழியர்கள் அறைக்கு சென்று பார்த்தனர்.

    சேதராப்பட்டு:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த இரும்புளி குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் அன்பு (வயது 30). இவருக்கு திருமணமாகவில்லை.

    கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

    பயிற்சியின்போது விடுமுறை நாளில் தனது சொந்த ஊருக்கு வந்த இவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் அன்பு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    போலீசாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெறும் காலத்தில் இவரது மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. அவ்வப்போது இந்த விசாரணைக்கு அன்பு கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.

    இதற்கிடையே கடந்த ஆண்டு புதுவை மேட்டுப் பாளையம் அருகே உள்ள தமிழகப் பகுதியான பூத்துறையில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் அன்பு மானேஜராக பணிக்கு சேர்ந்தார். அங்கு பணியாற்றும் நிறுவனம் அருகிலேயே அறையில் தங்கி பணிக்கு சென்று வந்தார்.

    நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அன்பு அலுவலகத்திற்கு வரவில்லை. சந்தேகமடைந்த அவருடன் பணிபுரியும் ஊழியர்கள் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு அன்பு தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பார்சல் சர்வீஸ் நிறுவன உரிமையாளர் உமா சங்கருக்கும், ஆரோவில் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குபதிவு செய்து அன்பு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகராட்சி பகுதிக்கு தேவையான கொசு மருந்துகளை திருச்சியில் உள்ள ஒரு நிறுவனத்திடம் வாங்கி வந்தனர்.
    • நகராட்சி ஆணையாளர் சையது உசேன் நேற்று பணி ஓய்வு பெற இருந்தார்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த நகராட்சியின் ஆணையாளராக சையது உசேன் என்பவர் பணியாற்றினார்.

    நகராட்சி பகுதிக்கு தேவையான கொசு மருந்துகளை திருச்சியில் உள்ள ஒரு நிறுவனத்திடம் வாங்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு தேவையான 335 லிட்டர் கொசு மருந்துகளை திருச்சியில் உள்ள நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாகவும், அதற்காக ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 299 காசோலையாக செலுத்தப்பட்டதாகவும் நகராட்சி பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டது.

    இதுபற்றி தெரியவந்ததும் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன், துணைத்தலைவர் சிதம்பரம் மற்றும் நகராட்சியின் உறுப்பினர்கள் நகராட்சி பயன்பாட்டுக்கு வாங்கப்பட்ட கொசு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளதா? என அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கொசு மருந்து இல்லாததை கண்டுஅதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து நகராட்சி அதிகாரியிடம் கேட்டனர். அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. இதையடுத்து நகராட்சி தலைவர் போலீசில் புகார் செய்தார். மேலும் இதுகுறித்து நகராட்சி உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து திருப்பூர் மண்டல நகராட்சி இயக்குனர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் சையது உசேன் நேற்று பணி ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் கொசு மருந்துகள் ஒரு வேனில் அவசரமாக கொண்டு வந்து அலுவலகத்தில் இறக்கி வைத்தனர். இதுகுறித்தும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ஓய்வுபெறும் நாளில் நகராட்சி ஆணையாளர் சையது உசேன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதேபோல் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமாரும் இந்த முறைகேட்டில் சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஓய்வு பெறும் நாளில் நகராட்சி ஆணையாளர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் ஆவினில் பால் பண்ணை பிரிவில் சிறப்பு நிலை டெக்னீசியனாக கணேசன் என்பவர் பணியாற்றி வந்தார்.
    • ஆவினில் வேலை பெற்று தருவதாகவும் கூறி பணம் பெற்றதாக புகார்கள் வந்தன.

    சேலம்:

    சேலம் ஆவினில் பால் பண்ணை பிரிவில் சிறப்பு நிலை டெக்னீசியனாக கணேசன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பதவி உயர்வு ெபற்று தருவதாகவும், ஆவினில் வேலை பெற்று தருவதாகவும் கூறி பணம் பெற்றதாக புகார்கள் வந்தன. அந்த புகாரை 3 அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து விசாரிக்கப் பட்டது.

    அதில், கணேசன் பணத்தை பெற்றுக் கொண்டு பணி பெற்று தருவதாகவும், பதவி உயர்வு வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் அறிக்கை அடிப்படையில் கணேசனை சஸ்பெண்டு செய்து, ஆவின் பொதுமேலாளர் விஜயபாபு உத்தரவிட்டார்.

    இவர் நேற்று (31-ந்தேதி) ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். கணேசன் மீது பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே 2 முறை சஸ்பெண்டு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பணி பெற்று தருவதாகவும், பதவி உயர்வு வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • கணேசன் மீது பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே 2 முறை சஸ்பெண்டு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சேலம்:

    சேலம் ஆவினில் பால் பண்ணை பிரிவில் சிறப்பு நிலை டெக்னீசியனாக கணேசன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பதவி உயர்வு பெற்று தருவதாகவும், ஆவினில் வேலை பெற்று தருவதாகவும் கூறி பணம் பெற்றதாக புகார்கள் வந்தன. அந்த புகாரை 3 அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து விசாரிக்கப்பட்டது.

    அதில், கணேசன் பணத்தை பெற்றுக் கொண்டு பணி பெற்று தருவதாகவும், பதவி உயர்வு வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் அறிக்கை அடிப்படையில் கணேசனை சஸ்பெண்டு செய்து, ஆவின் பொதுமேலாளர் விஜயபாபு உத்தரவிட்டார்.

    இவர் நேற்று (31-ந்தேதி) ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். கணேசன் மீது பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே 2 முறை சஸ்பெண்டு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டார்.
    • அனைத்துப் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார்.

    சென்னை:

    தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருச்சி வடக்கு மாவட்டம், துறையூர் மத்திய ஒன்றியம், நரசிங்கபுரம் ஊராட்சியைச் சேர்ந்த மகேஸ்வரன், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • செல்லம் (வயது 55). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த எழிலரசி என்பவருக்கும் வழித்தட பிரச்சினை இருந்து வந்துள்ளது.
    • இது தொடர்பாக இரு தரப்பினரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அடுத்த முருங்கப்பட்டி பெத்தாம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி செல்லம் (வயது 55). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த எழிலரசி என்பவருக்கும் வழித்தட பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இதனிடையே கடந்த வாரம் மீண்டும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

    இதில் எழிலரசியின் உறவினரான பெத்தாம்பட்டி அரசுப்பள்ளியில் அப்போது சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வரும் சந்திரன் (57) என்பவர் செல்லத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த செல்லம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். பின்னர் இரு தரப்பினரும் இரும்பாலை போலீசில் புகார் அளித்தனர்.

    இதில் எழிலரசி அளித்த புகாரின்பேரில் செல்லத்தின் மகன் தாமோதரனும், செல்லம் அளித்த புகாரின்பேரில் சந்திரனும் கைது செய்யப்பட்டனர்.

    இதனிடையே இந்த விவகாரம் குறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரேச்சல் கலைச்செல்வி துறை ரீதியான விசாரணை நடத்தி, சத்துணவு அமைப்பாளர் சந்திரனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    • பாபுவை கொலை செய்ததற்கு பழி தீர்க்கும் வகையில் தான், மத்திகிரியை சேர்ந்த சசி என்பவர் மூலம் கொலை செய்ததாக கூறியுள்ளார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு ஆகிய இருவரையும் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ் குமார் தாகூர், சஸ்பெண்டு செய்துள்ளார்

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கடந்த 12-ந்தேதி, பெரியார் நகர் அருகே ஒரு ஸ்வீட்ஸ் கடை பகுதியில், மத்திகிரி அருகே சொப்பட்டி கிராமத்தை சேர்ந்த திலக் (24) என்ற வாலிபர், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.இது சம்பந்தமாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். மேலும், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட திலக், அவரது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து சொப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன் பாபு என்பவரை வெட்டி கொலை செய்து விட்டனர்.

    இது சம்பந்தமாக குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்துவிட்டனர்.

    இந்நிலையில், திலக் கொலை தொடர்பாக, மோகன் பாபுவின் தந்தை திம்மராயப்பா என்பவரை சந்தேகத்தின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் அழைத்து வந்து விசாரித்த போது, தனது மகன் மோகன் பாபுவை கொலை செய்ததற்கு பழி தீர்க்கும் வகையில் தான், தான் மத்திகிரியை சேர்ந்த சசி என்பவர் மூலம் கொலை செய்ததாக கூறியுள்ளார்.

    இது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், திலக்கிற்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி சேலம் சரக டி.ஐ.ஜி உத்தரவின் பேரில், மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு ஆகிய இருவரையும் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ் குமார் தாகூர், சஸ்பெண்டு செய்துள்ளார்.

    • 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    • போலீசார் அழைத்து வந்து விசாரித்த போது, தனது மகன் மோகன் பாபுவை கொலை செய்ததற்கு பழி தீர்க்கும் வகையில் தான், தான் மத்திகிரியை சேர்ந்த சசி என்பவர் மூலம் கொலை செய்ததாக கூறியுள்ளார்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கடந்த 12-ந்தேதி, பெரியார் நகர் அருகே ஒரு ஸ்வீட்ஸ் கடை பகுதியில், மத்திகிரி அருகே சொப்பட்டி கிராமத்தை சேர்ந்த திலக் (24) என்ற வாலிபர், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இது சம்பந்தமாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். மேலும், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட திலக், அவரது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து சொப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன் பாபு என்பவரை வெட்டி கொலை செய்து விட்டனர். இது சம்பந்தமாக குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்து விட்டனர்.

    இந்நிலையில், திலக் கொலை தொடர்பாக, மோகன் பாபுவின் தந்தை திம்மராயப்பா என்பவரை சந்தேகத்தின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் அழைத்து வந்து விசாரித்த போது, தனது மகன் மோகன் பாபுவை கொலை செய்ததற்கு பழி தீர்க்கும் வகையில் தான், தான் மத்திகிரியை சேர்ந்த சசி என்பவர் மூலம் கொலை செய்ததாக கூறியுள்ளார்.

    இது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், திலக்கிற்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி சேலம் சரக டி.ஐ.ஜி உத்தரவின் பேரில், மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு ஆகிய இருவரையும் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ் குமார் தாகூர், சஸ்பெண்டு செய்துள்ளார்.

    • கடந்த மாதம் 29-ந்தேதி திருக்கழுக்குன்றத்தில் பட்டப்பகலில் சர்புதீன் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
    • போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றத்தை அடுத்த ருத்ரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சர்புதீன்(37). சமூக ஆர்வலர். இவர், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக கோர்ட்டில் உத்தரவு பெற்று இருந்தார்.

    இந்த மோதலில் கடந்த மாதம் 29-ந்தேதி திருக்கழுக்குன்றத்தில் பட்டப்பகலில் சர்புதீன் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு தொடர்பாக திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த, பேரூராட்சி கவுன்சிலர் தவுலத்பீ, அவரது மகன் பாரூக் உள்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலையாளிகளுக்கு உடந்தையாக போலீஸ் நிலையத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் தகவல்களை பரிமாறியதாக திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலைய நீதிமன்ற பொறுப்பு காவலர் பிரசாந்த்(32) என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பிரதீப் பிறப்பித்து உள்ளார்.

    இது தொடர்பாக மேலும் ஒரு போலீசாரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் மீதும் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    கொலையாளிகளுக்கு தகவலை பரிமாறியதாக போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×