search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறையில் அடைப்பு"

    • விக்கிரவாண்டி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் ரகுநாத் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
    • சொந்தமாக மருந்தகமும் நடத்தி வந்தது ஆய்வில் தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா திண்டிவனம் வட்டம் பெரியதச்சூரில் போலி டாக்டர் கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் வந்தன. இதனை அடுத்து விக்கிரவாண்டி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் ரகுநாத் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது விழுப்புரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த செல்வசேகர் (வயது 51) என்பவர் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததை கண்டார். உடனடியாக உள்ளே சென்ற டாக்டர் ரகுநாத் அவரிடம் விசாரணை நடத்தினார். இதில் அவர் எம்.பி.பி.எஸ்., படிக்காமல் பி.எஸ்.சி. படித்து விட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

    மேலும், இவர் சொந்தமாக மருந்தகமும் நடத்தி வந்தது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து டாக்டர் ரகுநாத், இது குறித்து பெரிய தச்சூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் வழக்குப்பதிந்து போலி டாக்டர் விழுப்புரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த செல்வசேகரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த போலி டாக்டர் இது போல பல முறை கைதாகி, ஜாமினில் வந்து மீண்டும் கிளினிக் நடத்தி வருகிறார். எனவே, இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • ஆபாசமாக இருப்பது போன்ற படத்தை எடுத்து வைத்து கொண்டு மிரட்டல்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர்

    கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). தொழிலாளி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அந்த பெண்ணை விக்னேஷ் தனது வீட்டுக்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததா கவும், அந்த பெண் மயக்கமாக இருந்த போது அவருடன் ஆபாச மாக இருப்பது போன்ற படத்தை எடுத்து வைத்து கொண்டு மிரட்டி யதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து அப்போது விக்னேஷ் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது விக்னேஷ் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

    இதற்கிடையே அந்த பெண்ணுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவருக்கும் விக்னேஷ் ஆபாச படங்களை அனுப்பி யதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கடத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். இதையடுத்து அவரை கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • தலைமறைவாக இருந்த மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
    • பின்னர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி ஆனந்தம் பாளையத்தை சேர்ந்தவர் கோபால் (58). இவர் அதே பகுதியில் பால் சொசைட்டி செயலாளராக உள்ளார். இவரது மகன் மோகன சுந்தரம் எலக்ட்ரீசியன் படித்து முடித்துள்ளார்.

    இந்நிலையில் கோபாலு க்கு பவானி சிங்கம் பேட்டை பகுதியை சேர்ந்த மூர்த்தி (45) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் பூனாச்சி துணை மின் நிலையத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் மூர்த்தி தனக்கு மின் வாரியத்தில் தலைமை அதிகாரிகள் பழக்கம் உள்ளது என கோபாலிடம் கூறியுள்ளார். பணம் கொடுத்தால் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய கோபால் தனது மகன் மோகனசுந்தரத்துக்கு தொழில்நுட்ப உதவியாளர் பணிக்காக கோபாலிடம் முதற்கட்டமாக ரூ.7 லட்சம் வழங்கியுள்ளார்.

    பின்னர் மேலும் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார். வேலை உறுதியாகி விட்டதாக கூறி மேலும் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு தபாலில் பணி நியமன ஆணையை அனுப்பியுள்ளார்.

    இந்த பணி நியமன ஆணையுடன் மோகன சுந்தரம் மின்வாரிய அலுவல கத்தில் பணியில் சேர சென்றபோது அவை போலி என தெரிய வந்தது.

    அதிர்ச்சியடைந்த தந்தையும், மகனும் மூர்த்தியை தொடர்பு கொண்டபோது அவர் முறையாக பதிலளி க்காமல் தலைமறை வாகி விட்டார்.

    இதேப்போல் அந்தியூர் பிரம்மதேசத்தை சேர்ந்த விஜயகுமார், வெற்றிவேல் ஆகியோரிடமும் மின்வாரி யத்தில் வேலை வாங்கி தருவதாக தலா ரூ.4 லட்சம் மூர்த்தி பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது.

    இது குறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

    இதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் அந்தியூர், பவானி உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த 24 பேரிடம் ரூ.1 கோடியே 25 லட்சம் பெற்றுக்கொண்டு போலி நியமன ஆணைகளை வழங்கி மூர்த்தி ஏமாற்றியது தெரியவந்தது.

    2 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த மூர்த்தி யை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்ப ட்டார்.

    இந்த மோசடியில் மூர்த்திக்கு மூளையாக மற்றொருவர் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. அவர் தற்போது தலை மறைவாக உள்ளார்.

    அவரை பிடி க்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் பிடிப்ப ட்டால் இந்த மோசடியில் மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தெரியவரும்.

    • போலீசார் 3 பேரையும் விரட்டிச்சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.
    • தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

     டி.என்.பாளையம்:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த காசிபாளையம் மணியகாரன்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஜெகதீஸ் (28) டி.ஜி.புதூரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து காலை கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 6 செல்போன்கள், ஒரு லேப்டாப் உள்ளிட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    அதே போன்று டி.என்.பாளையம் குமரன் கோவில் ரோட்டை சேர்ந்த சதீஸ் (46). டி.என்.பாளையத்தில் வைத்துள்ள போட்டோ ஸ்டுடியோ கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கேமரா, கம்ப்யூட்டர் மானி ட்டர் கொள்ளையடிக்கப்பட்டது.

    இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பங்களாப்புதூர் போலீசார் கொடிவேரி அணை அருகே சதுமுகை பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் நிறுத்திய போது அவர்கள் தப்பியோட முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் விரட்டிச்சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் டி.என்.பாளையம், டி.ஜி.புதூர் கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்ததும்,  அவர்கள் சிறுமுகையை சேர்ந்த 17 வயது சிறுவன் கோவை மாவட்டம் சிறுமுகை வடபகதூரை சேர்ந்த நித்தீஸ் (21), கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பாசரை புதுக்காலனியை சேர்ந்த விஜய் (23) என தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரும் கோபி நீதிமன்றத்திலும், 17 வயது சிறுவன் கோவை சிறார் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • 10 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென்று மாயமானார்.
    • ஏழுமலை ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

    ஈரோடு:

    சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (21). இவர் ஈரோட்டில் உணவு சப்ளை செய்யும் நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார்.

    அப்போது ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனை லேப் டெக்னீசியன் படிப்பு படித்து வரும் 17 வயது மாணவியுடன் ஏழுமலைக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென்று மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் வீரப்பன் சத்திரம் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் ஏழுமலை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து ஏழுமலை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் 2 பேரும் மீட்கப்பட்டனர். இதனையடுத்து ஏழுமலை கைது செய்யப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப் பட்டார்.

    • கட்டிடத்தின் மதிப்பீடு அறிக்கை அளிக்க பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டது.
    • திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் அய்யன் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 42). இவர் சொந்தமாக பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த சில மாதத்துக்கு முன்பு ரூ.74 லட்சம் மதிப்புள்ள சொத்தை திருப்பூரில் பத்திரப்பதிவு செய்தபோது, சொத்தில் உள்ள கட்டிடத்தின் மதிப்பீடு அறிக்கை அளிக்க மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உள்பட 27 மாவட்டங்களுக்கான மதிப்பீடு அலுவலகம் அங்கு அமைந்துள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டிடம்) ராமமூர்த்தி, திருப்பூரில் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை கள ஆய்வு செய்து, அதற்கான மதிப்பீடு அறிக்கையை அளிக்க ரூ.1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் கோபாலகிருஷ்ணனிடம் ரூ.75 ஆயிரம் கேட்டுள்ளார்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கோபாலகிருஷ்ணன் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரையின்படி, ரூ.75 ஆயிரம் லஞ்ச பணத்தை கோபாலகிருஷ்ணனிடம் கொடுத்து அனுப்பினர். உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி கூறியதின் பேரில், அவரது உதவியாளராக தனிநபர் குமார் (45) என்பவர் திருப்பூரை அடுத்த மங்கலத்துக்கு வந்திருந்தார். அவரிடம் கோபாலகிருஷ்ணன் ரூ.75 ஆயிரத்தை கொடுத்தபோது திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் காரில் இருந்து கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 48 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவத்தில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மதுரையில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், ராமமூர்த்தியை கைது செய்தனர். தொடர்ந்து அவரின் வீடு, அலுவலகத்தில் சோதனை செய்தனர். அப்போது ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. இதனையடுத்து அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

    • கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது
    • சுரேசின் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). சவுண்ட் சர்வீஸ் தொழிலாளி. இவருக்கும் துர்கா தேவி (26) என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுககு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளாள்.

    இந்த நிலையில் துர்கா தேவி, சிவம்பட்டி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அருண்குமார் (36) என்பவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சுரேஷ் மனைவியை கண்டித்தார்.

    இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதனால் மனவேதனை அடைந்த சுரேஷ் நேற்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத போது கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சுரேசின் தந்தை முருகன் கொடுத்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற மத்தூர் போலீசார் சுரேசின் உடலை கைப்பற்றி மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி துர்கா தேவி, அருண்குமார் ஆகியோரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் கைது செய்தனர்.

    கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் துர்காதேவியையும், சேலம் மத்திய சிறையில் அருண்குமாரையும் அடைத்தனர்.

    • கொலை செய்தமைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிபதி வழங்கினார்.
    • 4 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனர்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முன் விரோதம் காரணமாக சதீஷ்குமார் வேலை செய்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் சதிஷ்குமாரை வெட்டி கொலை செய்தனர்.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்த னர்.

    இந்த வழக்கானது பவானி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி லதா தீர்ப்பு கூறினார்.

    இதில் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் (45), ஆனந்த பிரபு (37), சூரியகுமார் (27) மற்றும் வெங்கடேஷ்குமார் (38) ஆகிய 4 பேருக்கும் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

    மேலும் வீடு புகுந்து அத்துமீறி கொலை செய்த மைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் நீதிபதி வழங்கினார். இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் தீர்ப்பு கூறினார்.

    இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனர்.

    • ஜெயவேல் (வயது 67). இவர் தனது உறவினர்களான தங்கபழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகியோருடன் சேர்ந்து சேலம் அழகாபுரத்தில் அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்ற கூட்டுறவு வங்கியை தொடங்கினார்.
    • முதிர்வு காலம் வந்தபின் தனக்கு சேர வேண்டிய பணத்தை தரவில்லை. என்னிடம் இருந்து ரூ.2.92 லட்சத்தை மோசடி செய்துவிட்டனர் எனக் கூறியிருந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் முனியப்பன் நகரை சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 67). இவர் தனது உறவினர்களான தங்கபழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகியோருடன் சேர்ந்து சேலம் அழகாபுரத்தில் அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்ற கூட்டுறவு வங்கியை தொடங்கினார்.

    அதன்மூலம் சேலத்தை சேர்ந்த ஏராளமானோரிடம் அதிக வட்டி தருவதாக பணத்தை முதலீடு பெற்றனர். தொடர்ந்து, அயோத்தியாப்பட்டணம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமுதசுரபி என்ற பெயரில் கூட்டுறவு கடன் சங்கங்களை தொடங்கி நடத்தினர். தனியாக ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி, அதற்கான எந்திரங்களையும் அந்தந்த கூட்டுறவு கடன் சங்க கிளைகள் முன் ஏற்படுத்தினர்.

    இந்நிலையில் சேலம் அம்மாபேட்டை தங்க செங்கோடன் தெருவை சேர்ந்த பாஸ்கரன்(52) என்பவர், சேலம் பொருளா தார குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், அமுதசுரபி கூட்டுறவு சங்க முகவராக செயல்பட்ட குமரேசன் என்பவர் மூலம் அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையில் அவர்களது கூட்டுறவு சங்கத்தில் பணத்தை குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்தேன்.

    ஆனால் முதிர்வு காலம் வந்தபின் தனக்கு சேர வேண்டிய பணத்தை தரவில்லை. என்னிடம் இருந்து ரூ.2.92 லட்சத்தை மோசடி செய்துவிட்டனர் எனக் கூறியிருந்தார். இதுபற்றி பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது, அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்பது போலியாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அந்த கூட்டுறவு கடன் சங்கத்தை ஏற்படுத்திய ஜெயவேல் உள்ளிட்ட 4 பேரும் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் கிளைகளை ஏற்படுத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பதும் தெரிந்தது.

    இதனிடையே சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்ந்து புகார்களை கொடுத்தனர். இதைதொடர்ந்து, போலி கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக செயல்பட்ட ஜெயவேல், இயக்குநர்களான தங்கபழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகிய 4 பேர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.

    ஒட்டு மொத்தமாக 1000-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.58 கோடி அளவிற்கு மோசடி செய்திருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இன்னும் தொடர்ந்து பொதுமக்கள் புகார்களை கொடுத்து வருகின்றனர்.

    இதற்கிடையே அமுத சுரபியின் அனைத்து கூட்டுறவு சங்க அலுவல கங்களிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி, ஆவணங்களையும், ஏ.டி.எம் கார்டு, எந்திரங்களையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவான ஜெயவேல் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் ஜெய வேலைஅதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், மோசடி செய்யப்பட்ட பணத்தில் சொத்துக்கள் வாங்கி குவித்து வைத்துள்ளாரா?, வேறு எங்கும் பணமாக பதுக்கி வைத்துள்ளாரா? என்ற கோணத்தில் விசாரித்தனர்.

    பின்னர், அவரை கோவை டான்பிட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தங்கபழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகியோரை போலீ சார் தேடி வருகின்றனர். 

    • சந்தேகபடும்படியாக வந்த டாடா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • 27 மூட்டைகளில் 1350 கிலோ ரேசன் அரிசி இருந்தது.

    தருமபுரி,

    குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, உத்திரவுப்படி, சேலம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார், மேற்பார்வையில் தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் வேணுகோபால் மற்றும் கோவிந்தன் ஆகியோர் மேற்கொண்ட வாகனச்சோதனையில் தருமபுரி - பாலக்கோடு நெடுஞ்சாலையில், புலிகரை அருகே சந்தேகபடும்படியாக வந்த டாடா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 27 மூட்டைகளில் 1350 கிலோ ரேசன் அரிசி இருந்தது.இந்த கடத்தலில் ஈடுபட்ட தருமபுரி மாவட்டம் மாட்டியாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன்முத்து (வயது 38) மற்றும் கொளகத்தூரைச் சேர்ந்த கணேசன் மகன் வினுமான் (34) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றகாவலில் தருமபுரி கிளைச் சிறையில் அடைத்தனர்.

    கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை தருமபுரி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    • வருவாய் ஆய்வாளர் அன்பரசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
    • இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    பெருந்துறையை சேர்ந்தவர் ரவி. இவர் தனது தாயாருக்கு வாரிசு சான்றி தழ் பெற பெருந்துறை வருவாய் அய்வாளர் அன்பரசனை அனுகினார்.

    அப்போது வாரிசு சான்றிதழ் வேண்டும் என்றால் ரூ.35 ஆயிரம் வேண்டும் என கூறினார். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என கூறி ரவி சென்று விட்டார்.

    சில நாட்களுக்கு பிறகு அன்ப ரசன், ரவியிடம் ரூ.25 ஆயிரம் தாருங்கள் வாரிசு சான்றிதழ் தருகிறேன் என கூறினார். அதற்கு ரவி சம்மதம் தெரிவிக்காததால் முடிவில் ரூ.8 ஆயிரம் தாருங்கள் வாரிசு சான்றிதழ் தருகிறேன் என கூறினார்.

    ஆனால் லஞ்சம் தர விரும்பாத ரவி இது குறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயி ரத்தை அவரிடம் கொடுத்து அன்பரசனிடம் கொடுக்க சொன்னார்கள்.

    அதன்படி பெருந்துறை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்ற ரவி தான் கொண்டு வந்த பணத்தை அன்பரசனிடம் கொடுக்க சென்றார்.

    ஆனால் அன்பரசன் பண த்தை வாங்காமல் அதை அலுவலக உதவியாளர் அலெக்சாண்டரிடம் கொடுக்க சொன்னார். இதையடுத்து ரவி ரூ.8 ஆயிரத்தை அலெக்சா ண்டரிடம் கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணத்துடன் அலெக்சா ண்டரை கையும், களவுமாக பிடித்தனர். பிடிபட்ட அலெக்சாண்டர் இந்த பணத்தை வருவாய் ஆய்வாளர் அன்பரசன் சொல்லி தான் வாங்கினேன் என ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார்.

    அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் அன்பரசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அன்பரசனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் போலீசார் சிறையில் அடைத்தனர்.

    • படுக்கை அறை காட்சிகள் வீடியோவில் பதிவு செய்து வைத்து உள்ளேன்.
    • என்னிடம் கேள்வி கேட்டால் அந்த காட்சிகளை வெளியிடுவேன் என்று மிரட்டினார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் ராஜன் நகரை சேர்ந்தவர் லிவ்விங்ஸ்டன் ஜெயபால் (வயது 30). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் பொம்மம்பட்டியை சேர்ந்த அபிதா (23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    லிவ்விங்ஸ்டன் ஜெயபால் தான் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என்று திருமணத்தின் போது கூறியதால் அவருக்கு வரதட்சணையாக ரூ.1 லட்சம் மற்றும் ரூ.20 பவுன் நகையை பெண் வீட்டார் கொடுத்தனர்.

    இந்த நிலையில் லிவ்விங் ஸ்டன் ஜெயபால் மத்திய அரசு அதிகாரி இல்லை என தெரிய வந்தது. இது பற்றி அபிதா கணவரிடம் கேட்டார்.

    அப்போது லிவ்விங்ஸ்டன் ஜெயபால் நாம் 2 பேர் ஒன்றாக இருந்த படுக்கை அறை காட்சிகள் வீடியோவில் பதிவு செய்து வைத்து உள்ளேன். அதை ஏற்கனவே 2 பேர் பார்த்து உள்ளார்கள்.

    என்னிடம் கேள்வி கேட்டால் அந்த காட்சிகளை வெளியிடுவேன் என்று மிரட்டினார்.

    மேலும் லிவ்விங்ஸ்டன் ஜெயபாலின் தாயார் ஜெயா (52), தந்தை செல்ல பாண்டி (55), அக்கா கிறிஸ்டி ஞானசெல்வி (35), தங்கை கிரேட்டர் எஸ்தா ஆகிய 4 பேரும் அபிதாவை வரதட் சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய த்தில் அபிதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லிவ்விங்ஸ்டன் ஜெயபாலை கைது செய்த னர்.

    தொடர்ந்து அவரை கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் போலீ சார் அடைத்தனர்.

    மேலும் ஜெயா (52), செல்ல பாண்டி (55), கிறிஸ்டி ஞானசெல்வி (35), கிரேட்டர் எஸ்தா ஆகிய 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

    ×