search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளஸ்-1 தேர்வு"

    • முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடந்தது.
    • மாணவர்களும் தேர்வு தொடங்கும் 20 நிமிடத்திற்கு முன்பு தேர்வு மையங்களுக்கு வந்தனர்.

    கோவை,

    தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது.

    முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடந்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு மொத்தம் 128 மையங்களில் நடந்தது.

    இந்த தேர்வை மாவட்டத்தில் 362 பள்ளிகளை சேர்ந்த 15,630 மாணவர்கள், 18,754 மாணவிகள் என மொத்தம் 34,390 மாணவ மாணவிகள் எழுதினர். தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன் அனைத்து தேர்வர்களும் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டுமென அறிவு றுத்தப்பட்டு இருந்தது.

    அதன்படி அனைத்து மாணவர்களும் தேர்வு தொடங்கும் 20 நிமிடத்திற்கு முன்பு தேர்வு மையங்களுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அந்தந்த மையங்களில் உள்ள தகவல் பலகையில் தேர்வு அறை எண், தேர்வர்கள் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நோட்டீசை பார்த்து விட்டு அறைகளுக்குள் சென்றனர். மாணவர்களின் உடமை களை சோதனை செய்த பின்னரே அறை கண்கா ணிப்பாளர்கள் உள்ளே செல்ல அனுமதித்தனர்.

    பிளஸ்-1 தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கியது. மாணவர்கள் தேர்வை ஆர்வமுடன் வந்து எழுதினர். பின்னர் தேர்வுகள் 1.15 மணிக்கு முடிந்தது.

    தேர்வில் காப்பியடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க 180 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் 128 முதன்மை கண்கா ணிப்பாளர்கள், 138 துறை அதிகாரிகள், 1,800 அறை கண்காணிப்பா ளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

    • பிளஸ்-2 தேர்வுக்காக அமைக்கப்பட்டு இருந்த அதே 73 மையங்களில் இன்று பிளஸ்-1 தேர்வு தொடங்கி நடைபெற்றது.
    • தேர்வை மொத்தம் 184 பள்ளிகளை சேர்ந்த 19, 781 பேர் எழுதினர்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் இன்று பிளஸ்-1 தேர்வு தொடங்கியது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் இன்று பிளஸ்-1 தேர்வையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

    நேற்று பிளஸ்-2 தேர்வுக்காக அமைக்கப்பட்டு இருந்த அதே 73 மையங்களில் இன்று பிளஸ்-1 தேர்வு தொடங்கி நடைபெற்றது. சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 12 மையங்களிலும், வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் 29 மையங்களிலும், நெல்லை கல்வி மாவட்டத்தில் 28 மையங்களிலும் இன்று தேர்வு நடைபெற்றது. இதுதவிர 4 மையங்கள் சிறைக்கைதிகள் உள்பட தனிதேர்வர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

    இன்று தொடக்கம்

    இந்த தேர்வை மொத்தம் 184 பள்ளிகளை சேர்ந்த 8,609 மாணவர்கள், 11 ஆயிரத்து 172 மாணவிகள் என மொத்தம் 19, 781 பேர் எழுதினர். இன்று தொடங்கும் இந்த தேர்வு வருகிற 5-ந்தேதி வரை நடக்கிறது.

    தேர்வையொட்டி இன்று காலை 7 மணி முதல் 16 வாகனங்கள் மூலம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ள 69 மையங்களுக்கும் வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து சில மையங்களில் தேர்வினை கலெக்டர் கார்த்திகேயன், முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் தேர்வு பணிக்காக மொத்தம் 1, 968 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதில் அறை கண்காணிப்பாளர்களாக 1,507 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 64 மையங்களில் இன்று தொடங்கிய பிளஸ்-1 தேர்வை 16,499 மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த தேர்வுக்காக 1,322 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். தனித்தேர்வு மையங்களில் சிறை கைதிகள் உள்பட பலர் தேர்வு எழுத உள்ளனர்.

    தேர்வு எழுதும் மாணவர்கள் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேநேரத்தில் கண்காணிப்பு ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

    • மதுரையில் இன்று நடந்த பிளஸ்-1 தேர்வை 35,279 மாணவ-மாணவிகள் எழுதினர்.
    • இந்த தேர்வு 116 மையங்களில் நடந்தது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் 326 அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரத்து 56 மாணவர்கள், 18 ஆயிரத்து 223 மாணவிகள் என மொத்தம் 35 ஆயிரத்து 279 பேர் பிளஸ்-1 பொதுதேர்வு எழுதினர்.

    இதற்காக மாவட்டத்தில் 116 தேர்வு மையங்கள் அமைக்கப்ப ட்டிருந்தன. இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. ஆனால் 9.45 மாணவ, மாணவிகளின் ஹால் டிக்கெட்டுகள் ஆய்வு செய்யப்பட்டு தேர்வறைக்குள் அனுமதிக்கப் பட்டனர். இன்று தமிழ் மொழிப்பாடத் தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினர்.

    முன்னதாக தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, உயர்அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முறைகேடு நடப்பதை தடுக்க பறக்கும் படையும் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு பணிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்த ஆண்டு மாற்றுத்திறன் கொண்ட 352 மாணவ-மாணவிகளும் இன்று பிளஸ்-1 தேர்வை எழுதினர். அவர்களுக்காக தேர்வெழுத உதவியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதேபோல் 4 மையங்களில் தனித்தேர்வர்கள் 1,231 பேர் தேர்வெழுதினர்.

    சிவகங்கை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 76 மாணவர்களும், 8 ஆயிரத்து 398 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 474 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதுதவிர 158 பேர் தனித்தேர்வர்களாக பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 240 மாணவர்களும், 11 ஆயிரத்து 796 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 36 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதற்காக 50-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    • சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு ஆங்கிலம் பாடத்தில் ஒரே ஒருவருக்கு 100-க்கு 100 மதிப்பெண் எடுத்தார்.
    • தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை நேற்று பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியிட்டது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் 2021-2022 கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 10-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிவடைந்தது.

    இதில் சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 325 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 19 ஆயிரத்து 254 பேர், மாணவிகள் 20 ஆயிரத்து 227 பேர் என மொத்தம் 39 ஆயிரத்து 481 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினார்கள்.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை நேற்று பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியிட்டது. அதில், 15 ஆயிரத்து 879 மாணவர்களும், 19 ஆயிரத்து 109 மாணவிகளும் என மொத்தம் 34 ஆயிரத்து 988 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அதன்படி பிளஸ்- 1 தேர்ச்சி சதவீதம் 88.62 சதவீதம் ஆகும். தேர்வு முடிவு அடிப்படையில் மாநிலத்தில் சேலம் மாவட்டம் 23-வது இடம் பிடித்துள்ளது. கடந்த காலங்களில் 10 முதல் 15 இடங்களுக்குள் வந்த சேலம் மாவட்டம் தற்போது 23-வது இடத்துக்கு சென்றுள்ளது.

    பிளஸ்-1 பாடங்களில் 1651 மாணவ- மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றனர். அதில் பிரதான மொழிப்பாடமான ஆங்கிலம் பாடத்தில் ஒரே ஒருவர் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளார். கணக்கு பாடத்தில் 45 பேர், இயற்பியல்- 34 பேர், வேதியியல்- 6 பேர், உயரியல்- 24 பேர், வணிகவியல்- 23 பேர், கணக்கு பதிவியல்- 63 பேர், பொருளியல்- 21 பேர், கணினி அறிவியல்- 29 பேர், கணினி பயன்பாடு- 58 பேர், செவிலியல்- 33 பேர், வணிகக்கணிதம் மற்றும் புள்ளியல் - தலா 6 பேர் மற்றும் தொழிற்கல்வி பாடங்களில் 1,308 பேர் என மொத்தம் 1,651 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 11-ம்வகுப்பு தேர்வில் இந்த ஆண்டு (2022) 11-இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
    • பொதுத்தேர்வுகளில் திருப்பூர் மாவட்டம் பின்தங்கி உள்ளதற்கான காரணங்கள் குறித்து கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில், 217 பள்ளிகளை சேர்ந்த 26 ஆயிரத்து 152 பேர் தேர்வெழுதினர். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத், முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி ஆகியோர் இன்று காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிட்டனர்.

    இதில் 24,103 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 92.17. இதன் மூலம் மாவட்டத்தில் 11-வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த 2018,2019ம் ஆண்டுகளில் 11-ம்வகுப்பு தேர்வில் திருப்பூர் மாவட்டம் 2-வது இடத்தை பிடித்தது. 2020ம் ஆண்டு 5-ம் இடத்தை பெற்றது. இந்த ஆண்டு (2022) 11-இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது திருப்பூர் மாவட்ட கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த வாரம் 10,12-ம்வகுப்பு முடிவுகள் வெளியாகின. முந்தைய ஆண்டு10-ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்றிருந்த திருப்பூர் கல்வி மாவட்டம், 29 இடங்கள் பின்தங்கி 30-வது இடத்துக்கு சென்றது. பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்றிருந்த திருப்பூர் கல்வி மாவட்டம் 6 இடங்கள் பின்தங்கி 7-வது இடம் பிடித்தது. அரசு பொதுத்தேர்வுகளில் திருப்பூர் மாவட்டம் பின்தங்கி உள்ளதற்கான காரணங்கள் குறித்து கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • கோவை மாநகர் பொள்ளாச்சி, எஸ். எஸ். குளம் ,பேரூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளது.
    • இந்த ஆண்டு வெளியான பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவில் மாநில அளவில் கோவை மாவட்டம் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

    கோவை :

    தமிழகத்தில் பிளஸ் 1- பொதுத்தேர்வு முடி–வுகள் இன்று காலை வெளியானது.

    கோவை மாவட்டத்தில் கோவை மாநகர் பொள்ளாச்சி, எஸ். எஸ். குளம் ,பேரூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளது. இந்த கல்வி மாவட்டங்களில் கடந்த மாதம் நடந்த பிளஸ்-1 பொதுத்தேர்வினை அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என 365 பள்ளிகளைச் சேர்ந்த 16ஆயிரத்து 631மாணவர்களும், 18 ஆயிரத்து 949 மாணவிகள் என மொத்தம் 35 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதினர்.

    தேர்வு முடிந்ததை தொடர்ந்து திருத்தும் பணிகள் நடந்தது. தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய வர்களில், 15 ஆயிரத்து 222 மாண வர்களும், 18ஆயி ரத்து 448 மாணவிகளும் என மொத்தம் 33 ஆயிரத்து 670 பேர் பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள னர்.

    மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 91.53, மாணவிகள் தேர்ச்சி வீதம் 97.36 என மொத்தமாக கோவை மாவட்டம் 94.63 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த ஆண்டு வெளியான பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவில் மாநில அளவில் கோவை மாவட்டம் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

    தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதுதவிர மாணவ, மாணவிகளின் செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது. பள்ளிகளிலும் தேர்ச்சி விவரம் ஓட்டி வைக்கப்பட்டிருந்தது. பள்ளிக்கு வந்திருந்த மாணவ, மாணவிகள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை தோழிகளுடன் இணைந்து பார்வையிட்டனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    ×